Sunday, April 28, 2024

 *தினம் ஒரு மூலிகை*


 *கரு ஊமத்தை*  அகன்ற இலைகளையும் வாயாக என்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மலர்களையும் முள் நிறைந்த காயையும் உடைய குறும் செடி இதில் மூன்று வகை உண்டு. வெள்ளை மலர் மஞ்சள் மலர் கருஞ்சிவப்பு மலர் உண்டு இதில் கருஞ்சிவப்பு மலர் உடைய செடி கரு ஊமத்தை எனப்படும் கரு ஊமத்தையின் மருத்துவ பயன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் உடையது பொதுவாக நோய் தணிப்பானாகவும் சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் பயன்படுகிறது இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வாத வலி மூட்டு வீக்கம் வாயு கட்டிகள் அண்ட வாயு தாய்ப்பால் கட்டிக் கொண்டு வழித்தல் ஆகியவை தீரும் இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணையில் வதைக்கு நாய் கடி புண்ணில் கட்ட விரைந்து ஆறும் இலை சாறு மூன்று துளிகள் வெள்ளம் கலந்து மூன்று நாட்கள் கொடுக்க நஞ்சு தீரும் கடும் பத்தியம் பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாது சாப்பிடவும் ஊமத்தை பிஞ்சை உமிழ்நீரில் மையாய் அரைத்து தடவ புழுவெட்டு தீரும் நன்றி.

 நிம்மதி எங்கே இருக்கிறது...

பெரியவர் சொன்ன ரகசியம்...

ஒரு மனிதன்....

எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...

ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.

படுத்தால் தூக்கம் வரவில்லை... 

சிரமப்பட்டான்...

அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.

பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... 

அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... 

போய்ப் பாருங்கள்!"

ஆசிரமத்துக்குப் போனான்...

பெரியவரைப் பார்த்தான்.

ஐயா.... 

மனசுலே நிம்மதி இல்லே... 

படுத்தா தூங்க முடியலே!"

அவர் நிமிர்ந்து பார்த்தார்...

தம்பி... 

உன் நிலைமை எனக்குப் புரியுது... 

இப்படி வந்து உட்கார்!"

பிறகு அவர் சொன்னார்:

உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...

தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!

அது எப்படிங்க?

சொல்றேன்... 

அது மட்டுமல்ல... 

மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!

ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே!

புரியவைக்கிறேன்....

அதற்கு முன் ஆசரமத்தில்

விருந்து சாப்பிடு.

வயிறு நிறையச் சாப்பிட்டான்.

பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, 

இதில் படுத்துக்கொள் என்றார்.

படுத்துக் கொண்டான்...

பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...

கதை இதுதான்:

ரயில் புறப்படப் போகிறது... 

அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...

ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.

ரயில் புறப்பட்டது...

தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...

எதிரே இருந்தவர் கேட்கிறார்: 

"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?

இறக்கி வையேன்.

அவன் சொல்கிறான்:

"வேணாங்க! 

ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! 

என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'

பெரியவர் கதையை முடித்தார்.

படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.

ஏன் சிரிக்கிறே?

பைத்தியக்காரனா இருக்கானே...

ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?

அது அவனுக்கு தெரிய வில்லையே

யார் அவன்? இயல்பாக கேட்டான்

நீதான்!"

என்ன சொல்றீங்க?

பெரியவர் சொன்னார்:

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் 

பயணம் மாதிரிதான்...

பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்

நிம்மதியாக வாழமுடியாது.

தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!

அவனுக்கு தனது குறை மெல்ல

புரிய ஆரம்பித்தது...

சுகமாக தூக்கம் வந்தது.

தூங்க ஆரம்பித்து விட்டான்... 

கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.

"எழுந்திரு" என்றார்

எழுந்தான்!

"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார். 

தூக்கினான்...

அடுத்த கணம்"ஆ"வென்று 

அலறினான்.

தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது

ஐயா! என்ன இது?

உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... 

அப்படி இருந்தும் 

நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!

அது ... 

அது எனக்குத் தெரியாது...

பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... 

அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!

அவன் புறப்பட்டான்,, 

நன்றி பெரியவரே... 

நான் போய் வருகிறேன்!

நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?

புரிந்து கொண்டேன்!

என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.

அறிவின் வெளிச்சத்தால்

அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா.

முகநூலில் ரசித்தது.

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


28.04.2024(ஞாயிற்றுக்கிழமை)

*இன்று 11 வது பிறந்தநாள் காணும் எங்கள் ம.மகிழ்நன்  எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்......* *தங்களின் வாழ்த்தும் எங்களை உயர்த்தும்.....*


*சிந்தனை துளிகள்*


தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்

கொள்கிறோமோ...

அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும்,நிம்மதியும் கிடைக்கும்.!


இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது மிகவும் சுலபம்...

ஆனால் இழந்து துடிப்பவர்களுக்குத்தான் தெரியும்...

அது எவ்வளவு பெரிய

வலி என்று.!!


கெட்டவனை நம்புங்கள்.

அவன் என்றாவது ஒருநாள் நல்லவனாக 

வாய்ப்பு உண்டு.

ஆனால் நல்லவன் போல் நடிக்கும் கெட்டவனை ஒருபோதும் நம்பாதீர்கள்.

ஏனென்றால் அவன் இந்த ஜென்மத்தில் திருந்தவேமாட்டான்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*


 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்: 

👉அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

🌅🌅2024 மே மாதம் நடைபெறவுள்ள துறை தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை வெளியீடு.

🌅🌅தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகின்ற விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயில விண்ணப்ப அறிவிப்பு வெளியீடு.

🌅🌅மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு.

🌅🌅வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர் உள்ளனர்.

🌅🌅பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு.

🌅🌅 2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: CBSE ஆயத்தப் பணி தொடக்கம்.

🌅🌅1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு.

🌅🌅JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

🌅🌅குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4

உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

🌅🌅நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூட விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

🌅🌅சேலம் பெரியார் பல்கலை. மாணவர் சேர்க்கை தொடக்கம்!.

🌅🌅கல்லூரி இறுதி நாளில் பேராசிரியரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத மாணவன்

விருதுநகரில் கல்லூரி இறுதி நாளன்று தனது பேராசிரியரை பிரிய மனமின்றி மாணவர் ஒருவர் கதறி அழுதுள்ளார்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, மாணவன் கணேஷ்குமார், தனது பேராசிரியர் மகேஷ்வரனை பிரிய மனமின்றி, அவரை கட்டியணைத்து அழுதுள்ளார்.

அவரை, சக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, பேராசிரியரிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

🌅🌅"எங்களுக்கு கல்வி வேண்டும்;"

இலவச புடவை வேண்டாம்" கவனம் ஈர்த்த பழங்குடி பெண்களின் போராட்டம்...

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி பெண்களின் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

🌅🌅வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவை: 

பொதுவாக, போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் போகும்; அதனடிப்படையில் 1 கணக்கிட்டால், காஸாவில் இடிபாடுகளில் மறைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து முழுமையாக அகற்ற 14 ஆண்டுகள் ஆகும் 

-ஐ.நா. கண்ணிவெடி அகற்றல் நிபுணர் பெஹர் லோதம்மர்

🌅🌅கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி அறிவிப்பு

'பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம்' 

-எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

🌅🌅இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

🌅🌅தமிழ்நாடு முழுவதும் Rehydration Points! 

👉தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், நீர்ச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோரை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுக்க 1000 இடங்களில்  ORS பாக்கெட்களை வழங்க சுகாதாரத் துறை உத்தரவு. ஜூன் 30 வரை மையங்கள் செயல்படும்.

🌅🌅வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது

மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது.

🌅🌅சென்னைவாசிகளுக்கு ஓர் அறிவிப்பு..! 

சென்னையில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமம் கட்டாயம் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு உங்கள் செல்லப்பிராணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

🌅🌅சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம் 

ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது - தமிழக அரசு

அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை  வழங்கலாம் - தமிழக அரசு.

 கையெழுத் பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள்,  இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை.

பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில்  இடம்பெறும் எனவும் அரசு அறிவிப்பு.

75 வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும்  என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம்  குறித்த அறிவிப்பு வெளியீடு.

🌅🌅உச்சநீதிமன்றத்தில் நோட்டோ விவகாரம்..

ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சந்திரசூட் கூறியதாவது: இந்த மனுவை விசாரிப்போம். நோட்டீஸ் அனுப்புவோம். இதுவும் தேர்தல் நடைமுறை தொடர்புடையது தான் எனக்கூறியதுடன் நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.                                                      🌅🌅தமிழகத்தில் மே 1 முதல் 9 மாவட்டங்களில் வெப்ப அலை

வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை

🌅🌅தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!"

"வெள்ள நிவாரணம் - வஞ்சிக்கும் மத்திய அரசு"

முதல்வர் ஸ்டாலின்

🌅🌅அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை"

பதில் மனு தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!"

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.

பாஜகவும், மத்திய அரசும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி, என்னை கைது செய்துவிட்டது

அமலாக்கத்துறையின் மனுவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

🌅🌅தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் அசத்திய தமிழ்நாடு போலீஸ் கிருஷ்ணமூர்த்தி

👉மூத்தோர் தடகள போட்டியில் கலக்கிய தமிழ்நாடு போலீஸ்!

மும்பையில் நடந்து வரும் தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியின் 5000 மீட்டர் நடை பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி (54)

லண்டன், கனடா உள்ளிட்ட இடங்களில் நடந்த உலக அளவிலான காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் 2 முறை தங்கமும், ஒரு முறை வெள்ளியும் நடை போட்டியில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌅🌅அதிகரிக்கும் வெப்பம் - சுகாதாரத்துறை உத்தரவு

"தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்"

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு

"கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும்" 

"உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்"

ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவு.

🌅🌅கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம்.

கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு.

இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

🌅🌅மே 2ல் மழைக்கு வாய்ப்பு

மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

🌅🌅கோடை காலத்தில் பொதுமக்களுக்கு இயன்ற உதவிகளை செய்க: 

கட்சியினருக்கு

பிரேமலதா வேண்டுகோள்

🌅🌅வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு!.

