Wednesday, January 31, 2024

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க

மோரை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

மோர் ஒரு சத்தான பானம். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், மோர் ஒரு நல்ல நீரேற்றம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. சருமம் வறண்டு காணப்பட்

மோரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயது புள்ளிகளை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சரும தொற்றுகளை தடுக்க உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் தன்மையும் இதற்கு உண்டு.


கரும்புள்ளிகளை ஒழிக்க ஈசி டிப்ஸ்:

சருமத்தில் உள்ள முகப்பருவை நீக்க நாம் பல வழிகளில் மோர் பயன்படுத்தலாம். ஒரு தேக்கரண்டி மோரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இது வெளியே சென்று வந்ததால் முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளை அகற்ற உதவும்.

இதேபோல், தயிரில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து கழுவவும். அல்லது குளிப்பதற்கு முன் மோரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, இந்தக் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவினால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, கரும்புள்ளிகள் இல்லாமல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.


மோர் பயன்படுத்தும் முன்பு இதை கவனியுங்கள்:

சருமத்தின் மீது மோரை பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருந்தாலும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. அதிக மோர் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, குறிப்பாக உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், மோரை பயன்படுத்தும் போது அது மேலும் வறண்டு போகக்கூடும்

சருமம் வறண்டு போகும் போது, ​​சருமத்தில் அதிகப்படியான பருக்கள் ஏற்படும். மேலும், தோல் மீது அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே, முகத்திற்கு மோர் பயன்படுத்தும் போது, ​​ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக வெளியில் செல்லும் போது பயன்படுத்துவது நல்லது.

தினம் ஒரு மூலிகை-வலம்புரி

 


*வலம்புரி*.   தமிழக மலைக்காடுகளில் வளரும் சிறு மர வகை இதன் காய் திருகாணி போல் வரி உள்ளதாய் இருக்கும் வரிகள் வலம்சுழியாகவோ இடம்சுழியாகவோ அமைந்திருக்கும் காய் வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையவை துவர்ப்பியாகச்செயற்படல் உள்ளழல் ஆற்றுதல் உடல் வெப்பத்தையும் நாடி நடையையும் அதிகரித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது காயை ஒன்றிரண்டாய் இடித்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி இரண்டு (அ) மூன்று துளிகள் காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் காது வலி ஆகியவை குணமாகும் 5 கிராம் வேர் பட்டையை நானூறு மில்லி நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டியதை இரு வேலையாக நாளும் கொடுத்து வர சிறுநீரில் இனிப்பு கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேர் பட்டையை உலர்த்தி பொடித்து அரை கிராம் அளவாக காலை மாலை சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீர் சர்க்கரை கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை குணமாகும் நன்றி.

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்


ஜனவரி: (மார்கழி - தை)

1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.


பிப்ரவரி: (தை - மாசி)

1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.


மார்ச்: (மாசி - பங்குனி)

1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.


ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)

1)கொத்தவரை, 2) வெண்டை.


மே: (சித்திரை - வைகாசி)

1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.


ஜூன் : (வைகாசி - ஆனி)

1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை


ஜூலை: (ஆனி -ஆடி)

1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.


ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)

1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..


செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)

1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.


அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)

1)கத்தரி, 2)முள்ளங்கி.


நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)

1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.


டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)

1)கத்தரி, 2)தக்காளி.


 ஆர்வம் உள்ளவர்கள் பகிரவும் .🌱

Tuesday, January 30, 2024

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித் தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப் பட்டார்.


ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.


மறு நாள் வீட்டிற்குள் நுழையும் போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.


 அவனுடைய அப்பா அங்கே நின்று கொண்டிருந்த வேலையாளிடம் கொடுத்து விட்டு போய் சாப்பிடு என்றார்.


மறு நாளும் உள்ளே நுழையும் போது அவன் கொடுத்த நூறு ரூபாயை வேலையாளிடம் கொடுத்து விட்டார்.


மூன்றாவது நாள் பணத்தை வேலையாளிடம் கொடுக்கும் போது மகன் அதைத் தடுத்தான்.

அப்பா ஏன் அதைக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டான்.


அவர் சொன்னார், ‘இன்று தான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படிக் கண்டு பிடித்தீர்கள் என்றான்.


நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது அடுத்தவரிடம் போன போது நீ கவலைப் படவில்லை. *அதுவே உன் உழைப்பு* *என்கிற போது நீ* துடித்து விட்டாய். போய் சாப்பிடு.


 உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு


*இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இது தான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.


விற்பனைக்கே வராத செல் போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.    

எளிமையாக சொல்வதென்றால் *செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.


ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள்.


இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச் சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப் பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.


ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும்.


போட்டியில் ஜெயித்தால் தான் கோப்பை கிடைக்கும் என்றால் தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.


குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்து விட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.


படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.

 வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா? பணம் எவ்வாறு சம்பாதிக்கப் படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்து இருக்கிறீர்களா?


இதை எல்லாம் ஒரு முறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத் தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத் தான் என்று தான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   


இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் 

*100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து* நீட்டாதீர்கள்.


மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டு விட்டு யோசித்து விட்டு கொடுங்கள்.


கேட்ட போதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள்.  


 பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். *காத்திருக்கப் பழக்குங்கள்*.


பணத்தை வீட்டிற்குள் கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள்.


 சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில் தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும்


 பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.


உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன் மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.


 பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து https://chat.whatsapp.com/IxeZHgZZ06i67N9xOf3dvT அவர்களும் இணையலாம் 

 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்

ஒரு பெண் லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.


ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.


இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார்.


அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.


ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார்.


ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.


மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.


அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.


இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?


இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.


இதுதான் நமது மனம்.. இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்.. குணப்படுத்தவும் முடியும்.. இந்த மனதால் பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும்.


*எனவே,*

*நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.*



                 

 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

படிப்பவற்றை நினைவில் கொள்வது எப்படி?

1. முதலில் படிப்பதற்கு அமைதியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.


2.ஒருமுறை மாத்திரம் படிப்பது மறதிக்கு காரணமாகலாம். படிப்பதை ஒவ்வொரு  நாளும் ஞாபகப்படுத்துகின்ற போது..நீண்டகால நினைவாகிவிடும்... பின்னர் தேவைப்படும்போது ஞாபகப்படுத்துவது இலகு.


3.பரீட்சைக்கு முன்னர் படிப்பவற்றை.. முதல்நாள் இரவு மற்றும் பரீட்சை அன்று அதிகாலை மீள் ஞாபகப்படுத்தல் மிகவும் அவசியம்.


4.படிப்பவற்றை மனனம் செய்வதை தவிர்த்து முடிந்தளவு நடைமுறை விடயங்களுடன் ஒப்பிட்டு நினைவில் கொள்ளல் சிறப்பு.


5.விளங்காத விடயங்களை மனனம் செய்யவே அதிகம் முயற்சிப்பீர். அதன்போது ஓர் ஒழுங்குமுறையில் மனனம் செய்யின் நினைவில் அதிகம் நிற்கும்.(maths formula)


6.நினைவில் கொள்ளுதலை பாதிக்கும் கவனக்கலைப்பான்களை தவிர்க்க வேண்டும்.  படிக்கும்போது தொலைபேசி, தொலைக்காட்சி, குழப்பும் நண்பர்கள் அருகில் இருத்தல் போன்றவற்றை தவிர்த்து தனிமையில் படித்தல் நினைவாற்றலை அதிகரிக்கும்.


7.சிலருக்கு குழுவாக இணைந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விளங்கப்படுத்தி படிப்பது அதிகம் நினைவில் நிற்குமெனின் தாராளமாக அம்முறையை பின்பற்றலாம். அதுபோல சிலருக்கு நடந்து படித்தால் தான் அதிகம் நினைவில் நிற்கும் மற்றும் பெரிதாக சத்தம் போட்டு படிப்பது அதிகம் நினைவில் நிற்கும் எனின்..உங்களுக்கு பொருத்தமான முறையை தெரிவு செய்து படித்தல் நன்று.


8.படித்த விடயங்களை யாருடைய துணையுமின்றி, நீங்களே கேள்வி கேட்டு  பதில் சொல்லிப் பழகல்..நினைவில் இருப்பதை உறுதிப்படுத்தும்.


