Monday, May 20, 2024

பிச்சை பாத்திரம்

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.


அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.


இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.


ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.


முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.


சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.


பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.


இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..


எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.


அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..


பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.


துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.


பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...


துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.


பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.


துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...


மெள்ள மெள்ள...


மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!


பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.


ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.


பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!


“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.


இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote) பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.


படித்ததில் பிடித்தது.

ஆணின் "இதயத்தை" தொட்டுப் பாருங்கள்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அணைத்து பெண்களும் கட்டாயம் படிங்க???
ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை
ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்,
? "நேரம் நெருங்கிவிட்டது,
பிரசவ வலி நாளை அல்லது
நாளை மறுநாள் கூட வரலாம்..
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்..
? இதை கேட்ட அவள் கணவனுக்கு
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,
? அன்று இரவே கணவன் தன் மனைவியின்
வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான்,
? "என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி
கேட்க நாளை இன்நேரம் என் மகனோ,
மகளோ என் கையில்... என்கிறான்,
? அதை கேட்க மனைவி எனக்கு
ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல,
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான்
வேண்டும் என்று கணவன் சொல்ல
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,
? படுக்கையில் தன் கணவன் அருகில்
நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்,
? தூக்கத்தில் இருந்த கணவன்
விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.
? "என்னவென்று தெரியவில்லை
இதயம் படபடவென துடிக்கிறது,
எனக்கு தூக்கமே வரவில்லை
பயமாக இருக்கிறது", என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.
? உடனே இழுத்து தன் மார்போடு
மனைவியை அனைத்தவன்
அவள் கண்ணீரை துடைத்து
அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
? அவள் நினைத்தால் போல்
திடீரென பிரசவ வலி வந்தது.
பயத்திலும் கடுமையான
இடுப்பு வலியிலும் கட்டிலேயே
துடித்து அழ ஆரம்பித்தாள்,
? என்ன செய்வது என தெரியாது
முழித்த கணவன்
அவள் துடிப்பதை காண இயலாமல்
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு
காரில் சிட்டுக் குருவியை போல்
பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,
? இரவு நேரம் என்பதால் உடனே
தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்,
? ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும்
பயங்கரமாக கேட்டது,
? இரு கைகளையும் பிசைந்து கொண்டு
பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.
? "அம்மா! அம்மா ..!" என்று
மனைவி வலியில் துடிக்க
அழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.
? "ஆண்டவா என் மனைவியின்
முதல் பிரசவம் இது,
தாய்கும் பிள்ளைக்கும் எந்த
ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது"
என்று உலகின் உள்ள
எல்லா கடவுளிடம் வேண்டினான்.
? நேரம் ஆக ஆக அவனுக்கு
முகமெல்லாம் வேர்த்து கொட்டியது,
பிரசவ வலியில் தன் மனைவி
துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.
? சற்று நேரத்தில் திடீரென
மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என
மிகவும் பயந்துபோனான்,
? மீண்டும் ஒரு அலரல்...
? அதை கேட்ட கணவன்
ஆண்டவா என் மனைவிக்கு
இவ்வளவு சித்திரவதையா?
என தலையில் கை வைத்தவாறு
இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்து
கூணி கூறுகிப்போனான்,
? அப்போது ஒரு நர்ஸ் மட்டும்
வெளியே வந்து
உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம்
பயப்படும்படி ஒன்றுமில்லை,
தாராளமாக உள்ளே சென்று
பாருங்கள் என்றார்.
? காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன்
முதலில் தன் மனைவியை பார்க்கிறான்,
அவள் இன்னும் கண் திறக்காமல்
மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க
அடுத்து எங்கே என் குழந்தை என
அவன் கண்கள் ஒரு வழியாக தேடி
தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு
மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத
சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு
முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக
கோதிவிடுகிறான்.
? தந்தையின் கை விரல் பட்டவுடன்
சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
?? யார் சொன்னது பெண்கள் மட்டும்தான்
உயிரை சுமக்கின்றனர் என்று.
♥ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும்
ஒவ்வொரு ஆணின் "#இதயத்தை"
தொட்டுப் பாருங்கள்,
அவன் வாழ்நாள் முழுவதும்
அந்த #பெண்ணின் நினைவுகளையும்
#குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும்
உன்னதமான படைப்பு தான் #ஆண்..

ஐயப்பனை காண இருமுடி எதற்கு?

இருமுடி பற்றி ஒர் பார்வை.. irumudi

இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும் ஐய்யப்பன் விக்கிரகத்தின் மீது நெய் அபிஷேகம் செய்யப்படும்.

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் .

முதல் காரணம்:

பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காண செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு…

இதுவே நாம் இருமுடியை எடுத்து செல்லும் காரணம்…. ஸ்வாமியே சரணம் ஐயப்பா…



இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும்

இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும் !!
 ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பு+ஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.

 வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய்விளக்கேற்றி வைக்க வேண்டும். இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபு+ஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

 குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்பன் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள். இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.

 நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பு+சி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

 அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊது பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிபருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

 முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்குத் தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

 வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

 தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.

 இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.

 பள்ளிக்கட்டு சபரிமலைக்கு… யாரைக் காண.. சுவாமியைக் காண… என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

No Claim Bonus

மோசமான ஓட்டுனர்களுக்கு மட்டுமே கார் காப்பீடு அவசியம் என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். நன்றாகவும் கவனமாகவும் வாகனம் ஓட்டும் ஒருவர் தங்கள் காப்பீட்டிலிருந்து எதையும் பெறமாட்டார் என்ற எண்ணமும் மக்களிடம் உண்டு. ஆனால், இன்சூரன்ஸ் காப்பீடு வழங்கும் நிறுவனம், வாகனத்திற்கு பாலிசி எடுக்கப்பட்டு இருக்கும் வருடத்தில்,எந்த உரிமை கோரல்களையும் செய்யாமல் இருந்தால், அதற்கு வெகுமதியாக ஒரு தொகையை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு பெயர் தான் NO CLAIM BONUS.

இது வாகன காப்பீட்டிற்கு மட்டும் இல்லை, மருத்துவ காப்பீடு என்று பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்களுக்கும் பொறுத்தும். அதாவது, ஒரு நபர் தன்னுடைய தேவைக்கு என்று மருத்துவ காப்பீட்டை எடுக்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த ஆண்டு முழுவதும், அவர் காப்பீட்டை பயன்படுத்தவே இல்லை என்றால் அதற்கு ஒரு தொகை போனசாக வழங்கப்படும். ஒரு வேலை அவர், அந்த குறிப்பிட்ட ஆண்டு, உடல் நிலை சரி இல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கு காப்பீட்டை பயன்படுத்தி, பணம் பெற்று, அதை கொண்டு மருத்துவ கட்டணத்தை செலுத்தி இருந்தால், இந்த NO CLAIM BONUS கிடைக்காது.

