Sunday, April 28, 2024

செய்தித் துளிகள்- 28.04.2024 (ஞாயிற்றுக்கிழமை)

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்: 

👉அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

🌅🌅2024 மே மாதம் நடைபெறவுள்ள துறை தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை வெளியீடு.

🌅🌅தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகின்ற விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயில விண்ணப்ப அறிவிப்பு வெளியீடு.

🌅🌅மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு.

🌅🌅வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர் உள்ளனர்.

🌅🌅பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு.

🌅🌅 2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: CBSE ஆயத்தப் பணி தொடக்கம்.

🌅🌅1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு.

🌅🌅JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

🌅🌅குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4

உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

🌅🌅நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூட விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

🌅🌅சேலம் பெரியார் பல்கலை. மாணவர் சேர்க்கை தொடக்கம்!.

🌅🌅கல்லூரி இறுதி நாளில் பேராசிரியரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத மாணவன்

விருதுநகரில் கல்லூரி இறுதி நாளன்று தனது பேராசிரியரை பிரிய மனமின்றி மாணவர் ஒருவர் கதறி அழுதுள்ளார்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, மாணவன் கணேஷ்குமார், தனது பேராசிரியர் மகேஷ்வரனை பிரிய மனமின்றி, அவரை கட்டியணைத்து அழுதுள்ளார்.

அவரை, சக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, பேராசிரியரிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

🌅🌅"எங்களுக்கு கல்வி வேண்டும்;"

இலவச புடவை வேண்டாம்" கவனம் ஈர்த்த பழங்குடி பெண்களின் போராட்டம்...

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி பெண்களின் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

🌅🌅வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவை: 

பொதுவாக, போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் போகும்; அதனடிப்படையில் 1 கணக்கிட்டால், காஸாவில் இடிபாடுகளில் மறைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து முழுமையாக அகற்ற 14 ஆண்டுகள் ஆகும் 

-ஐ.நா. கண்ணிவெடி அகற்றல் நிபுணர் பெஹர் லோதம்மர்

🌅🌅கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி அறிவிப்பு

'பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம்' 

-எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

🌅🌅இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

🌅🌅தமிழ்நாடு முழுவதும் Rehydration Points! 

👉தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், நீர்ச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோரை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுக்க 1000 இடங்களில்  ORS பாக்கெட்களை வழங்க சுகாதாரத் துறை உத்தரவு. ஜூன் 30 வரை மையங்கள் செயல்படும்.

🌅🌅வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது

மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது.

🌅🌅சென்னைவாசிகளுக்கு ஓர் அறிவிப்பு..! 

சென்னையில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமம் கட்டாயம் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு உங்கள் செல்லப்பிராணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

🌅🌅சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம் 

ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது - தமிழக அரசு

அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை  வழங்கலாம் - தமிழக அரசு.

 கையெழுத் பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள்,  இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை.

பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில்  இடம்பெறும் எனவும் அரசு அறிவிப்பு.

75 வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும்  என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம்  குறித்த அறிவிப்பு வெளியீடு.

🌅🌅உச்சநீதிமன்றத்தில் நோட்டோ விவகாரம்..

ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சந்திரசூட் கூறியதாவது: இந்த மனுவை விசாரிப்போம். நோட்டீஸ் அனுப்புவோம். இதுவும் தேர்தல் நடைமுறை தொடர்புடையது தான் எனக்கூறியதுடன் நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.                                                      🌅🌅தமிழகத்தில் மே 1 முதல் 9 மாவட்டங்களில் வெப்ப அலை

வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை

🌅🌅தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!"

"வெள்ள நிவாரணம் - வஞ்சிக்கும் மத்திய அரசு"

முதல்வர் ஸ்டாலின்

🌅🌅அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை"

பதில் மனு தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!"

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.

பாஜகவும், மத்திய அரசும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி, என்னை கைது செய்துவிட்டது

அமலாக்கத்துறையின் மனுவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

🌅🌅தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் அசத்திய தமிழ்நாடு போலீஸ் கிருஷ்ணமூர்த்தி

👉மூத்தோர் தடகள போட்டியில் கலக்கிய தமிழ்நாடு போலீஸ்!

மும்பையில் நடந்து வரும் தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியின் 5000 மீட்டர் நடை பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி (54)

லண்டன், கனடா உள்ளிட்ட இடங்களில் நடந்த உலக அளவிலான காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் 2 முறை தங்கமும், ஒரு முறை வெள்ளியும் நடை போட்டியில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌅🌅அதிகரிக்கும் வெப்பம் - சுகாதாரத்துறை உத்தரவு

"தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்"

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு

"கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும்" 

"உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்"

ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவு.

🌅🌅கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம்.

கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு.

இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

🌅🌅மே 2ல் மழைக்கு வாய்ப்பு

மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

🌅🌅கோடை காலத்தில் பொதுமக்களுக்கு இயன்ற உதவிகளை செய்க: 

கட்சியினருக்கு

பிரேமலதா வேண்டுகோள்

🌅🌅வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு!.

சென்னை - எழும்பூர் - நாகர்கோவில் ரயில்சேவை 

மே 2 முதல் ஜூன் 27 வரை நீட்டிப்பு

🌅🌅விசில் மூலம் பேசி கொள்ளும் கிராமம்

துருக்கி நாட்டின் ஒரு பகுதியான கிஸ்காய் எனும் பகுதியில் 10,000 பேர் வசிகின்றனர்.

அம்மக்கள் விசில் ஒலியை மொழியாக பயன்படுத்தி பேசுகிறார்கள்.

🌅🌅வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்:

ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது.                                             🌅🌅தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை

🌅🌅60 வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்ற பெண்!

“உலக அழகிக்கு வயது 60"

60 வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜந்திரா மரிசா ரோட்ரிகஸ். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுகிறார்.

உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது.

‘அழகுக்கு வயது வரம்பு இல்லை’ என ரோட்ரிகஸ் கூறுகிறார்.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்:-

👉1.)உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை

👉2.)இரவில் கண் விழித்திருத்தல்

👉3.)காலை உணவை தவிர்த்தல்

👉4.)ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்

👉5.)பணத்தை நோக்கிய ஓட்டம்

👉6.)பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்                         👉7.)கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்

👉வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்

👉கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல

👉நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.

👉தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

👉போதியளவு நீர் அருந்துங்கள்.

👉இளநீர் போன்றவை மிக நல்லது

👉பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

👉காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

👉அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

👉தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

👉யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

👉மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

👉இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

👉உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

👉அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

👉ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

👉மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.

No comments:

Post a Comment