Wednesday, March 13, 2024

இயற்கையும் புரிதலும் - நமக்கு நாமே மருத்துவர்

*குழந்தைகளிடம் உணவை ஊட்டுங்கள்....*


குழந்தைகளுக்கு திரவநிலை உணவிலிருந்து உணவு மாற்றும்போது இந்த உணவும் திரவ  நிலையில் இருப்பது அவசியம் .


குழந்தைகளுக்கு திட நிலை உணவு அதிகம் கொடுப்பதால் பசி என்பது மிக குறைவாகவே ஏற்படுகிறது காரணம் உணவைச் செரிக்க நீர் அதிகம் தேவைப்படுகிறது .


சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.


குழந்தைகள் உணவை புறக்கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். 

திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும் விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக்குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தைகளுக்கு அதிக நேரம் தேவை.


குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் ஓய்வு விடுங்கள் , கட்டாயப்படுத்தாதீர்கள். 

சில மணிநேரங்கள் கழித்து மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்கூழ் போன்றவை. அப்பொழுதும் குழந்தைகள் புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.


ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் உணவு நீர்மதன்மையையும் பழக்கப்படுத்த வேண்டும்.


குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி குழந்தையின் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.


குழந்தையின் உடல் பெருக்க வைக்கும் எந்தவிதமான மாற்று விளம்பர பொருட்கள் எதற்காக கொடுக்க வேண்டும். 

உதாரணமாக, அதிகபடியான வெண்ணெய் அல்லது நெய், அல்லது தித்திப்பான பழச்சாறுகள் (இயற்கை உடன் இருந்தால் முட்டையும், பாலும்) சேர்ந்த திண்பண்ட வகை இவைகள் குழந்தையை பெருக்க வைக்கும். எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக பின்பு தடித்த குழந்தையாகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.


 பிரிட்ஜில் வைக்காத , புளிக்காத தயிர் சாதம் குழந்தைகளுக்கு கட்டாயம் பகலில் மட்டும் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.


தினம் தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாவது குழந்தைகளுக்கு காய்கறி உணவுகளை சிறிது ருசிக்கு மட்டும், பழங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச் சத்து , சுண்ணாம்பு சத்து மிகவும் உள்ள 

காலையில் மா 

மதியம் பலா 

இரவு வாழை பழங்களை பாலுடன் உண்பது நன்மை.


சில குழந்தைகள் பற்கள் முளைக்கும் நேரத்தில் கையில் எது கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொள்ளும். இது போன்ற குழந்தைகளுக்கு கையில் பிடித்துக்கொள்ளும் வகையிலான  வாழைப்பழம், காரட் போன்றவற்றை கொடுக்கலாம்.


அதிகமான கடின உணவை கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகரியமாக அமையும்.


இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம் கருப்பட்டி பனங்கற்கண்டு) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.


குழந்தைகளுக்கு நிறைய கலர்புல்லான காய்கறிகள், பழங்கள் கீரைகள் என்று அதிகமாக கொடுக்கலாம். 

பேரிச்சம்பழம், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை,  வேர்க்கடலை போன்ற  கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை வேகவைத்து சாப்பிடக் கொடுக்க வேண்டும் அல்லது பற்கள் முழுமையாக வளரும் வரைக்கும் சூப் போன்று திரவ உணவாக கொடுப்பது நலம் .


குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச் சத்து அதிகம் தேவைப்படும் , எனவே திட நிலை உணவை சூப்பாக மாற்றி முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம், வேக வைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, *சூப்* பாக கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களும் மாறும் அதற்கேற்ப புரிந்து குழந்தைகளுக்கு உணவளியுங்கள்.


இயற்கை முறையில் தோட்டத்தில் வளர்க்கும் மாட்டுப் பால் சிறந்தது அல்லது இதற்கு மாற்றாக தேங்காய்பால் பயன்படுத்தலாம்


உடல் மொழி புரிதல்

உயிர்வாழும் வழி.

No comments:

Post a Comment