இந்த NO CLAIM BONUS மூலம் கிடைக்கும் தொகையை அடுத்த வருடம் பிரிமியம் தொகை செலுத்தும் போது, அதில் கழித்து கொள்ளப்படும். இது வாகனத்தை மிக சரியாக பயன்படுத்தியதற்கு, வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும் ஒரு வெகுமதி ஆகும். காப்பீட்டு வழங்கும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 50 சதவிதம் அளவிற்கு தள்ளுபடை வழங்கும். இது, தொடர்ந்து ஐந்து வருடங்களின் எந்த உரிமைகோரல்களும் இல்லாமல் இருந்தால், 5 ஆண்டுகளின் முடிவில் வழங்கப்படும். 50 சதவிதம் தான் அதிகபட்ச தள்ளுபடியாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே 50 சதவிதம் தள்ளுபடியை பெற்றுவிட்டால், அதன் பின்னர், வேறு எந்த ஒரு ஆண்டிலும், உரிமை கோராமல் விட்டாலும், அதே 50 சதவிதம் தான் நீடிக்கும்.

NO CLAIM BONUS தள்ளுபடி மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியத்திற்கு பொருந்தாது. இது சட்டப்படி கட்டாயமாக இருக்கும் அடிப்படை காப்பீடு என்பதால், அதற்கு பொருந்தாது. பொதுவாக, மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியம் மொத்த பிரீமியம் தொகையில் 20 சதவிதம் வரை இருக்கும்.

NO CLAIM BONUS கணக்கிடுவதில் சில குழப்பங்கள் எழுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக NO CLAIM BONUS என்பது, மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியத்தை கழித்துவிட்டு தான் கணக்கீடு செய்யப்படும். அதாவது, மொத்த பிரிமியம் தொகையில், மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியம் எவ்வளவு என்பதை கழித்த பின்னர், மீதம் இருக்கும் தொகையை கணக்கில் கொண்டு தான் NO CLAIM BONUS கணக்கிடப்படுகிறது. எனவே, செலுத்தும் பிரிமியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை NO CLAIM BONUS ஆக வரும் என்று கணக்கிடும் போது, மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியத்திற்கு எவ்வளவு கட்டணம் என்பதை கழித்துவிட்டு தான் NO CLAIM BONUS எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட வேண்டும்.

Sunday, May 19, 2024

கோங்கிலவு - தினம் ஒரு மூலிகை

*கோங்கிலவு*.  இலவம் பஞ்சு மரவகை சார்ந்தது இந்த மரத்தில் கூம்பு வடிவ முட்கள் உடையது செந்நிற மலர்களையும் வெள்ளை நிற பஞ்சு உடைய வழுவழுப்பான உருண்டை வடிவ காய்கள் உடையது ஆற்றங்கரை காடுகளில் தானே வளரும் இதன் இலை பூ விதை பட்டை பிசின் பஞ்சு வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது இலை அக அயார்சியை தனிக்கும் பூ சிறுநீர் பெருக்கி மலச்சிக்கல் அகற்றும் விதை குருதிப் போக்கை அடக்கும் காமம் பெருக்கும் பட்டை சிறுநீர் பெருகும் வேர் உடல் பலத்தையும் வெப்பத்தையும் மிகுக்கும் 20 இலைகளை அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி கொடுக்க வாத கடுப்பு தீரும் 20 கிராம் பூவை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி குடிக்க மலச்சிக்கல் அகழும் சிறுநீர் பெருகும் 4 கிராம் விதை 2 சீரகம் ஒரு கிராம் வால்மிளகு மென்மையாய் அரைத்து 250 மில்லி மோரில் கலைக்கு காலையில் மட்டும் பருகிவர நீர் கடுப்பு நீர் சுருக்கு சிறுநீரில் ரத்தம் சீல் போதல் குணமாகும் 20 கிராம் பட்டையை பால் அல்லது இளநீர் விட்டு அரைத்து பிழிந்து காலை மாலை கொடுத்து வர வெள்ளை ரத்த வெள்ளை சீழ் போதல் குணமாகும்.


நன்றி.

Saturday, May 18, 2024

கொள்ளுக்காய் வேலை - தினம் ஒரு மூலிகை

 **

சிறகு கூட்டில்களையும் உச்சியில் கொத்தான செந்நீல நிற மலர்களையும் தட்டையான வெடிக்க கூடிய காய்களையும் உடைய சிறு செடி சாலையோரங்களில் தரிசி நிலங்களில் தானாக வளரும் செடி வேர் மருத்துவ பயன் உடையது கோழை அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் வீக்கம் கட்டிகளை கரைத்தல் ஆகிய மருத்துவ குணமுடையது வேருடன் சம அளவு மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வர கண்ட மாலை வீக்கம் கரையும் 10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரில் ட் நூறு மில்லியாக காய்ச்சி 50 மில்லி அளவாக காலை மாலை சாப்பிட்டு வர பித்த நோய்கள் கல்லீரல் மண்ணீரல் சிறுநீரகம் ஆகியவற்றில் உண்டான வீக்கம் வயிற்று வலி சரியா காய்ச்சல் ஆகியவை தீரும் இரண்டு கிராம் வேரை மோரில் அரைத்து கலக்கி வடிகட்டி கொடுத்து வர வீக்கம் பாண்டு முகப்பரு கட்டிகள் ராசப்பறவை ஆகியவை குணமாகும் வேரை நீரில் கொதிக்க வைத்து கொப்பளித்து வர வாய்ப்புண் பல் வலி ஆகியவை தீரும்.


நன்றி.

இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

**

வாதம் தானே வயிற்றில் இருந்து தோன்றி பலவீனமான இடங்களில் திரிந்து வலியை உண்டு பண்ணும்.. தனக்கு வரும் நோய்களை இது குணமாகாது இது முற்றிவிடும் என கற்பனை தானே நாட்பட்ட நோய்களாக மாற்றிவிடுகிறது.. எனது தனித்துவமான நோய்க்கு தனித்தன்மையான மருந்து மருத்துவம் என தேடி தேடியே நோய் முற்றி விடுகிறது பலருக்கு.. எளிமையான மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் மக்கள் கண்டு கொள்வதில்லை..

நாள்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட்ட இந்த பெண்மணிக்கு சொன்ன வீட்டு வைத்தியம் 


 🔹 *விளக்கெண்ணெய்- 10மி*

 🔹 *வெள்ளைப் பூண்டு- 1பல்  நசுக்கியது*

🔹 *வறுத்த பெருங்காயம்- ½சிட்டிகை*


 இதை ஒன்றாக கலந்து இரவு எட்டு மணிக்கு தயார் செய்து வைத்து விட வேண்டும்.. 