9.பரீட்சைக்கு வரக்கூடிய அனைத்து வினாக்கள் மற்றும் பதில்களை சரியான வடிவத்தில் எழுதி வைத்து அவற்றை படிக்கின்ற போது நினைவில் கொள்ளல் எளிதாகும்.


10.முன்னர் படித்த பாடங்கள் பின்னர் படித்த பாடங்களை குழப்பலாம். எனவே படிக்கின்ற போது தெளிவாக விளங்கிப் படித்தல், திரும்பத் திரும்ப படித்தல், இடைவெளியெடுத்து படித்தல், நினைவில் இருப்பதை உறுதிப்படுத்தி படித்தல் போன்றன முக்கியமாகும்.


இவற்றை விட பொதுவாக நாம் படிப்பவற்றை நினைவில் கொள்ள சத்தான உணவு உட்கொள்ளல், உடல் ஆரோக்கியம், போதுமான தூக்கம், எதிர்கால இலட்சியத்தை மனதில் நினைத்து படித்தல் போன்றன முக்கியமாகும்.



இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும்

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்...!


இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ஶ்ரீராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.


எனவே...


ஶ்ரீராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது.


மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.


22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.


(01) மகாலெட்சுமிதீர்த்தம்:-


இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் குளித்தால் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.


(02) சாவித்திரி தீர்த்தம்:-


(03) காயத்ரி தீர்த்தம்:-


(04) சரஸ்வதி தீர்த்தம்:-


இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.


(05) சேது மாதவ தீர்த்தம்:-


இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஶ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.


(06) நள தீர்த்தம்:-


மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.


(07 நீல தீர்த்தம்:-


மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது.இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.


(08) கவாய தீர்த்தம்:-


இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.


(09) கவாட்ச தீர்த்தம்:-


இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு


செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.


(10) கந்நமாதன தீர்த்தம்:-


சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.


(11) சங்கு தீர்த்தம்:-


ஶ்ரீ இராமநாதசுவாமி கோவில்


பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.


(12) சக்கர தீர்த்தம்:-


ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.


(13) பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்:-


இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால்


பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன்,


பில்லி சுனியமும் நீங்கும்.


(14) சூர்ய தீர்த்தம்:-


இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.


(15) சந்திர தீர்த்தம்:-


இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.


(16) கங்கா தீர்த்தம்:-


(17) யமுனா தீர்த்தம்:-


(18) காயத்ரி தீர்த்தம்:-


இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி,


மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.


(19) சாத்யாம்ருத தீர்த்தம்:-


திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.


(20) சிவ தீர்த்தம்:-


இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்ஞானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.


(21) சர்வ தீர்த்தம்:-


இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சன்னதி


முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள்.


இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.


(22) கோடி தீர்த்தம்:-


இந்த தீர்த்தமானது ஶ்ரீ இராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ஶ்ரீராமனாவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.


இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.


கோடி தீர்த்தத்தில் நீராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது


என்பது சம்பிரதாயம்.

முசுட்டை-தினம் ஒரு மூலிகை

 


 *முசுட்டை*  அகன்ற இதய வடிவ இலைகளையும் உருண்டையான காய்களையும் உடைய படர் குடி முசுண்டை எனவும் குறிப்பிடப்படும் வெண்ணிற பூக்களை உடைய கொடி முசுட்டை என்றும் மஞ்சள் நிற பூக்களை உடைய குடி பொன்முசுட்டை எனவும் அழைக்கப்படும் வேளைகளிலும் மரங்களிலும் படர்ந்து வளரும் இதன் இலை பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது உடல் பலம் மிகுதல் பசிமிகுத்தல் சிறுநீர் பெருக்குதல் ஆகிய குணம் உடையது இலை பட்டை ஆகியவற்றை சம அளவாக அரைத்து பற்று போட ஆறாத புரையோடும் புண்கள் ஆறும் பட்டையை நீரில் உரைத்து தேள் கொட்டு பாம்பு கடி ஆகியவற்றிற்கு தடவி சிறிது நெருப்பு அனலில் காட்ட குணமாகும் சமூகத்தை இடித்து பிழிந்து வடிகட்டிய சாற்றை மூன்று முதல் பத்து மில்லி ஆக வேலை உணர்த்தி எடுத்து பொடி கால் முதல் ஒரு தேக்கரண்டி அளவாக ஓ 5 கிராம் பட்டையை பஞ்சு போல் இடித்து நான் ஒரு மில்லி நீரிலிட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 30 மில்லி அளவாகவோ கொடுத்து வர காய்ச்சல் கழிச்சல் சீத கழிச்சல் சிறுநீர்ப்பை சிறுநீரகம் ஆகியவற்றின் வீக்கம் ஆகியவை தீரும் நன்றி.

Monday, January 29, 2024

மருள்-தினம் ஒரு மூலிகை

 


*மருள்*.   கற்றாழை இனத்தில் குறுகிய குறுக்கு வழியுள்ள கனமான மடல்களை உடைய செடி சாலை ஓரங்களில் தரிசு நிலங்களிலும் அடர்ந்து வளர்ந்து கிடக்கும் இதன் மடல் கிழங்கு ஆகியவை மருத்துவ குணம் உடையது மலமிளக்குதல் பசி மிகுதல் உடல் தேற்றுதல் சளி அகற்றுதல் இதய நோய் தணித்தல் குருதி வெப்புத்தணித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது மடலை வாட்டி பிழிந்த சாரை காதுகளில் விட காது வலி சரிப்படும் மடலை வாட்டி பிழிந்த சாறு பத்து அல்லது 15 துளி தாய்ப்பாலுடன் கொடுக்க தொண்டை பகுதியில் தேங்கிய சளியை வெளியேற்றும் மருள் கிழங்கை அரைத்து ஐந்து கிராம் அளவாக பாலில் கலக்கி வடிகட்டி காலை மாலை கொடுக்க குருதி வெப்பை தணிக்கும் நாள் பட்ட இருமல் மூலம் கரப்பான் வண்டுக்கடி நீர்விடாய் இதய நோய் கணுச்சூலை ஆகியவை குணமாகும் நன்றி.

மிதி பாகல்-தினம் ஒரு மூலிகை


 மிதி பாகல் தரையில் படர்ந்து வளரும் பாகற்கொடியினம் காய்கள் சிறியதாய் சற்று உருண்டை வடிவாய் இருக்கும் காய்களுக்காக தமிழகம் எங்கும் பெரும்பாலும் புவனகிரி பகுதிகளில் பயிற்சி செய்யப்படுகிறது இலை பழம் ஆகியவை மருத்துவ குணம் உடையது இலை நுண் புழுக்களை கொள்ளும் பால் பெருக்கும் காய் உடல் உரமாக்கும் பசி தூண்டும் உடல் தேற்றும் மலம் மிளக்கும் இலைச்சாற்றை உள்ளங்கால் உள்ளங்கை ஆகியவற்றில் தடவி வர அவற்றில் உள்ள எரிச்சல் தனியும் காயை சமைத்து உண்டுவர வயிற்று வாய்வு சமன்படுத்தும் குடல் பலம் மிகும் இரைப்பை நுண் புழுக்களை கொள்ளும் பாகற் பழத்தை பிழிந்து சாறு எடுத்து சர்க்கரை கலந்து குடித்து வர சூதக வலி நீங்கும் நன்றி.

Saturday, January 27, 2024

மயில் மாணிக்கம்-தினம் ஒரு மூலிகை

மயில் மாணிக்கம்* மெல்லிய ஊசி ஊசியான இலைகளையும் செவ்விய அல்லது வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிற மலர்களையும் உடைய படர் குடி அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பது உண்டு. காசிரத்தினம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இலையே மருத்துவ குணம் உடையது இலையை அரைத்து மூலத்தில் வைத்து கட்டி வர மூலம் குணமாகும் இலை சாறும் ஆவின் நெய்யும் சம அளவாக கலந்து பத்து மில்லி அளவுக்கு காலை மாலை கொடுத்து வர மூலம் தீரும் மது மேக நீரழிவு நோயால் உண்டாகும் பிளவைகளுக்கு இலையை சிதைத்து கட்டி வர குணமாகும் மூலநோயின் முதல்வன் மயில்மாணிக்கம் நன்றி.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.. மெக்னீசியம் நிறைந்த 'சூப்பர்' உணவுகள்

இன்றைய மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது.


