Thursday, September 28, 2023

சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லித் தாருங்கள். 🙏



1. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார், பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.


2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்; என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.


3. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம், கின்னஸ் புத்தகத்தில் பதிவாகி உள்ளது. 30000 உஸ்பெக் வீரர் படையை, வேறும் 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது மட்டுமல்லாமல், போர் திட்டமிடலுக்கு இது சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இது தான் உலக சாதனை.


4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க  ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.


5. "சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.


6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.


7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.


8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி; இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என சுவாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.


9. "சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை 'சூரியன்' என்றே போற்றியிருப்போம்" என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.


10. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார். பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.


11. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான். இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.


12. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார். ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார். 

(பிறந்தது: 19-2-1630; இறந்தது  3-4-1680).


13. காபூலில் இருந்து காந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. 


ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.


அல்லாவே..! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய். இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு” 

என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் படித்துள்ளார்.


14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.


இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. 


அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை வரும்?


வாய் சவடால் அடித்துக் கொண்டு, அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு, டாஸ்மாக்குக்குப் போய்க் கொண்டு, 

வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கு..!


வருங்கால நம் சந்ததியினரையாவது வீரமாக, விவேகமாக, நாட்டுப்பற்றுடன் இருக்க சத்ரபதி சிவாஜி மகாராஜ் பற்றி சொல்லித் தருவோம்... ❤️🙏

கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!


கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?


துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.


அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். 


இப்போது கர்ணனின் முறை.  அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.


மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார். 


குருவே இது மிகவும் அதிகாலை நேரம்.  இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள்.  இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும்.  எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.


கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார் !!!

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.. 


வாழ்க்கை ஒரு வட்டம். தொடங்கிய இடத்துக்கே வந்தாகனும் .

Wednesday, September 27, 2023

கார்ல் மார்க்ஸ் சொன்ன காட்டு பன்றி கதை


 கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறினார்: "தலைமுறைக்கு ஒரு சுதந்திரத்தை அகற்று, விரைவில் உங்களுக்கு சுதந்திரம் இருக்காது, யாரும் கவனித்திருக்க மாட்டார்கள்.


 ஒரு நாள் வகுப்பு ஆய்வகத்தில் இருந்தபோது, ​​ஒரு இளைஞன் தன் முதுகைத் தடவி நீட்டுவதைப் பேராசிரியர் கவனித்தார்.

  முதுகு வலித்தது போல.


 என்ன விஷயம் என்று அந்த இளைஞனிடம் பேராசிரியர் கேட்டார்.  தனது முதுகில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.  அவர் தனது சொந்த நாட்டில் கம்யூனிஸ்டுகளுடன் சண்டையிட்டபோது சுடப்பட்டார், அவர்கள் தனது நாட்டின் அரசாங்கத்தை தூக்கி எறிந்து புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவ முயன்றனர்.


 அப்போது, ​​அந்த மாணவன் பேராசிரியையைப் பார்த்து ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டான்.


 "காட்டுப் பன்றிகளைப் பிடிக்கத் தெரியுமா?"


 பேராசிரியை ஜோக் என்று நினைத்து பஞ்ச்லைன் கேட்டார்.  இது நகைச்சுவையல்ல என்று அந்த இளைஞன் கூறினான்.


 "காடுகளில் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடித்து தரையில் சோளத்தைப் போட்டு காட்டுப் பன்றிகளைப் பிடிக்கிறீர்கள். காட்டுப் பன்றிகள் சோளத்தைக் கண்டுபிடித்து இலவச உணவை சாப்பிட ஒவ்வொரு நாளும் வரத் தொடங்குகின்றன.


 அவர்கள் தினமும் வந்து பழகும்போது, ​​அவர்கள் வழக்கமாக வரும் இடத்தில் ஒருபுறம் வேலி போடுகிறீர்கள்.


 முதலில், காட்டுப் பன்றிகள் பயப்படுகின்றன, ஆனால் அவை வேலியுடன் பழகியதும், அவை மீண்டும் சோளத்தை சாப்பிடத் தொடங்குகின்றன, நீங்கள் வேலியின் மற்றொரு பக்கத்தைப் போடுவீர்கள்.


 அதற்கு பழகி மீண்டும் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.  வேலியின் நான்கு பக்கங்களும் கடைசிப் பக்கத்தில் ஒரு வாயிலுடன் இருக்கும் வரை நீங்கள் தொடர்க�

Saturday, September 23, 2023

சிந்தனை தத்துவம்

 🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️


🪷🦜🪷 பற்றற்று வாழ்வதென்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல.🪷

🪷🦜🪷 இருப்பது போதும், வருவது வரட்டும், போவது போகட்டும், மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.


🪷🦜🪷 எதுவுமே தேவை இல்லை என்று இருந்தவர்கள் நீயே போதும் என மாறுவதும், நீயே போதும் என்று இருந்தவர்கள் எதுவுமே தேவை இல்லை என மாறுவதுமே வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் ஆக சிறந்த (ஏ)மாற்றம்.🪷


🪷🦜🪷 மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.🪷

Friday, September 22, 2023

யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும்


இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.


காசியபர் எனும் அந்தணர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். 


என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டு, 

ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது. 


பார்வை கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். 


அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக் கிணற்றில் நீராடுவதும், 

அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் சன்னிதியே கதியென்று நெடுநாட்களாக

கிடந்தார்.


பிரார்த்தனையின் பலனாக, திடீரென்று ஒரு நாள், அவருக்கு மங்கலாகப் பார்வை தெரியத் துவங்கியது. 


மகிழ்ச்சியில் கூத்தாடினாலும், 'திருச்செந்தூரா. உன் அருளால், 

என் பார்வை முழுமையாகத் தெரியாதா,என வேண்டி, கண்ணீர் விட்டார்.


அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அருளால் ஆடிய

படியே "காசியபா... 

என் பக்தனும், இந்நாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருகிறான்; 


அந்த உத்தம பக்தனின் கை உன் மீது பட்டதும், உனக்குப் பார்வை முழுமையாகத் தெரியும்..

என்றார்.


அதைக் கேட்டதும், அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும், 

அதே

சமயம் கலக்கமாகவும் இருந்தது. 


காரணம், பார்வையற்றவர்

களை அரசர் பார்க்க கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.


இந்த மனப் போராட்டத்தில் காசியபர் அமர்ந் திருக்க சிறிது நேரத்தில்,

கோவிலுக்கு வந்தார் அரசர் ஜகவீரன். 


அருள் வாக்கு பற்றிய தகவல் அவரிடம் எடுத்துரைக்கப்

பட்டது. 


ஆனால், 

அரசரோ, " நான் அரசன் என்பதால், அதிகாரம் வேண்டுமானால் என்னிடம் இருக்கலாமே தவிர, 


அற்புதம் 

செய்யக் கூடிய அளவிற்கெல்லாம் சக்தி எதுவுமே என்னிடம் கிடையாது..." என்று சொல்லி, 

சாமி தரிசனம் செய்வதிலேயே முனைப்பாக இருந்தார்.


அன்றிரவு, 

அரசர் ஜகவீரன், கோவிலிலேயே தங்க வேண்டி இருந்ததால், சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்தார். 


திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, " அந்த பார்வையற்றவரை அழைத்து வாருங்கள்.."  என்றார்.


அரசு பணியாளர்கள் வந்து சம்பிரதாயத்தை எடுத்து சொல்லி மறுத்த போதும், பிடிவாதமாக அவரை அழைத்து வரச் சொன்னார் அரசர்.


காசியபரைப் பார்த்ததும், 

மனம் கசிந்த அரசர், நீங்கள் நாளைக் காலை நீராடி, முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; 


அவன் திருவருள்படியே நடக்கட்டும்..."  என்றார்.


மறுநாள் காலையில், "முருகா, 

உன் சொற்படி இவருக்குப் 

பார்வை வராவிட்டால், 


நானே, 

என் தலையை அறுத்துக் கொண்டு இறப்பேன்..." என்று கூறி, 

விபூதியை எடுத்து காசியபரின் கண்களில் ஊதி, அவர் கண்களை கைகளால் மெல்ல வருடினார் அரசர்.


அடுத்த வினாடி, காசியபருக்கு பார்வை திரும்பியது. 


அனைவரும் அரசரை வாழ்த்த, அரசரோ 

இது முருகன் எனக்களித்த 

உயிர்ப்

பிச்சை, 


ஆறுமுகனின் அருள் இதை விடப் பெரியது.

எனக் கூறி, அமைதியாக வெளியேறினார்.


அரசரின் கரங்களால் காசியபரின் துயர் தீர்த்த ஆறுமுகன், நம் துயரையும், 

எவர் மூலமாகவாவது நிச்சயம் களைவார். 


அந்த ஜகவீரன் எனும் அரசரின் மகன் தான் *வீரபாண்டிய கட்டபொம்மன்*...



படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க

 மாதம்தோறும் உழைக்காமலேயே அனைவருக்கும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை

செயல்படுத்தினால் அரசு என்னவாகும்? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.


பெருந்தலைவர் 

#காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்...

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...


நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது...


நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....


ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....


பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டே தான் இருக்கு.....

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்...


அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...


இப்போ பணம் இல்லாதவங்களே நாட்ல கிடையாதுன்னு வச்சுக்குவோம்...


கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. 

விவசாய வேலைக்கு ஆள் வராது... 

ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்..

எப்படி வருவான்னேன்..?


பணம் வேணும்னு உழைக்கிறாங்க....

கட்டு கட்டா பணம் இருக்கும்போது 

எவன் தான் வேலைக்கு வருவான்...?


பணத்தை தலைக்குமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத்துணியை போட்டு கிட்டு... கெடக்க வேண்டியது தான்!


ஊரே தூக்கம் வராம கெடக்கும்....


இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்ல..

வெத்து பேப்பர் தான்னேன்....!

உழைப்பு தான் பணம்ன்னேன்...!


பொருளாதாரத்திற்கு மூல ஆதாரமே... உழைப்பு தான்னேன்....!


உழைப்பு இல்லாமல்...

ஒன்னுமே கெடைக்காது!

ஒன்னுமே கெடையாது!

இப்ப தெரிஞ்சுதா...?


உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்!"


இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன் சொன்னது!


படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க!

அண்ணாத்துரைக்கு எதிராக தேவர் காஞ்சிபுரத்தில் பேசியது.


   "ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா?.


ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது?. அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.


டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை?. வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?.


 ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது. ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.


அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம். வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்?.


 பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.


‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். 


ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று

சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?


எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை

எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே? 

வேறு என்ன?

இதுவா தமிழ் நாகரீகம்? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். - #பசும்பொன்_தேவர். 


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது.

Monday, September 18, 2023

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-15

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-15

...


----

வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது

----

நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன.

---


நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது.

----

நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?

----

உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது.

----

-

வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது.

----

இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயும் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.

----

Sunday, September 17, 2023

வங்கி கொள்ளைபோன கதை-சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது

 *மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*


_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._


மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 


*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*


_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..


*இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained""*


_கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று ._


_மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்._


*இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!*


*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*


_கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்._ 


" _வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்_.


""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "

 *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*


_இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் ._

 

இதுதான் சுயநலமான உலகம்!

*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*


_மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி._


_கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் ._


_எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை ._


_கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்._


_ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_


*இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்* 


*True. Knowledge is nowadays very important than money in this world.*


*இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!*


-படித்ததில் பிடித்தது-

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-14

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-14

...


பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ்திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை . இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும்.

----

-

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில், மகானுக்கும் பாவிக்கும் இடையில் வேற்றுமையை உண்டாக்குவது எது? அவித்யை, அதாவது அறியாமை

---

மிக வுயர்ந்த மனிதனுக்கு அவன் காலடியில் நெளிகின்றன சாதாரண புழுவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறியாமை. நெளிகின்ற அந்தச் சிறு புழுவிற்குள் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் தூய்மையும் இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது வெளிப்படவில்லை,

----

உங்கள் விதி உங்கள் கைகளில் இருக்கிறது 

----

உங்களுடைய சொந்த வினை தான் உங்களுக்காக இந்த உடம்பை உற்பத்தி செய்திருக்கிறது. உங்களுக்காக இதை வேறு யாரும் செய்யவில்லை 

---

வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

---

எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது . அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும்.

----

மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள்.



----

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-12

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-12

...

சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலுமும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

----

இந்த நாட்டின் அருமையான ஆன்மீகப் புதையல்களுள் பாதி திருடப்பட்டுவிட்டது, நாம் அவற்றை இழந்துவிட்டோம்.மறு பாதியோ, தானும் தின்னாமல் பசுவையும் தின்ன விடாமல் வைக்கோற்போரைக் காவல் செய்யும் நாய்களைப் போன்ற சிலரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது.

-----

லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.

-

மதம் வாழ்வது அன்பில் , இதயத்தின் தூய்மையான உண்மையான அன்பில்தானே தவிர சடங்குகளில் அல்ல. 

----


உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இல்லாமல் ஒருவன் கோயிலுக்கு வருவதும் சிவ பெருமானை வழிபடுவதும் பயனற்றது. உடம்பாலும் மனத்தாலும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். 

----

Saturday, September 16, 2023

21 இலைகளால் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும்.

 1) முல்லை இலை ( அரம் இன்பம் வீடு பொருள் கிடைக்கும்) 2)கரிசலாங்கண்ணி(செல்வம் 16 வகை செல்வம் கிடைக்கும்)

3) வில்வம் இலை(விரும்பியதை எல்லாம் கிடைக்கும்)

4) அருகம் புல் ( மோட்சம் கிடைக்கும்)

5) இழந்த இலை (கல்வி ஞானம் கிடைக்கும்)

6)ஊமத்தை இலை(பெருந்தன்மையை கொடுக்கும்)

7)வன்னி இலை (வீடு கிடைக்கும்)

8)நாயுருவி இலை(முக பொலிவு பெறும்)

9)கண்டங்கத்திரி இலை(மனவலிமை வீரம் கிடைக்கும்)

10)அரளி இலை(காரிய சித்தி கிடைக்கும்)

11)எருக்கன் இலை& பூ (பெண் சிசு பாதுகாப்பாக இருக்கும்)

12)மருதம் இலை(வம்ச விருத்தி கிடைக்கும்)

13)விஷ்ணு கிரந்தி இலை(நுண் அறிவு கிடைக்கும்)

14)மாதுளம் இலை( புகழ் கிடைக்கும்)

15)தேவதாரு இலை(எதையும் தாங்கும் மனம்)

16)அரச மர இலை( பதவி கிடைக்கும்)

17)ஜாதி மல்லி இலை(சகல சௌகரியம் கிடைக்கும்)

18)தாழம்பூ இலை (பெரிய செல்வம் கிடைக்கும்)

19)அகத்தி கீரை(கடன் தொல்லை தீரும்)

20)தவனம் இலை (ஒற்றுமை)

21)மரிக்கொழுந்து ( கணவன் மனைவி ஒற்றுமை)


21 இலைகளால் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும்.

நன்றி 



காவிரியும், கருணாநிதியும்...

 🤔 காவிரியும், கருணாநிதியும்... 


யாராவது இப்படி விலாவாரியாக எழுதினால்தான் நமக்கு விளங்குது.  ஆமாம்! அந்த பேனா சிலையை ஹோகைனக்கல் காவிரி நடுவுல வச்சுடலாமா!? 


பல்லாயிரம் வருடமாக பறிபோகாத காவிரி திமுக தெலுங்கர் கருணாநிதியால் பறிபோனது எப்படி? மீந்தது அவர் மகன்  காலத்தில் பறிபோகும்.


காரணம் இது தான்.... தமிழர்களுக்கு காவிரி விஷயத்தில் மட்டும் அவர் செய்த துரோகங்கள் இவ்வளவு! அவர் செய்த அனைத்து துரோகங்களையும் பட்டியலிட நமக்கு ஆயுள் போதாது!


1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி.


200 ஆண்டு வெள்ளையர்களின் ஆட்சியில் பறிபோகாத காவிரி.


வெறும் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் பறிபோனது காவிரி...😡😡😡 இளைய தலைமுறைகள் கவனிக்க ,, 


காவிரி பிரச்சனையில் திமுகவின்  துரோகங்கள் வரிசையாக:  


முதல் துரோகம்: கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். 


இரண்டாவது துரோகம்: இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்து மீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.


மூன்றாவது துரோகம்: 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி! 


வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.. 


நான்காவது துரோகம்: காவேரி பிரச்சனையின் மூலாதாரமே கருணாநிதிதான். கர்மவீரர் காமராஜ் காலத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டவில்லை காவேரி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரும் ஒப்புக்கொண்டது .அதனை நீட்டிக்க முயற்சி எடுக்கவில்லை திராவிட கருணாநிதி. அதன் விளைவு கி.பி.1892-ம் ஆண்டு போடப்பட்ட முதல் ஒப்பந்தம் கருணாவின் அலட்சியத்தால் காலாவதியானது. இது தான் 219 ஆண்டு கால காவேரி நதி பங்கிட்டு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை பறிபோக முதன்மை காரணமாய் அமைந்து விட்டது. 


இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை, கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை. 


ஐந்தாவது துரோகம்: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளியிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இதை கெஜட்டில் ஏன் வெளியிட- வில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .


மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான்! 


ஆறாவது துரோகம்: காவேரி பிரச்சனையில் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார். அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான். இது கருணாநிதியின் ஆறாவது துரோகம்! 


மிக பெரிய ஏழாவது துரோகம்: இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது, சென்னையில் முதல்வர் கருணாநிதி, பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார். அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில், பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது. அதனை கருணாநிதி நீக்கி விட்டார்.


காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் மற்றும் அவரது  ஊடகங்கள்  தான். 


அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள்  இருந்திருக்கும். அதனை இரக்கமின்றி அடைத்தவர் கருணாநிதி தான். இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .


எட்டாவது துரோகம்: ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது, ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார். அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால், ஜெயலலிதா புகழ் கூடிவிடும். நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார். இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார். இது கருணாநிதியின் எட்டாவது துரோகம்! 


ஒன்பதாவது  துரோகம்: இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ், குஜ்ரால், தேவ கௌடா, வாஜிபாய் ஆகியோர் அமைச்சரவையில் பங்கு பெற்றார். அதன் பிறகு மன்மோகன் சிங் ஆட்சியில் இவர் ஆதரவு இல்லை என்றால் ஆட்சியே இருக்காது. மிரட்டி மிரட்டி எத்தனையோ பதவிகள் வாங்கினார் கருணாநிதி , ஆனால் அப்போதும் கூட, காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி. தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார். ஆனால் அவர் அதை செய்ய வில்லை இது கருணாநிதியின் ஒன்பதாவது  துரோகம்.


பத்தாவது துரோகம்: காவிரி வழக்கை வாபஸ் பெற்றால் ..தானே பிரச்சனையை சுமுகமாக முடித்து நியாயமான நீரைத்தருகிறேன்  என இந்திரா சொன்னார். கூட்டணி ஆசைக்காக ( ஊழல் பாதுகாப்புக்காக?)  அதனை ஏற்று திமுக வழக்கை வாபஸ் பெற்றது. இது கருணாநிதியின் பத்தாவது துரோகம்.


இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதிதான் .


தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல மடங்காக பெருக்கியவர் கருணாநிதிதான்.


காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல் வாதி இவர்தான். ஆம்! இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடுதான். 


இவர்கள் மக்கள் உயிரை பற்றியோ பிரச்சனைக்கு  நிரந்தர தீர்வையோ விரும்பாதவர்கள். 


ஏமாற்றுவதற்கு அங்கீகாரம் கொடுத்தபின் ஏமாளி போராடுவது அபத்தம். அதன்மூலம் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்காமலிருக்கும் உரிமையை நிரந்தரமாக வழங்கிவிட்டோம். 


இன்றும் தமிழகத்தில். நூற்றுக்கணக்கான இந்திரா, ராஜீவ் சிலைகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கின்றன. ஆனாலும் எதிர்காலத்தில் சோனியா ராகுலுக்கும் சிலைவைத்து வணங்கப்போகிறான் மான மிகு தமிழன்  வீராணம் ? கூவத்தை மணக்கவைத்த கருணாவுக்கும்தான்.... 


இவ்வளவு துரோகத்தையும் செய்து விட்டு அவர் மகன் உத்தமன் வேஷம் போடுகிறார் என்றால் தமிழ் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்ல  கருணாநிதி மக்களுக்காக செய்த பச்சைத் துரோகம்!! 


இதெல்லாம் என்ன நியாயம்...!?

🚩🙏🚩

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்-MGR

 ஒரு முறை பொதுக் கூட்டத்தில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருந்தார். பெரும் கூட்டம்.


பேச்சின் இடையே, "ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். 


என்னை வாழவைக்கும் தாய்மார்கள் எழுந்துச் செல்லுங்கள். 


ஒரே ஒரு தாய்க்குலம் கூட இருக்கக் கூடாது" என்றார்.


பெண்களும் எழுந்துச் சென்று விட்டார்கள். 


அதுவரை எதுவும் பேசாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருந்த புரட்சித்தலைவர்.


"என்னிடம் ரகசியம் எதுவுமில்லை. பேச்சை அப்போதே முடித்து விட்டேன். 


கூட்டம் கலையும்போது நெரிசலில் தாய்மார்களுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்றே அப்படி சொன்னேன்" என்றார்.


கூட்டம் ஜோராக கைத்தட்டியது.



பொறியாளர் தின வரலாற்று திருமகன்

இந்தியா பிரிட்டன் அரசின் நேரடி நிர்வாகத்துக்கு வந்த 3ம் ஆண்டில் அதாவது 1860ல் மைசூர் பக்கம் ஒரு பிராமண குடும்பத்தில் என அக்குழந்தை பிறந்தது, அது ஆந்திர தெலுங்கு வம்சம், அந்த குழந்தையின் தந்தையின் முன்னோர்கள் அங்கிருந்து மைசூருக்கு குடியேறிய சமஸ்கிருத பண்டிதர்கள்


மோக்சகுண்டம் எனும் தன் ஊர் பெயரை தன்னோடு சுமந்து வந்த குலம் அது


அக்குழந்தைக்கு படிப்பு இயல்பாக வந்தது, படிப்பில் மட்டுமே வளர்ந்து பருவமாகி 15ம் வயதிலே அவன் சிறந்த மாணவனாக உருவானான், அப்பொழுது அவன் தந்தை மறைந்தார் எனினும் போராடி தன் 21ம் வயதில் சென்னை பல்கலைகழகத்தில் 1881ம் ஆண்டு பட்டம் வாங்கி பின் புனேவில் கட்டடம் கட்டும் படிப்பில் டிப்ளமோ முடித்தார்


1885ம் ஆண்டு முதல் அவரின் அசுர பணி தொடங்கிற்று


அது பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி காலத்தில் சில கட்டங்கள் பாலங்கள் இன்னும் பல எழும்பிய காலம் என்பதால் பிரிட்டிசார்  அவரை பொதுபணிதுறையில் சேர்த்துகொண்டான், மகராஷ்ட்ரா நாசிக்கில் இருந்து அவரின் பணி தொடங்கிற்று


அங்கிருந்து பின் சிந்துநதிகரை பகுதிக்கு அனுப்பட்டார் , 1894 வரை அங்குதான் பணியாற்றினார், பின் சூரத்துக்கு மாற்றபடார்


அவரின் அபார அறிவும் பெரும் திறமையும் பதவி உயர்வுகளை கொடுத்து கொண்டே இருந்தன, அப்பொழுதே சில பயிற்சிக்காக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் அரசால் அனுப்பட்டிருந்தார்


1898ல் ஜப்பானிய பாசன முறைகளை அறிந்துவந்து பல வசதிகளை செய்ய்தொடங்கினார்


பின் பிரிட்டிசார் அவரை பாசன வசதிகள் செய்யும் குழுவில் பிரதான இடமளித்து உயர்த்தினான், எகிப்து முதலான தேசங்களுக்கு சென்றுவந்து ஆற்றில் அணைகட்டுதல் உள்ளிட்ட பல விஷயங்களை அனுபவமாக பெற்றுவந்தார்


அவரின் அளப்பறிய சாதனை தானியங்கி மதகுகளை 1903ம் ஆண்டே வடிவமைத்தது, ஆற்று வெள்ளத்துக்கு ஏற்ப தானே இயங்கும் மதகுகளை அவர் வடிவமைத்தபொழுது உலகம் அவரை கொண்டாடிற்று, உலகின் அணைகளில்லாம் அந்த மாற்றம் வந்தது


