வாழ்க்கையில் சில
உறவுகள் யோசித்து பேச வைக்கும்.
சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்.
சில உறவுகள் பேசவே
யோசிக்கும்.!
நமக்கு பிடித்தவர்களுக்கு வலிக்கும் என்று
நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்துப் போகிறோம்.
ஆனால் அவர்கள் நமக்கும் வலிக்கும் என்பதை
எத்தனை நாட்கள் ஆனாலும் உணர்வதே இல்லை.!!
யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாத
இரண்டு விஷயங்கள்
ஒன்று பாசம்
மற்றொன்று பணம்
இவை இரண்டுமே நம்மை
மிக மிக அசிங்கப்படுத்தும்.!!!
நமக்கு உரிமை உள்ளவர்களிடம்,
உரிமையாக கேட்கப்படும்
சில கேள்விகள் கூட அவர்களுக்கு
சண்டையாக தெரிகிறது என்றால்
நாம் அமைதியாக இருப்பது தான் நல்லது.!
வெளிப்படையாக இருப்பவர்களை
விட வேஷம் போடுறவங்க
இனிப்பாக பேசும் நடிப்பான பேச்சுக்குத் தான்
இந்த உலகத்தில் மதிப்பு அதிகமாகும்.!!
எல்லாம் இருந்தும் எதுவுமில்லை...
எல்லோரும் இருந்தும் நமக்காக யாரும்
இல்லை என யோசிக்க வைக்கிறது
வாழ்க்கை சில நேரங்களில்.!!!
No comments:
Post a Comment