முதியவர்களிடம் மட்டுமின்றி இளைஞர்களிடமும் அதிக ரத்த அழுத்த பிரச்சனை காணப்படுகிறது. பொதுவாக, 140/90 என்ற அளவிற்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. இரத்த அழுத்தம் 180/120 க்கு மேல் இருந்தால், அது மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால், சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.


இரத்த அழுத்தத்திற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ரத்த அழுத்தத்தாஇ கட்டுப்படுத்த மெக்னீசியம் நிறைந்த உணவுகள் உதவும்.


ஆரோக்கியமாக இருக்க, காலை உணவை மெக்னீசியம் நிறைந்த உணவுடன் தொடங்க வேண்டும்.


காலை உணவில் மெக்னீசியம் நிறைந்த பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது, நரம்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மெக்னீசியம் நிறைந்த உணவை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் மெக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் மெக்னீசியம் குறைபாடு காரணமாக, சோர்வு, பசியின்மை, குமட்டல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் தசைவலி போன்ற பிரச்சினைகள் எப்போதும் ஏற்படத் தொடங்குகின்றன. எனவே உடலில் மெக்னீசியம் குறைபாடு இருக்கக்கூடாது.


சோளம் - சோளம் பசையம் இல்லாதது மற்றும் மெக்னீசியம் நிறைந்தது. காலை உணவில் சோளத்தை சேர்ப்பதன் மூலம் உடலில் மெக்னீசியம் குறைபாட்டை ஈடுசெய்யலாம். சோளத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, உங்கள் உணவில் சோளம் கொண்டு செய்யப்பட்ட உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.


குயினோவா - குயினோவா மெக்னீசியம் நிறைந்த உணவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது சாதம் போல் சமைத்து உண்ணலாம். குயினோவாவில் அதிக புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன. சுமார் 1 கப் சமைத்த குயினோவாவில் 118 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது.


நட்ஸ் - நட்ஸ் என்னும் உலர் பழங்கள் மெக்னீசியம் குறைபாட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஈடு செய்யலாம். இதற்கு பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 80 மில்லிகிராம், முந்திரியில் 74 மில்லிகிராம் மெக்னீசியம், 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் 49 மில்லிகிராம் உள்ளது.


பருப்பு வகைகள்- உங்கள் உணவில் அனைத்து பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ் பருப்பில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. மெக்னீசியம் குறைபாட்டை குறிப்பாக கருப்பு பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் ஈடுசெய்ய முடியும். 1 கப் கருப்பு பீன்ஸில் 120 மி.கி மெக்னீசியம் உள்ளது.


முழு தானியங்கள் - அனைத்து முழு தானியங்களும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இது தவிர, பாதாம் வெண்ணெய், பயறு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் மெக்னீசியம் அதிகமாகக் காணப்படுகிறது. இதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை இவை.

Friday, January 26, 2024

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்ஷன்: காரணங்கள்

அசாதாரணமாக உயர் இரத்த அழுத்தம் ஹைபர்டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது மற்றும் 90 mmHg க்கு மேல் 140 க்கும் அதிகமான இரத்த அழுத்தம் உள்ளவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறார்.
உலகம் முழுவதும் சுமார் 1.13 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் பொதுவான மற்றும் அஞ்சப்படும் நிலைகளில் ஒன்றாகும், இது உங்கள் உடலிலும் மனதிலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு நோயாளி இதய தமனி சுவர்களுக்கு எதிராக நீடித்த இரத்த அழுத்தத்தை எதிர்கொண்டால், அது இதய நோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினமாகும், இது அபாயகரமான நிலை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். இது 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மற்றும் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை பரப்புவதற்கு புதிய வழிகளைக் கொண்டு வருகின்றன. இதன் பின்னணியில் உள்ள ஒரே யோசனை உயர் இரத்த அழுத்தத்தின் அபாயங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதாகும்.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்த ஓட்டத்தின் விசை மிக அதிகமாக இருப்பதால், அது விரைவில் அல்லது பின்னர் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவு மற்றும் உங்கள் தமனிகளில் உள்ள எதிர்ப்பின் அளவு ஆகிய இரண்டாலும் கண்டறியப்படுகிறது. உங்கள் இதயத்தில் அதிக இரத்தம் செலுத்தப்பட்டு, உங்கள் தமனிகள் குறுகியதாக இருக்கும்போது, ​​நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள். கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் இதய செயலிழப்பு மற்றும் மிட்ரல் வால்வு கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான சுகாதார நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்த தூண்டுதல்கள் என்றால் என்ன?

மோசமான/ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை, தொடர்ச்சியான பதற்றம் அல்லது அழுத்தம், உயர் இரத்த அழுத்தத்தின் குடும்ப வரலாறு மற்றும் உடல் பருமன்/அதிக எடை (அதிக BMI) ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தைத் தூண்டும் சில காரணிகளாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:கொழுப்பு நிறைந்த உணவுஅதிகப்படியான உப்பு உட்கொள்ளல்புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான குடிப்பழக்கம்செயலற்ற வாழ்க்கை முறைநிலையான மன அழுத்தம்பொட்டாசியம் குறைபாடு

இரத்த அழுத்தம் எவ்வாறு அளவிடப்படுகிறது?

BP பாதரசத்தின் மில்லிமீட்டர்களில் (mm Hg) அளவிடப்பட்டு, சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் ஆகிய இரண்டு அளவீடுகளைக் காட்டும்போது கணக்கிடப்படுகிறது.சிஸ்டாலிக் அழுத்தம்: இதயத் துடிப்பின் போது அதிகபட்ச அழுத்தம்டயஸ்டாலிக் அழுத்தம்: இதயத் துடிப்புக்கு இடையே உள்ள மிகக் குறைந்த அழுத்தம்.

அளவுகள் டயஸ்டாலிக்கிற்கு மேலே சிஸ்டாலிக் என எழுதப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக, 120/80 mm Hg. 120/80 mm Hgக்கு மேல் இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்றும் அதற்குக் கீழே சாதாரண ரத்த அழுத்தம் என்றும் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஒரு நபரின் வயதைப் பொறுத்து வரையறுக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 150/90 உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது.

ஹைபர்டென்ஷன் என்றால் என்ன?

இரத்த அழுத்தம் என்பது இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவு மற்றும் உங்கள் தமனிகளுக்கு அனுப்பப்படும் இரத்தத்தின் அளவு ஆகியவற்றை உள்ளடக்கியது. உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவருக்கு அசாதாரண வகை இரத்த ஓட்டம் உள்ளது, அங்கு இதயம் அதிக இரத்தத்தை தமனிகளுக்கு செலுத்துகிறது, இந்நிலையில் நோயாளிக்கு உயர் BP இருப்பதைக் கண்டறிய முடியும்.

எந்த அறிகுறிகளும் இல்லாமல், ஒரு நபர் பல ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். அறிகுறிகள் இல்லாவிட்டாலும், இதயக் குழாய்களுக்கு எப்போதும் ஆபத்து உள்ளது, இது பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்ஷன் உங்கள் மருத்துவ பயிற்சியாளரிடம் செல்வதன் மூலம் எளிதாகக் கண்டறியலாம். இதை உங்களுக்கு கண்டறிந்ததும், நீண்ட காலத்திற்கு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று வாழ்க்கை முறை கோளாறு. தூக்கம், உணவுமுறை, உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் வேலை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மக்கள் உள்ளார்கள். நமது இரத்த அழுத்தம் இந்த எல்லா விஷயங்களுக்கும் பதிலளிக்கிறது மற்றும் அது இறுதியில் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள் (உயர் இரத்த அழுத்தம்)

உயர் இரத்த அழுத்தம் முதன்மை (அல்லது அத்தியாவசிய) உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என இரண்டு வகைகளாகும்.

முதன்மை உயர் இரத்த அழுத்தம்

பலருக்கு, பெரும்பாலும் பெரியவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தத்திற்கான அடையாளம் காணக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லை. இந்த வகை முதன்மை (அல்லது அத்தியாவசிய) உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது, இது பல ஆண்டுகளாக மெதுவாக உருவாகிறது.

இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்

சிலருக்கு, உயர் இரத்த அழுத்தம் அடிப்படை நிலை காரணமாக ஏற்படுகிறது. இந்த வகை இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் திடீரென தோன்றும் மற்றும் முதன்மை உயர் இரத்த அழுத்தத்துடன் ஒப்பிடும்போது அதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பல நிலைமைகள் மற்றும் மருந்துகள் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்சிறுநீரக பிரச்சனைகள்தைராய்டு பிரச்சனைகள்தூக்கத்தில் தடை ஏற்படுத்தும் மூச்சுத்திணறல்அட்ரீனல் சுரப்பி கட்டிகள்பிறவியிலேயே இதய நோயுடன் பிறப்பவர்களுக்கு ஏற்படும் சில இரத்த நாளங்களின் குறைபாடுகள்ஆம்பெடமைன்கள் மற்றும் கோகோயின் போன்ற சட்டவிரோத மருந்துகள்.

உயர் இரத்த அழுத்தத்தின் சாத்தியமான அறிகுறிகள் யாவை?கடுமையான தலைவலிசுவாசிப்பதில் சிக்கல்ஒழுங்கற்ற இதயத் துடிப்புநெஞ்சு படபடப்பு குழப்பம்பார்வை பிரச்சினைகள்மூக்கில் இரத்தம் வடிதல்சோர்வுஅசாதாரண மார்பு வலிகழுத்து மற்றும் காதுகளில் வியர்வை

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன், உங்கள் மருத்துவர் எப்பொழுதும் இரத்த அழுத்த சோதனை உட்பட ஒரு முழுமையான பயிற்சியை மேற்கொள்வார், இது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடுகிறது. இருப்பினும், பல நோயாளிகளுக்கு இது சரியான நேரத்தில் கண்டறியப்படுவதில்லை, எனவே நீங்கள் திடீர் தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, நெஞ்சு படபடப்பு அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை எதிர்கொண்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஒரு சந்திப்பை பதிவு செய்யுங்கள்


அப்படியானால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது?

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த அறிகுறிகளையும் அடையாளங்களையும் அனுபவிக்காத பல நிகழ்வுகள் உள்ளன, அவர்களின் BP அளவீடுகள் மிக உயர்ந்த அளவை எட்டினாலும் கூட.

சில சந்தர்ப்பங்களில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தலைவலி, மூக்கில் இரத்தம் கசிவு அல்லது மூச்சுத் திணறல் இருக்கலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் குறிப்பிட்டவை அல்ல, இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையை அடையும் போது மட்டுமே அவை ஏற்படலாம்.

நோய் கண்டறிதல்

இரத்த அழுத்த இயந்திரம் (பாரம்பரிய அல்லது டிஜிட்டல்) மூலம், உங்கள் மருத்துவர் அல்லது நீங்கள் கூட உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடலாம். ஒரு சாதாரண நபருக்கு இரத்த அழுத்தம் சிஸ்டாலிக் 120 mm Hg மற்றும் டயஸ்டாலிக் 80 mm Hg இருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் ஒரு நபர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.நிலை 1 உயர் இரத்த அழுத்தம்: இந்த நிலையில், சிஸ்டாலிக் அழுத்தம் 130-139 mmHg வரையிலும், டயஸ்டாலிக் வரம்பு 80-89mmHg வரையிலும் இருந்தால், நோயாளி லேசான உயர் இரத்த அழுத்தத்தால் கண்டறியப்படுகிறார்.நிலை 2 உயர் இரத்த அழுத்தம்: இந்த கட்டத்தில், நோயாளி கடுமையான உயர் இரத்த அழுத்தத்தால் கண்டறியப்படுகிறார், அங்கு சிஸ்டாலிக் அழுத்தம் 140 mmHg க்கும் அதிகமாகவும் மற்றும் டயஸ்டாலிக் வரம்பு 90 mmHg க்கும் அதிகமாகவும் இருக்கும்.உயர் இரத்த அழுத்த நெருக்கடி: உயர் இரத்த அழுத்தத்தின் இந்த நிலைக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. உங்கள் இரத்த அழுத்த அளவீடுகள் திடீரென்று 180/120 mm Hg ஐ விட அதிகமாக இருந்தால், ஐந்து நிமிடங்கள் காத்திருந்து, உங்கள் இரத்த அழுத்தத்தை மீண்டும் சோதிக்கவும். உங்கள் அளவீடுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். நீங்கள் உயர் இரத்த அழுத்த நெருக்கடியை அனுபவிக்கலாம்


அதை எப்படி தடுப்பது?

இரத்த அழுத்தம் பொதுவாக வயதுக்கு ஏற்ப உயரும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை இரத்த அழுத்தத்தை தாமதப்படுத்த அல்லது தடுக்க உதவும். முக்கியமான செயல்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், வழக்கமான இதய சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் அதிக இரத்த அழுத்தம் இருந்தால், சிகிச்சைத் திட்டத்தைக் கடைப்பிடிப்பது ஆகியவை அடங்கும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் மற்றும் தொடர்புடைய சுகாதார நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள் யாவை?வழக்கமான பரிசோதனையைப் பெறுதல்முறையான மருந்துகளை எடுத்துக்கொள்வதுநடைபயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளில் பங்கேற்பதுஆரோக்கியமான எடையை பராமரித்தல்மது அருந்துவதைத் தவிர்த்தல் அல்லது கட்டுப்படுத்துதல்புகையிலை உட்கொள்வதைத் தவிர்த்தல்ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுதல்அதிகப்படியான சோடியத்தை தவிர்ப்பதுமன அழுத்தம் கட்டுப்பாடு

வாழ்க்கை முறை மாற்றங்கள்

ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க நமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வது முக்கியம். ஸ்மார்ட் மற்றும் ஆரோக்கியமானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. மனஅழுத்தம் இல்லாமல் இருங்கள் மற்றும் உடற்தகுதியுடன் இருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். சோடியம் உட்கொள்வதைக் குறைத்து, உங்கள் BMIக்கு ஏற்ப ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா?

உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க சில பயனுள்ள வழிகள்

சில எளிய ஆனால் பயனுள்ள வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது என்றாலும், மது அருந்துவதை எல்லா சூழ்நிலைகளிலும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற அதிக சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும், உங்களுக்கு அதிக இரத்த அழுத்தம் இருந்தால் உங்கள் உணவில் குறைந்த அளவில் உப்புகளைச் சேர்க்கவும்.

வேறு சில பயனுள்ள குறிப்புகள்தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். ஏரோபிக் உடற்பயிற்சிகளான ஜாகிங், வாக்கிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடனம் போன்றவை உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.உங்கள் இடுப்பைப் பாருங்கள்: இடுப்பைச் சுற்றி அதிக எடை இருப்பது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உடல் எடையை குறைப்பது அவசியம்.புகைபிடிப்பதை நிறுத்துங்கள்: புகைபிடித்த பிறகு, புகைபிடித்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை பல நிமிடங்களுக்கு அதிகரிக்கிறது. நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்துவது, உங்கள் உடல் சாதாரண இரத்த அழுத்தத்தை மீட்டெடுக்க உதவுகிறது.ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்: உங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் புதிய பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்கவும். இது இரத்த அழுத்தத்தில் சோடியத்தின் விளைவைக் குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளில் பட்டாணி, வாழைப்பழம், கீரை, அவகோடோ, காளான்கள், இனிப்பு உருளைக்கிழங்கு, வெள்ளரிகள் மற்றும் ஆரஞ்சு ஆகியவை அடங்கும்.டீ அல்லது காபியை குறைத்துக் கொள்ளுங்கள்: தேநீர் அல்லது காபி உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அவற்றின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.மன அழுத்தத்தை நிர்வகித்தல்: மன அழுத்தம் என்பது உங்கள் உயர் இரத்த அழுத்த அளவுகளுக்கு பங்களிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். மன அழுத்தத்தை குறைக்க அல்லது அதை நோக்கிய உங்கள் அணுகுமுறையை மாற்ற சில பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் நல்ல வழிகள் என்று கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மூளை ரத்தக்கசிவுக்கு வழிவகுக்குமா?

மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவை மூளை பக்கவாதம் என்றும் கருதலாம். மூளையில் இருக்கும் இரத்த தமனிகள் வெடித்து, திசுக்களுக்கு அருகில் இரத்தப்போக்கு ஏற்படும் போது இது நிகழ்கிறது. இது மூளை செல்களை சேதப்படுத்துகிறது அல்லது கொன்றுவிடும், இந்நிலையில் இது பக்கவாதம் அல்லது நோயாளியின் மூளை இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மூளை இரத்தக்கசிவுக்கான காரணங்களில் ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தத்தால் கண்டறியப்பட்ட நோயாளி பொதுவாக பலவீனமான இரத்த நாளங்கள் மற்றும் தமனி சுவர்களைக் கொண்டிருப்பார். மூளை ரத்தக்கசிவை மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இஸ்கிமிக்

இஸ்கிமிக் பக்கவாதம் மூளைக்கு இரத்தத்தை வழங்குவதற்குப் பொறுப்பான தமனியில் ஏற்படும் உறைவினால் இரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது இந்நிலை ஏற்படுகிறது. இது த்ரோம்போடிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோயுற்ற தமனி அல்லது எம்போலிக் ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு வெளியில் இருந்து இரத்தக் குழாய்களுக்கு இரத்த உறைவு வழங்கப்படுவதால் ஏற்படலாம்.

ரத்தக்கசிவு

ரத்தக்கசிவு என்பது பொதுவாக மிகவும் அரிதான மூளை பக்கவாதம் ஆகும், ஆனால் இது நோயாளியின் மூளைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது, இது அவர்களை மூளைச்சாவு அடையச் செய்யும். இது இரண்டு வழிகளில் நிகழலாம் – சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு எனப்படும் இதில் மண்டை ஓடு மற்றும் மூளைக்கு இடையில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அல்லது மூளைக்குள் இருக்கும் இரத்தக் குழாய் அல்லது தமனியில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால், இது மூளைக்குள் இரத்தக்கசிவு என அழைக்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் இரத்தக்கசிவுக்கான முக்கிய மற்றும் பொதுவான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இதன் அறிகுறி அமைதியாக செயல்படும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ஆகிய இரண்டிலும், பல நோய்களைப் பெறுவதற்கான அதிக ஆபத்து உள்ளது, மேலும் மூளை இரத்தக்கசிவு அவற்றில் ஒன்றாகும். உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும் அபாயமும் அதிகம்.

ஹார்வர்ட் ஆய்வுகளில் ஒன்றின் தரவானது, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் அதிகம் (220%). இருப்பினும், இந்த நோய் மற்றவற்றைப் போலவே ஆபத்தானது, எந்தவொரு மருத்துவ ஆய்வும் நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய நல்ல செய்தி என்னவென்றால், ஒரு நபர் உயர் இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம் மற்றும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

முடிவுரை

கடுமையான உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான மருந்துகள் வழங்கப்பட்டு, வழக்கமான பரிசோதனைக்காக பதிவு செய்யப்படுகின்றனர். இது அவர்களின் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், பக்கவாதம், இதய நோய்கள், இதய செயலிழப்பு மற்றும் பிற உறுப்பு சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்கவும் செய்யப்படுகிறது.

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழும் ஒரு நபர், உயர் இரத்த அழுத்தத்தால் கண்டறியப்பட்டாலும், மருத்துவ ஆலோசனையைத் தவிர்ப்பவர்களை விட நீண்ட காலம் வாழ முனைகிறார். இதனால், மகிழ்ச்சியாக வாழ, சாதாரண ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்)

ஒரு நபரை இரத்தப்போக்கிலிருந்து எவ்வளவு விரைவாக மீட்க முடியும்?

மூளையில் இரத்தக்கசிவு என்பது அசாதாரணமானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது, உயிர் பிழைத்தவர்களில் 20% இறப்பு விகிதம் உள்ளது. ஒரு நபர் இதிலிருந்து தப்பிப்பிழைக்க முடியாது, ஆனால் சுமார் 6 மாதங்களில் குணமடைவார் (மீட்பு விகிதம் மெதுவாக இருப்பதால்).

இரத்தப்போக்குக்குப் பிறகு மூளையை எவ்வாறு சரிசெய்வது?

வீங்கிய திசுக்கள் குறையத் தொடங்கும் போது, ​​​​நச்சுகள் அகற்றப்படும்போது, ​​​​மூளைக்குள் இரத்தம் பாயத் தொடங்கும் போது, ​​நீங்கள் மீட்சிக்கான சாத்தியமான அறிகுறிகளைக் காணலாம். CT ஸ்கேன் மற்றும் MRI போன்ற இமேஜிங் சோதனைகள் மூலம் இது கவனிக்கப்படுகிறது.

ரத்தக்கசிவு ஏற்படும் மூளையின் மிக மோசமான பக்கம் எது?

பக்கவாதத்தில் மூளையின் எந்தப் பக்கமும் சமமாக மோசமாக உள்ளது, ஏனெனில் உங்கள் மூளை உங்கள் முழு உடலையும் நியூரான்கள் மூலம் செய்திகளை அனுப்புவதன் மூலம் கட்டுப்படுத்துகிறது. எனவே, மூளையின் எந்தப் பக்கமும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், அந்த முடிவுக்குக் காரணமான செயல்கள் தடைபடுகின்றன. உங்கள் மூளையின் ஒவ்வொரு மூலையிலும் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டால், நீங்கள் மூளை இறந்ததாகக் கருதப்படுவீர்கள், ஏனெனில் உங்கள் மூளையால் உங்கள் உடல் உறுப்புகளுடன் தொடர்பு கொள்ள முடியாது (நீங்கள் நம்பிக்கையின்மை மற்றும் மீட்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் பல ஆண்டுகள் இயந்திரங்களின் உதவியுடன் இருக்க முடியும்).


மருவு-தினம் ஒரு மூலிகை

 

 *மருவு* மனம் மிக்க சிறு இலைகளை உடைய மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் சிறு செடி பூக்கடைகளில் கிடைக்கும் இதன் இலையே மருத்துவ பயன் உடையது உடல் பலம் மிகுதல் உடல் வெப்பம் மிகுத்தல் மாதவிடாய் தூண்டுதல் இசிவு அகற்றுதல் பசி மிகுதல் தாய்ப்பால் மிகுத்தல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது 40 கிராம் இலையை 400 மில்லி கொதி நீரில் போட்டு மூடி வைத்து இரண்டு மணி கழித்து வடிகட்டி 15ல் இருந்து 30 மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர வயிற்று வலி குன்மம் உடல் வலி ஆகியவை தீரும் இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்க கணு வீக்கம் குறையும் இலையை அரைத்து நல்லெண்ணையில் கலந்து வெயிற் புடமிட்டு வடிகட்டி பூசி வர சொறி சிரங்கு புண் ஆகியவை தீரும் நன்றி.

Thursday, January 25, 2024

மரிக்கொழுந்து-தினம் ஒரு மூலிகை

 

 *மரிக்கொழுந்து* நறுமணம் மிகுந்த சிறு செடியினம் மலர் கடைகளில் கிடைக்கும் தவனம் என்று அழைப்பார்கள் இதனுடைய இலையே மருத்துவ குணம் உடையது சளி அகற்றுதல் செரிமானம் மிகுதல் உடல் பலம் மிகுதல் தோல் நோய்களுக்கு இசிவு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது மரிக்கொழுந்து 40 கிராம் 500 மில்லி நீரில் கொதி நீர் விட்டு மூடி 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 15 மில்லி முதல் 30 மில்லி வரை காலை மதியம் மாலை கொடுத்து வர வயிற்று வாய்வு சமணப்படுத்தி பசி மிகுக்கும் உதிர சிக்கலை அகற்றும் உடல் பலம் மிகுக்கும் இலை சாறு வயதுக்கு ஏற்ப பத்தில் இருந்து 15 துளி தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கக்குவான் இருமலை தணிக்கும் இலையை அரைத்து நல்லெண்ணையில் கலக்கி சூரிய புடமிட்டு வடிகட்டி தடவி வர தோல் நோய்கள் சொறி சிரங்கு ஆறும் இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க வழி நீங்கும் நன்றி.

Wednesday, January 24, 2024

பனங்கிழங்கு

 . *


பனங்கிழங்கு* 


_வீதியோரத்தில் விற்காத அவித்த பனங்கிழங்கு கூடையுடன் தலைகவிழ்ந்த மூதாட்டி..._


_அலட்சிய பார்வை வீசி விட்டு அவசரக் கதியில் அலைகழியும் பட்டணத்து கூட்டம்.._


_நெடுதுயர்ந்த பனையின் மேல் நெஞ்சுரச இடுப்பில் குடுவையுடனும் திளாப்புக்கயிறு கட்டி ஏறிய கிழவன்..._


_மேலுக்கு ஆகாது வீட்டில் முடங்கிட, நிலங்கீறி விதையிட்டு துளிர்த்த வேர்களை சேகரித்த கிழவி காத்திருக்கிறாள் வாங்குபவர்களுக்காக..._


_கடும் உழைப்பு விலை போகா உலகத்திலே, பைக்குள் காற்றடைத்த பண்டம், சொன்ன விலைக்கு விற்கும் இவ்வூரிலே..._


_காட்டிலே மரமேறி உழைத்த குடும்பம், வயிற்றை கழுவ  விற்கும் கிழங்கை சீண்ட நாதியில்லை நாட்டிலே..._


_வானம் பார்த்து வளர்ந்து நிற்கும் பனைகளின்  ஓலைகள் சரசரக்கும் ஓசைகளை கேட்டப்படி சுருண்டிருக்கும் கிழவனின் வயிறும் சுருண்டிருக்க..._


_பரப்பரப்பாக இயங்கும் நகரத்து வீதியோரம் விற்காத கிழங்குகளுடன் துவண்டு வாடிக்கிடக்கிறாள் கிழவி. ஆமாம்; சர்க்கரை நோய்க்கு அருமருந்தாமே பனைகிழங்கு..._

பொறுமையாகவே இருந்து விடாதீா்கள்

 *ஆசைகளை*

*துறந்தவன் தான்*


*புத்தன் என்றால்...*


*நடுத்தர குடும்பத்தில்*

*பிறந்த  எல்லாருமே*


 *புத்தன்தான்.*




*வயதாகிச் சாகும்*

*வாய்ப்பே இல்லாதவை*


*ஆடும் கோழியும்*

*மட்டுமல்ல*


*பேராசையும்*

*தீரா கோபமும்தான்.*




*நிலவுக்கு போய்*

*பாா்த்து சொன்ன*

*பிறகு தான் புாிந்தது.*


*தூரமாய் இருந்து*

*பாா்த்தால் தான்*

*எல்லாம் அழகு என்று.*




*புாியாத மொழியில்*

*எழுதப்பட்ட புத்தகம்*

*போலத்தான்*


*பல உறவுகள்*

*இருந்தும் பயனில்லை.*




*பொறுமையாக இருங்கள்*

*அது புத்திசாலித்தனம்.*


*பொறுமையாகவே

இருந்து விடாதீா்கள்*


*அது முட்டாள்தனம்.*




*வாழ்க்கை வாழக்

கற்றுக்கொடுக்கிறதோ

இல்லையோ*


*வாழ்வோடு போராடக்

கற்றுக் கொடுக்கிறது.*

சுத்தமான தேனின் மகத்துவமும் மருத்துவக்குணமும்

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*


_திடக்கழிவு,_

_திரவக்கழிவு,_

_வாயுக்கழிவு,_ 

_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_


     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,

சுவையான முறை.


      *வெந்நீர்*

              +

*எலுமிச்சை சாரு*

             +

       *தேன்*


செய்முறை 


   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !

கொதிக்க வேண்டியதில்லை !

நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !


ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும்.


3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !


   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !


எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான 

உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !


*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*


   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !


*உணவாகவும்,*

*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !


குறிப்பு :......


     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !


சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !


   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !


தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!


வாழ்க வளமுடன்

குழந்தைகளின் நலனும், அக்கறயும்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள்....🍒



1. வாசிக்கும் பழக்கத்தைப் பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தைப் படிக்கப் பழகிக்கொள்வது அவர்களின் கல்வி உயர்வுக்கும் உதவும். புத்தகங்களின் மூலம் அவர்களின் அறிவும் வளரும்.


2. உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் வீடியோ கேம்களைப் பழக்காமல், வீட்டுக்கு வெளியில் சென்று வெயிலில் விளையாட அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்கு அதில் உற்சாகமும் கிடைக்கும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவதால், சமூகத்தில் பழகும் குணமும் பெறுவார்கள். உடலும் நலமாக இருக்கும். கை, கால்களின் இயங்குதிறனும் சிறப்பாக வளரும்.


3. பணத்தைச் சேமிக்கக் கற்றுக்கொடுங்கள். பணத்தின் மதிப்பையும் உணர்வார்கள். தங்கள் கண்ணெதிரே உயரும் சேமிப்பைப் பார்த்து, சேமிக்கும் பழக்கத்தையும் பெறுவார்கள்.


4. டி.வி. கம்ப்யூட்டர், செல்போன் என்று ஒளிரும் ஏதோ ஒரு திரையைப் பார்த்தபடியே இன்றைய குழந்தைகள் வளர்கின்றனர். அவற்றுக்கு அடிமையாகவிடாமல், நேரக் கட்டுப்பாட்டை அறிமுகம் செய்யுங்கள்.


5. எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க அவர்களைப் பழக்குங்கள். பொம்மைகளைப் பிரித்துவைத்து விளையாடினால், மீண்டும் அவற்றை அடுக்கி வைக்கச் சொல்லுங்கள். படித்து முடித்ததும் புத்தகங்களை ஒழுங்காகப் பையில் அடுக்கி வைப்பது, தூங்கி எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துவது என்று பழகினால், எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்யும் திறமை அவர்களுக்குக் கிடைக்கும்.


6. தூங்கி எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்குச் சோம்பல் பழகாது. எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்வதற்குப் பழகிக்கொள்வர்கள்.


7. தாங்கள் இருக்கும் இடத்தையும் தங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, இனிமையான தூக்கம், வியர்வை சிந்தும் விளையாட்டு என்று உடல்நலனுக்கு உகந்த வாழ்க்கைமுறையை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.


8. பல் துலக்குவது, குளிப்பது, முறையாகக் கை கழுவுவது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, வாயை மூடிக்கொண்டு இருமுவது, வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்ததும் கால்களைக் கழுவுவது என்று சுகாதாரமான நாகரிகங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். வளர்ந்த பிறகு அவர்களை எல்லோரும் மதிப்பார்கள்.


9. அக்கம்பக்கக் குடும்பத்தினர், தங்கள் வயதில் இருக்கும் குழந்தைகள் என்று எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் பழகச் சொல்லுங்கள். நட்புகளை உருவாக்கிப் பராமரிப்பது வாழ்க்கை முழுக்கத் தேவைப்படும் ஒரு பண்பு.


10. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கடின உழைப்பைக் கொடுக்க அவர்களைப் பழக்குங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களை இது வாழ்க்கையில் உயர்த்தும்.✍️


*#அன்புடன்_வாழ்க வளமுடன்*

Tuesday, January 23, 2024

மஞ்சள் முள்ளங்கி-தினம் ஒரு மூலிகை

 


மஞ்சள் முள்ளங்கி (அ)கேரட்  தமிழகத்தில் காய்கறி உணவு பொருளாக எல்லா பகுதிகளிலும் பயிற்சி செய்யப்படுகிறது கிழங்கு முள்ளங்கி வடிவில் மஞ்சள் நிறமாக இருக்கும் கிழங்கு விதை ஆகியவை மருத்துவ குணம் உடையது கிழங்கை அரைத்து சற்று சூடு செய்து ஆறாத புண்களின் மீது வைத்து கட்ட அவை ஆறும் கிழங்கை சமைத்து உண்டுவர குருதி தூய்மை அடையும் இதயம் மூளை சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பலப்படும் இருமல் மார்பு வலி பாண்டு நீர்க்கட்டு கல்லடைப்பு மலச்சிக்கல் முதலிய நோய்களுக்கு சிறந்த காய்கறி உணவாகும் விதையை வறுத்து தோல் நீக்கி உண்டு வர நீர் அடைப்பு கல்லடைப்பு வயிற்று பெருமல் புண்கள் ஆகியவை தீரும் தாது மிகுந்து ஆண்மை மிகவும் அடுத்தடுத்து உண்டு வருவதால் நீர் கட்டு நீங்கி இரைப்பை பலப்படும் மார்பு நோய் நீங்கும் குருதி தூய்மை அடையும் உடல் வனப்பு பெறும் நன்றி.

