Tuesday, May 21, 2024

குதிகால் வலி, வாதம் ஒரு நொடியில் நீங்க பாட்டி வைத்தியம்..!*.

குதிகால் வலி சிலருக்கு பிற மருந்துகளின் பக்க விளைவாக இருக்கலாம். ஆனால் சில இயற்கை வைத்தியங்களை வைத்து குதிகால் வலியை நொடியில் போக்கலாம். அதை தெரிந்து கொண்டு செயல்படுத்த உங்களுக்கு சில வீட்டுப்பொருள்கள் போதும். 


வீட்டில் உள்ள அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் வெந்நீரை ஊற்றி வையுங்கள். முன்னதாக பாகற்காயை வட்டமாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த நறுக்கிய பாகற்காயை வெந்நீரில் போட்டுவிடுங்கள். இதனுடன் ஒரு கையளவு கல் உப்பை போட்டு கொள்ளுங்கள். உப்பு நல்ல கிருமிநாசினியாக செயல்படும். ஆனால் வெந்நீர் ஆறும் முன் உப்பை போட்டுவிட வேண்டும். ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். 


சூடான வெந்நீர் என்தால் பாகற்காயில் இருக்கும் கசப்பு முற்றிலும் இறங்கிவிடும். அதன் பின் கால் பொறுத்து கொள்ளும் அளவு வெந்நீரின் சூடு இருக்கும்போது வலி கொண்ட இரண்டு பாதங்களையும் அதில் வைக்கவும். முதலில் பாதங்களுக்கு சூடு தெரியும். பின்னர் பழகிவிடும். இப்படியே 10 நிமிடங்கள் கால்களை தண்ணீரில் வைத்து கொள்ள வேண்டும். 


பாகற்காய் நீரில் கால்களை வைத்து வெளியே எடுத்த பின் அப்படியே முடிந்துவிடாது. இரண்டு துளிகள் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு தூங்க சென்றால் தூக்கமும் நன்றாக வரும். இப்படியே 2 அல்லது 3 நாள்கள் செய்து வந்தால் வலி படிப்படியாக குறையும். குதிகால் வலியில் மாத்திரை இல்லாமல் விடுதலை கிடைக்கும். 


நாம் பயன்படுத்தும் பாகற்காயில் இருக்கும் கசப்புத் தன்மை தான் பாதங்களில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். இந்த மசாஜ் செய்யும்போது பாதங்களில் இருக்கும் எரிச்சல், அவசியமில்லாத வாத நீர், உப்பு நீர் எல்லாம் குறைவதோடு இல்லாமல், குதிகாலில் உள்ள வலி, எரிச்சல் சுத்தமாக குறைந்துவிடும்.

No comments:

Post a Comment