சென்னை - எழும்பூர் - நாகர்கோவில் ரயில்சேவை 

மே 2 முதல் ஜூன் 27 வரை நீட்டிப்பு

🌅🌅விசில் மூலம் பேசி கொள்ளும் கிராமம்

துருக்கி நாட்டின் ஒரு பகுதியான கிஸ்காய் எனும் பகுதியில் 10,000 பேர் வசிகின்றனர்.

அம்மக்கள் விசில் ஒலியை மொழியாக பயன்படுத்தி பேசுகிறார்கள்.

🌅🌅வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்:

ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது.                                             🌅🌅தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை

🌅🌅60 வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்ற பெண்!

“உலக அழகிக்கு வயது 60"

60 வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜந்திரா மரிசா ரோட்ரிகஸ். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுகிறார்.

உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது.

‘அழகுக்கு வயது வரம்பு இல்லை’ என ரோட்ரிகஸ் கூறுகிறார்.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்:-

👉1.)உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை

👉2.)இரவில் கண் விழித்திருத்தல்

👉3.)காலை உணவை தவிர்த்தல்

👉4.)ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்

👉5.)பணத்தை நோக்கிய ஓட்டம்

👉6.)பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்                         👉7.)கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்

👉வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்

👉கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல

👉நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.

👉தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

👉போதியளவு நீர் அருந்துங்கள்.

👉இளநீர் போன்றவை மிக நல்லது

👉பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

👉காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

👉அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

👉தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

👉யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

👉மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

👉இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

👉உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

👉அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

👉ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

👉மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.

Saturday, April 27, 2024

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


27.04.2024(சனிக்கிழமை)

*சிந்தனை துளிகள்*

 மனிதனும் வாழைமரமும் ஒன்று தான்...

தேவைப்படும் வரை  வைத்து இருப்பார்கள்

தேவை முடிந்ததும் வெட்டி வீசி விடுவார்கள்.!


ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை சொல்லக்கூடாது. பிடிக்கவில்லை என்றால் அவரை விட்டு விலகி விட வேண்டும்.

அதைவிடுத்து குறை சொன்னோம் ஆனால்

அது உறவுக்கும் அழகில்லை,

நட்புக்கும் இலக்கிணமில்லை.!!


மனதில் பட்டதை  

சொல்லும்போது சில இடங்களில் பிரச்சனை முடிவுக்கு வருகிறது.

சில இடங்களில் பிரச்சனை ஆரம்பமாகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏


⛑️⛑️

*செய்தி துளிகள்* 


இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

👉31.12.1997 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை இறுதிப் பட்டியல் வெளியீடு.

⛑️⛑️ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

⛑️⛑️மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் நேர்வுகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - DSE & DEE இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு.

⛑️⛑️உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Special SMC Meeting - 03.05.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியீடு

⛑️⛑️அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு:நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை 

⛑️⛑️ 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் - TNPSC அறிவிப்பு

⛑️⛑️நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான விவரம் வெளியீடு.

⛑️⛑️உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

⛑️⛑️அதிகரிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்களால் வெல்வோம் - பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் 

⛑️⛑️ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

⛑️⛑️உடல் பருமன் சிகிச்சைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம் - விசாரணை குழு அமைக்கப்பட்டதாக என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

⛑️⛑️தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு 

⛑️⛑️உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி செய்வதாக செஸ் சம்மேளனம் தகவல்

⛑️⛑️பாகிஸ்தான் அணிக்கெதிரான 4வது டி20 போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 

⛑️⛑️சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கும் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,755-க்கும் விற்பனையாகிறது.

⛑️⛑️EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100% சதவீதம் சரிபார்க்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 

⛑️⛑️மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு:

வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

⛑️⛑️தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் எனக்கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

⛑️⛑️சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கான்வேக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ரிச்சர்ட் க்ளீஸன் சென்னை வந்தடைந்தார்.

⛑️⛑️MTC பேருந்துகள் நிற்கவில்லையா?

சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம்  - பயணிகள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்தது போக்குவரத்துத் துறை.

⛑️⛑️உலகக்கோப்பை டி20 தூதர் யுவராஜ்சிங் உலகக்கோப்பை டி20 தொடரின் விளம்பர தூதராக யுவராஜ் சிங் நியமனம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு.

⛑️⛑️தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வெப்பநிலை பதிவான இடங்கள்!

👉ஈரோடு - 108°F

👉திருப்பத்தூர் - 107°F

👉சேலம் - 106°F

👉தருமபுரி - 106°F

👉கரூ‌ர் பரமத்தி - 106°F

👉திருத்தணி - 105°F

👉வேலூர் - 105°F

👉திருச்சி - 104°F

👉நாமக்கல் - 104°F

👉கோவை - 103°F

👉மதுரை விமான நிலையம் - 103°F

👉மதுரை நகரம் - 102°F

👉தஞ்சாவூர் - 102°F

👉பாளையங்கோட்டை - 100°F

⛑️⛑️பிரதமர் மோடி என்னை பற்றியும் எனது ஆட்டத்தை பற்றியும் பேசியது மிகவும் பெருமைக்குரிய விஷயம்; அதற்காக மிக்க நன்றி; ஓட்டுப்போடுவது அனைவரது உரிமை; யாருக்கு ஓட்டுப்போட்டுள்ளோம் என்று யாரிடமும் கூற வேண்டிய அவசியம் இல்லை. 

-முகமது ஷமி

⛑️⛑️தமிழ்நாட்டில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்: 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ராஷனுக்கு (19) சென்னையில் பொருத்தப்பட்ட இதயம். தற்போது உடல் நலம் தேறிய அப்பெண், அரசுக்கும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதய பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் தமிழ்நாட்டை நாடினார். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்துள்ளது.

⛑️⛑️பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றார்.

⛑️⛑️67 மாத்திரைகள் தரமற்றவை:

சளி, காய்ச்சல், உடல் வலி, செரிமான பாதிப்புக உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை;  

கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

-மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

⛑️⛑️முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகள். -வீட்டில் இருந்தே எடுக்கலாம்.

-யுடிஎஸ் செயலியில் புது வசதி.

யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரெயிகளுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது.

இருந்த போதிலும், 'ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரெயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும்.

 இத்தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

⛑️⛑️மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

⛑️⛑️100% VVPAT வாக்கு எண்ணிக்கை கோரிக்கை நிராகரிப்பு.!

தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் 

சந்தேகம் எழுப்பும் வேட்பாளர்கள் வேட்பாளர்கள் சொந்த செலவில் EVM மெமரியை ஏழு நாட்களுக்குள்  சோதனையிட அனுமதிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️வாக்கு பதிவில் குளறுபடி என சொல்லி யாரவது அதை சரி பார்க்க விண்ணப்பதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

 EVM தவறாகக் செயல்பட்டது கண்டறியப்பட்டால், கட்டணம் திருப்பித் தரப்படும்: 

உச்சநீதிமன்றம்

⛑️⛑️புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும் " -  

திருச்சியில் அரசுப் பேருந்து இருக்கை கழன்று விழுந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி

அன்புமணி ராமதாஸ்

⛑️⛑️அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி

-விரைவில் அறிமுகமாகும் சொமேட்டோவின் புதிய அம்சம்

கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது Zomato

மேலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5ஆக உயர்த்துகிறது.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹


*உடல் நல குறிப்புகள்*



 தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவ்வளவு நல்லது.

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது.

இது மிகவும் சுவையாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது.

இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால் அதிக பலன்களைப் பெறலாம்.

🌹👉நோய் எதிர்ப்பு:-

👉அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் தான் நல்ல தரமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதாம்.

🌹👉எலும்புகளை வலிமையாக்கும்:-

👉ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.

🌹👉நீரிழிவு:-

👉அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.இருப்பினும் அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌹👉மலச்சிக்கல் நீங்கும்:-

👉மூன்று துண்டுகளை அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்துக்களின் அளவுகளில் 20 சதவீதத்தைத் தருகிறது. எனவே இவற்றை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும்.

🌹👉இரத்த சோகை:-

👉அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

🌹👉இரத்த அழுத்தம்:-

👉உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் 1 அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மிகி சோடியம் உள்ளது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

🌹👉புற்றுநோய்:-

👉அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு,                  புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.

எடை குறையும்.

அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் மட்டுமின்றி, கலோரிகள் குறைவு. ஒரு துண்டு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது.

 🌹👉இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்:-

👉அத்திப்பழம் மிகவும் சிறப்பான ஓர் பாலுணர்வைத் தூண்டும் பழம். மேலும் அத்திப்பழம் கருவுறும் திறன் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு காரணம், அதில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

🌹👉இதய நோய்:-

👉அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.

மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

🌹👉அழகான சருமம்:-

👉தினமும் அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால்,அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் எப்படி உருவானது? அதன் வரலாறு என்ன?

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. 


இக்கோயில் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. அந்த வகையில், இக்கோயிலின் வரலாறு குறித்து காரைக்கால் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் குருக்களான சிவாச்சாரியார் கூறுகையில், “திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் நவக்கிரக கோயில்களில் ஒன்றாகும்.


மேலும், தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது. பின்னர், நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். 


அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால், நள்ளாறு என அழைக்கப்படுகிறது.


சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். 


பிறகு வந்த விஜயநகர பேரரசர்கள், இக்கோயிலை விரிவுபடுத்தினார்கள். சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.


சம்பந்தர், சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல சுவாமி பற்றி பாடி உள்ளனர். இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர, அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. 


விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.


தேவர்களை மறுத்து, நிடத நாட்டு மன்னன் நளன் சக்கரவர்த்தியை கரம் பிடித்தாள், சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தனர். 


எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து, சேவகனாக மாறினான் நளன் சக்கரவர்த்தி.