மறுபடி அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஐரோப்பா என எங்கெல்லாமோ சென்று நவீன அணைகளுக்கும் பாசனங்களுக்கும்  உதவினார்


அன்று சுல்தானியமாக இருந்த ஐதரபாத் நிஜாம் அவரை பெரும் முயற்சிக்கு பின் அழைத்துவந்து தன் பகுதியின் முன்சி ஆற்றின் வெள்ளபெருக்கை கட்டுபடுத்தும் திட்டத்தை கோரினான், அதை திறம்பட முடித்து கொடுத்தார் அவர்


1908ல் பெரும் மரியாதையுடன் பிரிட்டிஷ் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் அந்த விஸ்வேஸ்வரய்யர், அப்படியே சொந்த ஊருக்கும் வந்தார்


அவரை மைசூர் சமஸ்தானஸ்தின் திவானாக 1909ம் ஆண்டு சேர்ந்தார், அப்பொழுது நான்காம் கிருஷ்ணாராஜ உடையார் மைசூர் மன்னராக இருந்தார்


மைசூர் சமஸ்தானம் முன்பு நாயக்கர் காலத்தில் விஜயநகர அரசில் இருந்தது பின் நாயக்கர்கள் பலமிழந்தபொழுது பிஜப்பூர் சுல்தானிய கட்டுபாட்டில் இருந்தது, வீரசிவாஜி காலத்தில் நாயக்கர்கள் தலையெடுத்தனர்


சிவாஜி அவர்களை தலைநிமிர வைத்தான், அவன் காலத்தில் தமிழக கோவை திண்டுக்கல் வரை மைசூர் சமஸ்தானம் இருந்தது


ஆனால் பின்பு ஹைதர் அலி அதனை கைபற்றியிருந்தான் பின் அவன் மகன் திப்பு அந்த சுல்தானியத்தை பழைய பிஜப்பூர் சமஸ்தானம் போல விஸ்தரிக்க எண்ணி போர்கள் பல புரிந்தான் எனினும் பிரிட்டிஷார் அவனை முறியடித்து உடையார்களை பதவியில் அமர்த்தினர்


அந்த நான்காம் உடையாரிடம்தான் திவானாக 1909ல் வந்தார் விஸ்வேஸ்ரய்யர்


அப்பொழுது ஒரு விசித்திரமான சிக்கல் மைசூர் சமஸ்தானத்துக்கு இருந்தது, அது ஹைதர் அலி காலத்தில் தஞ்சை மராட்டியருக்கும் மைசூருக்கும் ஏற்பட்ட முரண்பாடு என்கின்றது வரலாறு


அதாவது காவேரியில் வெள்ளம் வந்து தஞ்சாவூர் பக்கம் பாதிப்பை ஏற்படுத்தினால் முன் கூட்டியே அறிவிக்கவில்லை இன்னும் முறையாக தடுக்கவில்லை என தஞ்சை சமஸ்தானம் மைசூரிடம் இருந்து நஷ்ட ஈட்டை கோரியது


திப்பு அப்படி தரமுடியாது என காவேரியின் மடைகளை அடித்து உடைத்த காலமும் இருந்தது


அது உடையார் காலத்திலும் தொடர்ந்தது பல்லாயிரம் பணம் இப்படி நஷ்ட ஈடாக வழங்கபட்டுகொண்டிருந்தது


விஸ்வேஸ்ரய்யர் அந்த பணத்தை முதலீட்டாக கொண்டு ஒரு அணைகட்டிவிட்டால் பின் வெள்ள சிக்கல் வராது நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டாம் என பெரும் திட்டத்தை முன்வைத்தார்


அதுவரை மைசூரில் காவேரிக்கு குறுக்கே பெரும் அணை இல்லை, சிறிய வகை கால்வாய்களும் பாசனங்களும் இருந்தன‌


பெங்களூர் அப்பொழுது ஒரு கிராமம் அளவுக்குத்தான் இருந்தது


அப்பொழுது 81 லட்சம் செலவில் அணைகட்ட தீர்மானிக்கபட்டது, அது பெரும் தொகைதான் ஆனாலும் தீர்க்கதரியான விஸ்வேஸ்வரய்யா அணையில் மின்சாரம் தயாரித்து விற்பது, பெரும் தோட்டமும் நகரமும் உருவாக்கி அந்த பணத்தை ஈடுகட்டுவது என திட்டம் தயாரித்தார்


அவரின் பெரும் அனுபவமும்  உலகளாவிய பெரும் அறிவும் அதற்கு கைகொடுத்தன‌


பின் ஆங்கில அரசிடம் அனுமதிகோரபட்டது அவர்கள் அனுமதி கொடுத்தார்கள், விஸ்வேஸ்வரய்யா அணை கட்ட தொடங்கினார்


கண்ணம்பாடி எனும் இடத்தில் ஏமாவதி லட்சுமணதீர்த்தம் எனும் இரு நதிகள் காவேரியோடு சேருமிடத்தில் அணையினை எழுப்பினார்


46 தானியங்கி மதகுகளுடன் அதிசயம் போல அந்த அணையினை கட்டிமுடித்தார், அப்படியே அழகான பிருந்தாவனமும் உருவாக்கினார்


மைசூர் மெல்ல செழிக்க ஆரம்பித்தது, காவேரியின் டெல்டாவில் விளைந்த நெல்லை மைசூரை ஒட்டியே டன் கணக்கில் விளையவைத்து அசத்தினார் விஸ்வேரய்யர்


அந்த அணை அந்த உடையார் பெயரில் "கிருஷ்ண ராஜ சாகரம்" என எழும்பியதுதான் கன்னடம் இன்று எழும்பி நிற்பதன் முதல்படி


அந்த அணையின் பலத்தில்தான் அதன் ஆதாரத்தில்தான் பெங்களூர் எனும் கிராமம் மெல்ல மெல்ல நகரமானது, அந்த நகரின் பிரதான கட்டடமான "விதான் சவுதா" விஸ்வேரய்யாவால் வடிவமைக்கபட்டது


இந்த அணை கொடுத்த நீர்வளமே பெங்களூர் எனும் சிறிய கிராமத்தை உலகின் முன்னணி நகரமாக இன்று மாற்றி வைத்திருக்கின்றது


தொடர்ந்து பெரும் திட்டங்களை கொடுத்தார் அய்யர், இன்று சிறிதும் பெரிதுமாக இருக்கும் கன்னட அணைகள் சுமார் 28ம் அவர் கொடுத்த வழிகளே


அதே நேரம் மேட்டூர் அணைகட்டபடும் பொழுதும் பெரும் பங்களிப்பை செய்தார் விஸ்வேரய்யர்


தன் ஓய்வு காலத்திலும் நாடெங்கும் ஓடி ஓடி உழைத்து கொண்டிருந்தார், ஒரு கட்டட நிபுணராக தொழிற்சாலைகளை நிர்மானிப்பதில் பெரும் பங்குவகித்தார்


ரூர்கேலா போன்ற பெரும் இரும்பு ஆலைகள் உருவாக காரணமானார், இன்னும் எவ்வளவோ பெரும் அணைகளும் பாலமும் ஆலையும் எழும்ப காரணமானார்


இந்தியாவின் கல்வி நிலையங்களில் கட்டட பொறியியல் அவரால் எழும்பிற்று, கல்வி நிலையம் பல திறக்க உதவினார், அவர் பெயரில் ஏகபட்ட கல்வி நிறுவணங்களும் திறக்கபட்டன‌


அப்துல்கலாமுக்கு முன்பு பெரும் அடையாளமாக விஞ்ஞான கல்விக்கு அவர்தான் வலம் வந்தார்


சுதந்திர இந்தியாவிலும் அவரின் பங்களிப்பு பிரமாதமாக இருந்தது, 1955ல் அவருக்கு பாரத ரத்னா வழங்கபட்டது


101 வயதுவரை பெரும் வாழ்வு வாழ்ந்த அவர் 1962 வரை இந்தியாவின் எல்லா அணைகளுக்கும் திட்டமிட்டு கொடுத்தார், கல்வி நிலையங்களை வழிநடத்தினார்


மைசூர் கிருஷ்ணராஜ சாகரில் தொடங்கிய அவரின் அணைகட்டும் முயற்சி பக்ரா நங்கல் முதல் எவ்வளவோ அணைகள் வர காரணமானது


இந்தியாவின் முதல் பொறியாளரான அவர் பெயரில்தான் இந்தியாவில் "பொறியாளர் தினம்" கொண்டாடபடுகின்றது


ஆம், இன்று இந்தியாவில் பொறியாளர் நாள்


இந்தியா இன்று கண்டிருக்கும் விவசாய தன்னிறைவுக்கும், தொழில்புரட்சிக்கு அடிப்படையான நீர் வசதிக்கும், மின்சார உற்பத்திக்கும் மூலம் அவர்தான்


அவரின் திட்டங்கள்தான் இந்திய ஆற்ற்பாசான அணைகள் மூலம் இந்தியாவினை அடுத்தகட்டத்துக்கு இழுத்து சென்றது, இந்தியாவின் இன்றைய வளர்ச்சி அவரால்தான் அடிதளமிட்டது


"கன்னட சிற்பி" என அழைக்கபடும் அளவு அவரால் கன்னட மகாணம் பெரும் வாழ்வு பெற்றது


இன்று மாண்டியா பக்கமும் கன்னட பக்கமும் விவசாயம் கொழிக்கின்றது என்றால், பெங்களூர் எனும் பெருநகரம் உலக அளவில் கவனிக்கபடுகின்றது என்றால் அதன் மூல காரணம் அந்த விஸ்வேரய்யர்

அவரை இந்திய தேசமும் கன்னட மக்களும் நன்றியோடு வணங்கி கொண்டிருக்கின்றார்கள்


தமிழகம் வழக்கம்போல் நழுவுகின்றது, இன்று பொறியாளர் தினம் எனும் பரபரப்பு கூட தமிழகத்தில் இல்லை, காரணம் அவர் ஒரு அய்யர், இந்து பிராமணன் அதுவும் சமஸ்கிருதம் கற்ற வேதம் ஓதிய பிராமணன்


தேசாபிமானிகள் தமிழக‌ மேட்டூர் அணைமுதல் பல அணைகள் கட்ட காரணமான அந்த மூல விஞ்ஞானிக்கு நன்றி செலுத்தி கொண்டிருக்கும் நேரமிது


பிராமண வெறுப்பு தமிழகத்தில் அரசியலானது


இங்கு 1909களில் நீதிகட்சி பிராமண வெறுப்பு பேசியபொழுது தொடங்கியது தமிழக வீழ்ச்சி

அதே 1909களில் ஒரு பிராமணனை அரவணைத்து அவன் வழிகாட்டலில் எழுந்தது கன்னட எழுச்சி


ஆம், பிராமணனை ஆதரித்த மாகாணம் எழுந்து வளர்ந்து வாழ்வு பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதும், பிராமண எதிர்ப்பை அரசியலாக்கிய தமிழகம் வீழ்ந்து கொண்டிருப்பதும் காலத்தின் சாட்சிகள்..


ஒரு அறிவார்ந்த பிராமணன் உருவாக்கிய கன்னடம் இன்று நிமிர்ந்து நிற்கின்றது அவன் காட்டிய வழியில் அணையும் விளை நிலங்களும் ஆலைகளுமாக பிரமாண்டமாக எழும்பி நிற்கின்றது


பிராமணை பழித்து உருவான தமிழக அரசியல் இன்று எப்படியாயிற்று கூவம் முதல் எல்லா நதிகளும் என்னாயிற்று என கண்டால் எல்லோருக்கும் புரியும்


அறிவும் திறமையும் இருப்பவன் யாராக இருந்தாலும் அவனை கொண்டாடும் இனம் வாழும் மாறாக வீண் பழியும் குழப்பமான சுயநல அரசியலும் செய்து அதில் அறிவுடையோர்களை விரட்டி அடித்தால் அந்த இனம் வீழும்


விஸ்வேஸரய்யா என்பவருக்கு தேசம் பெரும் அஞ்சலி செலுத்துகின்றது, கன்னட மக்கள் கூடுதலாக வணங்கிகொண்டிருக்கின்றார்கள்


அதே நேரம் இந்திய தமிழகத்தில் அண்ணாதுரை என முன்னாள் முதல்வர் ஒருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள்


இந்த இருவரில் யார் புகழ் நிலைத்தது, இன்னும் நிலைத்து நிற்கும் என்றால் சந்தேகமே இல்லாமல் விஸ்வேஸ்ர அய்யர் புகழ்தான்.

Friday, September 15, 2023

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-11

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-11

...

நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

---

நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும்.

----

நமது புனிதமான தாய் திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு, ஆன்மீகச் செம்மல்களைப் பெற்ற நாடு, துறவின் உன்னத நாடு. இங்கு, இங்கு மட்டுமே மிகப் பழங்காலத்திலிருந்து மிக நவீன காலம் வரை, வாழ்வின் மிகவுயர்ந்த லட்சியம் மனிதனுக்குக் காட்டப்பட்டுள்ளது.

----

உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற்காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது.

----

ஆன்மா அழிவற்றது போன்ற மேலான கருத்துக்கள் எந்த மதத்திலாவது காணப்பட்டால், அது நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மிடமிருந்து பெறப்பட்டதே ஆகும்.

----

நம் இறைவன் எல்லா மதங்களின் இறைவன். இந்தக் கருத்து இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது, உலகின் வேறு சாஸ்திரங்கள் எதிலாவது இத்தைகைய கருத்தைக் காட்ட முடியுமா என்று உங்களுக்குச் சவால் விடுகிறேன்.

---

மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

-

நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள். அனைத்திலும் முதற்பாவமாகும். நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும் மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. 

----

அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்

 "அதிர்ஷ்டம் என்பது 

எப்போதோ ஒருமுறைதான் 

கதவைத் தட்டும்."


‘தூக்குத்தூக்கி’.

சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்.


சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக, அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர்  திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்:

“ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். 

எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்.” 


”நாலாயிரமா ? கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில்

தயக்கத்தோடு கேட்க,

"அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற  ஒரு பாடகர் புதுசா வந்திருக்கிறார். அவரை வேணும்னா  கேட்டுப்பாருங்கள்.” 


சௌந்தரராஜனா ?

யார் அவர் ?

எங்கே இருக்கிறார் ?


திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.


“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?” என்று  தயாரிப்பு தரப்பு கேட்க,

ஒரு கணம் சிந்தித்தார் டி.எம்.எஸ்.


இறைவன் ஒவ்வொரு வேளைகளிலும், 

நம் எல்லோருக்காகவும்,

ஏதோ ஒரு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டே காத்திருக்கிறான்.


டி.எம்.எஸ்.புரிந்து கொண்டார்.


ஒரு கணம் கூட தாமதிக்காமல்  உடனே சம்மதித்தார்  டி.எம்.எஸ். 


காரணம், அந்த கால கட்டங்களில், மதுரை பஜனை மடங்களில் பாட்டு  பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி, காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது.


ஆனால் டி.எம்.எஸ்.சின் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 


“தூக்குதூக்கி” கதாநாயகன் சிவாஜி சொன்னார்: "‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும். அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” 

என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க...


பார்த்தார் டி.எம்.எஸ்..! 


சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார் :

“நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்.” 


அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை, அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.


மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். 


சிவாஜிக்கு ஒரே சந்தோஷம் : 

“அட, என் குரல் மாதிரியே பாடி இருக்காரே. நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க...” 


‘பெண்களை நம்பாதே…’, 

‘ஏறாத மலைதனிலே…’ என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்.


டி.எம்.எஸ்.வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை 

அதிர்ஷ்டம் என்பதா ? 

தைரியம் என்பதா ?


ஒன்று மட்டும் உறுதி.

அதிர்ஷ்டம் எப்போதும் தைரியசாலிகளை மட்டுமே காதலிக்கிறது.

அன்னமும் பாலும்


இவ்வளவுநாளா எந்த பள்ளிக்கூடத்திலயும் சொல்லித்தரலயே....


யாரோ புத்திசாலி ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்...


அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். 


ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், 


அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

  

நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். 


அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.

  

எனக்கு ஒரு குழப்பம். 

நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. 


சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன்.


ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் உண்டே. *இதை* நாம் 

*சிந்திக்கவில்லையே* என்று யோசித்தேன்.


பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, 


அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். 


அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, 


என்ன *ஆச்சரியம்..!!* 

 *பால்* முழுவதையும் *சாதம்* உறிஞ்சிக் கொண்டிருந்தது. 


*தெளிந்த நீர்* மட்டும் *சாதத்தைச்* சுற்றியிருந்த *இடத்தில்* வடிந்திருந்தது.


 உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. 


சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.

  

*இதுதான்* அன்னம் *பாலையும்* தண்ணீரையும் *பிரிக்கும்* கதை. 


நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் *உங்கள்* வீட்டிலேயே *செய்து* பார்க்கலாம்.

  

மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, *அன்னம்* என்று தான் *சொன்னார்களே* தவிர, *அன்னப்பறவை* என்று ஒரு இடத்திலும் *சொல்லவில்லை.*

அது *நாமாக* செய்து *கொண்ட* *கற்பனைதான்* என்று புலனாயிற்று.


அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் *என* தெரிந்து கொண்டேன்.



Wednesday, September 13, 2023

நல்லதே செய்வோம். இறைவன் அருளால் எல்லாம் நலமாகவே நடக்கும்.

 தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்) என்பது தவிர்க்க முடியாதது. 

தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த கிருஷ்ண பகவான் ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். 

அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். 

அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. 

அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். 

அந்த அம்பு பகவானின் வலது குதிங்காலில் பலமாகத் தைத்ததும், "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். 

அங்கே பகவான் கிருஷ்ணர் காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், "பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந்திருந்து அம்பு எய்தேன். 

என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான்.

"வேடனே, வருந்தாதே !!  நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின்தொடர்ந்து வரும். 

தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். 

ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடு களாலும் நிவர்த்தி செய்ய முடியாது.

அதற்கு நானே உதாரணம்.

திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந் திருந்து அம்பு எய்து கொன்றேன். 

அப்போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். 

ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். 

என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். 

இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும். 

தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். 

அந்த சாபம்தான் இன்று பலித்தது.

தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும். 

இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும், யாகங்களும், தான, தர்மங்களும், வழிபாடுகளும் கைகொடுக்காது. 

அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். 

வேடனே, நீதான் அந்த வாலி. 

உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். 

முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. 

அதனால் உனக்கு இது தெரியவில்லை. 

என் அவதாரம் இன்றுடன் முடிந்தது. 

நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்திவிட்டு முக்தியடைந்தார் பகவான் கிருஷ்ணர்.

ஒருவருக்கு நாம் செய்யும் தீமை, மீண்டும் நமக்கே வந்துசேரும் என்னும் பேருண்மையை பகவான் தன் இரு அவதாரங்கள் மூலம் மனித குலத்துக்கு உணர்த்தியுள்ளார்.

எனவே, நல்லதே நினைப்போம்.



சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-7

 


பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது; அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

----

நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.

-----

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.

----

உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும்.

----

கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

----

வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல மனதை ஒருமுகப்படுத்துவதுதான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.

---

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-6

 

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் வேலைகளுக்குள் கட்டுப்பட்டு விடாதீர்கள்

---

* வாழ்வில் மனிதன் உயர வேண்டுமானால் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்றாக வேண்டும்.

---

செல்வம் பெருகியுள்ள காலத்தில் தான் ஒருவனுக்கு பணிவு தேவை. அதே சமயம் வறுமையுற்ற காலத்தில் மனிதனுக்கு துணிவு அவசியம்.

---

துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் அடைவது என்பது இயலாத ஒன்று. எந்தச் செயலிலும் இன்ப, துன்பம் இரண்டும் கலந்தே இருக்கிறது.

---

நன்மை செய்பவன், ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து மகிழத் தயாராயிருக்கலாம்.

---

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.

----

மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.

---

அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.

-

காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.

-----

Tuesday, September 12, 2023

சில ரயில் நிலையங்களில் மட்டும் சந்திப்பு என்ற வார்த்தை ஊர் பெயருக்கு பின்னால் இருக்கிறதே ஏன் தெரியுமா?

இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் ஊரின் பெயர் இருக்கும். ஆனால் சில ரயில்களில் மட்டும் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்டோன்மென்ட் ஆகிய வார்த்தைகள் ஊரின் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ஏன் அவ்வாறு சேர்க்கிறார்கள் என காணலாம் வாருங்கள். ரயில் பயணம் என்பது இந்தியாவில் சாதாரணமான ஒரு விஷயம் தான் தினமும் லட்சக்கணக்கான நபர்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறைவான செலவில் சொகுசான பயணத்திற்கு ரயில் பயணம் தான் ஏற்றது. இப்படியான ரயில் பயணத்தின் போது கண் முன்னே இருக்கும் பல விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் காரணமும், அர்த்தமும் நமக்கு தெரியவதில்லை. இப்படியான ஒரு விஷயத்தை தான் இன்று காணப்போகிறோம்.


இந்தியாவில் ரயில்களில் பயணிக்கும் போது ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் உள்ளே நுழையும் இடங்களில் பிளாட்பாரங்களில் பெரிய மஞ்சள் பலகை இருப்பதை நாம் பார்த்திருப்போம் அதில் அந்த ஊரின் பெயர் இருக்கும். ஆனால் சில ஊர்களில் ஊரின் பெயருக்கு பின்னால் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்ட் உள்ளிட்ட சில வார்த்தைகள் இருக்கும். உதாரணமாக மதுரை சந்திப்பு, சென்னை சென்ட்ரல், உள்ளிட்டவை இருக்கும். சில ஊர்களில் உள்ள பெயர் பலகையில் வெறும் ஊரின் பெயர் மட்டுமே இருக்கும். ஏன் இப்படி ஊருக்கு ஊர் இது மாறுபடுகிறது. இப்படியாக ஊர் பெயருக்கு பின்னால் வேறு பெயரை சேர்க்க என்ன காரணம்? முழு விபரங்களை காணலாம் வாருங்கள். சென்ட்ரல் இந்தியாவில் வெகு சில ரயில் நிலையங்களில் பெயருக்கு பின்னால் மட்டுமே சென்ட்ரல் என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களாக உள்ளன. பிரிட்ரிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய முக்கியமான ரயில் நிலையங்களுக்கு சென்டரல் என பெயரிட்டனர். அந்த பெயரே இப்பொழுதும் தொடர்கிறது. மும்பை சென்ட்ரல், கான்பூர் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்டரல் ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது உள்ளன. டெர்மினல் டெர்மினல் என்பது இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையகளில் ரயில்கள் வர மட்டுமே முடியும். வந்த பின்பு ரயில்கள் அதை தாண்டி செல்ல முடியாது. இது தான் இறுதியான ஸ்டேஷனாக இருக்கும் இப்படியான இறுதியான ஸ்டேஷன்களுக்கு டெர்மினல் என பெயர் வைத்துள்ளனர். உதாரணமாக டில்லியில் ஆனந்த் விகார் டெர்மினல், மும்பையில் பந்த்ரா டெர்மினல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. ஜங்சன் இது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் ஏராளமான ரயில் நிலையங்களில் பார்க்கும் வார்த்தை, ஆங்கிலத்தில் ஜங்ஷன் எனவும், தமிழில் சந்திப்பு எனவும் எழுதியிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ரயில் நிலையில் 2க்கும் மேற்பட்ட ரயில் பாதைகளை இணைக்கும் இடமாக இருக்கிறது. என அர்த்தம், உதாரணமாக மதுரை சந்திப்பை எடுத்துக்கொள்வோம். அங்கு திண்டுக்கல்- மதுரை ரயில் பாதை, மதுரை- விருதுநகர் ரயில் பாதை, மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை ஆகிய வழிகளை இணைக்கிறது. இப்படியாக 2க்கு மேற்பட்ட வழிகளை இணைக்கும் ரயில் நிலையங்களை சந்திப்பு என குறிப்பிடுவார்கள். கன்டோன்மென்ட் இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் கன்டோன்மென்ட் என ஒரு ரயில் நிலையம் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Cantt என குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ஊரில் ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதி இருக்கிறது என அர்த்தம். பெங்களூரு கண்டோன்மென்ட், ஆக்ரா கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்கள் எல்லாம் இருக்கிறது. நீங்கள் அடுத்த முறை ரயிலில் பயணிக்கும் போது இப்படியான சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்டோன்மென்ட் ஆகிய பெயர்கள் கொண்ட ரயில் நிலையங்கள் வந்தால் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் பயணிக்கும் மற்றவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்.

உடலுறவு என்பது புனிதமா..? பாவமா..? சத்குரு தரும் விளக்கம்..!

 “மனித பாலுணர்வு பாவமா புனிதமா?” பாலுணர்வில் சரி தவறு என்று எதுவுமில்லை. இது பொருள் தன்மையிலான இருப்பின் அத்தியாவசிய அங்கம், ஆனால் குறுகிய எல்லைக்குட்பட்ட பங்கு வகிக்கிறது. பாலுணர்வு உந்துதலை ஏற்பதும், பொறுப்பாக நடத்துவதும் மிகவும் முக்கியம்.

சத்குரு:

“வாழ்க்கையில் விரும்பத்தக்க விஷயங்கள் அனைத்தும் ஒழுக்கக்கேடானதாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இருப்பது எதனால்?” இளைஞர்கள் அடிக்கடி இப்படி கேட்கிறார்கள் அல்லது இதுபற்றி சிந்திக்கிறார்கள். முதலில் பாவம் என்ற சொல்லைப் பார்ப்போம். பெரும்பாலும் உடலுறவை குறிக்கும்போது மக்கள் பாவம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். வாழ்க்கையில் உடலுறவு பற்றி சிந்திப்பதிலேயே அபரிமிதமான நேரத்தை மக்கள் செலவிடுகிறார்கள். ஒரு சாதாரண உடல்தேவை, பலருக்கு வாழ்க்கை முழுக்க மனதை ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: பாலுணர்வு என்பது நமக்குள் இருக்கும் ஒரு சாதாரண உந்துதல், பருவமெய்தும்போது ஏற்படும் ரசாயன மாற்றம்.

இனப்பெருக்கம் நோக்கி நம்மை உந்தித்தள்ள இயற்கை இதை இனிமையான அனுபவமாக செய்துள்ளது. காலப்போக்கில் நாம் இனப்பெருக்கத்தை விருப்பத்திற்கேற்ப தேர்வுசெய்யும் அம்சமாக்கிவிட்டோம், ஆனால் அதுதரும் இன்பம் அப்படியே இருக்கிறது. இதில் சரி தவறு என்று எதுவுமில்லை. பொருள்தன்மையிலான இருப்பின் அத்தியாவசியமான அங்கமாக பாலுணர்வை ஏற்றுக்கொள்வது முக்கியம். இருவர் மத்தியில் இந்த பாலுணர்வு சார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதால்தான் நீங்களும் நானும் இங்கு இருக்கிறோம், இதுதான் நிதர்சனம்.

மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மதம் மற்றும் நெறிமுறை போதிப்பவர்கள் நம் உடலே பாவம் என்று சொல்லிவிட்டார்கள். காலங்காலமாக, இது சொல்லமுடியாத குற்ற உணர்வையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது. ஏதோவொன்றை எந்த அளவு அதிகமாக ஏற்க மறுக்கிறீர்கள், அந்த அளவு அது மனதில் முக்கியமானதாக வியாபிக்கும். இப்படி இயற்கை உந்துதலை அடக்கமுயலும் நிலை மனித மனத்தில் சொல்லமுடியாத கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.

அதே சமயத்தில் நாம் என்ன நம் ரசாயனங்கள் ஆட்டிப்படைக்கும் பொம்மைகளா? நிச்சயமாக இல்லை. மனித வாழ்வில் உடலுறவு உரிய பங்கு வகிக்கிறது, ஆனால் அது ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டது. மனம் கூர்மையாக இருப்பவர்கள், இந்த உந்துதல் தங்களை அதிகம் ஆட்டிப்படைக்காததை கவனிக்கிறார்கள். மனதினும் ஆழமான இன்பங்களைக் கண்டறிந்துவிட்டால், பாலுணர்வின் முக்கியத்துவம் மேலும் குறையும்.

பாலுணர்வு உரிய இடத்தில் இருக்க அனுமதிப்பது

மதத்தின் பாரம்பரியத்தில், உடலுறவு பாவச்செயல் என்று சொன்னதற்கு எதிர்வினையாக, மேற்கத்திய நாடுகள் சமீப காலமாக உடலுடன் அதிகப்படியான அடையாளம் கொள்ளத் துவங்கிவிட்டது. இந்த போக்கையே பின்தொடர்வது துரதிர்ஷ்டவசமாகிவிடும். நம் அடிப்படை உடலியக்கத்தை நாம் அபத்தமாக்க வேண்டியதில்லை. அதே சமயம் அதை கொண்டாடவும் வேண்டியதில்லை.

குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபம் நோக்கிய உங்கள் வளர்ச்சியை நீங்கள் கவனித்தால், அது உங்களை வியப்பில் ஆழ்த்தவேண்டும், உங்களை ஆட்டிப்படைக்கக் கூடாது. இயற்கையான ஒரு புத்திசாலித்தனம், வெறும் ஹார்மோன்களின் விளையாட்டைக் கடந்தவர்கள் நாம் என்பதை நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. விலங்குகளைப் போலல்லாமல், மனிதர்கள் ரசாயனங்களின் தயவில் இல்லை. மனிதருக்குள் உணர்ச்சியளவில் மற்றும் சிந்தனையளவிலான துணைக்கான தேவை, உடலின் தேவையைவிட மிகவும் வலுவாக இருக்கிறது.

துரதிஷ்டவசமாக, தங்கள் புத்திசாலித்தனம் மீது ஹார்மோன் செயல்முறை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பவர்கள், தங்கள் உள்நிலை சமநிலையை இழந்துவிடுகிறார்கள். எங்கோ வாசித்தது, இணையத்தில் பார்த்தது, அல்லது திரைப்படத்தில் பார்த்ததற்கு தங்கள் புத்திசாலித்தனத்தை இளைஞர்கள் பலிகொடுப்பது பரிதாபமானது. இதன் விளைவு, உள் விழிப்புணர்வு மற்றும் சமநிலையின் அடிப்படையில் பாலுணர்வுக்கு பதில்செயல் செய்யாமல், ஒரேவிதமாக பதில்கொடுக்கிறார்கள்.

மக்கள் தொடர்ந்து பாலுணர்வை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுகிறார்கள், ஆனால் இரண்டும் அவசியமில்லாதது. உடலிலும் மனதிலும் ஒருவித உள் சமநிலையை நாம் வளர்த்தால் போதும், பாலுணர்வு உரிய இடத்தைச் சேரும். பாலுணர்வு உந்துதலை ஏற்றுக்கொள்வது முக்கியம், அதை பொறுப்பாக நடத்துவதும் மிகவும் முக்கியம்.

இளமையிலிருந்தே பயிற்சிசெய்யத் துவங்கினால், சில எளிய யோகப்பயிற்சிகள் மிகுந்த பலன்தருவதாக இருக்கமுடியும், ஏனென்றால் எந்த போதனையும் செய்யக்கூடியதைவிட உடலையும் மனதையும் அது திறம்பட சமநிலைப்படுத்துகிறது.

மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு!

ஆசை ஆசையை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்ட மனைவியை, ஒரே வாரத்தில் மனைவியில் ஆசைக்காக அவருடைய காதலனுடனே அனுப்பியவர். இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...




தமிழ் திரையுலகில், உடல்மொழியால் நடிக்கும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் ஜே.பி.சந்தரபாபு. கதாநாயகன், காமெடி நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என என தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரது திரையுலக வாழ்க்கை செல்வம் செல்வாக்கை கொடுத்திருந்தாலும், இல்லற வாழ்க்கை சந்தோஷமானது கிடையாது. ஆசை ஆசையை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்ட மனைவியை, ஒரே வாரத்தில் மனைவியில் ஆசைக்காக அவருடைய காதலனுடனே அனுப்பியவர். இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...




நடிகர் சந்திரபாபு தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் ஜோசப் பிச்சை என்றாலும், இவரை அனைவரும் பாபு என்றே அழைப்பது வழக்கம். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்பதால் தன்னுடைய பெயரைச் சந்திரபாபு என இவரே மாற்றிக் கொண்டார். இவரது தந்தை ஒரு விடுதலை போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டவர். அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது ஆங்கிலேயே அரசு.


அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார் சந்தரபாபுவின் தந்தையார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி தன்னுடைய படிப்பை முடித்தார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. தன்னுடைய தந்தை போலவே இவரும் நாளிதழில் பணியை துவங்கினார்.




இவர் ஒரு தமிழராக இருந்தாலும், ஆங்கிலேயரின் நவ நாகரீக ஆடைகள், மற்றும் அணிகலன்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். எப்போதும் ஸ்டைலிஷாக இருப்பதை விரும்புவார். எனவே இவரது கவனம் திரையுலகின் பக்கம் திரும்பியது. தன்னுடைய 16 வயதில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். ஒரு படத்திற்கு வாய்ப்பு கேட்க சென்ற போது, அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனவே தற்கொலைக்கு முயன்றார். இதற்காக நீதிமன்றம் வரை சென்ற சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: “உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும் என வாதிட்டார்.”


ஒருவழியாக 1947ஆம் ஆண்டு 'அமராவதி' என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி, மிக விரைவிலேயே முன்னணி காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என அப்போதே அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் சந்திரபாபு தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் பாடல் பாடுவதிலும் வல்லவர்.




திரையுலக வாழ்க்கையில் இவர் நினைத்த தூரத்தை மிக விரைவாகவே எட்டினாலும், இவரது சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் படி சந்தோஷமாக அமைந்து விடவில்லை. கோயம்புத்தூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சுவாமிகண்ணு வின்சென்ட்டின், பேத்தியும், ஆங்கிலோ இந்தியருமான ஷீலாவை சந்திரபாபு முதன்முதலில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போதே அவருக்கு ஷீலாவை மிகவும் பிடித்து விட்டது. ஆசை ஆசையாக தீராத காதலுடன், 1958 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.





அப்போதைய சினிமா வட்டாரமே மெச்சும் படி நடந்த இவரது திருமணத்தில் முதல்வர் காமராஜ் உட்பட பிரபல திரையுலகப் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவி ஷீலா வேறொருவரை காதலித்ததாக கூறியதும், அவரது ஆசையை நிறைவேற்ற, அவரது காதலனுடனே சேர்த்து வைத்தார்.
 



ஷீலாவின் காதலர் லண்டனை சேர்ந்தவர் என்பதால், அவர் லண்டன் செல்லும் வரை சந்திரபாபு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை அவருக்கு கொடுத்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, முறையாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், சந்திரபாபுவின் ஒப்புதலுடன் லண்டனை சேர்ந்த, தன்னுடைய காதலரான மருத்துவர் ஒருவரை ஷீலா திருமணம் செய்து கொண்டார்.


திருமண வாழ்க்கை கொடுத்த வலியை அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும், அது அவரை அதிகம் பாதித்தது.தனது திரையுலக வாழ்க்கையில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க முடிவு செய்த அவர், தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட தெரிவிக்காமல் டெல்லி சென்றார். அந்த நாட்களை அவர் மது அருந்திக்கொண்டே இருந்தார். பின்னர் அவர் காதல் மற்றும் திருமணம் தோல்வியுற்ற போதிலும் தொழிலில் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். தொழில் ரீதியாகவம் சில தோல்விகளை சந்தித்தார் சந்திரபாபு.




இவர் ஒரு கிறித்தவர் என்பதால், மாதா மீது கொண்ட பற்றின் காரணமாக... சர்ச் கட்டுவதற்கு கலைநிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி கொடுத்துள்ளார். மேலும், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்த இவருடைய வாழ்க்கை வரலாறு... கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் படம் கூட சந்திரபாபுவை நினைவில் வைத்து கதை எழுதப்பட்டகாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது மண்ணின் மரங்களை அறிவோம் : புங்கமரம்


"புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்" - பழமொழி...
இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா ?....
அந்தநிலையை மாற்றவேண்டுமெனில் பூமியின்மீது சூரிய ஒளி நேரடியாக படுகின்ற இடங்களை முடிந்தவரை குறைக்கவேண்டும். அதைத்தவிர வேறொரு வழியுமில்லை. அதற்கு தீர்வு பூமியெங்கும் தாவரப் போர்வைதான் ஒரே சிறந்த வழி...
கார்பனை குறைத்து வெப்பத்தை தணிபதற்கேற்ற அதிக ஆக்ஸிஜன் கொடுக்கின்ற மரங்களாகவும், நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய நமது மண்ணிற்கேற்ற மரங்களாகவும் இருக்கிற மரவகைகளின் வரிசையில் இன்று, புங்கன் மரம் அல்லது புங்கமரம் என தமிழில் குறிப்பிடப்படும் மரத்தினைப்பற்றி பார்ப்போம்...
இம்மரம் இருக்கின்ற பகுதிகளில் அங்கு வாழும் மக்கள் அவரவர் வட்டாரப் பெயர்களில் இதை கரஞ்ச், கரஞ்சா, புங்கை, புங்கு அல்லது பூந்தி அல்லது சுரஞ்சகம் Beach tree (Millettia pinnata) 
என அழைக்கிறார்கள்...
இந்தியாவை தாயகமாகக் கொண்டதுதான் இந்தப் புங்கன். அதுவும் நமது மேற்குதொடர்ச்சி மலைகளில் தோன்றியதாக தாவரவிலாளர்களால் குறிப்பிடப்படுகிறது, இம்மரம்...
வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது, ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, மரம் முழுவதுமே இலைகள் நிறைந்து அடர்த்தியாக இருக்கும், அதேசமயம்  இலைகளுக்கிடையே ஊடுறுவும் காற்றை தடுப்பதில்லை உள்ளே புகுந்து வெளியேவரும் காற்றானது மிகுந்த குளுமையுடன் வெளியேவருவதால் மரத்தினைச்சுற்றி எப்போதும் நிறைந்த குளுமையாகவே இருக்கும். மற்ற மரங்களை ஒப்பிடும்போது இதன் நிழல் மிக அடர்த்தியாக இருக்கும் அதாவது மரத்தினடியில் சூரிய வெளிச்சத்தினையே காணமுடியாதபடி இருக்கும்...
புங்கன்மரத்தினை வீட்டில் வளர்க்கக் கூடாது என்கிற கருத்தினைச் சிலர் சொல்வார்கள், இது மிக்க குளுமைத்தன்மையோடு இருப்பதால் வெயில் காலங்களில் இதனடியில் இருப்பவர்கள் அந்த இடத்தினைவிட்டு நகர மனமே வராது.அதனால் உழைக்காமல் சுகமாக மரத்தினடியிலேயே இருந்துவிடுவார்கள் என்பதான் காரணத்தினால் கூட, முற்காலத்தில் இவ்வாறு இம்மரத்தைப் பற்றிய கருத்தினை சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டம் என்பது, புவி வெப்பமானது மிகுவெப்பத்தினை நோக்கி மேலே மேலே ணெல்கிற நிலைதான்...
ஆக நம்மைச் சுற்றி வெப்பம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் புங்கன் மரங்களை வீட்டில் மட்டுமல்ல வீட்டைச்சுற்றிலும்  இருக்கிற காலியிடமெங்கும் வளர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில்தான் இப்போது இருக்கிறோம்...
மழைகாலத்தில் இலைகள் முற்றிலும் கொட்டிப் போகமல் இருக்கும் போதே துளிர்கள் துளிர்த்துவிடும், இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்களில் தேன்(மதுரம்)நிறைந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் தேனீக்களையும் வண்டுகளையும் அதிகளவு ஈர்க்கும். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூப் போன்று காணப்படும். இம்மரத்தின் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயன்படுகிறது, இதன் காய்கள் கண் வடிவிலிருக்கும் (பார்க்க படம்). காயினுள்ளே ஒன்று அல்லது இரண்டு விதைகளோடு இருக்கும். பச்சை நிறத்திலிருக்கும் காய்கள் முதிரும்போது மஞ்சள்நிறம்கலந்த கோதுமை நிறத்திற்கு மாறி முற்றிகாய்ந்த நிலையில் உதிர்ந்துவிடும்...
புங்கை விதைகள் எண்ணெய் தன்மை கொண்டவை, இதில் கிடைக்கும் எண்ணெய் எரியும்தன்மை கொண்டது,  இந்த எண்ணெயை மருந்தாகவும், பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம், எண்ணெய் எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கு நல்ல இயற்கை உரமாகும்...
புங்கன்மரம் மிகுந்த உயரமாக வளராத நடுத்தர உயரமுள்ள என்றும் பசுமை மாறாத விரிந்த சிவிகையைஉடைய மரமாகும் நம்நாட்டில் பெரும்பாலும் நிழலுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது...
சுந்தரவனக் கரையோரப்பகுதி முதற்கொண்டு அந்தமான் மற்றும் தீபகற்ப இந்தியாவின் ஆற்றங்கரைகள், சாலை ஓரங்கள், கால்வாய் கரைகள், கடலோரப்பகுதி, தரிசு மற்றும் விவசாய நிலங்கள் என வறண்ட நிலம் சதுப்பு நிலம் உவர்மண்நிலம் வனப்பகுதி என எல்லா இடங்களிலும் எல்லாதட்பவெப்நிலையிலும் நன்கு வளரக்கூடியது...
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் மூங்கிலுக்கு அடுத்தநிலையில் புங்கன்மரம் இருக்கிறது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன...
புங்கன் வறட்சித் தாங்கக்கூடியது அதே சமயத்தில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் தன்மையுடைய தாவரங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. வனச்சூழலில் இது விதைகள் மூலம் மளமளவென்று பரவுகிகிறது. விதைகள் மட்டுமின்றி வேர்கள் மூலம் கூட புதுமரத்தை உருவாக்கும் இயல்புடையது. நானும் எமது நண்பர்களும் மேற்குதொடர்ச்சிமலையின் அத்திக்கடவு பகுதிகளில் இருவாச்சிப் பறவைகளைத்தேடிச் செல்லும்போது பவானி நதியின் கரைகள் முழுவதும் புங்கன் நிறைந்து இருப்பதைக்கண்டோம். அதுவும் இதன் வேர்மூலம் புதிய இளம் கன்றுகளை உருவாக்கி இருப்பதை பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டோம்....
மரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ குணமுடையது. எங்கள் கோவை வட்டாரப் பகுதிகளில் இதன்காய்களை குழந்தைகளுக்கு கழுத்திலோ இடுப்பிலோ கட்டிவிடும் பழக்கம் சிறிது காலங்களுக்கு முன்வரை இருந்தது. இப்போது அந்தப் பழக்கம் இருக்குறதாவெனத் தெரியவில்லை. இந்தப் பழக்கம் எந்தெந்தப் பகுதியில் இருந்ததென்றும் தெரியாது...
வெப்பத்தைக் குறைப்பதில் முதலிடத்திலும்....
மிகுந்த மருத்துவ தன்மையுடைய தாவர பாகங்களையும்... 
மாற்று எரிபொருளாக பயன்படும் இதன் எண்ணெயும்...
உரமாக புண்ணாக்கும்...
நாராக இதன்பட்டைகளும்...
மூச்சுக் காற்றை சுத்தம் செய்ய இது வெளிப்படுத்தும் அதிக அளவு ஆக்ஸிஜனும்....
என குறைவில்லாமல் மனிதர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் இந்தப் புங்கை...
-இப்படி  எல்லாவகையிலும் பயனுள்ள எங்கும் வளரக்கூடிய நமது மண்ணின் மரமான இதை எங்கள் அவினாசி பகுதிகளில்  அதிகளவில் வளர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.இதைப்படிக்கிற நீங்களும் அதிக அளவு வளர்த்து இந்தபூமியின் வெப்பத்தைக்குறைத்து அவரவரால் முடிந்த அளவில் சுற்றுச்சூழலை காப்போம்...

ஆன்மீக வினா விடைகளை சொல்லித் தரவேண்டும்


 *1, கந்த சஷ்டி* *கவசத்தை எழுதியவர்* *யார்?* 


 விடை;-

ஸ்ரீ பால தேவராயர் சுவாமிகள் 


 *2, கந்த குரு கவசத்தை* *எழுதியவர் யார்?* 


விடை;-

ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள்


 *3, காயத்திரி* *மந்திரத்தை* *அளித்தவர் யார்?* 


விடை;-

பிரம்மரிஷி ஸ்ரீவிசுவாமித்திரர்


 *4,  ஸ்ரீ வேங்கடேச* *சுப்ரபாதம் என்னும்* *பாடலை இயற்றியவர்*  *யார் ?* 


 விடை ;-

ஸ்ரீ அண்ணங்கராச் சாரியார், (ஹஸ்தகிரி அனந்தசாரியலு ஸ்வாமிகள்)


 *5,  திருப்புகழ் என்னும்* *நூலை* *எழுதியவர் யார்?* 


விடை;-

ஸ்ரீ அருணகிரிநாதர்


 *6, திருமந்திரம்* *என்னும் நூலை எழுதியவர்* *யார்?* 


விடை; -

ஸ்ரீ திருமூலர்


 *7,   கந்தபுராணம்*  *என்ன நூலை எழுதியவர்* ?


விடை;-

ஸ்ரீ கச்சியப்ப முனிவர்


 *8, மீனாட்சி அம்மன்* *பிள்ளைத்தமிழ் என்னும்* *நூலை* *எழுதியவர் யார்?* 


 விடை;-

ஸ்ரீ குமர குருபரர்


 *9. கந்தர் அநுபுதி* *என்னும் நூலை* *எழுதியவர் ?* 


விடை ;-

ஸ்ரீ அருணகிரிநாதர் 


 *10. திருமுருகாற்றுப்படை என்னும்*  *நூலை* *எழுதியவர்* *யார்?* 


 விடை;-

ஸ்ரீநக்கீரர்


 *11.  திருவிளையாடல்* *புராணம் என்னும்* *நூலை எழுதியவர்* *யார்?* 


விடை; ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்


 *12, அபிராமி அந்தாதி* *என்னும்* *நூலை எழுதியவர்* *யார்?* 


விடை;-

ஸ்ரீ அபிராமி பட்டர் 


 *13, பெரிய புராணத்தை* *இயற்றியவர் யார்* ?


விடை; ஸ்ரீசேக்கிழார்


 *14,குமாரஸ்தவம் என்ற நூலை* *இயற்றியவர்?* 


விடை;-

ஸ்ரீ  மத் பாம்பன் குமர குருதாச சுவாமிகள்


 *15,நான்மறை வேதங்களை* *தொகுத்வர் யார்?* 


விடை; ஸ்ரீ வேதவியாசர் 


 *16. தெய்வ மணிமாலையை எழுதியவர்* *யார்?* 


விடை;-

ஸ்ரீ ராமலிங்க அடிகளார் (வள்ளலார்)  


 *17. யோகாசனம்* *என்ன நூலை எழுதியவர்* *யார்?* 


விடை;-

ஸ்ரீ பதஞ்சலி முனிவர்  


 *18.திருப்பாவை என்னும் நூலை எழுதியவர்* *யார்?* 


விடை;-

ஸ்ரீ ஆண்டாள்  


 *19. திருவெம்பாவை என்னும் நூலை இயற்றியவர்* ?


விடை;--

ஸ்ரீ மாணிக்கவாசகர் 


 *20, ஸ்ரீஹனுமான்* *சாலிசா பாடல்களை இயற்றியவர்* ?


விடை;-

ஸ்ரீ துளசிதாசர்


*"ஓம் நமச்சிவாய வாழ்க"*

*நாதன் தாள் வாழ்க*



  🙏 *ஓம் நமசிவாய சிவாயநம ஓம்*🙏


                 

ஸநாதன தர்மம் என்றால் என்ன? வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


இந்தியாவிலுள்ள பலருக்கும், “ஸநாதன தர்மம் என்றால் என்ன? அதற்கான மூலம் என்ன?” என்பனவற்றிற்கான சரியான விடை தெரிவதில்லை. இதனால், மக்கள் மத்தியில் ஸநாதன தர்மத்தைப் பற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. எனவே, இவற்றைத் தெளிவுபடுத்தி ஸநாதன தர்மத்தின் உண்மைப் பொருளை சாஸ்திர பிரமாணங்களுடன் விவாதிக்க வேண்டியது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.


ஸநாதன தர்மம் – இந்து சமயமா? இந்தியர்களுக்கு மட்டுமானதா?


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸநாதன தர்மத்தை இந்திய நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஒரு பண்பாடு என்று உலக மக்கள் கருதுகின்றனர். ஆயினும், உண்மை அதுவல்ல. மஹாபாரதம், இராமாயணம் போன்ற பண்டைய கால நூல்களின்படி முழு உலகமும் “பரத கண்டம்” என்று அறியப்பட்டது. அந்த பரந்த நிலப்பரப்பு காலப்போக்கில் அரசியல் காரணங்களால் சுருங்கியது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகளில் பரவியிருக்கும் ஹிந்துகுஷ் மலைத்தொடருக்கு கிழக்கே அமைந்த நிலப்பரப்பினை “ஹிந்துஸ்தான்” என்று கூறத் தொடங்கினர்; அதுவே பின்னர் “இந்தியா” என்று மாற்றமடைந்துள்ளது.