Sunday, January 21, 2024

வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை தரமறுக்கிறார்களா?

சட்டநடவடிக்கை என்ன?

கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கடுமையான முறையில் ஓய்வின்றி  கொடுமைபடுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமாகும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப் படுகிறது. 

மேற்கண்ட வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு வேலை விட்டு நின்றதும் தரமறுக்கிறார்கள் அந்த நிறுவனம் மற்றும் அதிகாரியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 374,503,405, ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கலாம்.

மேற்கண்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் எந்தெந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குகிறது என்று பார்ப்போம்.


 IPC-374 சட்டப்பூர்வமற்ற கட்டாய உழைப்பு. 


 விளக்கம்


 இந்த சட்டம் எதை வரையறுத்து கூறுகிறது என்றால் ஒரு வேலையை கட்டாயப்படுத்தி அதிகமான நேரத்திற்கு வேலை வாங்கினால் அல்லது இன்னொரு வேலைக்காக உங்களை தேர்வு செய்து விட்டு இன்னொரு வேலையை செய்யச் சொன்னால் அதற்கும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.


 IPC-503 குற்றமுறு மிரட்டல்.


 விளக்கம்


குற்றம் என்று தெரிந்தே ஒருவரை வேலை நேரத்தை தவிர்த்து வேறு நேரத்திலும் வேலை செய்யச் சொல்லி மிரட்டினால் குற்றம்தான் அதற்கு இந்த சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.


 IPC-405 குற்றமுறு நம்பிக்கை மோசடி.


 விளக்கம்


ஒருவரிடம் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்களது ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி அவரது ஆவணங்களை பெற்று வைத்துக் கொண்டு அவரை நம்ப வைத்து அவரது ஆவணங்களை பெற்றுக் கொண்ட பிறகு அந்த வேலையில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது ஏற்கெனவே வேலையில் சேரும் நேரத்தில் அவரை நம்ப வைத்து அவரின் ஆவணங்களை பெற்று விட்டு தற்போது அந்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பது நம்பிக்கை மோசடி என்ற அடிப்படையில் இந்த சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.


இப்படி எந்தெந்த துன்புறுத்தல்கள் எல்லாம் நீங்கள் அனுபவித்தீர்களோ அதற்கெல்லாம் தண்டனை உண்டு.


மேலும் இவ்வாறு தொழிலாளர்களை நடத்துவது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கும் புறம்பானதாகும். பணிபுரிந்த கம்பெனியிடம் நேரில் சென்று கேட்டு பார்க்க வேண்டும் தரவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம்.அல்லது வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புங்கள் பதிலளிக்க வில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் நஷ்டஈடுப் பெறலாம். ஆனால் பெரும்பாலும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியவுடன் தீர்வு கிடைக்கும்.நல்ல தகவல் பெற கீழ்கண்ட லிங்க் இணையலாம். https://chat.whatsapp.com/IxeZHgZZ06i67N9xOf3dvT

அறிவின் வளர்ச்சிக்கு மூன்று படிகள் உள்ளன

அறிவின் வளர்ச்சிக்கு மூன்று படிகள் உள்ளன.  அவை


 நம்பிக்கை (Faith)


 விளக்கம் (Understanding)


 முழுமைப்பேறு (Realization)


உடலைக் காக்கும் நெறியிலும் மூன்று ஒழுங்காற்றல் வேண்டும் அவை:


ஒழுக்கம் (Morality)


 கடமை (Duty)


 ஈகை (charity)


இத்தகைய தெளிந்த நிலையில் மனிதன் வாழ்ந்து முழுமை பெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏழு விதிகளை நன்கு உணர்ந்து ஆற்ற வேண்டும்.


அவை

வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.


 தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.


இயற்கையின் ஒழுங்கமைப்பையும் அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண விளைவு விதியையும் உணர்ந்து கொண்டும் மதித்தும் நடக்க வேண்டும்.


வாழ வேண்டிய முறையையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.


இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல் வலிமையையும் திறமையையும் அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு முறையான உடல் பயிற்சி உளப்பயிற்சி சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.


விழிப்போடும் விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றை பயன்படுத்த வேண்டும்.


 அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு (Introspection), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஏழு விதிகளை நன்குணர்ந்து மனிதன் அறிவில் வளர்ச்சி பெற வேண்டும். உடலையும் நன்கு காத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்வின் மூலமே மனிதன் பிறர்க்குப் பாரமாக இல்லாமலும் பிறருக்கு உதவியாகவும் இருந்து கொண்டே தானும் நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழலாம். 


வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி

வாழ்க்கையின் மிகப்பெரிய 

மகிழ்ச்சி நாம் நேசிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கையேயாகும்....



நமக்காக நேசம், 

அல்லது மாறாக, 

நம்மை மீறிய அளவில் 

நம்மீதான நேசிப்பு என்றும் சொல்லலாம்....


சுய அன்பு சுயநலமல்ல...

உங்களை எப்படி நேசிக்க வேண்டும் என்று தெரியாத வரை உங்களால் இன்னொருவரை நிச்சயமாக நேசிக்க முடியாது....


நீங்கள் யார் என்பதில் அழகாய் பெருமிதம்   கொள்ளுங்கள்... மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட 

நீங்கள் உங்களை பற்றி நினைக்கும் நினைவுகளை கூட்டிக்கொள்ளுங்கள்....


இந்த உலகம் நமது சிந்தனை எனும் எண்ண அலைகளிலே தான் தவழ்கிறது....


அதை உங்கள் கைக்குள்ளே 

உங்கள் எண்ணங்களால் 

நீங்கள் வென்றெடுக்கும் 

நேரங்கள் தான் வெவ்வேறானவை.... 


உங்கள் மேல் உங்களால் 

தெளிவான நேசம் ஒன்றை  

தெளிக்க இருபது நிமிடங்களேனும் கொடுங்கள். ..

நிச்சயமாய் ஒருபடி உயர்வதை நிதர்சனமாய் உணர்வீர்கள்....


 

மனம் சஞ்சலப்படுகிறதா, அதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்க்கான தீர்வுகள்.

மனம் சஞ்சலப்படுவதற்க்கான முக்கிய காரணமே மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களே. இது நமது வாழ்வில் நடந்து முடிந்த எதிர்மறையான விசயங்களில் இருந்தும், தோல்வி மற்றும் அவமானங்களில் இருந்தும் இவ்வகையான எண்ணங்கள் எழுகின்றன. இவை நம்மை நிகழ்காலத்தில் வாழ அனுமதிப்பதே இல்லை. 


எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும்போது அதனை ஊக்குவிப்பதாலேயே அது செயல்பட தொடங்குகிறது. எதிர்மறை எண்ணங்களை கவனிக்கும்போது அதனை சார்ந்த எதிர்மறை உணர்வுகளுக்கும் தூண்டப்படுகிறது இதன் விளைவு தீவிரமானா மனஅழுத்தம் ஏற்படும். 


மனதை நிறுத்த முயற்சி மேற்கொள்ளாதீர்கள். சலனம் அதன் இயல்புதான். இது ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதை போன்றது இந்த முயற்சி. உங்களது இயல்புக்கு மாறான செயல்.


மனம் தனது வேலை செய்ய அனுமதியுங்கள். அதனை நிறுத்துவதற்கு முயலாதீர்கள். அதனுடைய செயல்களை கவனியுங்கள். விழிப்புடன் இருங்கள்.


மற்றவர்களது விமர்சனங்களை கண்டு ஒரு போதும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதை காரணமாக வைத்தே மனம் உங்களிடம் விளையாட ஆரம்பித்துவிடும். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.


மனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. அது இறந்த காலத்தில் இருக்கும், அல்லது எதிர்காலத்தில் இருக்கும். அதனால் மனதில் தோன்றும் எண்ணங்களை சாட்சிபாவனையாக இருந்து பார்க்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். 


மனதை அமைதிப்படுத்த தினமும் தியானப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களது மனதை நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபடுத்துவதின் மூலம் தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். 


மற்றவர்களுடைய எண்ணங்களுக்கோ, உணர்வுகளுக்கோ நாம் பதிலலிக்க தேவையில்லை. இது மேலும் உங்களது மனதை அதிகமாக சஞ்சலப்படுத்தும். மனதை சரியாக நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நிகழ்காலத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களது மனம் எப்போதும் புத்துணர்வுடன் இருப்பதை உணர்வீர்கள்.