பின்னர், சகல தோஷங்களும் நீங்க வேண்டி, தான் இழந்த ராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம் இவைகள் மீண்டும் கிடைக்க வேண்டி, கலியுகத்தில் இறுதியாக இருந்த திருநள்ளாற்றில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தார்.


இந்த ஷேத்திரத்தில் வழிபாடு செய்து அதன் மூலம், தான் இழந்த ராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம், மன சந்தோஷம் இவை அனைத்தும் தர்ப்பாரண்யேஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றார். 


எனவே, இக்கோயிலின் மூலமூர்த்தியாக விளங்கக்கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர்க்கு, நளேஸ்வரர் என்ற பெயர் வழங்களாயிற்று.


அதேபோன்று, அவருடைய பெயரில் நளத்திருத்தம் என்ற தீர்த்தம் இந்த ஷேத்திரத்தில் உள்ளது. இதில் பக்தர்கள் நீராடி வழிபடுவதற்கு ஏற்றவாறு அமையப் பெற்று இருக்கிறது. இவ்வாறு மூர்த்தி, தளம், தீர்த்தம் ஆகிய மூன்றும் நரேஷ் நலச்சக்கரவர்த்தியின் பெயரைத் தாங்கிய வண்ணம் உள்ளது.


நளனை பின்தொடர்ந்து வந்த சனீஸ்வர பகவான், தர்ப்பாரண்யேஸ்வரர் பெருமானின் அருளானையின் வண்ணம், கோயிலினுடைய ராஜகோபுரத்தின் இடதுபுறத்தில், காக வாகனத்தில் நின்ற கோலத்தில் அபயஹஸ்தம் என்று சொல்லக்கூடிய அனுக்கிரக திருமுகத்தோடு, கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி, தனி விமானம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.


நளன் சக்கரவர்த்தி விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து, திருக்கோயில் அமைத்து இறைவனை பூசித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால், நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினார். இங்கு என்னைப்போல் சனி பகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள் செய்து, துன்பம் போக்கி, நலம் பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரம் கேட்டார்.


இரண்டாவதாக இத்தலத்தில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றார்‌. மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்றும் வரங்களை வேண்டினார்.


இதை பரம கருணாநிதியான இறைவனும், சனி பகவானும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு அவ்வாறு அருள் செய்தனர். அந்த வகையில், இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால், இறைவனுக்கு நளலேஸ்வரர் என்ற பெயரும், திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும், இவ்வூருக்கு திருநள்ளார் என்ற பெயரும் விளங்கலாயிற்று. இவ்வாறு புராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்ற ஸ்தலம் திருநள்ளாறு ஆகும்.


மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, மற்ற கிரகங்களுக்கு பகவான் என்ற பதத்தோடு அவருடைய திருநாமம் அமைய பெற்றிருக்கிறது. வேறு கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, ஈஸ்வர பட்டத்தை சனீஸ்வர பகவானுக்கு வழங்கி, தர்ப்பாரண்யேஸ்வர் அருளால் சனீஸ்வர பகவானாக இவ்வாலயத்தில் அபயம் தரும் சாந்த மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார்.


பொதுவாக ஒருவருடைய வாழ்ந


ாளில், வாழ்நாள் என்பது 120 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு 30 வருடத்திற்கும் சனீஸ்வர பகவானுடைய ஏழரை சனியின் காலம் ஒருவருடைய மானிட வாழ்வை மாற்றுகிறது.


இவைகள் மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி இவ்வாறாக நான்கு சுற்றுகளை உடையதாக, நான்கு முப்பது ஆண்டுகளாக சொல்லப்பட்டு உள்ளது. மேலும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி உள்ளிட்ட காலங்களிலும் ஜாதக ரீதியாக 19 ஆண்டுகள் சனி திசை.


அதில், சனி புக்தி நான்கு ஆண்டுகள் நடைபெறுகின்ற பக்தர்கள், இவ்வாறு பல வேண்டுதல்கள் நிமித்தமாகவும், ஜாதகர்கள் நளதீர்த்தம் சென்று, ஆத்ம பிரதக்ஷணம் வலமாகச் சுற்றி வணங்கி, குளத்தின் நடுவே இருக்கும் நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.


குளித்து, துவட்டி வேறு ஆடை அணிந்த பிறகு, திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சன்னதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து, பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே, இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.


எள் தீபம் ஏற்றுவது தொடங்கி, அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி, வாரத்தின் எல்லா நாட்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.


கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நெய்வேத்தியம் செய்யலாம்.


எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப் பெறுபவர்.


நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி நற்பலன்களை பெற்று வாழலாம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்”.



🌷🌷

 ➰➰➰➰➰➰➰➰➰➰


🤔   *நாளும் ஒரு சிந்தனை*


எல்லா இடத்திலும்

நேர்மையாக இருப்பவர்கள்

பணத்தை விட...

பகையை

வேகமாக சம்பாதிக்கிறார்கள்..!!!


🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*


     பித்தநீர், சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும்  *வெள்ளரிக்காய்* குணப்படுத்துகிறது.


📰  *நாளும் ஒரு செய்தி*


     இந்தியாவின் முதல் தபால் நிலையம் *'கொல்கத்தாவில்'* அமைக்கப்பட்டது.


🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     எலுமிச்சம் சாதம் செய்யும்போது ஒரு தேக்கரண்டி வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் மணமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.


💰  *நாளும் ஒரு பொன்மொழி*


     எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார். எனவே, அனைவருக்கும் தொண்டு செய்ய வேண்டும்.


         *-ராமகிருஷ்ண பரமஹம்சர்*


📆 *இன்று ஏப்ரல் 27-*


          🌸 *பிறந்த நாள்* 🌸


⭕1945- *பிரபஞ்சன்* (எழுத்தாளர்)


➰➰➰➰➰➰➰➰➰➰

*(பகிர்வு)*

*இ.ம.மகிழ்நன்*

 *காலை நேர சிந்தனை*

( 27.04.2024)


நம் மனதில் பதிவாகியுள்ள பல அனுபவப் பதிவுகள்  நாம் அறியாதவை. அது ஓர் தொடர்ச்சியான தொகுப்பு. அதன் காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. 


அத்துடன், இப்போதும் நாம் விரும்பும், பார்த்தும், கேட்டும், சுவைத்தும், நுகர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பலவிதமான  அனுபவங்களிலிருந்தும், மனதில் நல்லதாகவோ, தீயதாகவோ தகவல்கள் உருவாகிப் பதிவாகின்றன. 


ஆக எண்ணங்கள் தோன்றுவதற்கு நம் மனதில் உள்ள அனுபவப் பதிவுத் தளங்களில், அன்றாடம் நாம் சேர்க்கும் தகவல்களும், ஆதியிலிருந்தே பதிவாகி, நாம்  அறியாது, நம்முள் உறைந்திருக்கும் பல கோடிக்கணக்கான தகவல்களும் காரணமாக உள்ளது. 


ஒரு எண்ணம் நம் மனதில் உருவாகும் போது அதனுடன் கற்பனையில் நாம் உறவாடுகிறோம்.  நாம் அந்த எண்ணத்துடன் உறவாடவில்லை எனில் அந்த எண்ணம் தானாகவே மறைந்து விடும். 


எந்த எண்ணத்தோடு கற்பனையில் உறவாடுகிறோமோ, அது காட்சிகளாக விரிந்து, வார்த்தைகளாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. 


அப்போது அதனால் உண்டாகும் நல்ல, தீய பாதிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். அதுவும் ஒரு மனப் பதிவாகிறது. 


எத்தனை துயரம் தருவதாக இருந்தாலும், சில வலிமையான எண்ணங்களோடு கற்பனையில் உறவாடுவதை நம்மால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது. அது அத்தனை வீரியமானது. 


மனதில் பதிந்து இருக்கும் அனுபவப் பதிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக மனப் பதிவுகளில் பதிந்து இருக்கும், நாம் உணராத, அறியாத, எண்ணிக்கைக்கு அடங்காத பல கோடி தீய பதிவுகள் நீக்கப்பட வேண்டும். 


அனுதினம் பல  நல்ல பதிவுகள், மனதில் பதிவு செய்யப்படவேண்டும். அதனால் நல்ல செய்திகள் கேட்பது, நற் செயல்களில் ஈடுபடுவது, நல்ல நூல்களை வாசிப்பது, என மனதில் ஒருபுறம் பயனுள்ள அனுபவப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும். 


மனம் ஒரு நிலத்தைப் போன்றது. நிலத்தின் கரடு முரடான கற்களை அகற்றி, சரியாகக் கொத்தி, பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றி, நீர் பாய்ச்சி, உரமிட்டு, வேலியடைத்துக் காப்பாற்றினால், 


அந்த விதை வளர்ந்து, பெருகி, நற்பலன்களைத் தரும். இது ஒரு பெரும் பொறுமையுடன் நீண்ட காத்திருப்போடு செய்ய வேண்டிய தவம். 


அப்போது மனம் பக்குவப்படும். அதிலிருந்து தோன்றும் எண்ணங்களும் பயனுள்ளவையாக இருக்கும். 


நம் மனதில் தோன்றும் எண்ணங்களை விழிப்புடன் கண்காணிக்கும் பழக்கம் இயல்பாகிவிடும். 


தேவையற்ற எண்ணங்களில் கற்பனையில் உறவாடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நான் வேறு – எனக்குள் தோன்றும் இந்த தேவையற்ற சிந்தனைகள் வேறு, என்ற தெளிவான புரிதலும் ஏற்படும். 


இந்த தெளிவு மனதில் எந்தளவு உறுதியாக உள்ளதோ, அந்தளவிற்கு மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணமும், சிந்தனையையும் உங்களால் இலகுவாக உதறித் தள்ள முடியும். அந்த தீய எண்ண ஓட்டங்கள் உங்களைப் பாதிக்க முடியாது.


மனதில் தோன்றும் பலவகையான எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அவ்விதமாகத் தோன்றும் எண்ணங்களுக்கு எவ்விதம் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது நமது அர்ப்பணிப்பில் தான் உள்ளது. 


மனதை தன் வசப்படுத்துவதை விட மனிதருக்கு வேறு எது இந்த உலகில் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடும்?


┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்




🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 *🌹🌹🌹🙏🏻💐💐💐இன்றைய சிந்தனை . (27.04.2024)*                                                       



*"பெரிய சவால்களை"*               ................................. ....  


பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.. எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்............... 


போராசியர் ஒருவர் மூன்று கேள்விகளை மாணவர்களிடம் கொடுத்துப் பதில் எழுதித் தரச் சொன்னார். அதில் மிகவும் கடினமான கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விகளுக்கு 60 மதிப்பெண்ணும் தந்து இருந்தார்.. தேர்வு முடிந்ததும் மாணவர்களின் 

விடைத்தாள்களின் விடைகளைப் பார்க்காமல் மிகவும் கடினமான கேள்விகளைத் தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தவர்களுக்கு முறையே இரண்டாம்,  மூன்றாம் நிலையும் தந்தார்.. மாணவர்களோ, "பதில்களைப் பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே"? என்று கேட்க, பேராசிரியரோ" உங்கள் பதிலுக்காக நான் இந்தத் தேர்வை வைக்கவில்லை...... உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்தத் தேர்வை வைத்தேன்.. கடினப்பட்டு உழைப்பவர்களே அனைத்திலும் முதல்நிலை அடைவார்கள்" என்று உங்களுக்கு உணர்த்தவே இந்தத் தேர்வு என்று  சொல்லி முடித்தார்...                


*ஆம், தோழர்களே....*              


*விடாமுயற்சியுடன், சலியாத உழைப்பும் இருந்தால் மிகவும் கடினமான செயல்களை  எளிதில் வெல்லலாம்.✍🏼🌹*

 *தினம் ஒரு மூலிகை*

*


கட்டு கொடி.*

 முனை மங்கிய இலைகளுடன் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய ஏறுக்கொடி இனம் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும் சிறு கட்டுக்கொடி பெரும் கட்டுக்கொடி என இரண்டு வகை உண்டு மருத்துவ குணங்கள் இரண்டும் ஒன்று குளிர்ச்சி உண்டாக்குதல் உமிழ்நீர் பெருக்கியாகவும் செயல்படும் 10 கிராம் இலையை மென்று தின்ன ரத்த பேதி சீதபேதி மூலக்கடுப்பு எரிச்சல் தீரும் இலை வேப்பம் கொழுந்து சம அளவு அரைத்து காலையில் மட்டும் கொடுத்து வர நீரழிவு களைப்பு தேகறிவு அதி தாகம் பகுமூத்திரம் தீரும் சிறுநீர் சர்க்கரையும் தீரும் இலையுடன் மாம்பருப்பு சமன் அரைத்து பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுக்க பேதி தீரும் சிறிதளவு வேருடன் ஒரு துண்டு சுக்கு நாலு மிளகுடன் காய்ச்சி கொடுக்க வாத வலி வாத நோய் கீழ்நோய் நீங்கும் இளைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் கலக்க வைத்து சிறிது நேரத்தில் கட்டியாகும் இதை அதிகாலையில் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை சீத கழிச்சல் ரத்த கழிச்சல் ஆகியவை தீரும் வேறையும் கயச்சி பருப்பையும் இழைத்து விழுதாக்கி கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகள் வயிற்று வலி நீங்கும் நன்றி.

 அன்பு என்பது,,,

மனதை தொட்ட பதிவு,,,


நான் காலேஜ் படிக்கும் போது நானும் என் தந்தையும் சர்க்கஸ் பார்க்க சென்றோம்.


டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம். 


கடைசியாக எங்களுக்கும் டிக்கட் கவுண்ட்டருக்கும் இடையில் ஒருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தார். அவருடன் வந்த அவருடைய குடும்பம் என்னை மிகவும் ஈர்த்தது. 


மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தார்கள், அனைவருமே பணிரெண்டு வயதுக்கு உள்ளானவர்கள். 


அவர்கள் உடை அணிந்தவிதம் மிகவும் டாம்பிகமாக இல்லாவிட்டாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.


அந்த குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டார்கள்.வரிசையாக இரண்டு இரண்டு பேராக அவர்கள் பெற்றோர்கள் பின்னால் நின்று கொண்டு வந்தார்கள். 


அவர்கள் அங்கிருந்த மிருகங்களையும், ஜோக்கர்களின் புகைப் படத்தையும் பார்த்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டு வந்தார்கள்.


இன்னும் சிறிது நேரத்தில் தாங்கள் அவற்றை நேரிடையாக காணப் போவதை பற்றி பேசி மகிழ்ந்து கொண்டு வந்தார்கள். 


அவர்கள் பேச்சிலிருந்து, அவர்கள் இதுவரை சர்க்கஸுக்கு இதற்க்கு முன் வந்ததில்லை என்பது நன்றாக புரிந்தது, அவர்களுடைய மிக பெரிய வாழ்க்கை சந்தோஷமாக இதனை கருதினார்கள். 


அந்த குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பெருமையோடும் பூரிப்போடும்  வரிசையின் முதலில் நின்று கொண்டிருந்தார்கள். 


அந்த தாய் அவளது கணவனின் கைகளை நன்றி உணர்வோடு பற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவன் அவனது குடும்பத்தின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். 


கவுண்டரில் இருந்த பெண் அந்த நபரிடம் எத்தனை டிக்கட் வேண்டும் என்று கேட்டாள். உடனே அவர் குழந்தைக்கான டிக்கட் எட்டு, பெரியவர்களுக்கான டிக்கட் இரண்டு என்று கூறினார். கவுண்டரில் இருந்த பெண்ணும் அதற்கான பணத்தை கணக்கிட்டு கூறினாள்.


அவர் அவருடைய மனைவியிடம் நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்னே செல் என்று கூறிவிட்டு, மீண்டும் அந்த கவுண்டரில் இருந்த பெண்ணிடம் எவ்வளவு தொகை என்று கேட்டார். 


அந்த நபரிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அவருக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. சந்தோஷத்தில் இருக்கும் தன குழந்தைகளிடம் எப்படி சென்று இதனை கூறுவது என்று புரியாமல் தவித்தார். 


இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை, அவரது பாக்கேட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து தரையில் போட்டார். (நாங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை). 


என் தந்தை குனிந்து அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்து, அங்கிருந்த நபரிடம் கொடுத்துவிட்டு.. "சார், இந்த பணம் உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது" என்றார். 


அந்த நபருக்கு நன்றாக புரிந்தது என் தந்தையின் உதவும் மனநிலை. அவர் எங்களிடம் யாசகம் கேட்கவில்லை, எனினும் அந்த கையறுந்த நிலையில் அவரால் அதை மறுக்க முடியவில்லை. 


அவர் எனது தந்தையின் கண்களை நேராக பார்த்து, என் தந்தையின் இரணடு கைகளையும்  பணத்துடன் கைகளுக்குள் வைத்து கண்களில்  ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியவாறே, "நன்றி... மிக்க நன்றி சார், இந்த பணம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும்  இப்பொழுது மிகவும் மதிப்பில்லாதது" என்றார். 


நானும் என் தந்தையும் பைக்கில் வீட்டிற்கு திரும்பினோம். என் தந்தை அவருக்கு கொடுத்த அந்த பணத்தில் தான் நாங்க சர்க்கஸுக்கு போக நினைத்து வைத்து இருந்த பணம்.  


அன்றிரவு நாங்கள் சர்க்கஸுக்கு செல்லவில்லை என்றாலும், நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு, மனநிறைவுக்கும் அளவே இல்லை. 


அன்று நான் கற்றுக் கொண்டேன் "பிறருக்கு உதவுவதில்" உள்ள சந்தோஷத்தின் மதிப்பை. 


அன்பு எனப்படுவது.. "பிறரிடம் இருந்து பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதிலேயே உள்ளது". 


*படித்ததில் வலித்தது....*

Friday, April 26, 2024

 ✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈

இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு,

👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.


 👉நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுகி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.


👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்றும் படித்தது இங்கேதான்.


👉 இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.


👉 வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சது இங்கேதான்.


👉சத்தம் இல்லாமல் கதவை திறக்கவும் மூடவும் படித்தது இங்கேதான்.


👉 தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.


👉 பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான்.


 👉எவ்வளவு கும்மிரட்டிலும் ரூமில் உறங்குப வர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் படித்தது இங்கேதான்.


👉 நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக நாட்டுக்கு அனுப்ப படித்ததும் இங்கேதான்.


👉மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.


👉பள்ளிக்கூடத்தில் 

10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.


👉வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான். 


👉சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு  மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட படித்ததும் இங்கேதான். 


👉உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான். 


👉தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூடு, மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை  என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா❓


 *வெளிநாட்டு வாழ்க்கை*,

 *அது ஒரு கதை. யாரும் சொல்லாத கதை*


 *சொல்ல மறந்த கதை*🦊.

 *வெளிநாட்டுக்காரர்களை வாழ்த்துகிறேன்.*


 *நானும் உங்களில் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன்.*


🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️

செய்தித்துளிகள் 26.04.2024(வெள்ளிக்கிழமை)


*சிந்தனை துளிகள்*

நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருப்பது நேரமும் காலமும் மட்டுமல்ல பல மனிதர்களின் மனமும் குணமும் தான்.!

ஒருவர் நம்மை நம்பி ஒரு உண்மையை அல்லது  

தன் உணர்வுகளை சொல்கிறார் என்றால்...

அந்த இடத்தில் அவர் உங்களை தெய்வத்தை விட மேலாக மதிக்கிறார் என்று 

அர்த்தமாகும்.!!

அடுத்தவர் மீது பழிபோடுவது மிகவும் சுலபம் ஆனால் அதே பழியை  

நாம் சுமக்கும் போதுதான் அடுத்தவரின் வலி என்னவென்று நமக்குத் தெரியும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



*செய்தி துளிகள்*


 மாணவர்களுக்கு  சீருடை தைக்க SMC மூலம் தலைமையாசிரியர்கள் உள்ளூரில் தையல்காரர்களை நியமனம் செய்தல் சார்ந்து உறுப்பினர் செயலரின் கடிதம் வெளியீடு.

