Friday, May 17, 2024

வாழ்க்கை

*எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்...!*


*கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!!*


*உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்...!*


*கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்...!*


*சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே...!*


*பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்...!!*


*இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று...!!இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை...!!*


*உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்...!!*


*கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்...!!*


*மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பது பொறுத்தது.*


*வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.*


*தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.*


*கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான்.அதனதன் வலிமை அதனதன் உயரம்.*


*தோல்வி என்பது இழிவு அல்ல. தோல்வி வந்து விடும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள்.*


*அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல்...!*


*இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால், இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது...!!*


*தினம் தவறாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டே இருக்கும் உறவிடம் திடீரென எதையும் மறைத்துவிடவும் இயலாது. மறைக்க மனம் முன்வருவதும் கிடையாது....!!!*


*உங்களின் தோல்வி எங்கே ஒளிந்து உள்ளது தெரியுமா..?பிரச்சனைகள் வரும் போது அல்ல. பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும் போது...!!*


*சுயக்கட்டுப்பாடுடையமனிதன் பலமடங்கு சக்தியைப்பெறுவான்.*


*என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில்..இது வரை யாருடனும் போட்டி போடவில்லை.*


*வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை.. உள்ளம் தான் தேவை..!*


*நீங்கள் திறமையானவன் என்பது புதிதல்ல.. அதை நீங்கள் இவ்வளவு காலம் மறந்திருந்தீர்கள்..*


*விழித்திருங்கள்..எழுந்திருங்கள்..வென்றிடுங்கள்..!!*


*வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமெனில் கொஞ்சம் ஞாபகமறதியும்  வேண்டும்.*

 

*இல்லையேனில் சில நினைவுகள் நம்மை கொன்றுவிடும்.*


*கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் உங்க கையில் தான் இருக்கு..!!*


 *சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது..!*


*பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது..!!*

No comments:

Post a Comment