மேலும், பாகிஸ்தானில் பாயும் சிந்து நதிக்குக் கிழக்கே வாழ்ந்த மக்கள் “ஹிந்துக்கள்” என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ஸநாதன தர்மமும் “இந்து சமயம்” என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட மக்களின் மத நம்பிக்கையினைக் குறிக்கும் சொல்லாகத் திரிபடைந்துள்ளது.


இன்றைய இந்து சமயம் ஸநாதன தர்மத்தைப் போன்று தோன்றினாலும், ஸநாதன தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்கள் இந்து மதத்தில் முற்றிலும் நீர்த்துப்போய்விட்டன. அதாவது, பண்டைய காலத்தில் (இந்தியாவில் மட்டுமல்லாது) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட பண்பாடாகிய ஸநாதன தர்மம், இன்று இந்து சமயம் என்னும் பெயரில் திரிபடைந்துவிட்டது.


வட இந்தியர்கள் அல்லது ஆரியர்களுக்கானதா?


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆரியர், திராவிடர் என்னும் சொற்களின் உண்மைப் பொருளை அறியாத ஒருசாரார், ஸநாதன தர்மம் ஆரியர்களுக்கான தர்மம் என்றும், திராவிடர்களுக்கானது அல்ல என்றும் வதந்திகளைப் பரப்புகின்றனர். ஆரியன் என்னும் சொல்லுக்கு “மிகச்சிறந்த நபர்” என்று பொருள். திராவிடம் என்னும் சொல்லோ விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பிரதேசங்களைக் குறிக்கின்றது. இங்கு வாழ்பவர்கள் திராவிடன் எனப்படுகின்றனர்.


இங்கே கேள்வி என்னவெனில், திராவிட தேசத்தில் சிறந்த நபர்கள் (ஆரியர்கள்) பிறப்பதில்லையா? பிரிவினைவாதிகள் தங்களின் சுயநலனிற்காக, அரசியல் சூழ்ச்சி செய்து, ஸநாதன தர்மத்தை “வடநாட்டு தர்மம்” என்று கூறி மக்களைக் குழப்புகின்றனர். சமீப காலத்தில், இது மேலும் திரிபடைந்து, பல்வேறு போலி கருத்துகளால் நிரப்பப்பட்டு, பிராமணர்களின் தர்மம் என்று குறுகிய மனப்பான்மையுடன் பேசப்படுகிறது.


“ஸ்வ-தர்மத்துடன் இணைந்து, அனைவருக்கும் பொதுவான ஸநாதன தர்மத்தையும் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினால் மட்டுமே, மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும்.”


பொதுவுடைமைக்கு எதிரானதா


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸநாதன தர்மமும் வர்ணாஷ்ரம தர்மமும் தொடர்புடையவை என்பதால், இதனை பொதுவுடைமைக்கு எதிரானது என்று கம்யூனிஸ்டுகள் ஆதாரமற்ற வாதத்தினை முன்வைக்கின்றனர். இவர்கள் வர்ணாஷ்ரம தர்மத்தையும் ஸநாதன தர்மத்தையும் கொச்சைப்படுத்துவதோடு நாஸ்திகக் கருத்துகளையும் பரப்ப முயல்கின்றனர். ஸநாதன தர்மத்தின் இன்றியமையாத நூல்களில் ஒன்றான ஈஷோபநிஷதத்தில், ஈஷா வாஸ்யம் இதம் ஸர்வம், “அனைத்தும் கடவுளின் சொத்து என்பதால், அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள வஸ்துகளைத் தவிர்த்து, பிறரது வஸ்துகளை அடைவதற்கு விரும்பக் கூடாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையே வர்ணாஷ்ரம சமுதாயத்தின் அடிப்படையாகும்.


இதற்கு மாறாக, வர்ணாஷ்ரம சமுதாயத்தினை “ஜாதி ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டாடும் சமுதாயம்” என்று இதன் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டும் கம்யூனிஸ்டுகளால், தங்களது நாட்டில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடிகிறதா? விஞ்ஞானிகளுக்கும் தெருவைச் சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கும் சமமான ஊதியம், அந்தஸ்து, பாராட்டு, புகழ் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றனவா? ஒவ்வொருவரும் தத்தமது குணத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்து அதற்குரிய ஊதியத்தையும் வசதிகளையும் பெறுகின்றனர் என்பதே இயற்கையின் நியதி.


ஆக, இத்தனை குழப்பங்களையும் களைவதற்கு ஸநாதன தர்மத்தின் உண்மைப் பொருளை அறிய வேண்டும். தர்மம் என்றால் எதைக் குறிக்கும்? ஸநாதனம் என்பது எதைக் குறிக்கும்? தெளிவாக விவாதிப்போம், தொடர்ந்து படியுங்கள்.


தர்மம்


🍁🍁🍁🍁🍁🍁


தர்மம் என்னும் சொல்லிற்கான முதன்மையான பொருள், ஒரு வஸ்துவிலிருந்து பிரிக்க இயலாத இயல்பு என்பதாகும். கடமை, சமயம், தானம், நீதி முதலிய அர்த்தங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே. உதாரணமாக, உப்பு கரிப்பதும் சர்க்கரை இனிப்பதும் அந்தந்த வஸ்துகளின் பிரிக்க முடியாத தர்மம் எனலாம். வெப்பமும் வெளிச்சமும் நெருப்பின் தர்மமாகும், தாகத்தைத் தணிப்பதும் ஈரத்தன்மையும் நீரின் தர்மமாகும். தன்னுடைய தர்மத்தை உணர்ந்து செயல்படுவதே மனிதனின் தனித்தன்மையாகும்.


ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச


 ஸாமான்யம் ஏதத் பஷுபிர் நராணாம்


தர்மோ ஹி தேஷாம் அதிகோ விஷேஷோ


 தர்மேண ஹீன: பஷுபி: ஸமான:


“உண்ணுதல், உறங்குதல், தற்காப்பு, இனப்பெருக்கம் ஆகிய நான்கும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் பொதுவானவை. ஆயினும், தர்மத்தை அறிந்து நடப்பதே மனிதனின் விசேஷ குணமாகும். அதைத் தவறினால் மனிதன் மிருகத்திற்குச் சமமானவன்.” (ஹிதோபதேஷம் 25)


இங்கே “தர்மம்” என்பது, உடல் சார்ந்த இயல்புகளைக் குறிக்கிறதா அல்லது ஆத்மாவின் இயல்பினைக் குறிக்கிறதா? சிலந்தி முதல் சிங்கம் வரையுள்ள எல்லா விலங்குகளும் தங்களது உடல் சார்ந்த இயல்புகளை மாற்றிக்கொள்வதில்லை; புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. ஆகவே, உடல் சார்ந்த இயல்புகளின்படி வாழ்தல் மனிதனின் தர்மமல்ல; உடல் சார்ந்த கடமைகளோ தானங்களோகூட அவனது தர்மமாகாது. எனவே, ஆத்மாவின் இயல்பினை அறிந்து, அதன்படி செயல்படுவதே மனிதனின் விசேஷத் தன்மையாகும்.


உடல் வேறு ஆத்மா வேறு என்பதே ஸநாதன தர்மத்தின் அடிப்படை பாடமாகும். எனவே, மனிதன் உடல் சார்ந்த தர்மமான ஸ்வ-தர்மம், ஆத்மாவிற்கான ஸநாதன தர்மம் ஆகிய இரண்டு தர்மங்களையும் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.


உலக மக்கள் அனைவரும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் மூலமாக எளிதில் முக்தியடைய முடியும்.


ஸ்வ-தர்மம் அல்லது சாதாரண தர்மம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்வ-தர்மம் என்றால், அவரவர் நம்பிக்கைக்கேற்ப (விருப்பத்தின்படி) எந்த மதக் கொள்கைகளை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று சில அசுரத்தனமான அயோக்கியர்கள் கூறுகின்றனர். ஆனால், அதுவல்ல ஸ்வ–தர்மம்.


ஒவ்வோர் ஆத்மாவிற்கும், அவனது சுய விருப்பத்தையும் முற்பிறவியின் பாவ புண்ணியத்தையும் அடிப்படையாக வைத்து, பௌதிக இயற்கையினால் உடல் வழங்கப்படுகிறது. அந்த உடலுடன் தொடர்புடைய கடமைகள் ஸ்வ-தர்மம் எனப்படுகின்றன. இஃது ஒருவரது இயற்கையான குணம் மற்றும் செயலின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தொழிற்கடமைகளைக் குறிக்கின்றது.


ஸ்வ-தர்மத்தை மட்டும்

 பின்பற்றினால் போதுமா?


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


இல்லை. உடல் தற்காலிகமானது, அழிவிற்குட்பட்டது என்னும் பகவத் கீதையின் கூற்றிற்கு இணங்க, உடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் அதிருப்தியிலேயே முடிகின்றன. ஸ்வ-தர்மத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வது அவசியம் என்றாலும், அந்த விதிகளின் இறுதி நோக்கம் பகவான் ஹரியின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு அவரைத் திருப்திப்படுத்துவதே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.


ஆகவே, ஸ்வ-தர்மத்துடன் இணைந்து, அனைவருக்கும் பொதுவான ஸநாதன தர்மத்தையும் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினால் மட்டுமே, மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும்.


ஸநாதனம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸநாதனம் எனும் சமஸ்கிருத சொல் ஸஹ-அனந்தம் என்பதாகும். ஸஹ என்பது நபரைக் குறிக்கிறது; அனந்தம் என்பது ஆதி அந்தமில்லா தன்மையைக் குறிக்கின்றது. எனவே, ஸநாதனம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத உயிர்வாழியான ஆத்மாவைக் குறிக்கிறது. ஸநாதன-தர்மம் எனும் கூட்டுச்சொல் ஆதியும் அந்தமும் இல்லாத ஆத்மாவின் இயல்பினைக் குறிக்கின்றது.


பகவத் கீதை உள்ளிட்ட அனைத்து வேத சாஸ்திரங்களிலும் ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய இருவருமே ஸநாதனம் என்றே வர்ணிக்கப்

பட்டுள்ளனர். ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய இருவருமே ஸநாதனம் என்றபோதிலும், அனைவரும் சமம் என்றோ அனைத்து கடவுள்களும் ஒன்று என்றோ நானும் கடவுளும் சமம் என்றோ கூறி விட முடியாது. இதனை, பகவத் கீதை (15.7) தெளிவுபடுத்துகின்றது:


மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸநாதன:


மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி


“ஜடவுலகில் கட்டுண்டு கிடக்கும் அனைத்து ஜீவராசிகளும் என்னுடைய நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணமாக அவர்கள் மனம் உள்ளிட்ட ஆறு புலன்களால் கட்டப்பட்டு கடுமையாகத் தவிக்கின்றனர்.”


ஜீவாத்மாக்கள் கிருஷ்ணருடைய அம்சங்கள் என்பதால், அவர்கள் தன்மையில் பகவான் கிருஷ்ணரை ஒத்துள்ளனர். ஆயினும், ஜீவாத்மாக்கள் கிருஷ்ணரின் தெய்வீக குணங்களை முழுமையான அளவில் பெற்றிருப்பதில்லை, சிறிதளவே கொண்டுள்ளனர். சூரியனும் சூரியக் கதிர்களும் ஒரே தன்மையைக் கொண்டிருந்தாலும், சூரியக் கதிரின் வெப்பம் ஒருபோதும் சூரியனின் வெப்பத்திற்கு சமமாகாது என்பதை இங்கே உதாரணமாகக் காணலாம்.


ஆகவே, ஸநாதன தர்மம் என்பது நித்தியமான ஆத்மாவின் தர்மத்தைக் குறிக்குமே தவிர, தற்காலிகமான உடல் சம்பந்தமான சாதாரண தர்மத்தைக் குறிக்காது. எனவே, எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தாலும், மனிதர்கள் உள்ளிட்ட உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் பகவான் கிருஷ்ணரின் நித்திய சேவகன் என்பதே ஸநாதன தர்மமாகும்.