🍒🍒அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.

🍒🍒JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை

🍒🍒90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் - TNPSC அறிவிப்பு

🍒🍒NILP   புதிய பாரத எழுத்தறிவு திட்டம் வருகிற கல்வி ஆண்டிற்கான (2024-25) கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கணக்கெடுக்க உத்தரவு இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு அமைத்தல், மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

🍒🍒அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வீடுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம்: ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்.

🍒🍒பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும்.

விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.*

🍒🍒குறுகிய கால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

🍒🍒திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்

நித்யா (26) உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி (28) வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி (26) கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

🍒🍒Middle School HM to BEO Panel 2024 - Temporary Panel Published - Appointed Before 31.12.2011 - Director Proceedings வெளியீடு.

👉நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு.

🍒🍒உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு Summer Camp - SPD proceedings வெளியீடு.

🍒🍒MBA - போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் - UGC எச்சரிக்கை

🍒🍒NILP -  திட்டத்துக்கு கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.                         🍒🍒விரைவில் Surplus கலந்தாய்வு - அறிவுரைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

👉தொடக்கக் கல்வித் துறையில் விரைவில் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு.

தொடக்கக்கல்வி துறையில் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236   இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு      30.04.2024 க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்க்கலாம்- தொடக்கக்கல்வி இயக்குனர்.

🍒🍒நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

🍒🍒அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான Brand Ambassador-ஆக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.

🍒🍒தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், தி.மலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.

🍒🍒சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸில் இணைய மன்சூர் அலிகான் கடிதம்:

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ள கடிதம். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கடிதம் அளித்தார்.

🍒🍒முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏப்.26 ஆம்  முதல் ஏப்.28 ஆம் தேதி  வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  - போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் 

🍒🍒தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

அதிகபட்சமாக வேலூரில் 108.68°F, ஈரோட்டில் 107.6°F, திருப்பத்தூரில் 106.52 6°F, சேலத்தில் 105.98°F, கரூரில் 105.8°F வெப்பநிலை பதிவு.

🍒🍒பசும்பாலிலும் பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை 

இந்நிலையில் கேரளாவை போல  தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் 

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை! 

'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்.

🍒🍒இனி 1/2 லிட்டர் தண்ணீர் தான்:

குடிநீர் வீணாவதை தடுக்க வந்தே பாரத் ரயிலில் இனி பயணிகளுக்கு 1 லிட்டருக்கு மாற்றாக 500ml தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். 

தேவையேற்படின் கூடுதலாக 500ml தண்ணீர் பாட்டில் விலையின்றி வாங்கி கொள்ளலாம்

இந்தியன் ரயில்வே அறிவிப்பு.

🍒🍒உம்ரா செல்ல விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

சவூதி மற்றும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க உம்ரா பயணிகள் கோரிக்கை

🍒🍒உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை  பட்டியலில் சேலம் அரசு கலைக் கல்லூரி இந்திய அளவில் 46வது இடம் தமிழக அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது.

🍒🍒அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3ஆவது இடம்!..

மும்பை, டெல்லி முதல் இரு இடங்களை பிடித்துள்ளன

🍒🍒தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது

தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கும், ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனையாகிறது

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

👉நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது.  

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  இதில் 10,18,593 பேர் ஆண்கள், 13,63,216 பெண்கள்,  24 பேர் திருநங்கைகள். 

மேலும்,  தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மாநிலங்களின் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ  இணையதளத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமையவிருக்கிறது என்பதை உறுதி செய்து நகல் எடுத்துக்கொள்ளலாம்.

விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது.அதனையும் மாணவர்கள் நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு:

 நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை.

ஜேஇஇ மெயின் தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

 2024 - 25 கல்வியாண்டில் சேர்வதற்காக இந்த தேர்வை கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தியது. 

13 மொழிகளில் நாடு முழுவதும் 319 நகரங்களில் நடத்தியது. வெளிநாட்டிலும் தேர்வு நடந்தது. 

முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வு முடிவினை என்டிஏ வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்வை எழுத 11,79,569 பேர் பதிவு செய்த நிலையில் 10,67,959 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அவர்களில் 15 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா 14 பேர் மற்றும் டில்லியைச் சேர்ந்த 6 பேர் அடங்குவர்.

டில்லியைச் சேர்ந்த ஷாய்னா சிங், மாதவ் பன்சால், தான்யா ஜா, இப்சிட் மிட்டல், பவேஷ் ராமகிருஷ்ணன் கார்த்திக் மற்றும் அர்ஷ் குப்தா ஆகியோர் நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்     

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

👉2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை  தெரிவித்துள்ளது. 

👉இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.

👉இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

👉இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னரே  அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

👉இந்நிலையில் நேற்று வரை 3,24,884 மாணவர்கள் அரசுபள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,793 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

👉குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்1,741 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

👉தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 மதுவிற்கு  எதிராக திரு. கல்கி அவர்கள் எழதிய சிறுகதை....  எக்காலத்திற்கும் பொருந்தமாக உள்ளது....

சிறிது நேரம் ஒதுக்கிப் படியுங்கள்... நன்றி..

===============================================


சின்னத்தம்பியும் திருடர்களும்


கதை ஆசிரியர்: அமரர் கல்கி

=====================================


     ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.


     அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- “குழந்தாய்! உன்னுடைய தகப்பன் உனக்குத் தேடி வைத்த சொத்து இந்த வைரம் ஒன்றுதான். இதை நீ வெகு ஜாக்கிரதையாகக் கொண்டு போக வேண்டும். பட்டணத்தில் இதற்கு நல்ல விலை கொடுப்பார்கள். இதை விற்று வரும் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு நாணயமாக வியாபாரம் செய்தால் சீக்கிரம் நல்ல பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பலாம். வழியிலே திருடர் பயம் அதிகம். வழிபோக்கர்கள் யாரையும் நம்பிவிடாதே. சிலர் உன்னோடு சிநேகமாய்ப் பேசிக்கொண்டே வந்து சமயம் பார்த்து வைரத்தை அடித்துப் பறித்துக் கொள்வார்கள். ஜாக்கிரதையாயிருந்து பிழை” என்றாள்.


     அந்த வைரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் அறிவு.


     சின்னத்தம்பி வைரத்தை வாங்கிப் பத்திரமாய் முடிந்துகொண்டு புறப்பட்டான். சாலையில் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் ஒரு வழிப் போக்கனைக் கண்டான்.


     ”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்று கேட்டான் வழிப்போக்கன்.


     ”பட்டணத்துக்குப் பணம் சம்பாதிக்கப் போகிறேன். ஐயா!” என்றான் சின்னத்தம்பி.


     ”அப்படியா? நானும் பட்டணத்துக்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்” என்று வழிப்போக்கன் சொன்னான்.


     சின்னத்தம்பி தன் தாயார் சொல்லிய புத்திமதிகளை நினைத்துக் கொண்டான். “உன் பெயரென்ன?” என்று கேட்டான்.


     ”என் பெயர் சோம்பல்” என்றான் வழிப்போக்கன்.


     ”ஓகோ! உன்னைப்பற்றி என் தாயார் சொல்லியிருக்கிறாள். நீ பொல்லாத திருடன். உன் சகவாசம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.


     திருடன் “இந்தா! பிடி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே தொடர்ந்து ஓடினான். என்ன ஓடியும் சின்னத்தம்பியை அவனால் பிடிக்க முடியவில்லை.


     இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் வேறொரு ஆள் எதிர்ப்பட்டான்.


     ”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்று கேட்டான். “பட்டணத்துக்குப் போகிறேன்” என்றான் சின்னத்தம்பி.


     ”அப்படியா? சந்தோஷம். நாம் இருவரும் பேசிக் கொண்டே போகலாம்” என்றான் அம்மனிதன்.


     ”நீ யார்?” என்று கேட்டான் சின்னத்தம்பி.


     ”என்னைத் தெரியாது? நான் தான் வியாதி” என்று அம்மனிதன் கூறினான்.


     ”ஐயோ; நீ சோம்பலை விடப் பொல்லாத திருடனாயிற்றே! நீ என் சுகத்தைத் திருடிக்கொள்வாய் வேண்டாம் உன் உறவு எனக்கு” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.


     வியாதி ஓடி ஓடிப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை.


     இன்னும் போகப் போக வழியில் சூதாட்டம், கோபம், சண்டை, மூர்க்கம் விபசாரம் முதலிய திருடர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்பட்டுச் சின்னத் தம்பியை வழி மடக்கப் பார்த்தார்கள். எல்லாரையும் ஏமாற்றிப் பின்னால் விட்டுவிட்டுச் சின்னத்தம்பி முன்னால் போய்க்கொண்டிருந்தான்.


     மேலே சொன்ன சோம்பல், வியாதி, விபசாரம் முதலிய திருடர்கள் எல்லாரும் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் மதுசாரம். இவன் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டுக் கொள்வதில் தேர்ந்தவன். கள்ளு, சாராயம், ஒயின், பிராந்தி, விஸ்கி, பீர், அபினி, கஞ்சா என்று விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பெயருக்கேற்ப வெவ்வேறு வேஷங்கள் போட்டுக் கொள்வான்.


கடைசியாக, இத்திருடர் தலைவனை நமது சின்னத்தம்பி சந்தித்தான்.


     ”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்றான் திருடர் தலைவன்.


     ”பட்டணத்துக்குப் போகிறேன். நீ யார்?” என்று சின்னத்தம்பி கேட்டான்.


     ”என் பெயர் மதுசாரம்” என்றான் திருடன்.


     சின்னத்தம்பி தனக்குள் யோசித்துக் கொண்டான்:- “இவனைப் பற்றி என் தாயார் ஒன்றும் சொல்லவில்லை. இவன் வெகு உற்சாக புருஷனாகக் காணப்படுகிறான். உடல் பருத்து நல்ல உடையணிந்து பெரிய மனிதன் போல் தோன்றுகிறான். இவன் திருடனாயிருப்பானா? எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தாயார் ஒரு வேளை இவனைப் பற்றிச் சொல்ல மறந்திருக்கலாம்.”