காலை எழுந்தவுடன் 7:00 மணிக்குள் இதை குடிக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்துக் கொள்ளவும்.. அந்த நாள் இரண்டு மூன்று தடவை மலம் போகும்..( அன்றைய தினம் அசைவ உணவு எண்ணெயில் பொரித்த உணவு பேக்கரி உணவு தவிர்க்க வேண்டும்) கூடவே திரிந்த காற்று வாதம் எல்லாம் வெளியேறி உடல் வலி இடுப்பு வலி குணமாகும்...

Friday, May 17, 2024

திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்பது ஏன்?

*
திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்...!


கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.

உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை.

எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.

சரி கேள்… என்ன வரம் வேண்டும்?

நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.

#பூசனிக்காய_உடைக்கும்

#முறைகள்


1. கோயில் வழிபாடுகள் கும்பாபிஷேகங்கள், வீடுகிரகப்பிரவேஷம் கம்பெனி மற்றும் கடைகள் ஆரமித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு பூசனிக்காய சுற்றி உடைக்கும் பொழுது பூசனிக்காயை சுற்றுவதற்க்கு முன் பின்னபடுத்தாமல் சுற்றிய பிறகு உடைத்து அதாவது நீங்கள் உடைக்கும் பூசனிக்காயைய பறைவைகள்,மாடுகள்,குரங்கு,மற்றும் பலவிளங்கினங்கள் அதை உன்னும் என்பதால் தயவுசெய்து அதில் குங்குமம் காசு போடாமல் பீட்ரூட்டை சீவி அதை உடைத்த பூசனிக்காயில் தடவி சிவந்த நிரமாக மாற்றி போடவும் ஏன்தெரியுமா? எல்லாஉயிர்களும் இன்புற்று வாழவேண்டும் முடிந்த அளவு நாம் செய்வதில் பிற உயிர்களுக்கு நன்மை இருந்தால் அதுவே நமக்கு பண்மடங்கு நன்மை உண்டாகும்.


2.அடுத்து பூசணிக்காயை உடைத்ததும் அதை எடுத்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக தூக்கி போடுவதுதான் மனிதத்தன்மை. எப்பொழுதும் நம்மால் அடுத்தவர்களுக்கு தீஙாகுவராமல் எதை செய்தாலும் செய்ய வேண்டும்.

3. வியாபார ஸ்தலங்களுக்கும் நமது வீட்டுக்கும் ஸ்பெஷல் பரிகாரம்:-

அதாவது அமாவாசை முன்னால் இரவு பூசனிக்காயை ஓட்டைப்போட்டு அதில் வேரேதுவும் போடாமல் நவதாணியங்களை மட்டுமே போட்டு வீட்டிலோ அல்லது வியாபாரகூடங்களிலோ ஒரு மூளையில் வைத்துவிட வேண்டும் மறுநாள் சரியாக பகல் 12-மனிக்கு அமாவாசைஇருக்கவேண்டும் அந்த நேரத்தில் சுற்றி உடைத்து அதை எடுத்து ஓடும் நீரில் அல்லது கடலில் வீசவேண்டும் 1000 மடங்கு நன்மை உண்டாகும் தீமைகள் விலகும் நம்மை சுற்றி உள்ளவன் சரியில்லை என்றாலும் நம்மை விட்டு தானாக விலகிவிடுவான்

கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி

 **

தேவையான பொருள்கள்


முக்கிய பொருட்கள்


750 கிராம் தேவையான அளவு கோழி


பிரதான உணவு


4 Numbers நறுக்கிய வெங்காயம்


4 தேக்கரண்டி தேவையான அளவு

 மிளகாய் செதில்


1 கப் தேவையான அளவு கறிவேப்பிலை


1 தேக்கரண்டி தேவையான அளவு வினிகர்


3 தேக்கரண்டி தேவையான அளவு இஞ்சி


3 தேக்கரண்டி தேவையான அளவு பூடு


5 தேக்கரண்டி தேவையான அளவு 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


செய்முறை


🍔ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.


🍔எண்ணெய் சூடானதும் அதில், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


🍔2 நிமிடம் கழித்து வினிகர், பூண்டு, இஞ்சி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.


🍔பின்பு இதில் சிக்கன், மிளகாய் விதைகள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கிளறவும்.


🍔இதனை 8-10 நிமிடங்கள் சிக்கன் மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.


🍔இந்த சிக்கன் வறுவல் இன்னும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்க, இதில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கலாம்.


🍔10 நிமிடம் கழுத்து சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.


🍔வீடே மணக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி தயாராகிவிட்டது.


🍔இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரொட்டி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.

நெய் புலாவ் செய்வது எப்படி???

 **

தேவையானவை:


  பாசுமதி அரிசி - 2 கப், 


பெரிய வெங்காயம் - 3, 


பச்சை மிளகாய் - 4, 


உப்பு - தேவையான அளவு,


 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி.


தாளிக்க:  


நெய் - 4 டேபிள்ஸ்பூன், 


பிரிஞ்சி இலை - 1.


அரைக்க: 


பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல் (தனியாக அரைக்க வேண்டும்).


செய்முறை:


✌ பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழையை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நெய்யைக் காயவைத்து, பிரிஞ்சி இலை சேர்த்து, அரைத்த பட்டை-லவங்க விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுகளை சேர்த்துக் கிளறுங்கள். வதங்கியதும் வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். 


✌பிறகு, வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இந்த ‘நெய் புலவு’க்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடியை விட, குருமா மிகவும் நன்றாக இருக்கும்.

பெப்பர் இட்லி செய்வது எப்படி?

 **

நெய் மணக்கும் மிளகு இட்லி செய்வது எப்படி?

தேவையானவை:  


இட்லி மாவு - 2 கப்,


 மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.


தாளிக்க: 


 கடுகு - அரை டீஸ்பூன், 


நெய் - 2 டேபிள்ஸ்பூன், 


கறிவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை:


🔥  இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள்.


🔥 மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். 


🔥மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.

NRI மக்களே.. இதை மிஸ் பண்ணாம படிங்க..!

NRI என அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது, சொத்து வாங்குவது ஆகியவை குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு பின் அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் , இந்திய நிறுவனங்களில் தங்களுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மற்றவருக்கு பரிசளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

இந்திய நிறுவன பங்குகளை பரிசளிக்கலாமா?: 

உதாரணத்திற்கு, அருண் குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் செட்டிலாகி பணிபுரிந்து வருகிறார். அண்மையில் அவரது தந்தை இறப்புக்குப் பின், அவர் பெயரில் இருந்த சொத்து பிரிக்கப்பட்டு, அதன் மூலம் இந்திய நிறுவனங்களில் தந்தைக்கு இருந்த சொத்து, மகன் என்ற முறையில் அருண் குமாருக்கு கிடைத்திருக்கிறது. இதனை தனது மகளுக்கு பரிசாக இந்தியாவிலேயே இருக்கும் தனது சகோதரிக்கு வழங்க வேண்டும் என அருண்குமார் விரும்புகிறார். ஆனால் இதற்கு இந்திய சட்டம் அனுமதி கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

FEMA சட்டம் சொல்வது என்ன?: 

தந்தையின் சொத்து என்ற வகையில் அருண் குமார் தனது மகளுக்கு பங்குகளை வழங்க முடியும். இந்திய வருமான வரி சட்டத்தின் படி பங்குகளை மாற்றும் போது, அருண் குமாருக்கு மூலதன ஆதாயங்களில் (capital gains) இருந்து விலக்கு கிடைக்கும்.


