Monday, April 29, 2024

கவிழ்தும்பை - தினம் ஒருமூலிகை

  


கவிழ்தும்பை.  தும்பை இலை வடிவில் சொரசொரப்பான வெளிய முழுமையான இலைகளையும் தனித்த வெளிர் நீலா(அ) வெளிர் சிவப்பு நிறம் உடைய கவிழ்ந்து தொங்கும் மலர்களை உடைய சிறு செடி செடி முழுவதும் மருத்துவ குணம் உடையது கவிழ் தும்பை இலை குருவை அரிசி சம அளவு இடித்து மாவாக்கி பனைவெல்லம் கலந்து அளவாக காலை மாலை மூன்று நாள் உட்கொள்ள பெரும்பாடு தீரும் 50 கிராம் சமூகத்தை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 250 மில்லி ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 125 மில்லியாக சாப்பிட்டு வர சீதபேதி மூட்டு வலி பால்வினை நோயால் ஏற்படும் கட்டிகள் ஆகியவை குணமாகும் இலையை தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும் பாஷாண வகையில் உள்ள ரசத்தை கட்டுப்படுத்துவதில் மிக வல்லமை வாய்ந்தது இம்மூலிகையில் செம்பு சத்து அதிகம் உள்ளது கழுத்து தோள்பட்டை முதுகு இடுப்பு முழங்கால் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் ஜவ்வின் பலகீனம் தசை பகுதிகளில் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுவதாலும் வீக்கங்களாலும் வலி ஏற்படுகிறது அந்த பலவிதமான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைக்கும்.

 நன்றி

No comments:

Post a Comment