Sunday, March 31, 2024

சின்ன வெங்காயம் இருந்தாலே போதும்

ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் இருந்தாலே போதும்.. சின்ன சின்ன உடல்நலக் கோளாறுகளையும் அசால்ட்டாக தீர்க்கலாம். எப்படி தெரியுமா?*


100 கிராம் சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் "B", வைட்டமின் "C" கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து இப்படி அனைத்தும் அடங்கியிருக்கின்றன..


*காரத்தன்மை:* வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய்தான்.. வெங்காயம் உரிக்கும்போது, நம்முடைய நமக்கு கண்ணீர் வருவதற்கு காரணமும் இந்த எண்ணெய்தான். உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றக்கூடியது இந்த சின்ன வெங்காயம்.


ருசிக்காக மட்டுமல்லாமல், உடல் உபாதைகளுக்கும் இந்த சின்ன வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.. காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளைக்கு அரை ஸ்பூன் சின்ன வெங்காய சாறு சாப்பிட்டு வந்தால், நம்முடைய நுரையீரல் பலப்படுமாம்.. நுரையீரலில் தங்கியிருக்கும் அழுக்குகள், கழிவுகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்..


*சுவாச கோளாறுகள்:*

ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.. இதயத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது சின்ன வெங்காயம்.. நெஞ்சுவலி பிரச்சினை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.. ரத்தம் உறையும் பிரச்சினையும் சீராகும்..


உடல் எடை குறைய வேண்டுமானாலும், சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே நிறைய ஊட்டச்சத்து கிடைக்குமாம்.. காரணம், சின்ன வெங்காய சாறு கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது.. முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் நிறையவே உள்ளன..


*ரத்த சோகை:* வெங்காயத்தில் வைட்டமின் E நிறைந்துள்ளதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தடுக்கிறது. இரும்பு சத்து அதிகமுள்ள வெங்காயம், ரத்த சோகையை குணமாக்குகிறது.. மலச்சிக்கல் இருப்பவர்களும், வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.


உடலில் பித்தம் அதிகமாக சேர்ந்துவிட்டால், 4 சின்ன வெங்காயத்தை தோலுரித்து, சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கும்..


*வாய் சுகாதாரம்:* 

பல் வலி இருந்தாலும், வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் உடனே வலி குறையும்.. சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்தாலும், அந்த பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும்... பாக்டீரியாக்கள், தொற்றுக்களும் அழிந்துவிடும்... சின்ன வெங்காயத்துடன், 2 புதினா இலைகளையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இன்னும் நன்மை கிடைக்கும். வெங்காய நாற்றமும் வராது.. வாய்ப்புண் குணமாகும்.


மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு சின்ன வெங்காய சாறு பெரிதும் கை கொடுக்கிறதாம். அதாவது, 50 கிராம் வெங்காய சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வந்தால் ரத்த மூலம் கட்டுக்குள் வருமாம். அல்லது வெங்காயத்தை துண்டுகளாக்கி, சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலக்கோளாறுகளும் நீங்குகிறதாம்.


*கட்டிகள்:* 

சருமத்தில், கட்டிகள் இருந்தாலும், இந்த சின்ன வெங்காயம் உதவுகிறது.. வெங்காயத்தை சுட்டு, சிறிது மஞ்சள், நெய் கலந்து இளஞ்சூட்டுடன் கட்டிகள் மீது வைத்து காட்டினால், நாளடைவில் கட்டிகள் பழுத்து உடையுமாம்..


அவ்வளவு ஏன்? அந்த காலத்தில் பாம்பு கடித்துவிட்டாலும் வெங்காயத்தையே மென்று தின்ன தருவார்களாம். இதனால் உடனே விஷம் இறங்குமாம்.. தேள்கொட்டிய இடத்தில், வெங்காயத்தை நசுக்கி தேய்த்தாலும், விஷம் இறங்கும் என்பார்கள்.


*தலைமுடி:*

தலைவலி தீரவேண்டுமானால் அதற்கும் வெங்காயத்தை அரைத்து பற்று போடுவார்கள்.. தலைமுடி வளர்ச்சிக்கும் வெங்காயம் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் காய்ச்சும்போது, வெங்காய விழுதையும் கொட்டி காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.. சின்ன வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப்பொருள் இருப்பதால், தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.. சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது..!!!

சிந்தனை துளிகள் - 31.03.2024(ஞாயிற்றுக்கிழமை)

மனம் தனிமையை தேடக் காரணம் யாரும் இல்லை என்ற காரணத்தால் அல்ல,

இருப்பவர்கள் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால் தான்.!

தனக்கு உள்ளது போலவே எல்லோருக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கும் என்று புரிந்து கொண்டால் யாரிடத்திலும் குறையோ பிழையோ கண்டுபிடிக்க மாட்டார்கள்.!!

இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம்..

ஆனால் தாழ்ந்து போவதில்லை...!

ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம்..

ஆனால் கடைசிவரை சாதிக்கப் போவதில்லை.!!!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

செய்தித் துளிகள்- 31.03.2024(ஞாயிற்றுக்கிழமை)


🌅🌅மூன்றாம் பருவத் தேர்வுகள்:

புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

🌹👉குறிப்பு:

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.

🌅🌅கல்வி உதவி தொகைக்கு ekyc பணியினை மேற்கொள்ளும் ITK தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை.

🌅🌅ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் கணக்காயர்களுக்கான (Accountants) சான்றிதழ் படிப்புகள் - மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🌅🌅பிரதமர் மோடியின் ரோடு ஷோ  மாணவர்கள் பங்கேற்பு வழக்கு: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்- உயர் நீதிமன்றம்.

🌅🌅அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB).மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது.

🌅🌅2024 மக்களவை தொகுதிக்களுக்கான பொதுத் தேர்தலை முள்ளிட்டு , 34 - விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வாக்குச் சாவடியில் பணிபுரிந்திட நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2 - ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🌅🌅இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு

🌅🌅வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  மணிமொழி அவர்களுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு. 

🌅🌅TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி வெளியானது.நேற்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

🌅🌅ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு

🌅🌅ஏப்ரல் 4-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்:

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. 

இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 4 மாநில நீர்ப்பாசனத்தை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

🌅🌅"தமிழ் என்னுடைய தாய்மொழியாக கிடைக்காதது வருத்தம் தான்"

மொத்த தமிழ்நாடும் ஜெயித்து விட்டு வர வேண்டுமென அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளேன்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரையும் நான் அண்ணாமலையாக தான் பார்க்கிறேன்

-பிரதமர் மோடி

🌅🌅பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சிதம்பரத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவில் இணைந்ததாக தகவல்.

🌅🌅திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்

மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு.

🌅🌅பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில், போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

🌅🌅அதிமுக வெற்றி பெற்றால் புதுச்சேரி 'சிங்கப்பூர்' போல மாற்றப்படும்!

புதுச்சேரி மாநில அந்தஸ்த்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

🌅🌅பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழு அமைப்பு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

🌅🌅தேர்தல் அதிகாரிகள் உறுதியுடன் நடந்து கொள்ள வேண்டும்

"பிரபலமான வேட்பாளர்கள் மட்டுமின்றி அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமும் தேர்தல் அதிகாரிகள் உறுதியுடன் நடந்துகொள்ள வேண்டும்"

தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

🌅🌅தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்கள், தென் சென்னையில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரம் தொகுதிகளில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன

🌅🌅50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது 

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

🌅🌅பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிப்பு

நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது இதுவே முதல்முறையாகும்.

எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

🌅🌅அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50% பணியிடங்கள் ஒதுக்கப்படும்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50% பணியிடங்கள் ஒதுக்கப்படும்

பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்

ராகுல்காந்தி

🌅🌅தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை;

ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட கூடாது என கட்டுப்பாடு.!

🌅🌅கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளது

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி MP

🌅🌅தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

ஒரு கிராம் தங்கம் ரூ.6,370க்கும், ஒரு சவரன் ரூ.50,960க்கும் விற்பனை

🌅🌅மக்களை சந்தித்தால் வெற்றி கிடைக்காது என தெரிந்தே நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடவில்லை தருமபுரியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🌅🌅KYC அப்டேட் பண்ண இன்று கடைசி நாளாகும்.

👉ஃபாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 31) முடிவடைகிறது.

👉முன்னர் பிப்.29 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில்,பின்னர் அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

👉 'ஒரே வாகனம், ஒரே Fastag' என்ற திட்டத்தின் மூலம், ஒரே Fastag-ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது,

👉ஒரே வாகனத்திற்கு பல Fastag-களை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.

👉உடனே KYC அப்டேட் பண்ணுங்க


🌹சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


👉சென்னை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன்,சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.

பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் உரிய தகுதிகள் இல்லாதவர்களை 2019-20ல் துணை தாசில்தார்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் 2012-22-ல் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவர்களை தாசில்தார்களாக நியமிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்து வருவாய் ஆணையருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில், "பணிநியமனம் செய்தபோது அனைவரும் உதவியாளர்களாக இருந்ததால் துணை தாசில்தார்களாக நியமிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், தேர்வு வாரியத்தால் பணியில் சேர்ந்தவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயார் செய்து 4 வாரங்களில் பணி நியமனம் நடைபெற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டன் குழம்பு

 *தேவையான பொருட்கள்*

மட்டன் - அரை கிலோ

புளிக்காத தயிர் - 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

மட்டன் மசாலா - 3 ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு குழி கரண்டி அளவு

தாளிப்பதற்கு பட்டை, சோம்பு ,ஏலக்காய் - சிறிதளவு

கருவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

இஞ்சி - விரல் நீளத் துண்டு

பூண்டு - 10 பல்

சோம்பு - அரை ஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

அண்ணாச்சி பூ - 1

கிராம்பு - 3

அரைக்கக் கொடுத்துள்ள இஞ்சி ,பூண்டு பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மட்டனை நன்கு கழுவி அதில் தயிர் , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.


குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை ,சோம்பு ,ஏலக்காய் போட்டு தாளித்து சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயம் போட்டு மூன்று நிமிடம் நன்கு வதக்கி அதனுடன் அரைத்த இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

அதனுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மட்டன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.


பின்பு அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி அதில் மட்டனும் சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கவும் .


பின்பு மட்டன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஏழு விசில் விட்டு இறக்கவும்.


பின்பு குக்கரை திறந்து பார்த்து குழம்பு தண்ணியாக இருந்தால் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு குழம்பு கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான மட்டன் குழம்பு ரெடி.

Saturday, March 30, 2024

கக்கன்

 


பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர் கக்கன்.. இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் #போலீஸ் #பொதுப்பணி #விவசாயம் #சிறுபாசனம் #கால்நடை_பராமரிப்பு #உள்துறை #சிறைத்துறை #நிதி #கல்வி #தொழிலாளர்_நலம் #மற்றும் #மதுவிலக்கு...   கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை  இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது  வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..  ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு  இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...   அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை... பேசாமல் ஒரு #துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்..   நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார்  யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்...   யார் நீங்கள்  எழுந்து செல்லுங்கள் இங்கெல்லாம் படுக்கக் கூடாது  என்றனர்  அதற்கு அமைதியாக பதிலளித்தார்..   #அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன் அடுத்தரயில் வந்தவுடன் சென்று விடுகிறேன் என்றார். அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்  #அய்யா மன்னித்து விடுங்கள் நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுங்கள்.. என்றனர்  வேண்டாம்.. இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்... அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்...   இன்று கக்கன் ஐயா பிறந்த நாள் . நல்லவர்களை நினைவு கொள்வோம் மற்றும் அனைவர்களிடமும் பகிர்வோம்,

முடி உதிர்தல், பொடுகு, புழு வெட்டு பிரச்னைக்கு குமிட்டி காய்!

குமட்டிக்காய் அல்லது குமிட்டிகாய் எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரம். இதை ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்ம்பேய்கும்மட்டி என்ற வேறு பெயர்களிலும் அழைப்பர்.

இவை களைகளாய் விளைநிலங்களில் காணப்படுகின்றன. இதன் தாயகம் மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி.

குமட்டிக்காய் பண்புகள்: இதன் காய்கள் மிகுந்த கசப்பு சுவையுடையது. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களாகும். சிறிய பந்து போல் இருக்கும் இதன் காய்கள் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

குமட்டிக்காய் பயன்கள்: சித்த மருத்துவத்திலும், வேளாண்மையில் தாவர பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகின்றது. இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும்.

முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு, புழுவெட்டு உள்ளிட்ட தலை முடி பிரச்னைக்கு, வழுக்கு குமிட்டி காய் பூரண குணமளிக்கும். இதன் விதையை, அருகம்புல்லுடன் சேர்த்து அரைத்து, அம்மை நோயால் ஏற்படும். கொப்புளங்களில் வைத்தால், விரைவில் கொப்புளங்கள் குணமாகும்.

வழுக்கு குமட்டி காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்து, மசாஜ் செய்தால், தீராத வலியும் குணமாகும்.

புழு வெட்டு, பொடுகு ஆகியவற்றால் விழுந்த சொட்டை தலையில், வழுக்கு குமட்டி காயின் சாற்றை தேய்த்தால் மீண்டும் முடி முளைக்கும்.

பார்வை திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் !!

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண்சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண்  புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.


* பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை  பயிற்சிசெய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினை சிறிது சிறிதாகக் குறையும். இதுபோன்ற கண் பயிற்சிகள், பார்வைத்திறனை மேம்படுத்தும்.


* தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.


* தூங்கி எழுந்ததும், கண் ரப்பையைச் சுற்றிலும், புருவத்தின் கீழ்ப்பகுதி, புருவத்தின் மேல் பகுதி, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்களில் ஆள்காட்டி விரலைவைத்து, மெதுவாக, மென்மையாக கடிகார முள் சுழற்சி பாதை, அதற்கு எதிரான பாதையில் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இவை கண்களுக்குள் சீரான ரத்த ஓட்டத்தைப்  பாயச் செய்கிறது. கண்களின் வறட்சித் தன்மையைப் போக்குகிறது.


* வெளியில் செல்லும்போது கூலிங் கண்ணாடி அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.


* கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது.

பிறர் விட்ட சாபத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

யாரோ விட்ட சாபம்

தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா? 


மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!


ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். 


அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். 


எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது. 


ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


சேதாரம் இல்லாத 8(ஓட்டை,பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை 

தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும். 


அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில், இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.


அந்த மாவிலைகளின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். 


இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்தெ குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

நைவேத்தியம் பசுமாட்டுக்கு தீவனமாக தரலாம் 


உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை.


தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 


தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அது கட்டாயம் நிவர்த்தி அடையும்.


முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதே போல் கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும், விலக வேண்டும் என்றால் சிறிதளவு அருகம்புல்லை எடுத்து வந்து, உங்கள் தலையில் வைத்து, தலைக்கு தண்ணீர் ஊற்றி  குளிக்க வேண்டும். 


அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆவாரம்பூ பொடியை வீட்டில் வாங்கி வைத்து, ஒரு ஸ்பூன் அளவு, எடுத்து தலையில் தேய்த்து, தலைக்கு குளிக்க வேண்டும்.


மாதம் ஒருமுறை இந்த இரண்டு குளியல் முறைகளில் ஏதாவது ஒரு குளியலை செய்தாலே போதும்.


கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும் கட்டாயம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பௌர்ணமி தினத்தில் இப்படி குளித்தால், உங்களுக்கு இருக்கும் தோஷமும் சாபமும் முழுமையாக நீங்கும் என்பது உறுதி.


தொடர்ந்து 11 மாத பௌர்ணமி தினங்களில், இப்படி குளித்து வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு, யார் எப்படிப்பட்ட கெடுதல் செய்தாலும், உங்கள் மனதார யாரையும் சபித்து விடாதீர்கள்! 


சில நேரங்களில் எதிர்பாராமல், நம் 

வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளானது, அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 


அடுத்தவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கு எக்காரணத்தைக் கொண்டும், நாம் விட்ட சாபம் காரணமாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மரியாதை என்பது கேட்டுப் பெறுவதா?

மரியாதை என்பது கேட்டுப் பெறுவதா? அல்லது கொடுத்து மகிழ்வதா?*


தம்மை விட வயதிலே இளையவர்களாக இருந்தாலும் சரி, அல்லது மூத்தவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ் நிலைப் பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தலே சிறப்பு. 


இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 


மேலும் மரியாதை என்பது ஒரு வழிப் பாதையல்ல! அது இரு வழிப் பாதையாகும்.


மரியாதை என்பது கொடுத்துப் பெறுவது. அது கேட்டுப்

பெறுவதல்ல. 


இது புரிந்து விட்டால் வாழ்க்கையில் நமக்குச் சிக்கல்களே இல்லை. 


முதலில் நம்மை மதிக்கக் கற்றுக்

கொண்டால் தான்,

மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள் என்பது அறிஞர்களின் கூற்று. 


தன்னை உணர்ந்தவர் எவருமே கௌரவம் பார்க்க மாட்டார்கள். யாரிடமும் தனக்கான மரியாதையை அவர்கள் கேட்டுப் பெறவும் மாட்டார்கள்.


ஒருவருக்கொருவர் மற்றவர்களை தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர்கள் என்று தரக் குறைவாக எண்ணாமல்,

ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும். 


ஒருவருடைய மனதை புண் படுத்தாத, நல்ல குணங்கள் உள்ளவர்களை மக்கள் என்றுமே மதிப்பார்கள். 


வாதம், பித்தம், கபம் என்றால் என்ன?

வாதம்

வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும்.

பித்தம்

பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும்.

கபம்

கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும்.

இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும், 1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள் கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும் குறிப்பிடப்படுகின்றது.

வாதம், பித்தம், கபம் மூன்றையும் சீரான நிலையில் வைத்திருப்பது எப்படி?

மனித உடலில் மூன்றும் அவசியம் வாதம் பித்தம் கபம் இவை மூன்றும் சரிசமமாக இல்லாவிட்டால் உடலுக்கு குறைபாடு அதனால் பல இன்னல்கள் ஏற்படும் இதை சரி செய்ய மிகச் சிறந்த வழி உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது மட்டுமே.

வாதம் என்னும் போது காற்று சம்பந்தப்பட்டது காற்றை சுத்தமாகவும் பிராண சக்தியோடு சுவாசிக்கும்போது வாதம் சமநிலை பெறும் இதனை செய்ய மூச்சுப் பயிற்சி செய்தால் வாதம் சமநிலை பெறும்.

பித்தம் இது உடலில் உள்ள கழிவுகள் அதிகரித்தால் பித்தம் ஏற்படும் விரதம் இருந்தால் பித்தம் சமநிலைப்படும்.

உப்பு பேதி வைத்தியம் இருந்தால் பித்தம் சமநிலைப்படும்.

உப்பு பேதி வைத்தியம் தனியாக கொடுக்க இருக்கிறேன் தனியாக கேள்வி கேட்டால் பதிலளிக்கப்படும்.

கபம் என்பது நுரையீரல் சரி செய்தால் கபம் சமநிலை பெறும்.

அதற்கான தீர்வு தனியாக கேட்டால் பதில் அளிக்கப்படும்.

இவை மூன்றையும் சமநிலையில் வைத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதைவிட சிறந்த வைத்தியம் நாவிற்கு பிடித்ததை சாப்பிடவேண்டும்.

உணவை நன்றாக கூழ் போல் அரைத்து நாக்கில் சுவை அற்றுப் போகும் வரை நன்றாக மென்று சாப்பிடவேண்டும் இவ்வாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

'ஒரு குதிரைத் திறன்' என்பது 746 வாட் தான் என்று எதைவைத்து தீர்மானித்தார்கள்?

குதிரைத்திறன் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

அக்காலத்தில் (இயந்திரக் காலத்துக்கு முன் ) பொருள் போக்குவரத்து, பயணம் , விவசாயத் வேலைகள் (நீர்இறைத்தல், …) போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் பயன்பாட்டில் இருந்தது குதிரைதான் . அக்குதிரையின் இடத்தை, புதிதாக இயந்திரங்கள் வந்து சமன் செய்யும்போது , அவற்றின் திறனை, 1 குதிரையின் திறனோடு ஒப்பிட்டால்தான் விளக்கமளிக்க எளிதாக, ஏதுவாக இருக்கும் . இருக்கிறது ..அவ்வளவே !

ஒரு குதிரைத்திறன் என்பது 550 பவுண்டுகள் எடையுள்ள பொருளை ஒரு வினாடியில் 1 அடி ஆழத்தில் இருந்து தூக்குவதற்கு குதிரை பயன்படுத்தும் திறனின் அளவு ஆகும். இதை முதலில் ஜேம்ஸ் வாட் பயன்படுத்தினார். 1 hp என்பது தோராயமாக 746 வாட்ஸ் அல்லது 0.746 கிலோவாட் ஆகும்.


இதற்கு ஒருசில அளவுகளைப் பயன்படுத்தினர்.

ஒரு குதிரைத் திறன் (அடியில்) = 550 பவுண்டு x அடி/வினாடி

1 பவுண்டு = 4.44822 நியூட்டன்

1 அடி = 0.3048 மீ

1 குதிரைத் திறன் = 550 x 4.44822 x 0.3048

இது எல்லாத்தையும் பெருக்கும்போது 745.69 வரும்.

இதை தோராயமாக 746 வாட் என கணக்கிட்டனர்.

இன்னொரு வழியில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள பொருளை குறிப்பிட்ட நேரத்தில் குதிரை இழுக்க எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொருத்தும் கணக்கிட்டனர்.

அதாவது, 14,968.5 எடையுள்ள ஒரு பொருளை ஒரு நிமிடத்தில் ஒரு அடி உயர்த்துவது 1 குதிரைத் திறன் என கணக்கிட்டனர்.

முதல் முதலில் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக மனிதனுக்குத் தெரிந்த நீராவியின் ஆற்றலை பயன்படுத்தி, நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற பம்பு ஒன்றை, இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் ஸேவரி (1650-1715 கிபி) என்ற பொறியியலாளர், வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.

அந்த பம்பை எப்படி சந்தைப் படுத்துவது? இத்தகைய வேலைகளுக்காக அந்நாட்களில் உபயோகத்திலிருந்த குதிரைகளோடு ஒப்பிடுகையில் தான் அமைத்த எந்திரம், குதிரைகளின் பராமரிப்பு செலவைவிட குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்தில் அந்த குதிரைகள் இறைக்கும் நீரைவிட பல மடங்கு நீரை இறைக்கும் என்று விளம்பரப்படுத்தத் துவங்கினார்.

அவர் வெளியிட்ட விளம்பரத்தையே பார்ப்போம்.

"Then I say, such an engine may be made large enough to do the work required in employing eight, ten, fifteen, or twenty horses."

குறிப்பிட்ட நேரத்தில், ஒரு மணி என்று வைத்துக் கொள்வோம், "8, 10, 15 அல்லது 20 குதிரைகள் எவ்வளவு நீரை இறைக்குமோ அவ்வளவு நீரை தான் விற்கும் நீராவி எந்திரம் இறைக்கும் என்று விளம்பரம் செய்தார்.

இதற்க்குப் பிறகு இயற்பியலில் பல்வேறு விதங்களில், மனிதன், குதிரைகள், நீராவி மற்றும் பல விதமான எந்திரங்கள் வெளிப்படுத்தும் ஆற்றலை (power) அளக்க, எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் அளவை ஒன்றை நிலைநிறுவ வரைமுறைகளை (protocol) ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.

கி.பி.1763ல் தாமஸ் ஸேவரியின் பம்புகளை பலவிதங்களில் மேம்படுத்திய "ஜேம்ஸ் வாட்" என்ற பொறியியலாளர் ஒரு நீராவி எந்திரம் எவ்வளவு குதிரைகளின் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் என்பதை தீர்மானிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சிறிய, பெரிய என்று அவர் நினைத்த பல குதிரைகளை வைத்து, ஒரு மணி நேரத்தில் எவ்வளவு நீர் வெளியேற்றப் படுகிறது என்பதை அளந்தார். அவர் எவ்வாறு அளந்தார் என்று பார்ப்போம்.

அவர் 100 அடி ஆழமான 100 சதுர அடி பரப்புள்ள சுரங்கம் ஒன்றை தேர்ந் தெடுத்தார் என்று வைத்துக்கொள்வோம். அதில் அவர் "சராசரி" அளவு என்று கருதிய 100 குதிரைகளை நீரை இறைக்கப் பயன் படுத்தினார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு அந்த 100 அடி ஆழ 100 அடி பரப்புள்ள சுரங்கத்திலிருந்து, 100 குதிரைகள் "அ" மணிநேரத்தில் இறைத்தன என்று வைத்துக் கொள்வோம்.

100 அடி ஆழம் 100 அடி பரப்பு அதாவது 10000 கன அடி தண்ணீரை

100 குதிரைகள் இறைக்க எடுத்த நேரம் = "அ" மணி நேரம்.

ஒரு கன அடி தண்ணீரின் எடையை தராசு வைத்து அளந்து பார்த்ததில் அது 62.4 பௌண்ட் என்று தெரிந்தது.

10000 × 62.4 = 62400 பௌண்ட்

100 குதிரைகள் "அ" மணி நேரத்தில் இறைத்த நீரின் எடை = 62400 பவுண்டு

100 குதிரைகள் ஒரு மணிநேரத்தில் இறைத்த நீர் = 62400 × (அ ÷ 60) பவுண்டு = "ஆ" பவுண்டு என்று வைத்துக் கொள்வோம்.

100 குதிரைகள் 1 நிமிடத்தில் இறைத்த நீர் = "ஆ"÷60 = இ என்று வைத்துக் கொள்வோம்

1 குதிரை 1 நிமிடத்தில் இறைத்த நீர் = "இ"/100 = "ஈ" என்று வைத்துக் கொள்வோம்

ஜேம்ஸ் வாட் பற்பல அளவுகளுள்ள பற்பல சுரங்கங்களில் பல் வேறு அளவுள்ள குதிரைகளை வைத்து மேற்படி "ஈ" வின் சராசரி மதிப்பு 32400 பவுண்டு என்று கண்டறிந்தார்.

மேத்யூ போல்டன் என்ற ஜேம்ஸ் வாட்டின் நிறுவன பங்குதாரர் இதை 33000 பவுண்டு ஆக்கி விட்டார்.

இதன் அடிப்படையில் ஆற்றலின் அளவை "ஃபுட் பௌண்ட்/நொடி" என்று பெயர் சூட்டப்பட்டு கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டது.

"ஒரு நொடி நேரத்தில் ஒரு பௌண்ட் எடையை ஒரு அடி நகர்த்தவல்ல ஆற்றல் ஒரு ஃபுட் பௌண்ட்."

மேற்படி பத்திகளில் விளக்கிய படி ஒரு குதிரை ஒரு நிமிடத்தில் 33000 பவுண்டு எடையை நகர்த்தியது. அதாவது ஒரு நொடியில் 33000÷60=550 பவுண்டு எடையை ஒரு நிமிடத்தில் குதிரையால் நகர்த்த முடியும்.

இந்த கணக்கை வைத்து

1 ஹார்ஸ் பவர் = 550 ஒரு ஃபுட் பௌண்ட்/நொடி, என்று அந்த காலத்தில் நிலவி வந்த "எஃப்.பி.எஸ்" (ஃபுட்- பௌண்ட் -செகண்ட்- அடி-பவுண்டு- நொடி -F.P.S) என்ற இயற்பியல் அளவை முறையில் தீர்மானிக்கப் பட்டது.

பிற்காலத்தில் பல நாடுகள் மெட்ரிக் முறையை அறிவியல் அளவைகளில் பயன் படுத்தத்துவங்கின. அவை F.P.S க்கு பதிலாக M.K.S அதாவது மீட்டர்-கிலோகிராம்-நொடி என்ற அளவை முறையை ஏற்படுத்தின. இந்த முறைப்படி "ஒரு கிலோகிராம் எடையை ஒரு நொடியில் ஒரு மீட்டர் தூரம் நகர்த்தத் தேவைப்படும் ஆற்றல் ஒரு வாட் என்று வரையரறுக்கப்பட்டது.

இந்த எம்.கே.எஸ் முறைப்படி ஒரு வாட் = ஒரு நொடிக்கு 1.3558179483314004 ஃபுட்- பௌண்ட் என்று கணககிட்டார்கள்.

1 ஹார்ஸ் பவர் = நொடிக்கு 550 ஃபுட் பௌண்ட் என்று பார்த்தோம்

இது தோராயமாக 746 வாட் வரும்

சுருக்கமாக எஃ.பி.எஸ் எம்.கே.எஸ் என்ற இரண்டு முறையிலும் "ஹார்ஸ் பவர் " என்பது ஆற்றலின் அளவை அல்ல. குதிரைகளை வைத்து ஜேம்ஸ் வாட் ஏதோ ஒரு குத்துக் கணக்கு போட்டார். அது பிரபலமாகி எல்லோருக்கும் பிடிபட்டுவிட்டது. இயற்பியல் உலகம் எம்.கே.எஸ் முறையைப் பயன் படுத்தினாலும், சாதாரண மனிதன் ஹார்ஸ் பவரை புரிந்து கொள்வதால் அதுவே சந்தையில் பயனுக்கு வந்து விட்டது!

Proof of 1 hp equal to 746 watts

They are both measurements of power, the rate at which work is done,

i.e. work/time = force x distance/time

James Watt calculated the work output of a draught horse to be about 33,000 ft.lbf/min and called it one horsepower. However, one horsepower can mean different amounts of power depending on the applications used. Aaargh!

Hence we now use the metric system which is interchangeable between all the forms of power: mechanical, electrical, chemical etc., and the arithmetic is a lot easier too.

1 Watt = 1 Joule/second = 1 Newton.metre/second = 1 kg.m^2/s^3 = 1 volt.amp, etc.

There are two definitions for the horsepower.

According to the classical definition it is equal to 550 foot pounds per second.This works out to be 746 watts.

The metric horsepower is defined as 75 metre kilograms per second. This works out to be about 735 watts.

Proof of 1 hp equal to 746 watts

HP = Horsepower

HP and Watts are both units of power. Power can be electric or mechanical, and can be converted between the two. Any conversion will be less than 100 % efficient.

It is only for historic reasons that electrical power is measured in Watts not hp, like the way that tyre widths are in mm but rim diameter are in inches.

One pound is 4.44822 Newtons

so 550 foot pounds per seconds, converted to metric, is 550 x 0.3048 x 4.44822 Newton meters per second, which is 745.7 Newton meters per second, better known as Watts.

One foot is 0.3048 metres

1HP = 550 Foot Pound per second

1 Pound = 4.44822 Newtons

1 Foot is 0.3048 Meters.

1 HP = 550 * 4.44822 * 0.3048 meters

1Hp = 745.69 Newton meter per second.

Say 746 watts.


James Watt invented a condensing steam engine which was very much more economical than the few Newcomen steam engines then in use for pumping water out of mines. He knew that mine-owners could easily compare pumping engines with the horse tread-mills then in use for pumping mines. He decided on a value of 550 ft.lb per minute for his horse-power which is a handy amount more than a horse can lift, day after day. (It has been tried, and the horse died after a 10 hour shift!) This meant that mine-owners could not argue the merits of his new device. 550 ft.lb/min is now given as 746 watts per HP using the power unit named for him. His steam engine was an unqualified success, with several hundred exported world-wide. Puimping engines put out 10 to 15 hp on average! This was the beginning of the First Industrial Revolution in 1770 in England.

The electrical energy consumption daily id measured in units. Hence, when we are talking of units, we are talking of energy. However, watt is a measure of power. Also, we know from the elementary formula,

Power=energy/ time

Hence, this gives us “watt-hour” as a measure of energy. Now we can effectively devise a relationship between watthour and unit.

1 unit= 1 KWh or 1000 Wh.

சிந்தனை துளிகள்- 30.03.2024

இருப்பவன் இல்லாதவனை போல் நடிக்கிறான்...

இல்லாதவன் இருப்பவனைப் போல் நடிக்கிறான்...

நடிப்பதே வாழ்க்கை என்றாகிவிட்டது...

பாழாய் போன மனித வாழ்க்கையில்.!

வாழ்க்கையில் கஷ்டங்கள் வரவில்லை என்றால்...

பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும்.!!                                   

உள்ள ஒன்னு வச்சுகிட்டு வெளிய ஒன்னு பேசுறவங்கள விட மனசுல பட்டத வெளிப்படையாக பேசுறவங்கள நூறு சதவீதம் நம்பலாம்.!!!


செய்தி துளிகள் - 30.03.2024(சனிக்கிழமை)


⛑️⛑️4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களது மூன்றாம் பருவத்திற்கான தேர்வில் தேதியில் மாற்றம் செய்து  கல்வித்துறை உத்தரவு.

👉அறிவியல் தேர்வு 10.04.24 க்கு பதிலாக 22.04.24 க்கும்...

👉சமூக அறிவியல் தேர்வு 12.04.24 க்கு பதிலாக 23.04.24 அன்றும் நடைபெறும் 

பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️'இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு வெளியீடு.

⛑️⛑️தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

⛑️⛑️தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஏப்.3-ஆம் வாரத்தில் தொடக்கம்.!                                        ⛑️⛑️சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.                                                              ⛑️⛑️TNPSC மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வெளியீடு.

⛑️⛑️TNPSC - (தொகுதி – II) - மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியீடு (Press Release)

⛑️⛑️புதிய உச்சத்தை அடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,120 உயர்வு. ஒரு சவரன் ₹51,120க்கு விற்பனையாகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் ₹6,390க்கு விற்பனை

⛑️⛑️"மோடி பிரதமராக வரக்கூடாது" ப.சிதம்பரம் பேச்சு 

தமிழக அரசின் தலைமைச் செயலர் நியமனத்திலும், டிஜிபி நியமனத்திலும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது. 

அடுத்த தேர்தல் வரவேண்டும் என்றால் மோடி பிரதமராக வரக்கூடாது - திருப்பத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

⛑️⛑️தூத்துக்குடி முத்துகளை பில்கேட்ஸுக்கு மோடி பரிசளித்தார்.

தூத்துக்குடி முத்துகள், களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாட்டு குதிரை பொம்மைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். 

செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து பிரதமரின் இல்லத்தில் இருவரும் கலந்துரையாடியபோது பரிசளித்தார்

⛑️⛑️தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்:

சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

⛑️⛑️எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த Xiaomi நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகமானது.

இதன் ஆரம்ப விலை ₹25 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

⛑️⛑️சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு கியாரண்டி கொடுத்தாரா?

தருமபுரியில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராம்தாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

⛑️⛑️நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று எங்கள் மீது உள்ள பயத்தில் சின்னத்தை முடக்கி விட்டனர்" 

சீமான் ஆவேசம்

⛑️⛑️ஒரே நாடு ஒரே தலைவர் என்ற சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்கிறது 

பா.சிதம்பரம்

⛑️⛑️தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால்தான் 5 முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன்

தேர்தலில் நிற்க பணம் இல்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தில் எதார்த்தமான உண்மை இருக்கிறது"

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்

⛑️⛑️ஏப்ரல் 1 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிப்பதால் மக்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது மற்றும் டெபாசிட் செய்வது ஏப்ரல் 1, 2024 தற்காலிகமாக நிறுத்தப்படும்.

⛑️⛑️தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு அளித்துள்ளது.

👉தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடத்தப்படுவதால் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

⛑️⛑️தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் சிறப்பாக செயல்படுகின்றனர்

கட்சியின் செயல்பாடுகளை தமிழக பாஜகவினர் சிறப்பாக பரப்பி வருகின்றனர்

பிரதமர் மோடி X தளத்தில் பதிவு

⛑️⛑️இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் ‘அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்' பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து

⛑️⛑️தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் 1,383 புகார் பெறப்பட்டுள்ளது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

⛑️⛑️இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது

2047 இல் தனது இலக்கை இந்தியா எட்டும்

இந்தியாவின் வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை தவறு: 

நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பதில்

⛑️⛑️ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு, 

ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தேர்தலில் நிற்கும் 5 பேருமே தகுதியானவர்களே

எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் 

மதுரையில் ஈபிஎஸ் பேட்டி

⛑️⛑️நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 6-ந்தேதி வெளியீடு.

⛑️⛑️மார்ச் 31 ஞாயிறு அன்று வங்கிகள் அனைத்தும் இயங்கும்

ரிசர்வ் வங்கி அறிவிப்பு.                                                      ⛑️⛑️தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர்,

 2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்⛑️⛑️ ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

⛑️⛑️கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.                          ⛑️⛑️காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி.

⛑️⛑️டெல்லி ராம்லீலா மைதானத்தில் 31-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி

⛑️⛑️நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பேன் : தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்

⛑️⛑️நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும்  கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏

Friday, March 29, 2024

ஒரு ஆலயத்தில் திருவிழா நடந்தது



ஒரு ஆலயத்தில் திருவிழா நடந்தது...*_

_*பத்து பேர்*_ பொம்மை கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ பூ மாலை கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ அர்ச்சனை பொருள் கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ தேனீர் கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ நொறுக்கு தின்பண்டம் கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ வீட்டு சாமான் கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ துணி கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ நாட்டு மருந்து கடை வைத்தனர்.

_*பத்து பேர்*_ வாகனம் இயக்கினர்.

_*பத்து பேர்*_ தண்ணீர் மோர் தானம் வழங்கினர்.

_*பத்து பேர்*_ அன்னதானம் வழங்கினர்.

_*பத்து பேர்*_ மருதானி இட்டனர்.

_*பத்து பேர்*_ ஆபரணம் கடை வைத்தனர்.


_*ஒரு திருவிழாவில் இத்தனை பேரும் இவர்கள்*_ _*சார்ந்தாரும் பொருள் விற்று பொருள் ஈடடனர்.*_

_*சிலர் பொருள் கொடுத்து அருள் ஈட்டனர்.*_


_நாத்திக கூட்டம் நடத்தும் போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும்_ _ஊர்வலங்களிலும் எத்தனை பேர் பிழைத்தார்கள்...._ _பிழைக்கிறார்கள்...?_


_*இறைவன் மூடநம்பிக்கை அல்ல.*_

_*வாழ்க்கைக்கு கொடுக்கும் நம்பிக்கை.*_

_*ஆலயம் வெறும் கற்களல்ல.*_

_*ஏழை எளிய மக்களின் வாழ்க்கையினை முன்னேற்றும் படிக்கற்கள்.*_

இன்றைய சிந்தனை.. ( 29.03.2024)

 

*"அதிகாலையில்* 

*எழுந்தால்.."*

*..................................*


சர்வே ஒன்றில் அதிகாலையில் எழுபர்களின் மூளை மற்றவர்களை விட நன்கு செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது..


உங்களின் காலை பழக்கவழக்கம் தான் நீங்கள் நாள் முழுவதும் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது


அதிகாலை என்றதும் பலரும் காலை 7 மணியைத் தான் சொல்கிறார்கள் என்று நினைப்போம்.


ஆனால் அதிகாலை என்பது காலை 4.30 அல்லது 5 மணியாகும். இந்நேரத்தில் எழுவதால் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுமே மேம்படும்.


மேலும் அன்றைய நாளில் உங்களது இலக்கை அடைய சிந்திப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.


அதிகாலையில் எழுந்ததுமே இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான நீர் பருகுங்கள்.


அதிகாலை நடைப்பயிற்சி, ஏதாவது விளையாட்டு, மெதுவான ஓட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.


மேலும் அதிகாலையில் நல்ல சுத்தமாகக் காற்றை சுவாசிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரித்து, வேலையில் உங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.


எப்போதும் வேலை, வீடு என்று மட்டும் இருக்காமல், உலகில் என்ன நடக்கிறது என்பதையும் காலையில் தெரிந்து கொள்ளுங்கள்.


அதற்கு செய்தித்தாள்களை தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு அரை மணிநேரம் படிப்பதற்கு ஒதுக்குங்கள்..


உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாமல் வாழ்வது மிகவும் கடினம்... கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்..


அதிகாலை கண்விழிப்பு உங்களுக்கான நாளை பாஸிட்டிவ்வாக மாற்றித் தரும்.  ஒவ்வொரு செயலையும் மிக நேர்த்தியாக செய்ய முடியும்.


உங்களின் அன்றாடப் பணிகள் எதுவானாலும் அதிக சிரமிமின்றி செய்து முடிக்க முடியும்..


என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்..நான் தினமும் காலையில் 4.30 மணிக்கு எழந்து, காலைக் கடன்களை முடித்து விட்டு, உங்களுக்கு ‘’இன்றைய சிந்தனையை’’ ஆறு மணிக்குள் பதிவு செய்து விட்டு விளையாடச் சென்று வருவதை நான் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறேன்.. 

.

*ஆம்.,தோழர்களே..,*


*நேரத்தில் எழுவதால், மனம் புத்துணர்வு அடையும்,* 


*மனம் இலகுவாகி, பரபரப்பு இல்லாத வாழ்க்கையால், இரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் உற்சாகமாகும்*


*அதிகாலை எழுவது சிரமமா என்ன..?. முயன்று தான் பாருங்களேன்....✍🏼🌹*

ஆணை நெருஞ்சில் - தினம் ஒரு மூலிகை



ஆணை நெருஞ்சில். சதை பற்றுள்ள வெகுட்டல் மனமுள்ள இலைகளை உடைய சிறு செடி மஞ்சள் நிற பூக்களையும் முள்ளுள்ள உருளை வடிவ காய்களை உடையது தானா வளரக்கூடியது தண்டு இலை விதை மருத்துவ பயன் உடையது சிறுநீர் பெருக்குதல் குளிர்ச்சி தரல் உடல் உரமாக்குதல் காமம் பெருக்குதல் மாதவிலக்கு சிக்கல் அறுத்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது ஒரு முழு செடியை ஒரு லிட்டர் நீரில் இட்டு கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும் இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர் கடுப்பு வெள்ளை சுட்டு மூத்திரம் மலட்டுத்தன்மை ஆகியவை தீரும் 50 கிராம் இலையை மென்மையாய் அரைத்து தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர சிறுநீர் தடை நீர் எரிச்சல் வெள்ளை உடம்பு எரிச்சல் ஆகியவை குணமாகும் 20 கிராம் விதையை ஒன்று இரண்டாய் உடைத்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மாலையாக சாப்பிட்டு வர நீர் சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும் நன்றி.

Thursday, March 28, 2024

உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

உணவு உண்ணும் போது

கடைப்பிடிக்க வேண்டியவை! 


அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். 


எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. 


பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். 


மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. 


உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 


உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. 


வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. 


வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.


கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 


இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. 


உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். 


காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 


உணவு உண்ணும் போது 

பேசக் கூடாது, 


படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊன்றக் கூடாது. 


டி.வி பார்க்கக் கூடாது.


வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. 


காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.


சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. 


உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. 


சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. 


நின்று கொண்டு 

சாப்பிக் கூடாது. 


அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. 


சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. 


தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. 


இலையைத் துடைத்து வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். 


ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடக் கூடாது.


எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. 


வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. 


புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். 


வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். 


நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ 

அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 


இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. 


உண்ணும் தட்டில் 

அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 


அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. 


உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத் தரும்.


சாதாரண உணவு இறைவனின் பார்வைக்குப் போனதும் பிரசாதமாகி விடும்; 


தண்ணீர் தீர்த்தமாகிவிடும். 


அப்படி இறைவனுக்கு நைவேத்தியமான உணவை உட்கொள்ள, அது நம் உடலுக்குப் பெரும் சக்தியைத் தரும்.


ஆகவேதான், நமக்கு அனுதினமும் படியளக்கும் பரமனுக்கு நம் உணவை அர்ப்பணித்துவிட்டுச் சாப்பிடும்படி அறிவுறுத்தி

இருக்கிறார்கள் நமது முன்னோர்.


உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!


*ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவிர்* 

*ப்ரம்மாக்னௌ ப்ரம்மனாஹூதம்*

*ப்ரம்மைவ தேன கந்தவ்யம்*

*ப்ரம்ம கர்ம சமாதினா சாந்தி  சாந்தி சாந்தி:*


ஸ்லோகத்தின் கருத்து:


எனக்குள் இருக்கும் பிரம்மத்துக்கு இந்த பிரம்ம ஹவிசை, ஆஹூதி செய்கிறேன். 


இந்த ஹவிசானது பிரம்மத்தை அடைந்து சாந்தி பெறச் செய்யட்டும்.


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, நம் அந்தராத்மாவை பிரம்மமாகக் கருதி, 

நமது உணவை ஹவிஸாக சமர்ப்பித்து விட்டு உண்பதால், உணவின் சக்தி பெருகும். உணவில் ஏதாவது குற்றமிருந்தாலும் நீங்கி விடும். 


அந்த உணவால் உடம்புக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் நல்லதே விளையும்.!!!


1 , மூன்று வேளை😭 சாப்பிடுபவர்கள் (:ரோகி )

அதாவது நோயாளி 

2 , இரு வேளை💕 சாப்பிடுபவர்கள் ( போகி ) 

3 , ஒரு வேளை🙏 சாப்பிடுபவர்கள்  ( யோகி )


அளவுடன் சாப்பிட்டால் வளமுடன் வாழலாம்

🌹🌹🙏🌷🌷💐

குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷம்''.

உண்மையை உணருங்கள்..

குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.

அடிப்புற முக்கோணத்திற்குள் எண்

''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.


எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.


எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.


எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.


எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,


எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர


எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.viaதமிழன் என்ற இந்தியன்இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.


உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

உடல்உஷ்ணத்தை போக்கும் தைலம்

தே.பொருட்கள்..

நல்லெண்ணெய் – 1 லிட்டர்

வல்லாரைச் சாறு – 500 மி.லி

நெல்லிக் காய்ச்சாறு – 500 மி.லி


     இவற்றை 2 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.


     கீழ்க்காணும் மருந்துச் சரக்குகளை வகைக்கு 50 கிராம் சேகரித்துக் கொள்ள வேண்டும்.


     சடா மாஞ்சில், லவங்கப்பத்திரி, மற்றும் சந்தனம் 25 கிராம் தேவைப்படும்.


     இந்த மருந்துச் சரக்குகளை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தயார் செய்து வைத்திருக்கும் திரவத்துடன் கலந்துகொள்ள வேண்டும். இந்த தைலத்தை வெளிப்பிரயோகமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடுமையான தலைவலி, உடல் சூடு தணியும்

Wednesday, March 27, 2024

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர்.

மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.

இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.

மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது.

மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

வயிற்றுப்போக்கு:

வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.

இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன.

மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும்.

எடை_குறைவு:

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

நீரிழிவு:

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.

வைரஸ்_நோய்கள் :

சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அஅடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.

உடல்_வறட்சி:

உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.

இரத்த_அழுத்தம்:

இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

சிறுநீரக_கற்கள்:

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும்.

சரும_பிரச்சனைகள் :

பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.

புற்றுநோய்

சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.

கொலஸ்ட்ரால்:

மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீரில் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறினாலும், அது வெறும் தொடக்க நிலையிலே இருக்கிறது. ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.

பொலிவான_சருமம் :

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்.

🎈🧸🎈

உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரம்


தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப் டவுன், அதன் அரசாங்கம் ஏப்ரல் 14, 2023க்குப் பிறகு தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால், உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது.


அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


10 லட்சம் பேரின் இணைப்புகளை துண்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


இந்தியாவில் பெட்ரோல் பம்புகளுக்குச் சென்று பெட்ரோல் வாங்கும் விதம், கேப்டவுனில் 25 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் தண்ணீர் டேங்கர்கள் இருக்கும், மேலும் தண்ணீர் கேட்பவர்களையோ, கொள்ளையடிப்பவர்களையோ சமாளிக்க போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

உலகின் இந்த சோகப் பயணம் இறுதியில் யாருக்கும் வரும்


 எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.


 தண்ணீரை வீணாக்குவதை நிறுத்துங்கள்.


பக்கத்து மாநிலமான கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.


 லத்தூருக்கு (மகாராஷ்டிரா) ரயில் மூலம் தண்ணீர் அனுப்பப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.


 உலகில் உள்ள தண்ணீரில் 2.7% மட்டுமே குடிக்கக்கூடியது.


குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்!!


அருகில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் ஆழமடைந்துள்ளது. பொறுப்புள்ள குடிமகனாக, தண்ணீரை வீணாக்குவதை தடுத்து, தண்ணீரை சேமிப்போம். இல்லையெனில், நாமும் இந்த நெருக்கடியை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்போம், நமது உணர்வற்ற செயல்களால் நமது இளைய தலைமுறை பாதிக்கப்படும். *நீரை சேமியுங்கள்*

நாளைக்கு நமக்கும் இதே நிலை வரலாம் ஆதலால் தண்ணீரை வீணாக்காதீர்கள்.🙏🙏🙏