அதே நேரத்தில் பங்குகளை பரிசாக பெறும் சகோதரிக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. இதன் மூலம் TDS எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரி பிடித்தமும் செய்யப்படாது. பரம்பரை வாரிசாக பங்குகளை பெற்றுள்ளதால் அந்திய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் திரும்ப அனுப்ப முடியாத பிரிவில் வைத்திருக்கும் பங்குகள் என இவை கருதப்படும். 

பங்குகளை பரிசாக வழங்க வழிமுறைகள்: 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடையில் FEMA-வின் கீழ் பங்குகளை பரிசாக வழங்க இரண்டு முறைகள் உள்ளன. 
1. நாடு திரும்பும் (repatriation) அடிப்படையில் வைத்திருக்கும் நன்கொடையாளருக்கு வழங்கப்படும் பரிசு 
2. நாடு திரும்பாத (non – repatriation) அடிப்படையில் வைத்திருக்கும் நன்கொடையாளருக்கு வழங்கப்படும் பரிசு நாடு திரும்பும் அடிப்படையிலான பரிசு: 

இந்திய நிறுவன பங்குகளை நாடு திரும்பும் அடிப்படையில் வைத்திருக்க விரும்பும் நன்கொடையாளருக்கு (அதாவது, நன்கொடையாளர் விற்பனைக்கு பிறகு, வரிக்கு பிந்தைய வருமானத்தை இந்தியாவுக்கு வெளியே முழுமையாக அனுப்ப முடியும்) அளிக்கப்பட்டால், நன்கொடையாளர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதலை பெற வேண்டும்.

வாழ்க்கை

*எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்...!*


*கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!!*


*உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்...!*


*கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்...!*


*சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே...!*


*பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்...!!*


*இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று...!!இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை...!!*


*உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்...!!*


*கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்...!!*


*மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பது பொறுத்தது.*


*வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.*


*தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.*


*கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான்.அதனதன் வலிமை அதனதன் உயரம்.*


*தோல்வி என்பது இழிவு அல்ல. தோல்வி வந்து விடும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள்.*


*அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல்...!*


*இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால், இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது...!!*


*தினம் தவறாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டே இருக்கும் உறவிடம் திடீரென எதையும் மறைத்துவிடவும் இயலாது. மறைக்க மனம் முன்வருவதும் கிடையாது....!!!*


*உங்களின் தோல்வி எங்கே ஒளிந்து உள்ளது தெரியுமா..?பிரச்சனைகள் வரும் போது அல்ல. பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும் போது...!!*


*சுயக்கட்டுப்பாடுடையமனிதன் பலமடங்கு சக்தியைப்பெறுவான்.*


*என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில்..இது வரை யாருடனும் போட்டி போடவில்லை.*


*வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை.. உள்ளம் தான் தேவை..!*


*நீங்கள் திறமையானவன் என்பது புதிதல்ல.. அதை நீங்கள் இவ்வளவு காலம் மறந்திருந்தீர்கள்..*


*விழித்திருங்கள்..எழுந்திருங்கள்..வென்றிடுங்கள்..!!*


*வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமெனில் கொஞ்சம் ஞாபகமறதியும்  வேண்டும்.*

 

*இல்லையேனில் சில நினைவுகள் நம்மை கொன்றுவிடும்.*


*கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் உங்க கையில் தான் இருக்கு..!!*


 *சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது..!*


*பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது..!!*

சிந்தனைத் துளிகள் - 17052024

படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும் 

ரசிக்கத் தெரியாதவர்

கையில் இருக்கும் வாழ்க்கையும் 

வீணாகி தான் விடுகிறது.!


வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் 

சிலரிடமிருந்து விலகி  

இருப்பதும் நல்லது.

அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,

நம் தன்மானத்திற்காக.!!


யாரை பாவம் என்று நினைத்தோமோ 

அவர்கள் தான் 

நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து விடுகின்றனர்.!!!


அன்பையும் அறிவுரையையும் 

அதைப் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே 

கொடுக்கப்படவேண்டும்...

இல்லையென்றால் ஏமாற்றங்களும், அவமானங்களும் தான் மிஞ்சும்.!


பக்கபலமாக இருக்கவேண்டிய உறவுகள் எல்லாம் 

தவறான புரிதல்களால் 

நம்மை பலவீனப்படுத்தியே செல்கிறார்கள்...

வார்த்தையால் சிலர்...

செய்கையால் சிலர்...

மெளனத்தால் சிலர்.!!


புயலும்,கோபமும் ஒன்றுதான்...

ஏனெனில் வீசும்போதும்...

பேசும்போதும்...

ஒன்றும் தெரியாது...

அடங்கிய பிறகு தான்

தெரியும் அதன் சேதம் 

என்னவென்று.!!!


 

செய்தித் துளிகள் - 17.05.2024 (வெள்ளிக்கிழமை)

⛑️⛑️1.16 கோடி மொபைல் எண்களை சரிபார்க்க ஆசிரியர்களுக்கு உத்தரவு - OTP எண்களை தெரிவிக்க பெற்றோர் மறுப்பதால் இப்பணி ஆசிரியர்களுக்கு சவாலாக உள்ளது.                                                                              

⛑️⛑️SSLC துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் - தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் பட்டியல் வெளியீடு.

⛑️⛑️Teacher Transfer counseling application Approval செய்வது குறித்து State EMIS Team வழிகாட்டுதல் வெளியீடு.


*முக்கிய செய்திகள்*

 

⛑️⛑️தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

⛑️⛑️தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் நிறைவேற்றியது திமுக அரசு; முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம்

⛑️⛑️அண்டை மாநிலமான கேரளாவில் வரும் 31ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு; இயல்பைவிட கூடுதல் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

⛑️⛑️சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து

ரூ. 92.50க்கு விற்பனையாகிறது.

⛑️⛑️பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மாநில மகளிர் ஆணையத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட 17 காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர், புகார் அளித்துள்ளனர். இப்புகார்கள் மீதான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளதாக தகவல்.

⛑️⛑️திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களில் டெங்குவுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்

⛑️⛑️கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.