     இப்படியெண்ணிச் சின்னத்தம்பி வேகமாய் நடக்கலானான்.


     அப்பொழுது திருடர் தலைவன், “ஏனப்பா இவ்வளவு விரைவாக ஓடுகிறாய்? கொஞ்சம் மெதுவாய் நட; என்ன அவசரம்? பட்டணத்தில் நான் ரொம்ப அனுபவமுள்ளவன். பணஞ்சம்பாதிக்கும் வழியெல்லாம் உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றான்.


     சின்னத்தம்பி இந்த ஆசை வார்த்தையில் மயங்கிவிட்டான். “இவன் திருடனாயிருக்க மாட்டான். இவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் முன்னாலேயே போய்க் கொண்டிருக்கலாம். அப்படி ஒரு வேளை இவன் திருடனாயிருந்து நம்மை பிடிக்க வந்தாலும், ஒரே ஓட்டமாய் ஓடித் தப்பி விடலாம். இத்தனை திருடர்களை ஏமாற்றி வந்த எனக்கு இந்தப் பொதியனைத்தானா ஏமாற்ற முடியாது?” என்று அவன் எண்ணினான். அதனால் கொஞ்சம் மெதுவாய் நடந்தான்.


     திருடர் தலைவன் இனிமையாகப் பேசிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தான். “ஆஹா! இவனுடன் பேசினால் எவ்வளவு உற்சாகமாயிருக்கிரது?” என்று சின்னத்தம்பி நினைத்தான். அவன் அருகில் வந்ததும் திருடர் தலைவன் ஒரே தாவலாய்த் தாவி சின்னத்தம்பியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.


     சின்னத்தம்பி ஆனமட்டும் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான். ஒன்றும் முடியவில்லை. திருடன் அவனைச் சோதனை போட்டு அவன் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த வைரத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதற்குள் பின்னால் தங்கிய வியாதி, விபசாரம், சூதாட்டம், சோம்பல் முதலிய திருடர்களும் ஓடிவந்து சின்னத்தம்பியை சூழ்ந்து கொண்டார்கள்.


     திருடர் எல்லாரும் சேர்ந்து அவனைத் தங்கள் இருப்பிடத்துக்கு வரும்படி அழைத்தார்கள். சின்னத்தம்பி பார்த்தான். “வைரந்தான் போய்விட்டது. பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது? இவர்களுடன் தான் போவோமே?” என்றெண்ணினான்.


     பாவம்! இவ்வாறு சின்னத்தம்பி திருடர் தலைவனுக்கு அடிமைப்பட்டான். மற்ற எல்லாத் திருடர்களுக்கும் அவன் குற்றேவல் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு சில காலம் அடிமையாயிருந்து உழைத்து விட்டுக் கடைசியில் அவன் மாண்டு போனான்.


     வாழ்க்கைப் பிரயாணம் தொடங்கும் எத்தனையோ ஏழை ஜனங்கள் சின்னத்தம்பியைப் போல் மதுசாரம் என்னும் கொள்ளைத் தலைவனுக்கு அடிமையாகிறார்கள். முதலிலேயே அவன் பெரிய கள்ளன் என்பதை அறிந்து அருகில் நெருங்கவிடாதிருந்தால் பிழைத்திருக்கலாம். அவனுடைய இனிய பேச்சுக்குக் கொஞ்சம் செவி கொடுத்து விட்டால் பிறகு வலையில் விழ வேண்டியதுதான். நயவஞ்சகத்தில் அவன் மிகத் தேர்ந்தவனாதலால் அறியாத ஜனங்கள் எத்தனையோ பேர் அவனை நெருங்க விட்டு அதோகதி அடைகிறார்கள். இந்தக் கொடிய கள்ளனைப் பிடித்து நாட்டைவிட்டுத் துரத்துவது சர்க்காரின் கடமையல்லவா? ஆனால் அதற்குப் பதிலாக ஆங்கில சர்க்கார் இவனுடன் சண்டைபோட முடியாதென்று இந்தப் பாதகனுக்கு ‘லைஸென்ஸ்’ கொடுத்து வழிப்போக்கர்களைத் தன் வலையில் போட்டுக் கொள்ளும்படி விட்டிருக்கிறார்கள்!


நன்றி: *சென்னைநூலகம்.காம்* (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

 கவலையும் குப்பையும்     .      . 


_*எதிர்த்து நிற்பவனெல்லாம் எதிரியும், துரோகியும் அல்ல,*_

_*ஆமாம் போடுபவனெல்லாம் நண்பனும் அல்ல..!!*_

_*சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறும் இவ்வுலகில் எவனும் எவனுக்கும் உத்தமன் அல்ல.*_


_*மகிழ்ச்சியின் எல்லை*_

_*நம்மால் மற்றவர்கள்*_

_*மகிழ்ச்சி அடைவது தான்.*_


_*அளவுக்கு மீறினால்*_

_*அமிர்தமும் நஞ்சே...*_

_*அதிகமாகப் படித்தவன்*_

_*வாழ்க்கையில் வெற்றி பெற்றதில்லை...*_

_*அதிகமாக உழைத்தவன் வாழ்க்கையின் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை.*_

_*காலம் உள்ள போதே*_

_*எல்லாம்*_ _*பயன்படுத்துங்கள்...*_

_*ஞாலம் சிறக்க உன் பேர் இருக்க வேண்டுமெனில்,*_

_*எண்ணங்களை நேர்மையாக வை...*_

_*வெற்றி நிச்சயம். *_


பெயர் தெரியாத

நம் முன்னோர்கள் செய்த

நன்மைகளால் தான் நாம் இன்று பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


ஒருவன் துன்பப்படும் பொழுது நிபந்தனையின்றி அவனுக்கு உதவுவது தான் மிகச்சிறந்த நட்பின் அடையாளம்.


பசி என்ற இரண்டு எழுத்துக்காக எழுந்து, பணம் என்ற மூன்று எழுத்துக்காக ஓடுவதே வாழ்க்கை.


பணத்தை விட அதிக

மதிப்புடையது மகிழ்ச்சி

அதை யாரும் உங்களுக்கு

கடனாகக் கூடத் தரமாட்டார்கள்.


பணத்தை மட்டும் சம்பாதித்தவர் இருக்கும் போது வாழ்கிறார்

அன்பையும் உறவையும் சேர்த்து சம்பாதித்தவர்

இறந்த பிறகும் வாழ்கிறார்.


_*கவலையும் குப்பையும்*_

_*ஒன்றுதான்*_

 _*நம்மை கேட்காமலேயே*_

_*வந்து சேர்ந்துவிடும்*_

_*ஆனால் நாமாக அகற்றாமல் அவை வெளியேறாது...!*_


_*சின்ன சின்ன*_

_*அக்கறையும்*_

_*அனுசரணையும்*_

_*போதும்*_

_*வாழ்க்கையை*_

_*அர்த்தம்  உள்ளதாக மாற்ற..*_

 


தினம் ஒரு மூலிகை* *கடுக்காய்*  கலையில் இஞ்சி கடும் கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை விசி குலாவி நடப்பானே கடுக்காய் சாப்பிட்டால் நெடுகால் வாழலாம் உடல் தேற்றுதல் பித்தம் தனித்தல் திசுக்களை இறுகச் செய்தல் மலமிளக்கல் செரிக்க வைத்தல் உடல் உரமாக்கல் ஆகிய மருத்துவ குணம் உடையது 15 கிராம் கடுக்காய் பொடியுடன் ஐந்து கிராம் கிராம்பு பொடி சேர்த்து 100 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அதிகாலையில் கொடுக்க வயிற்று வலி இன்றி இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழியும் இம்முறையை அவ்வப்போது பயன்படுத்தி வர அதிக வெப்பத்தை தணிக்கும் இரைப்பை பலப்படும் புலன் பொறிகளை சரிவர இயங்கும் வாயு மூலம் பவுத்திரம் வீக்கம் தலைவலி இதய நோய் ஆகியவை குணமாகும் ரத்தம் தூய்மையடையும் கடுக்காய் பொடியை பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்துவர ஈறு வலி வீக்கம் ரத்தம் கசிதல் ஆகியவை தீரும் கடுக்காய் நெல்லிவற்றல் தான்றிக்காய் சுக்காட்டி இவற்றை செம நடை பொடித்து தேங்காய் எண்ணெயில் இளகலாக அரைத்து ஆறாத புண்களில் பூச அவை குணமாகும் நன்றி.

Thursday, April 25, 2024

சிந்தனைத் துளிகள் - 25.04.2024

நிம்மதியாக நாம் வாழ வேண்டுமெனில் நம் மனதின் கவலைகளை தூண்டிவிடும் சிலரை சந்திப்பதையும் அவர்களைப் பற்றி சிந்திப்பதையும் நாம் தவிர்ப்பது அவசியமாகும்.!

நேரத்திற்கு தகுந்தார் போல் மாறும் குணம் கொண்ட உறவுகளோடு ஒட்டியிருப்பதை விட...

தன்னம்பிக்கையோடு  

தனியாக நின்று விடுவது கெளருவமாகும்.!!

நம் எதிரியாக இருந்தாலும்,அவனுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் நல்ல மனிதன் அத்தகைய மனம் கொண்ட நல்லவர்களுக்குத் தான் எந்த நல்லதுமே நடப்பதில்லை என்பது தான் உண்மையாகும்.!!!


 


DEMU இரயில் - வேதாரண்யம் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வேதாரண்யம் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வருகின்ற மே மாதம் 03 தேதியிலிருந்து  திங்கள் முதல் வெள்ளி வரை 
வேதாரண்யத்தில் இருந்து காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தஞ்சாவூர், வழியாக திருச்சிக்கும், 
மற்றும் 
திருத்துறைப்பூண்டி,திருவாரூர், வழியாக மயிலாடுதுறைக்கும், 
மேலும் 
திருத்துறைப்பூண்டி,பட்டுக்கோட்டை , அறந்தாங்கி வழியாக காரைக்குடி சென்று வரலாம்.

