*!*
வாடிக்கையாளர்:
சார் பணம் எடுக்கணும்
வங்கி ஊழியர்:
ஏடிஎம்மில் போய் எடுத்துக்கனும் இங்கே தர மாட்டோம்....
வாடிக்கையாளர்:
சார் பணம் கட்டணும்
வங்கி ஊழியர்:
வெளிய போய்ட்டு டெப்பாஸிட் மெஷின் இருக்கு அதில் கட்டுங்க சார்.
வாடிக்கையாளர்:
சார் பாஸ்புக் ஆவது என்ட்ரி போட்டுக் கொடுங்க
வங்கி ஊழியர்:
அதோ இருக்கு பாருங்க பாஸ்புக் என்ட்ரி மிஷின் அதுல போய் போட்டுக்கோங்க
வாடிக்கையாளர்:
சார் லோன் வேணும்:
வங்கி ஊழியர்:
சார் லோன் தர நாங்க ஏஜென்ட் நியமனம் பண்ணியிருக்கோம் முன்னாடி அவங்க கிட்ட போய் ஆலோசனை வாங்கிட்டு வாங்க.
கடுப்பாகிப் போன வாடிக்கையாளர்
நீங்க எல்லாம் எதுக்குய்யா சம்பளம் வாங்கிட்டு இங்க இருக்கீங்க எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு அதை வேடிக்கை பார்க்க தான் நீங்க இருக்கீங்களா எனக்கு மிஷினில் பணம் கட்ட தெரியாது இப்ப எப்படி கட்டுறது...
வங்கி ஊழியர்
சார் வெளியே செக்யூரிட்டி இருக்கிறார் அவர் சொல்லித் தருவார் நீங்க போய் அவர்கிட்ட கத்துக்கங்க...
வாடிக்கையாளர்:
அப்படின்னா உங்க ஒட்டு மொத்த வேலையும் ஒரு செக்யூரிட்டி தான் பார்க்கிறார் அப்படித்தானே.....
இதுதான் இன்றைய நிலை நிஜமா?
No comments:
Post a Comment