⛑️⛑️போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்: முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்                                    ⛑️⛑️விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்.

⛑️⛑️சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை

⛑️⛑️ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி இன்று பிரச்சாரம்.

⛑️⛑️கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்: முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது.

⛑️⛑️கோவையில் ஜிபிஎஸ் வசதியுடன் நீலநிற டவுன் பேருந்து அறிமுகம்: பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

⛑️⛑️காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை.

⛑️⛑️போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிள

⛑️⛑️ வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி

⛑️⛑️நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி                                                                           🙏🙏

திரவ நைட்ரஜன் என்றால் என்ன?

அதை உண்டால் உங்கள் உடல் என்னவாகும்? நிபுணர்களின் விளக்கம்



திரவ நைட்ரஜன் என்றால் என்ன?

“திரவ நைட்ரஜன் என்பது தோராயமாக -196 டிகிரி செல்சியஸ் (-321 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இந்த மிகக் குறைந்த வெப்பநிலையால் தான், உணவுகளை உறைய வைக்க, கெட்டுப் போகாமல் பாதுகாக்க இதைப் பயன்படுத்துகிறார்கள்” என்கிறார் சென்னை கிறித்துவக் கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் ஞானமணி சிமியோன்.


தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவே உள்ளது. இதற்கு நிறமும் இல்லை, மணமும் இல்லை. இந்த வாயுவை, -150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிரையோஜெனிக் செயல்முறை மூலம் திரவமாக மாற்றுவார்கள். இந்த திரவ நைட்ரஜன் தீப்பற்றக்கூடிய ஒரு ரசாயனம் அல்ல. காரணம் இயற்கையாகவே நைட்ரஜன் எதனுடனும் எதிர்வினை புரியாது, இதில் நச்சுத்தன்மையும் இல்லை.”


“ஆனால் நைட்ரஜன் அதன் முழு திரவ நிலையில் இருக்கும்போது, மிகவும் கவனமாக கையாள வேண்டும். காரணம் -196 டிகிரி செல்சியஸ் என்பது மிகவும் குறைவான ஒரு வெப்பநிலை. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் திரவ நைட்ரஜனை கையாண்டால் அது உடலின் செல்களை உறைந்துப் போகச் செய்யும்.” என்றார்.


அதேவேளையில் திரவ நைட்ரஜன் என்பது சாதாரண வெப்பநிலையில் எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு திரவம் தான் என்கிறார் அவர்.


“அவ்வாறு ஆவியாகி வரும் புகையைத் தான் நாம் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளில் பார்க்கிறோம். அதை அதிகமாக சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் உட்பட சில பிரச்னைகள் ஏற்படும், காரணம் நைட்ரஜன் வாயு ஒரு இடத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை உடனடியாக வெளியேற்றிவிடும்” என்றார் பேராசிரியர் ஞானமணி.

திரவ நைட்ரஜன் எதற்கு பயன்படுகிறது?

“இதன் மிகக் குறைவான வெப்பநிலை காரணமாக பல வருடங்களாக உணவுப் பதப்படுத்தல் துறையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக இறைச்சி வகைகள், மீன் வகைகளை பதப்படுத்த இது பயன்படுகிறது” என்கிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.


“உதாரணமாக பெருமளவு மீன்களைப் பிடித்தவுடன் அல்லது இறைச்சியை தோல் நீக்கி வெட்டியவுடன் அதை உடனடியாக பதப்படுத்த இதைப் பயன்படுத்துவார்கள். இதுவும் சட்டென்று இறைச்சியை உறைய வைத்துவிடும். -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் தான் உணவில் இருக்கும் நுண்ணுயிரிகள் உறைந்த நிலையில் இருக்கும், எனவே உணவும் கெட்டுப்போகாது.”


“அப்படி பயன்படுத்தும்போது கூட அரசு கூறியுள்ள விதிகளின் படி தான் திரவ நைட்ரஜன் உபயோகிக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், இவ்வாறு உறைய வைக்கப்பட்ட உணவுகளை உடனடியாக சமைக்கக்கூடாது, சிறிது நேரம் சாதாரண வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.”


“காரணம், அதிலிருக்கும் திரவ நைட்ரஜன் முழுவதும் ஆவியாகிவிடும் என்பதால் தான். பிறகு தான் அதை உயர் வெப்பத்தில் சமைத்து உண்ண வேண்டும். இப்படியிருக்க நேரடியாக திரவ நைட்ரஜனை ஒருபோதும் உணவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது” என்கிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.

திரவ நைட்ரஜன் உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?

வெளிநாடுகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஓரளவு உண்டு என்றாலும், இந்தியாவில் அவ்வகை உணவுகள் அல்லது பானங்களின் அழகு மற்றும் ஈர்க்கும் தன்மை, அதிலிருக்கும் ஆபத்தை மறைத்துவிடுகிறது என்கிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.


“சிறிது காலத்திற்கு முன்பு ‘ஸ்மோக் பீடா’ என்ற ஒன்று பிரபலமானது. பார்த்தவுடன் புரிந்துவிட்டது அதில் திரவ நைட்ரஜன் உள்ளது என. அதை வாயில் போட்டு புகை விடுவது ஒரு கேளிக்கையாக பார்க்கப்பட்டது. எவ்வளவு ஆபத்தான விஷயங்களை நாம் விளையாட்டாக கடந்து போகிறோம் என வருத்தமாக இருந்தது."


"ஏனென்றால், அதிகமான திரவ நைட்ரஜன் உடலின் உள்ளே செல்லும்போது, அது உங்கள் உடலின் செல்களை உறைந்துபோகச் செய்யும். ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரிந்தால் மட்டுமே நடக்க வேண்டிய ஒன்று, உயிருடன் இருக்கும்போதே நடந்தால் என்னவாகும். அதைத் தான் திரவ நைட்ரஜன் செய்கிறது” என்கிறார்.


தொடர்ந்து பேசிய அவர், “திரவ நைட்ரஜன் முக்கியமாக வயிறு சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த திரவம் வயிற்றில் துளை கூட போட்டுவிடும், குடலையும் இது பாதிக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.”


“செல்கள் உறைந்துவிடுவதால், நம் உடலில் வழக்கமாக நடக்கும் செயல்கள் அனைத்தும் பாதிக்கப்படும். திரவமாக மட்டுமல்லாது, அது ஆவியாகும் போது அதை சுவாசிப்பதும் உடலுக்கு நல்லதல்ல. காரணம், இந்த நைட்ரஜன் வாயு என்பது நிறமில்லாத, மணம் இல்லாத வாயு.”


“வேறேதும் வாயுவாக இருந்தால், அதற்கு ஒரு மணம் இருக்கும். எனவே அதைச் சுவாசிக்கும்போது ஒரு அசௌகரியம் ஏற்பட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவோம். ஆனால் இந்த வாயுவை சுவாசித்து, மூச்சுப் பிரச்னை ஏற்படும்போது மட்டும் தான் ஏதோ சிக்கல் என்று புரியும்.”


“திரவ நைட்ரஜன் முழுவதுமாக ஆவியாகிவிட்டால், அந்த உணவை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மக்கள் உண்பதே, அந்த வெள்ளைப் புகையின் அழகுக்காக தானே. அதன் ஆபத்தை மக்கள் உணர வேண்டும். எனவே இது குறித்து கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நல்லது தான்” என்று கூறினார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.

திரவ நைட்ரஜன் உணவுகளுக்கான கட்டுப்பாடுகள்

“திரவ நைட்ரஜன் ஒரு உணவே கிடையாது. இது ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உணவை பதப்படுத்த, பேக் செய்ய உபயோகப்படுத்தப்படும் ஒரு ரசாயனம். எனவே தான் திரவ நைட்ரஜன் கலந்த நேரடி உணவுப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளோம்” என உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளின் மோசமான விளைவுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வருவதால், உணவுப் பாதுகாப்பு துறையிலிருந்து எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சென்னையில் உள்ள உணவகங்களின் பட்டியலைத் தயார் செய்து வருகிறோம். விரைவில் அங்கெல்லாம் சோதனை நடத்த உள்ளோம்."

"நிறைய பார்கள், பார்ட்டி ஹால்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் என தகவல்கள் வந்துள்ளன. அங்கும் சோதனை நடத்தப்படும். உணவுப் பாதுகாப்புத்துறையின் விதிகளின் படி, இது உணவுப் பொருளே கிடையாது. எனவே கண்டிப்பாக நேரடி உணவுகளோடு திரவ நைட்ரஜன் எடுத்துக்கொள்ளக்கூடாது."

"உணவுகளை பதப்படுத்த, பேக் செய்ய மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் சதீஷ்குமார்.

Thursday, May 16, 2024

செய்தித் துளிகள் - 16.05.2024 (வியாழக்கிழமை)


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) சார்ந்த முன் மொழிவுகளை இனி IFHRMS வாயிலாக அனுப்ப வேண்டும் - கருவூலக் கணக்குத் துறை ஆணையர் உத்தரவு.

🍒🍒பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TNSED App யில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக DEE Proceedings வெளியீடு.

🍒🍒அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கு இரண்டாம் கட்ட 50% மானியம் விடுவித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஓய்வூதியர்கள் வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்.

🍒🍒CBSE 10th & 12th - ஐந்துக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வு எழுதி இருந்தால் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்து பாடங்களை மட்டும் மொத்த மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளலாம். CBSE Board அறிவிப்பு

🍒🍒எமிஸ்' தளத்தில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு 13,500 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

🍒🍒ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஊக்க ஊதிய வழக்கு சார்ந்து - 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றிருந்தாலும் -   LUPMSUM தொகை  மட்டுமே பெற முடியும் என தமிழக அரசு  சார்பாக - நீதிமன்ற வாதம் & தீர்ப்புகளை சுட்டிக் காட்டி -  பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை.

🍒🍒EMIS பணிகள் - ஜீன்‌ மாதம் முதல் முதல் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்வர்.

👉நடுநிலைப்பள்ளிகளில் 8500 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒப்பந்த அடிப்படையில் கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுடன் ஆய்வக உதவியாளர்கள் EMIS பணிகளை மேற்கொள்வார்கள்                                                👉உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் 6,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

👉உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் EMISக்கான தரவு நுழைவுப் பணியை மேற்கொள்வார்கள்.

👉இவர்களுக்கு தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகள் ஒதுக்கப்படும்.அதில் ஆரம்பப் பள்ளிகளும் அடங்கும்.

👉இவர்கள் பள்ளிகளின் EMIS பணியை Consideration.

👉ஜூன் முதல் வாரத்தில் இருந்து இப்பணிகள் செயல்படத் தொடங்கும்.                                             🍒🍒ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவு

🍒🍒9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம்.                                                            🍒🍒தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

🍒🍒கனமழை எச்சரிக்கை

26 மாவட்ட கலெக்டர்களுக்கு  பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம்

கனமழையை எதிர் கொள்ள முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.

ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனடியாக  தகவல் அளிக்க உத்தரவு.

🍒🍒சிங்கப்பூர் நாட்டின் 4வது பிரதமராக பதவியேற்றார் திரு.லாரன்ஸ் வோங்

🍒🍒தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடர தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அனுமதி.

🍒🍒கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி இந்திரா, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதியுடன் 100 ஆண்டு தொடர்பு:

சோனியாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி உருக்கம்

🍒🍒கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.

🍒🍒CSK-RCB இடையேயான நாக் அவுட் ஐபிஎல் போட்டி, வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு வில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும்.

ஏனெனில், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால், இன்னும் 1 போட்டியில் வென்றால் கூட ஹைதராபாத் அணியும் தங்களது ப்ளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹மஃபா  பாண்டியராஜன்  அறிவிப்பு


👉இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…

.

Admission Help line – 9150330111

அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்

.

தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.

.

170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

BE சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே

தொடர்புக்கு : 9150330111

.

1. B.E Mechanical Engineering,

2. B.E Electrical & Electronics Engineering

3. B.E Electronics & Communication Engineering

4. B.E Computer Science Engineering.

5. B.E Civil Engineering.

6. B.E Aeronautical Engineering

7. B.E Mechanical & Automation Engineering

8. B.E Electronic & Instrumentation Engineering

9. B.E Mechanical Engineering (Sandwich)

10. B.E Robotics

11. B.Tech Information Technology

.

இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups www.2mconstructions.in

.

Universe கல்வி அறக்கட்டளை

முன்பதிவிற்கு அழைக்கவும்,  📞 9150330111.

வினையகற்றி வெற்றி தரும் வைகாசி!

