Monday, April 29, 2024

கிராமத்து சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்

சிக்கன் -   3/4  கிலோ

பெரிய வெங்காயம் -2

தக்காளி - 2 

தேங்காய் துருவல்-  கால் மூடி

முந்திரிப் பருப்பு - 5 

மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்  - 6  ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்


வரக்கொத்தமல்லி - 6  ஸ்பூன்

காய்ந்த மிளகாய்-  10

சின்ன வெங்காயம் -  15

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1  ஸ்பூன்

சோம்பு - 1  ஸ்பூன்

அரிசி - 1  ஸ்பூன்

பட்ட - 2  துண்டு

 கல்பாசி - 2  துண்டு

ஏலக்காய் - 2 

 கிராம்பு - 3 



பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


கடாய் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போட்டு சிறிது வறுத்து விட்டு மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கல்பாசி,  கிராம்பு எல்லாம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து விட்டு அதனுடன்  அரிசி,   சின்ன வெங்காயம் இரண்டும் சேர்த்து   அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகி விடக்கூடாது .


வறுத்த பொருட்களை ஆற வைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


அதேபோல் தேங்காயும், முந்திரியையும்  தண்ணீர் சேர்த்து   அரைத்து வைத்துக் கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் உற்றி சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு கலர் மாறும் வரை வதக்கி விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.


தக்காளி நன்கு வதங்கியவுடன்  கொத்தமல்லி மசாலா விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு அதனுடன்  சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து  2 நிமிடம் வதக்க வேண்டும்.


பின்பு அதனுடன்  4  டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி சிக்கனை வேக விட வேண்டும்.


சிக்கன் நன்கு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு கடாயை முடி அடுப்பை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.


தேங்காய் பச்சை வாசனை போனவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் மிகவும் சுவையான கிராமத்து ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment