உணவு உண்ணும் போது
கடைப்பிடிக்க வேண்டியவை!
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.
எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது.
உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது.
வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும் போது
பேசக் கூடாது,
படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊன்றக் கூடாது.
டி.வி பார்க்கக் கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
நின்று கொண்டு
சாப்பிக் கூடாது.
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
இலையைத் துடைத்து வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ
அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
உண்ணும் தட்டில்
அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத் தரும்.
சாதாரண உணவு இறைவனின் பார்வைக்குப் போனதும் பிரசாதமாகி விடும்;
தண்ணீர் தீர்த்தமாகிவிடும்.
அப்படி இறைவனுக்கு நைவேத்தியமான உணவை உட்கொள்ள, அது நம் உடலுக்குப் பெரும் சக்தியைத் தரும்.
ஆகவேதான், நமக்கு அனுதினமும் படியளக்கும் பரமனுக்கு நம் உணவை அர்ப்பணித்துவிட்டுச் சாப்பிடும்படி அறிவுறுத்தி
இருக்கிறார்கள் நமது முன்னோர்.
உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
*ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவிர்*
*ப்ரம்மாக்னௌ ப்ரம்மனாஹூதம்*
*ப்ரம்மைவ தேன கந்தவ்யம்*
*ப்ரம்ம கர்ம சமாதினா சாந்தி சாந்தி சாந்தி:*
ஸ்லோகத்தின் கருத்து:
எனக்குள் இருக்கும் பிரம்மத்துக்கு இந்த பிரம்ம ஹவிசை, ஆஹூதி செய்கிறேன்.
இந்த ஹவிசானது பிரம்மத்தை அடைந்து சாந்தி பெறச் செய்யட்டும்.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, நம் அந்தராத்மாவை பிரம்மமாகக் கருதி,
நமது உணவை ஹவிஸாக சமர்ப்பித்து விட்டு உண்பதால், உணவின் சக்தி பெருகும். உணவில் ஏதாவது குற்றமிருந்தாலும் நீங்கி விடும்.
அந்த உணவால் உடம்புக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் நல்லதே விளையும்.!!!
1 , மூன்று வேளை😭 சாப்பிடுபவர்கள் (:ரோகி )
அதாவது நோயாளி
2 , இரு வேளை💕 சாப்பிடுபவர்கள் ( போகி )
3 , ஒரு வேளை🙏 சாப்பிடுபவர்கள் ( யோகி )
அளவுடன் சாப்பிட்டால் வளமுடன் வாழலாம்
🌹🌹🙏🌷🌷💐
No comments:
Post a Comment