 **

நவ கோள்களின் நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரிய பகவான், தனது உச்ச வீடான மேஷராசியை விட்டு, சுக்கிரனின் வீடான ரிஷபராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே வைகாசி மாதம் எனவும் ஜேஷ்ட மாதம் எனவும் ஜோதிடக் கலை, போற்றிப் புகழ்கிறது. இதுவரை சூரியன் நிலைகொண்டிருந்த மேஷம், அவருக்கு உச்ச வீடாகும். ரிஷப ராசி அவருக்குப் பகை ராசியாகும்.வைகாசி மாதத்தின் தெய்வீகப் பெருமைகளைப் புராதன ஜோதிட நூல்கள் போற்றியுள்ளன. அவற்றை நாமும் அறிந்துகொண்டால், அளவற்ற நன்மைகளைப் பெறுவோமல்லவா? உத்தராயணக் காலத்தில், சூரியபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கும் இந்த வைகாசி மாதத்தை வஸந்தருது என ஆன்றோர்களும், சான்றோர்களும் காலங்காலமாகப் போற்றிவரும் இந்த வஸந்த காலத்தில்தான் வளங்கள் செழிக்கின்றன. மலர்கள் ஏராளமாக மலர்கின்றன. கனிகள் கனிகின்றன. வஸந்தருதுவின் பெருமைகளைப் பற்றி, கவி காளிதாஸன், தன் கவிதைகள் மூலம்


கொண்டாடி யிருக்கின்றார்


வைகாசி 6 (19-5-2024) : நவக்கிரகங்களில், வித்யாகாரகர் எனப் போற்றப்படும், புதனின் அவதார தினம் இன்று. கல்வி, மருத்துவம், விவேகம், ஆகியவற்றிற்கு அதிபதியான புதனை இன்று பூஜிப்பதால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். காசித் திருத்தலத்தின், கங்கைக் கரையில், சிவபெருமானைப் பூஜித்து, நவக்கிரகங்களில் ஒருவராகப் பேறு பெற்றவர் புதன்! ஜாதகத்தில் புதன் சுப பலம் பெற்றிருந்தால், பேசும் திறன், கல்வி உயர்வு, விவேகம், நிர்வாகத் திறமை, கணிதத்தில் ஈடுபாடு ஆகிய பேறுகள் கிட்டும்.இன்று, குறிப்பாக, மாணவ – மாணவியர் நவக்கிரக சந்நதிக்குச் சென்று, புதனுக்கு ெநய் தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், கல்வியில் உயர்ந்து விளங்குவர்.மேலும், இன்று கிடைத்தற்கரிய மோகினி ஏகாதசி. இன்று முழுவதும் உணவேதும் உண்ணாமல், நிர்ஜலமாய் இருந்து, மந் நாராயணனை துளசி இதழ்களால் அர்ச்சித்து வந்தால், அவர்கள் வீட்டில், சக்கரத்தாழ்வார் எழுந்தருளி சகல ேக்ஷமங்களையும் தந்தருளிக் காத்தருள்வார்.


வைகாசி 8 (21-5-2024) : பராசக்தியின் தசாவதாரங்களில் ஆறாவது அவதாரமாகியதும், அரசாங்க ஆதரவு, பதவி, புகழ், பேச்சில் கள்ளம் – கபடம் நிறைந்த “புத்தி சாதுர்யம் – திறமை” மிக்கவர்களாகவும், அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், ஒருவரின் ஜாதகத்தில், “ராஜதந்திரம்” போன்ற குணங்களுக்கு காரகத்துவம் வாய்ந்த ராகுபகவானின் ஆதிக்கம் மிகுந்தவர்களாகவும் சிறந்து விளங்கச் செய்ய உதவிடும் சின்ன மஸ்தா ஜெயந்தி வழிபாடு இன்று!தெய்வக்குழந்தை முருகப்பெருமான் அவதரித்த மாதமும் இந்த வைகாசிதான்!! திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் அம்மையப்பனின் நெற்றிக்கண்ணிலிருந்து தெறித்த ஓர் அக்னிப் பொறி, திருக்கயிலையின் மாந்தாதா சிகரத்திலுள்ள சரவணப் பொய்கையில் ஆறு துளிகளாக விழுந்தது. அடுத்த விநாடியே, அந்த ஆறு துளிகளும் ஆறு குழந்தைகளாக உருமாறின. இதனைக் கண்ட கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை வாரியெடுத்து அணைத்து, சீராட்டி, தாலாட்டி, பாலூட்டி மகிழ்ந்தனர். ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும், அன்னையான, அம்பிகை பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையுடன் வாரியெடுத்து, அணைத்தவுடன் ஒரே குழந்தையாக மாறி குமரப் பெருமானாகக் கிடைக்கும் பேறுபெற்றன அனைத்துலகங்களும்!! ஆறுமுகன், ஷண்முகன், முருகன், வடிவேலன், குமரன், கந்தன், குருபரன் என எண்ணற்ற திருநாமங்களினால், குழந்தை இன்றும் பூஜிக்கப்பட்டு வருகின்றான். இத்தகைய தெய்வீகப் பெருமை பெற்ற முருகப் பெருமானின் மீது இயற்றப்பட்ட “கந்தர் சஷ்டி கவசம்” எத்தகைய கிரக தோஷத்தையும் சூரியனைக் கண்ட பனியென உடனுக்குடன் போக்கும் சக்திவாய்ந்தது. அழகன், குமரனுக்கு, தமிழகத்தில், ஏராளமான, பிரசித்திப் பெற்ற திருக்கோயில்கள் உள்ளன. அசுரர் சூரபத்மனுடன் போர்புரிவதற்காக மிகப் பெரிய சேனையுடன் சென்ற முருகப் பெருமான், ஆறு இடங்களில் படைகளுடன் தங்கினான். அவ்விடங்களே இப்போது “அறுபடை வீடுகள்” எனப் பிரசித்திப் பெற்றுள்ளன.


பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களே அறுபடை வீடுகளெனப் பூஜிக்கப்படுகின்றன.இத்தகைய பெருமை பெற்ற புண்ணிய தினமே வைகாசி 9-ம் தேதி (மே 22-5-2024) ஆகும். மகத்தான புண்ணிய தினத்தில், பக்தியுடன் முருகப் பெருமானைப் பூஜித்தால், அனைத்துத் துன்பங்களும் பறந்தோடும்! குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். மேலும், இன்றைய விசேஷம்  நம்மாழ்வார் திருநட்சத்திரம்!


நரசிம்ம ஜெயந்தி!


இன்று காலை 8.20 மணி வரை ஸ்வாதி நட்சத்திரம் இருப்பதால்,  நரசிம்ம ஜெயந்தியும் இன்றே கொண்டாடப்படுகிறது. பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக பகவான்,மந் நாராயணன் நரசிம்மராக அவதரித்த புண்ணிய தினமும் இன்று! இன்று மாலை கோலமிட்டு, நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்த பானகம், பாசிப்பருப்பு தேங்காய்-உப்பு கலந்த கோசுமல்லி, தயிர்


சாதம் அமுது (நைவேத்த்ியம்) செய்வித்து, பூஜித்தால், அனைத்து துன்பங்களும், தீயினிற் தூசாவது திண்ணம். குடும்பத்தில், சுபிட்சம் பெருகும். உங்களுக்கு எதிராக யாரேனும் செய்வினை, பில்லிசூனியம் செய்விக்க யத்தனித்தால், அவைகளினால் உங்களுக்கு யாதொரு துன்பமும் நேரா வண்ணம் காத்து ரட்சிப்பார்,  லட்சுமி நரசிம்மர்! மேலும், “உக்ரம், வீரம், மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும், ம்ருத்யும் நமாம்யஹம்” எனும் மகா மந்திரத்தை பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில் 9 முறை அல்லது 27 முறை முடிந்தால் 108 முறை சொன்னால், எதிரிகள் பயமற்று, எங்கும், எதிலும் வெற்றிமேல் வெற்றி உங்களை வந்தடையும்.


