Sunday, September 10, 2023

சிந்தனை செய்-பாம்பாட்டி சித்தர் சொல்

 🍁ஆடு மாடு கோழி மீன் லாம் செத்தா அதோட பிணத்தை எவ்வளவு  காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கு...


🍁ஆனால் 
நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும் உன் பிணத்தை  வாங்கமாட்டான்.

🍁நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னோட பிணம் கிடக்கும்.

🍁நீ வாங்கிய Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும் ஆனா உன்னோட பிணம் வெளியே கிடக்கும்.

🍁இப்படி யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்

🍁நான் யார் தெரியுமா 
நான் அப்படி நான் இப்படி என்று சுயதம்பட்டம் அளப்பரைகள்

🍁விதவிதமான ஆடைகள்
1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா 

🍁விதவிதமான உணவுகள்
3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா 

🍁உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள் அதிபட்சம் 24 மணிநேரத்தில் சொந்தவீட்டிலிருந்து வெளியே கிடத்திவிடுவார்கள்

🍁பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு

ஆனால்...

அந்த பிரபலங்களின் பிணத்தை வாங்க எவர் உண்டு??

🍁இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார்...


No comments:

Post a Comment