கட்டுக்கட்டாக ரூபாய்களை அடுக்கி வைத்து அதனைப் பார்ப்பதா?
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தின் அவ்வப்போது இருப்பு நிலை அறிவதா?
மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டி நீச்சல் குளமும் ஹெலிபேடும் அதில் உள்ளது என பெருமை பீற்றிக் கொள்வதா?
நான் எங்க போனாலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தான் என அக்கம் பக்கம் வயிறெரிய வைப்பதா?
எங்குழந்தைங்க இந்த நாட்டின் பெரிய கான்வென்ட்ல தான் படிக்கிறாங்க என படிப்பின் தன்மை பணமாகக் காண்பதா?
10 டிகிரி வாங்கிருக்கேன். இன்னும் சிலது படிக்கப் போறேன் என படிப்பினை பவிசாக பாவிப்பதா?
என் மகன் / மகள் ஆரம்ப சம்பளமே 5 இலக்கம் என்று மக்களைப் பற்றி மகோன்னதம் அடைவதா?
யாரோ ஒருவருக்கு உதவுவதை, ஊருக்கே உதவுவது போல பில்ட் அப் செய்வதா?
ஒரே ஒரு மரக்கன்று நட்டு வைத்து பசுஞ்சோலையே உருவாக்கியதாக பப்ளிசிட்டி பண்ணுவதா?
மகன் / மகள் கல்யாண அழைப்பிதழுக்கே பல்லாயிரம் படாடோபமாக செலவழிப்பதா?
கடவுளை வணங்கிட குறுக்கு வழியில் அதிகம் செலவழித்து கருவறைக்கு அருகில் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ததை ஒருவர் விடாமல் சொல்லி அகங்காரமாய் இருப்பதா?
அரசு அலுவலகத்தில் தனக்கு ஒரு வேலை ஆவதற்காக லஞ்சம் தருவதை லஜ்ஜை இல்லாமல் நியாயப்படுத்தி பேசுவதா?
இதிலெல்லாம் சிலருக்கு / பலருக்கு சந்தோஷம் கிடைக்கலாம்...
ஆனால் உண்மை
சந்தோஷம் எது தெரியுமா?
உங்களால் ஏதோ ஒரு உயிரின்
கஷ்டத்தை குறைக்க முடிந்தால்
அதில் வரும் மனநிறைவு
No comments:
Post a Comment