வைகாசி 11 (24-5-2024) : காஞ்சி  மகா பெரியவாள் அவதார தினம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமெனப் பூஜிக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவாள் எனும் தெய்வீக ரத்தினம் நமக்குக் கிடைத்த மகத்தான புண்ணிய தினம். காஞ்சி திருத்தலம் சென்று, அவரது பிருந்தாவனத்தைத் தரிசிப்பது, பரம புண்ணியத்தைத் தரும்.மேலும், இன்று கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் ஓங்கிடவும், பிணக்கு – மனக்கசப்பு காரணமாக ெநடுங்காலமாகப் பிரிந்திருந்த தம்பதியினரை ஒன்றுசேர்க்கச் செய்யும் அர்த்தநாரீஸ்வரர் விரதம். வீட்டில் பதினாறு வகைச் செல்வங்களும் குறைவின்றி பெற்று, மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வாழ்ந்திட சம்பத் கௌரி விரதம் அனுஷ்டிக்க உகந்த தினமும் இன்றுதான். மேலும், இன்று பௌர்ணமி தினமும்கூட! ஜாதகத்தில் மனோகாரகரான சந்திர பகவான்,பௌர்ணமிக் காலங்களில் மனித மனங்களை அதிக அளவில் அலைபாயச் செய்திடுவார்; விவேகமின்மையாலும், தன் மனம் போனபோக்கில் செயல்படும் தன்மை அதிகரிக்கும். மனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் விரதமே பௌர்ணமி விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, பகவான்,நாராயணனே, சகல சம்பத்துக்களையும் தந்து, காத்தருள்வதாக, சத்தியப்ரமாணமே செய்து கொடுத்திருப்பதாலே இவ்விரதம் சத்தியநாராயண பூஜையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.வைகாசி 13 (26-5-2024) : திருஞான சம்பந்தர் பெருமானின் குருபூஜை.


புத்த பூர்ணிமா- 23-5-2024


அனைத்து ஜீவன்களிடத்தும், அன்பு காட்ட வேண்டும். அசைவம் கண்டிப்பாகக் கூடாது. மிருக வதை கொடிய பாபம். மனித வாழ்க்கையில் தூய்மை, ஒழுக்கம், பிற ஜீவராசிகளின்மீது அன்பு, ஆசையே துன்பத்திற்குக் காரணம் ஆகியவற்றைப் போதித்த, கௌதம புத்தர் அவதரித்த புனித தினமும் இன்று தான்!ராஜ வம்சத்தில் பிறந்த சித்தார்த்தரின் தாய், ராணி மாயாதேவி, தீவிர சிவ பக்தை! திருக்கயிலாயத்தை அடுத்த புண்ணிய ஏரியான மானஸ ஸரஸின் அருகிலுள்ள, ஜுகு என்ற இடத்தில் சிவபெருமானைக் குறித்து கடும் தவமியற்றி, அதன் பயனாக அவதரித்தவரே, கௌதம புத்தர்! நோய்கள், வறுமை, துன்பங்கள் அனைத்திற்கும் மக்கள் செய்யும் பாபங்களே காரணமாகும் என்பதை மக்களிடையே உபதேசம் செய்து, மக்களை நல்வழி செலுத்துவதற்காக, தனது அரச வாழ்க்கையைத் துறந்த அவதாரப் புருஷரான கௌதம புத்தர் அவதரித்த தினமாகிய இன்று, அவரது உபதேசங்களை உணர்ந்து, முக்கியமாக, “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்பதை உணர்ந்து, நேர்மையான வழியை நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், கடைப்பிடிக்க வேண்டிய மனவுறுதியை எடுத்துக்கொள்ளவேண்டிய மகத்தான புண்ணிய தினமான இன்று முதல், அசைவ உணவைத் தவிர்த்தல், பிற உயர்களிடத்தில் ஜீவகாருண்யத்துடன் வாழ்வது, அனைத்துத் துன்பங்களையும் அகற்றும்.


கங்கோற்பத்தி!


ஸகர மன்னன் செய்த மிகப் பெரிய அஸ்வமேத யாகத்தில் தடைகள் ஏற்பட்டு, அவருடைய புத்திரர்கள் அனைவரும், கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலானபோது, அவர்கள் நற்கதியடைவதற்காக, மன்னன் பாகீரதன் கடுந்தவமியற்றி, அதன் பயனாக, தேவகங்கை பூவுலகிற்குக் கங்காநதியாக எழுந்தருளியதும் இம்மாதத்தில்தான்! இதையே வட இந்தியாவில் வைகாசி 25-ம் (7-6-2024) தேதியிலிருந்து “கங்கா தசரா” என்று 10 நாட்கள் கங்கையில் புனித நீராடிக் கொண்டாடுகிறார்கள். அனைத்துப் பாபங்களையும் போக்கவல்லது இது!!


வைகாசி 17 (30-5-2024) : காலபைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த சதாசிவாஷ்டமி. இந்நன்னாளில் சிவபெருமானுக்கு, அபிஷேகத்திற்கு, பால், கரும்புச்சாறு, தேன், இளநீர் போன்ற பொருட்களைக் கொடுத்து, தரிசித்துவிட்டு வந்தால், சிவபெருமானின் பரம கருணைக்குப் பாத்திரராவீர்கள். உங்கள் மனக் குழப்பம் நீங்கும். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் ஓங்கும். வைகாசி 25 (7-6-2024): வீட்டில் யாரேனும், நெடுநாட்களாக நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால், அந்நோயிலிருந்து விடுபட்டு, நல்ல தேக -ஆரோக்கியம் பெற்றிட உதவும் புன்னாக கௌரி விரதம், இன்று.


வைகாசி 27 (9-6-2024) ஞாயிற்றுக்கிழமை: ரம்பா திருதீயை. இன்று அம்பிகை கௌரியை பக்தியுடன் பூஜைசெய்தால், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள திருமணத் தடைகள் விலகி, விவாகம் நடைபெறும்.வைகாசி 32 (14-6-2024) வெள்ளிக்கிழமை: தூமாவதி ஜெயந்தி பராசக்தியின் தசாவதாரங்களில் ஏழாவது அவதா


ரமாகிய இவ்வடிவம், வேதவேதாந்த ஞானத்திற்கும், தீர்க்கமுடியாத பிரச்னைகளையும் எவ்வித சிரமமுமின்றி தீர்க்கச்ெசய்ய உதவும் நுட்பமான அறிவிற்கு ஆதிபத்தியம் கொண்டவரும், மோட்சத்திற்குக் காரகத்துவம் வாய்ந்தவருமான கேது பகவானின் தோஷங்களைப் போக்குபவதாகவும் அமைந்துள்ளது இவ்விரதம்.