Saturday, May 18, 2024

இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

**

வாதம் தானே வயிற்றில் இருந்து தோன்றி பலவீனமான இடங்களில் திரிந்து வலியை உண்டு பண்ணும்.. தனக்கு வரும் நோய்களை இது குணமாகாது இது முற்றிவிடும் என கற்பனை தானே நாட்பட்ட நோய்களாக மாற்றிவிடுகிறது.. எனது தனித்துவமான நோய்க்கு தனித்தன்மையான மருந்து மருத்துவம் என தேடி தேடியே நோய் முற்றி விடுகிறது பலருக்கு.. எளிமையான மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் மக்கள் கண்டு கொள்வதில்லை..

நாள்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட்ட இந்த பெண்மணிக்கு சொன்ன வீட்டு வைத்தியம் 


 🔹 *விளக்கெண்ணெய்- 10மி*

 🔹 *வெள்ளைப் பூண்டு- 1பல்  நசுக்கியது*

🔹 *வறுத்த பெருங்காயம்- ½சிட்டிகை*


 இதை ஒன்றாக கலந்து இரவு எட்டு மணிக்கு தயார் செய்து வைத்து விட வேண்டும்.. 


காலை எழுந்தவுடன் 7:00 மணிக்குள் இதை குடிக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்துக் கொள்ளவும்.. அந்த நாள் இரண்டு மூன்று தடவை மலம் போகும்..( அன்றைய தினம் அசைவ உணவு எண்ணெயில் பொரித்த உணவு பேக்கரி உணவு தவிர்க்க வேண்டும்) கூடவே திரிந்த காற்று வாதம் எல்லாம் வெளியேறி உடல் வலி இடுப்பு வலி குணமாகும்...

No comments:

Post a Comment