    


 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

கலங்களை (பாத்திரம்) கழுவ உதவும் பொடி

பண்டைய காலங்களில்  சூழலோடு ஒத்து வாழ ஒவ்வொரு செயலையும் கவனமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.*


*கழுநீர்,வைக்கோல் தவிடு உண்ணும் மாடுகள், டிராக்டர் போல் அது எரிபொருளை தின்று தானும் சூடாகி சூழலை சிதைக்காமல் பல்வேறுப் பயன்களை அளிக்கிறது.*


*அவற்றில் மிகச் சிறப்பான ஒன்று *பசுஞ்சாண சாம்பல் பொடி*


*கலம் என்பதே பாத்திரம் என்பதிற்குத் தூயத் தமிழ் சொல்லாகும்.*


*பசுஞ்சாணம் எரிபொருள் சாம்பல் சாதாரண கலங்களையும், புளியானது வெண்கலங்களையும்   துலக்கப் பயன்பட்டப் பொடியாகும்*.


 *மேற்கண்ட முறை இந்தியா போன்ற வெப்ப நாட்டிற்கு ஏற்றது*


*நீர் மற்றும் நிலத்தை காத்து மாசுபாட்டைத் தடுக்க வேதிப்பொடிகளைத் தவிர்த்து *பசுஞ்சாண சாம்பல் பொடியைப் பயன்படுத்தி பொருளாதார இழப்பையும் தவிர்த்து சேமிப்பை அதிகரிக்க இன்றிலிருந்து உங்கள் சமையல் அறையிலிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்*


நன்றி

பைரவரை எப்படியெல்லாம் 🌺வழிபடலாம்..!!

பைரவரை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்..!!*


🌻 தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார். பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால் நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள்.


🌻 பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபம் ஆவார். இவர் சிவன் கோவில்களில் வடகிழக்குப் பகுதியில் நின்றவாறு காட்சியளிப்பார்.


🌻 பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும். பைரவரை எந்தெந்த கிழமையில் எப்படியெல்லாம் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.


ஞாயிற்றுக்கிழமை :


🌻 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வந்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தவர்களின் கடன் தொல்லைகள் நீங்கும். மேலும் இந்த கிழமையில் பைரவருக்கு புனுகு சாற்றி, முந்திரி மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் மேலும் பல நன்மைகள் நடக்கும். இந்தக் கிழமையில் சிம்ம ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.


திங்கட்கிழமை :


🌻 திங்கட்கிழமையன்று வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வர சிவன் அருள் கிட்டும். சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாற்றி வழிபட்டு வந்தால் கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இந்தக் கிழமையில் கடக ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.


செவ்வாய்க்கிழமை :


🌻 செவ்வாய்க்கிழமையன்று மாலை வேளையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வம் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். இந்த நாள் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட உகந்த நாளாகும்.


புதன்கிழமை :


🌻 புதன்கிழமையன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட லாபங்கள் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பாகும்.


வியாழக்கிழமை :


🌻 ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பைரவருக்கு மனமுருகி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் ஏவல், பில்லி சூனியம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இந்தக் கிழமையில் தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு.


வெள்ளிக்கிழமை :


🌻 வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் பைரவருக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகி சகல ஐஸ்வர்யமும் கிட்டும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு.


சனிக்கிழமை :


🌻 சனி பகவானின் குருவான பைரவரை சனிக்கிழமையில் பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டம சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமசனி போன்ற சனி பகவானின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு நன்மைகள் அடையலாம். இந்தக் கிழமையில் மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும். மேற்கண்ட நாட்களில் பைரவரை வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

நல்லவர்களைத் தேடா‌தீ‌ர்க‌ள்

உழைக்காமல்

பணக்காரனாக விரும்பும் யாரும்  அறிவாளி அல்ல.


_லாட்டரி_

_டிக்கட்டுகளை_ _நம்புகிறவர்கள்,_

_சினிமாவில்_ _வருவது போல் முதல் காட்சியில் ஆட்டோ ஓட்டி_ _விட்டு அடுத்தக் காட்சியில் பென்ஸ்_ கார் _ஓட்டும் கதாநாயகனைப் போல ஆக_ _விரும்புகிறவர்கள்,_


_*அதிர்ஷ்டத்தால்*_

_*முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள்,*_


_கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் கடவுள்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஏதாவது கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள்._


_*இவர்கள் பட்டியலில்*_

_*உங்கள் பெயர் இருக்கிறதா.*_

_*தயவு செய்து*_

_*வெளியே வாருங்கள்.*_

_*உழைக்காமல் முன்னேற முடியாது.*_


_உழைக்காமல்_

_தற்காலிகமாக மேலே வந்தவர்_

_ஒரு போதும் நிலைக்க முடியாது._ _புரிந்துக் கொள்ளுங்கள்._

_உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது,_ _கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்._ 

_பாடுபடுவது,_

_சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது,_


_*சினிமா, சீட்டு, , சிகரெட்டு என்கிற இளவயது இன்பங்களில் தன்னைத் தொலைக்காமல் பல மணி நேரம் படிப்பது கூட உழைப்பது தான்.*_


_பல மைல் பயணித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத் தான்._


_*சோம்பி இராத*_

_*சுகம் தேடாத*_ _*எல்லா*_ _*முயற்சிகளும் உழைப்புத் தான்.*_


_இப்படி உழைத்தவர்கள் தான்_

_உயரமான இடங்களில்_ _பின்னர் உட்கார்ந்தவர்கள்._


_*கடின உழைப்பு வெற்றியைத் தராவிட்டாலும்,*_

_*வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம்*_ _*அதிகப்படுத்தும்.*_


_வாழுகின்ற வாழ்க்கை_

_வெறுப்பாக_ _இருக்கிறதே என்று வேறொன்றைத்_ _தேடாதே, அது வேதனையாகத்தான் இருக்கும்._


_*நிம்மதி என்பது இருப்பதில்*_ _*திருப்திபடுவது தானே தவிர இல்லாததிலும்*_ _*இழந்ததிலும்*_

_*தேடுவதல்ல.*_


_சமுதாயத்தில்_

_நல்லவர்களைத் தேடாதீர்கள்._

_மாறாக_

_நீங்களே_ _நல்லவர்களாக இருங்கள்._


_*சிறந்ததைத்*_ _*தேடுபவர்கள்*_

_*தேடிக்*_ _*கொண்டுதான் இருக்கிறார்கள்.*_ _*கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள்*_

_*சந்தோசமாக*_

_*வாழ்ந்துக்*_ _*கொண்டுதான்*_

_*இருக்கிறார்கள்.*_

மங்குஸ்தான்-தினம் ஒரு மூலிகை

 *


*மங்குஸ்தான்*  பழம் மலை தோட்டங்களில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் பெரும் மரவகை சார்ந்த இதன் பழம் கடினமான ஓட்டையும் சளி போன்ற வழுவழுப்பான பல சுளைகளையும் பெற்றிருக்கும் இலை பட்டை பழம் ஆகியவை மருத்துவ குணம் உடையது பொதுவாக துவர்ப்பியாக செயல்படும் உலர்ந்த பழத்தை பொடித்து 250-350 மி.கி அளவாக சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு வர நாள் பட்ட கழிச்சல் சீத கழிச்சல் வெள்ளை ஆகியவை தீரும் மங்குஸ்தான் மர பட்டையையோ பல ஓட்டையோ ஒன்று இரண்டாய் இடித்து நீரில் இட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரை கொண்டு அலம்பி வர கருப்பை இறக்கம் ஆசனவாய் வெளித்தள்ளுதல் ஆகியவை குணமாகும் பழ ஓடு 30 கிராம் கொத்தமல்லி விதை சீரகம் வகைக்கு 10 கிராம் இவற்றை இடித்து 800 மில்லி நீரில் இட்டு நானூறு மில்லி அளவுக்கு காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு நூறு மில்லி அளவாக சர்க்கரை கலந்து காலை மதியம் மாலையாக சாப்பிட்டு வர நீர்த்த கழிச்சல் சீத கழிச்சல் குருதி கழிச்சல் ஆகியவை தீரும் தொடர்ச்சி நாளை நன்றி.