கலி யுகத்தில் ஸநாதன தர்மம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்வ-தர்மத்தைக் கடைப்பிடிப்பதோடு அதைக் காட்டிலும் முக்கியமான ஆத்ம தர்மமான பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுதல் எனும் ஸநாதன தர்மத்தையும் கடைப்பிடிப்பது மனிதனின் தலையாய கடமையாகும். ஸ்ரவணம், கீர்த்தனம் (செவியுறுதல், உரைத்தல்) முதலான ஒன்பது வகைகளில் பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுவதே மனித வர்க்கத்தின் தலையாய கடமை என்று பிரகலாத மஹாராஜர் போதிக்கின்றார். இது ஸநாதன தர்மத்தின் உண்மைப் பொருளை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.


கலி யுகம் மிகவும் வீழ்ச்சியடைந்தது என்றும், இதில் வாழும் மக்கள் அமைதியற்ற, அற்ப ஆயுள் பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.1.10) விளக்குகிறது. அதே சமயத்தில், கலி யுகம் ஒரு மகத்தான குணத்தைப் பெற்றுள்ளது: உலக மக்கள் அனைவரும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை புரிவதன் மூலமாக எளிதில் முக்தியடைய முடியும். (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51)


கிருஷ்ண பக்தி என்னும் ஸநாதன தர்ம பிரச்சாரத்தின் மூலமாக, பல தரப்பட்ட உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைய முடியும் என்பதை இஸ்கான் நிரூபித்துள்ளது. வங்காளத்திலுள்ள மாயாபுரில் ஆண்டுதோறும் கூடும் இஸ்கான் பக்தர்களின் சங்கத்தில் இதனை கண்கூடாகக் காணலாம்.


எனவே, உலகம் முழுவதிலும் அமைதி நிலவ வேண்டுமெனில், நாம் அனைவரும், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் மஹா மந்திரத்தை அன்றாடம் உச்சரிப்போமாக. அதன் மூலம், நாம் அனைவரும் உண்மையான ஸநாதன தர்மத்தைக் கடைப்பிடித்து, கோலோக விருந்தாவனத்திற்குச் சென்று பகவான் கிருஷ்ணருடன் மகிழ்ச்சியாக வாழ்வோமாக.

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா தற்போதைய இந்திய அமைப்பின் முரண்பாடுகளை குறிப்பிடுகிறார்* 😰😰😳


😰😰சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்:


✒️🥨 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.

ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.


✒️🥨 2. ஒரு குடிமகன்  சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.

ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.


✒️🥨 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால்  கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும்,

ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது  ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.


🥨✒️ 4.  ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.

ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.


✒️🥨 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும்.

ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.


🥨✒️அவருக்கே எதிராக  எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம்.


🥨✒️ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு.


🥨✒️ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து,  5 வருடம் லஞ்சம்,  ஊழல் மற்றும்  எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,


🥨✒️ இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?

இந்த அமைப்பு மாற்றப்பட  வேண்டுமா, இல்லையா?


🥨✒️தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா?.


🥨✒️இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்கவும்.


🥨✒️நீங்கள் முன்வரவில்லை என்றால் எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள்.

ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.


🥨✒️திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,

தலைமை அரசு வழக்கறிஞர்,

பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.


🥨✒️இந்த பிரச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம்.

அனைவருக்கும் பகிர்வோம்.👍🙏🙏🙏🙏🙏🙏

கணவன் மனைவி ஒற்றுமையும் -அருந்ததி நட்சத்திரமும்

 *சப்த ரிஷிகள்*

*சப்தரிஷிநட்சத்திர கூட்டம்*.


*வசிஷ்ட நட்சத்திரமும்*

*அருந்ததி நட்சத்திரமும்*


கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ்வது என்பது இப்போதெல்லாம் குதிரைக் கொம்பாகவே உள்ளது. 


மனிதர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. 


முன் காலத்தில் ஒருவருக்கொருவர் சுயசார்பு அதிகம் இருந்தது. 


இப்போது அது இல்லை. அதுவே முக்கிய காரணமாக இருக்கிறதாம். 


கணவனும் மனைவியும் சண்டையில்லாமல் வாழ்ந்தார்கள் என்று 

யாராவது சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும். 


ஆனால், வசிஷ்ட முனிவரும் அவரின் மனைவி அருந்ததியும் சண்டையில்லாமல் 

இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். 


அதனால்தான், புதிதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை, அம்மி என்னும் பெரிய மலை(!) மீது நிற்கவைத்து, வானத்தில் நட்சத்திரங்களாக சுற்றிவரும் அருகருகே இருக்கும் வசிஷ்ட்டரையும் அவர் மனைவி அருந்ததியையும், புதிய மணமக்களுக்கு காண்பிக்கிறார்கள். 


இவர்கள் லட்சம் காலம் சண்டையில்லாமல் வாழ்ந்தவர்கள்; இவர்களைப்போலவே நீங்கள் இருவரும் சண்டையில்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்த அருகருகில் அன்பாய் இருந்து வாழுங்கள் என்று காண்பிக்கிறார்கள். 


மணமக்கள் அந்த நட்சத்திரங்களை பார்க்காமலேயே பார்த்ததாக பொய் சொல்லி, அதேபோலவே வாழ்வில் பொய்யாகவே வாழ்வை தொடங்குகின்றனர். 


இந்த வசிஷ்ட நட்சத்திரமும், அருந்ததி நட்சத்திரமும் சப்தரிஷி நட்சத்திர கூட்டங்களை சேர்ந்தவை. 


சப்தரிஷி நட்சத்திர கூட்டமானது, துருவ நட்சத்திர கூட்டத்துக்கு பக்கத்தில் உள்ளது. 


இந்த சப்தரிஷி நட்சத்திரக் கூட்டமானது, இந்த பூமியை ஒருமுறை சுற்றிவர சுமார் 

2700 வருடங்கள் ஆகுமாம். (உண்மையில் இந்த நட்சத்திர கூட்டத்தை பூமிதான் சுற்றிவருகிறது). 


சூரியன் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. 


அந்த கணக்கில் பார்த்தால், ஒருவருடம் எங்கே, இந்த 2700 வருடங்கள் எங்கே? 


அவ்வளவு தூரத்தில் இருக்கிறது இந்த சப்தரிஷி நட்சத்திர கூட்டம். 


அங்குதான் இந்த வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் இரண்டு நட்சத்திரங்களாக அருகருகில் இருக்கின்றனர். 


சப்தரிஷி என்னும் ஏழு நட்சத்திர கூட்டத்தில் 

நடுவில் இவர்கள் இருவரும் இருக்கிறார்களாம். 


அதனால்தான், வெகுகாலம் கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பதற்கு இவ்வளவு தூரத்தில் இருக்கும் வசிஷ்டரையும் அவர் மனைவி அருந்ததியையும் நமக்கு காண்பிக்கின்றனர்.

Monday, September 11, 2023

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இரு பெண்மணிகள்

இந்த G20 மாநாட்டின் முக்கிய கண்மணிகள்.!

முதலில் இந்த G20 கூட்டம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும் .. 


இரண்டாம் உலகப்பொருக்கு பின் .. 1944 ஆம் ஆண்டு அமெரிகா எல்லா நாடுகளியும் ஆயுதம் குடுத்து போரை வென்ற பிறகு  எல்லா பயலுகளையும் கடன்கார நாடுகளாக  ஆக்கி - Bretton Woods twins ( இதை பற்றி முன்பே பதிவு இட்டு இருக்கிறேநன் ) டாலரை உலக பணமாக மாற்றி - இரண்டு பெரிய கடன் குடுக்க வங்கிகளை உருவாக்கினார்கள் .. 


1.  World Bank - உலக வங்கி 


2. International Monetary Fund - 

சர்வதேச நாணய நிதியம்  


இந்த இரண்டையும் கொண்டு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மூன்றாம் நிலை நாடுகளை அமெரிகா நசுக்கி வந்தார்கள் !!!! 


1999 வரை G7 என்று பெரிய அமெரிக்கா சார்பு நாடுகள் மட்டும் சேர்ந்து உலக பொருளாதாரம் பற்றி பேசி வந்தார்கள் !!! 


வருடம் 1998 - அமெரிகாவின் கைபிடி உலக பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது .. அவர்களது கடன் குடுத்த நாடுகள் எல்லாம் கவிழ்ந்தது !!!! 


(massive debt crises that had spread across emerging markets in the late 1990s, beginning with the Mexican peso crisis and followed by the 1997 Asian financial crisis, the 1998 Russian financial crisis, and eventually impacting the United States, most prominently in the form of the collapse of the prominent hedge fund Long-Term Capital Management in the autumn of 1998) 


அமெரிகா உருவாக்கிய - உலக வங்கி மற்றும் IMF இவைகளால் இந்த உலக பொருளாதார வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை !!!! 


கனடா நாடு  மற்றும் ஜெர்மன் -Canadian finance minister Paul Martin was chosen as the first chairman and German finance minister Hans Eichel hosted the inaugural meeting - அமெரிகாவை தலைமைக்கு நம்பி பயன் இல்லை என்று இந்த G20 கூட்டணியை ஆரம்பித்தனர் --- வருடம் ஒரு முறை அனைத்து நாட்டு தலைவர்களும் - நிதி மந்திரிகளும் கூடி ஒரு தெளிவான உலக பொருளாதார நிலையை சரி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர் !!!! 


========================================


2023 இல் உலகின் இந்த ஆண்டுக்கான பொருளாதார முன் எடுப்புகளை செய்யப்போகிற சிறப்பான இந்த இரு பெண்மணிகள் .. 


1. திருச்சியில் படித்த நமது தமிழக பெருமை மிகு பெண்மணி - நமது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் 


2. பாரத நாட்டின் (நமது கல்கத்தா நகரில் பிறந்த   நம்பியார் குடும்பத்தை சேர்ந்தவர் ) 21 ஜனவரி 2022 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர்.திருமதி கீதா கோபிநாத் 


=========================================


இந்த ஆண்டு இவர்கள் முடிவு எடுக்க போகும் மிக சிறப்பான இரண்டு  விஷயங்கள்:- 


1. Global sovereign debt roundtable to meet next week on local debt restructuring: உலகின் அரசுகள் வாங்கிய கடன்கள் மற்றும் அவைகளின் உள்நாட்டு /வெளிநாட்டு கடன்கள் பற்றிய சீரமைப்பு பற்றிய நிலை !!!! 


மேலும், அவர் சொல்லிய  A multilateral development bank (MDB) is an international financial institution chartered by two or more countries for the purpose of encouraging economic development in poorer nations. Multilateral development banks consist of member nations from developed and developing countries. 


நாடுகள் வாங்கும் கடன் - ஸ்ரீலங்கா கடன் கட்ட முடியாமல் பெட்ரோல் வாங்க முடியாமல் போன விஷயம் நீங்கள் அறிவீர்கள் - இது இந்த திண்ணையில் விவரிக்கும் அளவுக்கு சுலபமான பொருளாதார விஷயம் இல்லை என்பதால் - நீங்களே மேல் தகவல் தேடி  படித்து கொள்ளவும் ..


2.Global Crypto Regulation - அரசுகள் தாண்டி தனி மனிதர்கள் இன்டர்நெட் மூலமாக பணத்தை உருவாக்கி - கிறிப்ட்டோ பணம் - இது அரசுகளுக்கு பெரும் தலைவலி மற்றும் தனி தீவிரவாத குழுக்கள் -போராட்ட குழுக்கள் - கருப்பு பண பரிமாற்றம் - ஆகிய  அரசுக்குகளுக்கு கட்டு படாத பொருளாதாரத்தை உருவாக்கி வருகிற ஆபத்தான நிலையை பற்றியும் இந்த மாநாட்டில் பேச போகிறார்கள் !!! 


இந்த இன்டர்நெட் பணம் நல்லாத கெட்டதா - அதை ஒழிக்க வேண்டுமா / இல்லை அதையும் ஒரு வித கட்டுபாடுடன் இணைத்து கொள்ள வேண்டுமா என்கிற பல பேச்சுக்கள் ஓடுகின்றன .. 


அதை பற்றிய விரிவான அறிக்கையை IMF பக்கத்தில் விரிவான தரவுகள் உள்ளன சென்று பார்க்கவும் 

https://www.imf.org/en/Blogs/Articles/2021/12/09/blog120921-global-crypto-regulation-should-be-comprehensive-consistent-coordinated


==========================================


பாரதிய பெண்கள் - அதுவும் எங்கள் திருச்சிகார பெண்மணி மற்றும் சநாதனத்தை போற்றும் இரண்டு பெண்கள் - உலகின் இன்று வாழும் மானிடர்களின் தலை எழுத்தை முடிவு செய்து மாற்றம் உண்டாக்கும் நிலையில் இருப்பது பெருமையே !!!