அகஸ்த்தியன்பள்ளி to திருத்துறைப்பூண்டி செல்லும் இரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி செல்ல Train number 06627 காலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் செல்லும் இரயிலில் ஏறி காலை 07:55 க்கு சென்று இறங்கி  08:15 மணிக்கு Train number 06839 மூலம் தஞ்சாவூர் வழியாக 11:20 மணிக்கு திருச்சி சென்று அடையலாம். 

மயிலாடுதுறை செல்ல அதே Train number 06627 காலை 6  மணிக்கு வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் செல்லும் இரயிலில் ஏறி காலை 07:55 க்கு சென்று இறங்கி  Train number 06688 மூலம் பேரளம் வழியாக மயிலாடுதுறை 09:15 மணிக்கு செல்லாம்.

அதே Train number 06627 காலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் செல்லும் இரயிலில் ஏறி 06:50 க்கு திருத்துறைப்பூண்டி யில் இறங்கி Train number 06197  மூலம் காலை 07:08 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக 09:35 க்கு காரைக்குடி செல்லாம்.

மீண்டும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர்,திருவாரூர் , திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் வருவதற்க்கு திருச்சியில் மாலை 04:45 Train number 06840 மூலம் திருவாரூர் க்கு இரவு 07:15 க்கு வந்து இறங்கி . இரவு 07:35 மணிக்கு Train number 06630 யில் திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரணியம் இரவு 09:30 க்கு வராலம். 

மயிலாடுதுறையில் Train number 06695 மூலம்  06:15 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் க்கு 07:15 மணிக்கு வந்து இறங்கி  இரவு 07:35 மணிக்கு Train number 06630 யில் திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரணியம் இரவு 09:30 க்கு வராலம். 

காரைக்குடியில் மாலை 06:00 மணிக்கு Train number 06198 மூலம் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக இரவு 08:03 திருத்துறைப்பூண்டியில் இறங்கி, Train number 06630 மூலம் இரவு 08:18 ஏறி 09:30 க்கு வேதாரண்யம் வரலாம்.

இந்த ரெயில் சேவையை சரியான முறையில் பயன்படுத்தினால் .மேலும் பல புதிய ரெயில்கள் நம் வேதாரண்யம் பகுதிக்கு கிடைக்கும்.


*திருவாரூருக்கு புதிய ரயில்கள்:*

🔹அ. வண்டி எண் 06877/06690 விழுப்புரம் - திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில். 


1)  2.5.24 முதல் வண்டி எண் 06877 தினமும் விழுப்புரத்தில் மாலை 6.25 க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் வழியாக இரவு 10:45 மணிக்கு திருவாரூர் வந்து சேரும். 


2) 03-05-2024 முதல் வண்டி எண் 06690 தினமும் காலை 5.10 மணிக்கு திருவாரூரில் புறப்பட்டு விழுப்புரம் காலை 9.15 மணிக்கு சென்றடையும். 

இது விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி - சென்னை பல்லவன் அதிவிரைவு ரயில் மற்றும் வண்டி எண் 06025 புதுச்சேரி பயணிகள் ரயிலுக்கும் இணைப்பாக அமையக்கூடும்.


🔹ஆ. வண்டி எண் 06871/06876 திருச்சி - திருவாரூர் - திருச்சி DEMU பயணிகள் ரயில் 


3) 02-05-2024 முதல் இரவு 8:25 மணிக்கு திருச்சியில் புறப்படும் வண்டி எண்  06876 தஞ்சாவூர் சாலியமங்கலம் நீடாமங்கலம் கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11:05 மணிக்கு வந்து சேரும்.

 

4) 03.05.2024  முதல் வண்டி எண் 06871 தினமும் காலை 4.45 க்கு திருவாரூரில் புறப்பட்டு திருச்சிக்கு காலை 7:00 மணிக்கு சென்றடையும். 

இந்த ரயில் திருச்சியில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் மற்றும் புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும் விரைவு ர‌யி‌ல் ஆகியவற்றிற்கு இணைப்பாக அமையக்கூடும்.


🔹இ. வண்டி எண் 06627 / 06630  அகஸ்தியம்பள்ளி - திருவாரூர் - அகஸ்தியம்பள்ளி DEMU பயணிகள் ரயில்.


5) 03.05.2024 முதல் வண்டி எண் 06627 அகஸ்தியன் பள்ளியில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, நெய் விளக்கு, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி,  திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூர் காலை 7.55 மணிக்கு வந்தடையும். 


6) 03.05.2024 முதல் வண்டி எண்  06630 திருவாரூரில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு அகஸ்தியன்பள்ளிக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும்.


🔹ஈ. வண்டி எண் 06851/06852 திருவாரூர் - பட்டுக்கோட்டை - திருவாரூர் DEMU பயணிகள் ரயில். 


7) வண்டி எண் 06851 திருவாரூரில் காலை 08.30க்கு புறப்பட்டு பட்டுக்கோட்டை காலை 10.05 மணிக்கு சென்றடையும்.


 8) வண்டி எண் 06852 மாலை 05.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 06.55 மணிக்கு வரும்.


🔹உ.  வண்டி எண் 06197 /06198 திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் பயணிகள் ரயில். 


9) வ.எண் 06197 திருவாரூரில் காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 9 35 மணிக்கு சேரும்.


10) மறு மார்க்கத்தில் வண்டி 06198 மாலை 6-00 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.


வண்டி எண் 06197/06198 காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையத்தில்  வண்டி எண் 06887 / 06888  திருச்சி - காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயிலுக்கு இணைப்பு சேவையாக அமையும். இதன் மூலம் திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரலாம்.

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

கடுகு - தினம் ஒரு மூலிகை

 


*கடுகு.*  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கடுகை பற்றி பார்ப்போம் வட இந்தியாவில் மிகுதியாக பயிரிடப்படும் சிறு செடி இனம் இது கரும் கடுகு அதிக காரமுடையது வெண்கடுகு என்ற மற்றொரு வகை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையே மருத்துவ பயன் உடையது வாந்தி உண்டாக்குதல் வெப்பம் மிகுதல் சிறுநீர் பெருக்குதல் செரிமான வேகத்தை மிகுத்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது கடுகை புடித்து ஒரு கிராம் அளவுக்கு ஆல்கஹால் அல்லது பாயாசத்தில் கலந்து காலை மாலை கொடுத்து வர உடலின் அக உறுப்புகளில் உள்ள மாசுக்களை அகற்றும் சிறுநீரக கற்களை அகற்றும் வாத வழிகளை நீக்கும் நினைவாற்றல் உடல் பலம் செரிமான ஆற்றல் ஆகியவற்றை மிகுக்கும் கடுகு உடன் சம அளவு முருங்கை பட்டையை சேர்த்து அரைத்து பற்று போட கை கால் குடைச்சல் மூட்டு வலி நரம்பு பிடிப்பு ஆகியவை குணமாகும் பற்றினால் எரிச்சல் உண்டானால் உடனே பற்றை அகற்றி கழுவி விடவும் 10 கிராம் கடுகை பொடித்து கால் லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி கொடுக்க விக்கல் நீங்கும் கடுகு எண்ணெயுடன் ஐந்து மடங்கு விளக்கெண்ணெய் சிறிது கற்பூரம் கலந்து தடவி வர மூட்டு வலி மார்பு வலி நீங்கும்.

இன்றைய நாள் உலக மலேரியா தினம்

(25-ஏப்)

🐝 ஒவ்வொரு ஆண்டும் உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


🐝 மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். ஆண்டுதோறும் மலேரியா நோயினால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.


🐝 உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைபிடித்து வருகிறது.


🐝 மலேரியாவை கட்டுப்படுத்துவதும், நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.



*உலக பென்குயின் தினம்.*


🐧 ஒவ்வொரு ஆண்டும் உலக பென்குயின் தினம் ஏப்ரல் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


🐧 பென்குயின் என்ற இறகுகள் கொண்ட பறக்க இயலாத பறவைகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


🐧 உலகில் அழிந்துவரும் பல வகைப்பட்ட பென்குயின்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.



*முக்கிய நிகழ்வுகள்..*


👉 தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மறைந்தார்.

சுவாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா...?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட செல்கையில், தேங்காய், பழம், பூ கொண்டு போவது வழக்கம். அவ்வாறு, சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் போது, தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா?*


அல்லது அவற்றை அகற்றிவிட வேண்டுமா? என்பது பற்றிய சந்தேகம் பலரிடமும் இருக்கும். ஆனால், யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ? யாரும் தவறாக நினைத்து கொள்வார்களோ என்று பலரும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. எல்லோரும், செய்கிறார்கள். நாமும் செய்வோம் என்று தான் பலரும் செய்கின்றனர். இந்நிலையில், அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.


*உடலின் அங்கமாக*


பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை, பரம்பரையாகக் குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமி என்பது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. அதுபோல, தேங்காயின் ஓர் உறுப்பாகத் திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றிவிட்டால், தேங்காய் பின்னம் (ஊனம்) அடைந்து விடும்.


பொதுவாக, இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும், அது பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே தான், தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும்.


*உடைத்த பிறகு*


உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்ததன் காரணமாக, அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும். மேலும், உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால், அவை குடுமி அகற்றி, சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.


*அதேபோல், கும்பாபிசேகம், ஹோமங்கள் நடத்தும் போது, கும்பம் வைத்து, அதில் இறைவனை குடியிருத்துவர். குடம், இறைவனின் திருமேனி. குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய், இறைவனின் சிரம்; தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவர். அதற்கு தேங்காய், சிகையுடன் அதாவது குடுமியுடன் திகழ வேண்டும். எனவே, குடுமியுடன் கூடிய தேங்காயைக் கும்பத்தில் வைப்பது வழக்கம்.*

இன்றைய நாளில் பிறந்தவர்கள்

(25-ஏப்)


*புதுமைப்பித்தன்*

✍ நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.


✍ எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.


✍ இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்னகரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒருநாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் ஆகியவையாகும்.


✍ இவர் சொ.வி. ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல், விசிறிமடிப்பு ஆகிய புனைப்பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 1948ஆம் ஆண்டு மறைந்தார்.


