தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய மகளிடம் கேட்டார் அப்பா .
"என்னம்மா, ஸ்கூல் எப்படி இருக்கு?"
"பிடிச்சு இருக்கு"...
என்று சொன்னவள் மெதுவாக
சில விஷயங்களை சொன்னாள்.
அரசு பள்ளிகள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் குறைவான சுகாதாரமற்ற கழிப்பறை வசதியைப்பற்றி சொன்னாள்.
அது பெரும்பாலான அரசுப்பள்ளிகளிலும் உள்ள குறைதானே என சொல்லிவிட்டு வேற எப்படி இருந்தது என கேட்டார்.
கொஞ்சம் தயங்கியபடி, "இல்லப்பா , யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிற" எனக்கேட்கும் பொழுது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருக்குப்பா.. பெரிய ஃபேமஷான ஸ்கூலில் படித்துவிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என சொல்ல கூச்சமா இருக்குப்பா" எனச் சொன்னாள்.
அவர் சிரித்து கொண்டே "கவர்மெண்ட் வேலை கிடைச்சால் சொல்ல கூச்சப்படுவியா.??"
"கவர்மெண்ட் காலேஜில் டாக்டர் சீட், இன்ஜினியரிங் சீட் கிடைச்சால் கூச்சப்படுவியா?"
எனக் கேட்டார். "அது எப்படி அப்படி சொல்லுவேன்ப்பா? சந்தோஷமா சொல்லுவேன்' எனச்சொன்னாள். "அதே மாதிரி யார் கேட்டாலும் தைரியமா சொல்லு.. கவர்மெண்ட் ஸ்கூலா என யாராவது இழுத்தால், ஏன் கவர்மெண்ட் வேலை கிடைச்சால் இப்படி கேட்பீங்களாண்ணு நக்கலா கேளு" என்றார்.
"கேட்டவுடன் சிரித்து விட்டு இது தெரியாமல் போச்சே.. இனி யாராவது கேட்கட்டும்" என உற்சாகமாக சொன்னாள்.
"நீ படிக்கிற பள்ளியை என்றுமே குறைவா நினைக்காதே. வேலைக்கு போக இண்டர்வியூவில் எந்த ஸ்கூல் என கேட்பாங்க.. அப்பொழுது கவர்மெண்ட் ஸ்கூல் என சொன்னால் ஏதும் நினைப்பாங்களோன்னு தயங்கினால், அடுத்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தயங்கி சொல்லுவ.. ஆரம்பத்துலயே தைரியமா சொல்லு. நம்ம படிக்கிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என உன் மனசுல பதியணும்.
அங்க பீஸ் கட்டலைன்னா புக் தராமல் நிக்க வைக்க கூட செய்வாங்க. ஆனால் இங்க உனக்கு புத்தகம் கொடுத்து படிக்க சொல்லுவாங்க. அங்க என்ன எக்ஸ்ட்ரா சொல்லி தருவாங்க.. இங்க நீ கேட்டு கத்துகிடணும். அதிக வேலையும் கொடுக்க மாட்டாங்க. உனக்கு என்ன கத்துகிடணும் தோணுதோ அதை கத்துக்கோ. என்ன வேணும்னு எங்கிட்ட சொல்லு. நான் வாங்கித்தர்றேன்" எனச்சொன்னார். உற்சாகத்துடன் கேட்டு கொண்டாள்.
"அங்க எல்லா பிள்ளைகளும் வசதியான, வசதியா காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிள்ளைங்களோடு படிச்சு இருப்ப.. இங்க எல்லோரும் நடுத்தரமா, இயல்பா பழகுற பிள்ளைகளா இருக்கும்.. அதனால எல்லோரிடமும் நல்லா பழகு. டீச்சரை பார்த்து பயப்படாமல் நல்லா பேசு.. மரியாதையா பேசு. இங்க வேலை பாக்குறவங்க எல்லோரும் நல்லா படிச்சு வேலைக்கு வந்தவங்க.. அதிக விஷயம் தெரியும். அவங்ககிட்ட கத்துக்கோ" என சொல்லி முடித்தார்....
💐💐💐
No comments:
Post a Comment