*மு. வரதராசன்.*


மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன்  ஏப்ரல் 25, 1912 -ல் பிறந்தார்.  20ஆம் நூற்றாண்டின்  புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.


இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.   பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். அக்டோபர் 10, 1974-ல்  மறைந்தார்.


*மார்க்கோனி.*


📻 வானொலியின் தந்தை மற்றும் நோபல் பரிசு பெற்ற குக்லீல்மோ மார்க்கோனி 1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார்.


📻 இவருக்கு இயற்பியலில் குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார்.


📻 1895ஆம் ஆண்டு திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது.


📻 ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901ஆம் ஆண்டு 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.


📻 மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.


📻 மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுப்போக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

சயாம் மரண இரயில்பாதை


சயாம் மரண இரயில்வே நிலவரை படம்

பர்மா இரயில்பாதை (Burma Railway), மரண இரயில்பாதை (Death Railway), என அழைக்கப்படும் பர்மா-சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway), அல்லது தாய்லாந்துபர்மா இரயில்பாதை என்பது இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தடம் ஆகும்.

இந்தத் தடமானது தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு ரயில்பாதை முயற்சி. அந்த முயற்சி பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் முடிந்து இருக்கிறது.

சயாம் இரயில்வே கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் அனைவரும் கட்டாய உழைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000 போர்க்கைதிகளும் வலுக்கட்டாய வேலைகளைச் செய்தனர்.

போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல்கள், ஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 16,000 போர்க் கைதிகளும் இறந்து போயினர்.

மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்கள் சயாம் மரண ரயில் பாதை அமைத்த ஜப்பானியர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகளை நாவல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்.




நரகத்தீ கணவாய். 2004-இல் எடுக்கப்பட்ட படம்.

தாய்லாந்து நாட்டிற்கும் பர்மா நாட்டிற்கும் இடையே ஒரு ரயில் பாதை அமைப்பதற்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்தது.ஆனால், மலைக் காடுகளில் பல பெரிய பெரிய ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் அந்தத் திட்டம் சாத்தியம் இல்லாமல் போனது.

1942 இல், ஜப்பானியப் படைகள் தாய்லாந்து வழியாக நுழைந்து, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றின. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நேச நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.


அதனால் ஒரு மாற்றுவழியை ஜப்பானியர்கள் தேடினர். அதற்கு இரயில் பாதை அமைப்பது மட்டுமே ஒரு தீர்க்கமான வழியாக அமைந்தது. ஜப்பானியப் படைகள் ஜூன் 1942 இல் ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கின.

தாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்தில் இருந்து பர்மாவில் உள்ள தான்பியுசாயாட்  வரை ரயில் பாதை அமைக்கும் மாபெரும் திட்டம் இரு பிரிவுகளாக 1942 ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.
ஜப்பானுக்குப் போன போர்க் கைதிகள்.

ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாயாவைப் பொருத்த வரையில் தளவாடப் பொருட்கள் மலாக்கா, சிங்கப்பூர், கோத்தா பாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் எடுக்கப்பட்டு புதிய ரயில் பாதைக்கு பயன்படுத்தப்பட்டன.

1943 அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. அங்கு வேலை செய்த போர்க்கைதிகளில் பெரும்பாலோர் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனர்.ஒரு சிலர் மட்டுமே ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்கு தங்க வைக்கப்பட்டனர்.

நரகத்தீ கணவாய்

ரயில் பாதை கட்டுமானத்தில் (Hellfire Pass) எல்பையர் கணவாய் எனும் நரகத்தீ கணவாய் பகுதிதான் மிகவும் கடினமான பகுதியாகக் கருதப்படுகிறது. பெரும் பாறைகளை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நரகத்தீ கணவாய் பகுதி காடுகளின் மிக மிக உள்பகுதியில் இருந்தது. அத்துடன் கட்டுமான உபகரணங்களின் பற்றாக்குறை காரணத்தினாலும் வேலைகள் தாமதம் ஆயின.

ஆஸ்திரேலியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள், போர்க்கைதிகள், சீனர்கள், மலாய்க்காரர்கள், தமிழர்கள் போன்றோர் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வேலை தொடங்கிய ஆறே ஆறு வாரங்களில் 68 பணியாட்கள் ஜப்பானிய, கொரியக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். அதில் சிலர் காலரா, வயிற்றுப்போக்கு, பட்டினி, உணவில்லாமையால் இறந்து போயினர்.

கட்டுமானத்தின் போது தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமையான நிலைமைகள்; மற்றும் அதிகமான உயிர் இழப்புகள்; அதனால் அந்தக் கணவாய்க்கு நரகத்தீ கணவாய் என பெயர் வந்தது. தவிர, உடல் மெலிந்து நலிந்து போன போர்க் கைதிகளும்; ஆசியத் தொழிலாளர்களும்; கைவிளக்குகளைப் பயன்படுத்தி உழைக்கும் காட்சிகள், நரகத்தின் காட்சிகள் போல அமைந்து இருந்ததாலும் ’எல்பயர் பாஸ்’ என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டது.

குவாய் ஆற்றுப்பாலம்

சயாம் மரண ரயில்பாதையில் மிகவும் புகழ்பெற்றது 277ஆவது பாலம் என்று அழைக்கப்படும் குவாய் ஆற்றுப்பாலம் ஆகும். இந்திய தேசிய இராணுவம் இம்பாலில் போர் தொடுத்த சமயத்தில் ரயில் பாதை திட்டமிட்டபடி போடப்பட்டு விட்டது.

1943 பிப்ரவரி மாதம் முதல் மரப்பாலம் கட்டப்பட்டது.அதே பாலம் 1943 ஜூன் மாதம் இரும்புப் பாலமாக மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய விமானப்படையினர் இந்தப் பாலத்தின் மீது இரு முறை தாக்குதல்கள் மேற்கொண்டனர்.

நேதாஜி பயன்படுத்திய ரயில் பாதை

ஜப்பானியர் ரயில் பாதையைப் பயன்படுத்தினர். ரயில் வண்டிகள் ஓடின. பர்மா எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது நேதாஜி அந்த ரயில் பாதையைப் பயன்படுத்தினார். பிரித்தானியர் அந்த ரயில் இணைப்பைக் குறி வைத்தனர். குண்டுகள் வீசப்பட்டன.

சேதமுற்ற பகுதிகளைத் தொழிலாளர்கள் சீர்படுத்தினர். தாக்குதல் நடத்திய ஒரு சில வாரங்களில் பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு தரம் பெற்றது. 1943 ஜூன் மாதம் 27-இல் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் குவாய் ஆற்றுப்பாலம் முற்றாகச் சேதம் அடைந்து தகர்ந்த்து. மீண்டும் சீர்படுத்தி பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமுற்றது.

தண்டவாளங்கள் விற்பனை

ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் தாய்லாந்து-பர்மா எல்லையில் போடப்பட்ட 3.9 கி.மீ நீளத் தண்டவாளத்தை பிரித்தானிய இராணுவம் அப்புறப்படுத்தியது. அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தண்டவாளம் பொதுப் பயன்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் உகந்ததாக அமையவில்லை என்று பிரித்தானிய இராணுவம் முடிவு செய்தது. பின்னர் அந்தத் தண்டவாளங்கள் தாய்லாந்து ரயில்வே நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.


குவாய் ஆற்றுப்பாலம்.

சயாம் மரண ரயில்பாதையின் கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்கள் அடிமைகளை விட படுமோசமான, கொடூரமான முறைகளில் நடத்தப்பட்டனர். அவர்களின் குடியிருப்பு வசதிகளும் மிக மிக ஆரோக்கியமற்றவையாக இருந்தன. அவர்கள் பரிதாபத்திற்குரிய மனிதப் பிண்டங்களாக வாழ்ந்தனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தில் 330,000 பேர் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106,000 பேர் இறந்து போயினர்.

கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம்

சயாம் மரண ரயில்பாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், ஆசிய வேலைக்காரர்கள், போர்க்கைதிகள் போன்றவர்கள் தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிரா குறுநிலத்தில் கால்வாய் அமைக்க அனுப்பப்பட்டனர். பணியாட்களில் பலர் சுமத்திராவின் பலேம்பாங் ரயில்பாதையை அமைக்கவும் அனுப்பப்பட்டனர். ஆனால், கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அப்படியே கிரா குறுநிலக் கால்வாய் வெட்டப்பட்டிருந்தால், மலாயா தீபகற்பமும் ஆசிய பெருநிலமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். புவியியல், பொருளியல் ரீதியில் மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளின் தலையெழுத்துகளும் மாறிப் போயிருக்கும்.

போர்க்குற்றங்கள்

சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்க்குற்றமாக உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கட்டுமானத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்த ஹிரோஷி ஆபே (Hiroshi Abe) என்பவர் மீது தலையாய குற்றம் சுமத்தப்பட்டது. 3000 போர்க்கைதிகள் இறப்பதற்கு அவர் தான் மூலகாரணம் என்று குற்றப்பதிவுகள் எழுதப்பட்டன. போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கல்லறைகளும் நினைவுச் சின்னங்களும்

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்ததும் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த கல்லறைகள் அல்லது இடுகாடுகளில் புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 415 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதைத் தொடரில் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறுஅடக்கம் செய்யப்பட்டன. அவற்றுள் 667 அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன.

காஞ்சனாபுரி பிரதான கல்லறை

காஞ்சனாபுரியில் பிரதான கல்லறை (Kanchanaburi War Cemetery) இருக்கிறது. இங்கு 6,982 போர்க்கைதிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பான்மையோர் பிரித்தானிய, ஆஸ்திரேலிய, டச்சு, கனடிய போர்க்கைதிகள் ஆவர்.பிரித்தானியப் படையணியில் பணிபுரிந்த 11 இந்தியப் போர்வீரர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சூங் காய் எனும் இடத்தில் மற்றொரு கல்லறை (Chungkai War Cemetery) இருக்கிறது. இதில் 1,750 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். மியான்மாரின் தான்பியுசாயாட் (Thanbyuzayat) எனும் நகரில் 3,617 போர்க்கைதிகளின் கல்லறை இருக்கிறது.