Thursday, November 30, 2023

பித்தபை கற்களுக்கு -நல்ல பஸ்பம்.

 பித்தபை கற்களுக்கு


தே.பொருட்கள்:-

சுத்தி செய்த வீரம் 25 கிராம்

சுத்தி செய்த கொடி பவளம் 200 கிராம் 


இவை இரண்டும் தனி தனியே பொடித்து கல்வத்திலிட்டு வெள்ளாட்டு பித்த பை நீர் விட்டு நன்கு அரைத்து காயவைத்து 10 எருவில் புட மிடவும். நல்ல பஸ்பமாகும்.


மேற்கண்ட பஸ்பத்தை தக்க அனுபானங்களில் கொடுக்க 10,15 நாட்களில் பித்தபை கற்கள் கரைந்து விடும்.


தீரும் நோய்கள்:-


காசம்,சுவாசம்,பித்த பை கோளாறு,ஆஸ்துமா,மஞ்சள் காமாலைமற்றும் கல்லீரல் கோளாறுகள் தீரும்.

உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪*


*🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*🟣


*🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*


*🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*


*🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.*


*🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*


*🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.*


*🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*


*🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.*


*🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*


*🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.*


*🟢10. நாட்டுக்கோழி  சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.*


*🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*


*🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.*


*🟢13.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.*


சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்

 


சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.


தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக் காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.


பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது.


சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். 


அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். 


சாதம் உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.


கொதிக்கக் கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். 


பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.


முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது. 


பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோராக கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும். 


சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும். 


பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல் குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். 


மோர் சாதம் செரிமானக்கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது. 


மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது. 


சம்பா சோறு வயிற்றுப் பொருமலுக்கு மிகவும் நல்லது. 


வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.


சக்கரை நோய்க்கு அரு மருந்து

 சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.


இனிமேலாவது இதற்கு செலவு செய்யும் பணத்தை உணவுக்காக செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் .


இதற்கான அரு மருந்து நம்மிடமே உள்ளது.


சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;


ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?


#உமிழ்நீர் தான்.


சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.


உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,

கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.


 

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். 

 

வாழ்வதற்காக  உண்டனர்.


அதனால்தான் பொறுமையுடனும்

 அமைதியுடனும்

 பொறுப்புடனும் உணவருந்தினர்.


அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.


 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.


அதேபோல் உணவு உண்பதற்கு

30 நிமிடம் முன்னதாகவும்


 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்


 நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*


நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.


தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது. 

 

நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.


 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.

 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,


 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

 

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,


 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். 


நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.


உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.


நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.

 

சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.


 எனவே,

நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.


 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்....

அருநெல்லி-தினம் ஒரு மூலிகை

 


*அருநெல்லி* தோட்டங்களில் பயிர் செய்யப்படும் சிறு மற வகை அடர்த்தியான இலைகளையும் புளிப்பு சுவை மிகுந்த உருண்டை வடிவ காய்களை உடையது இதன் இலை காய் விதை வேர் மருத்துவ பயன் உடையவை இலை வியர்வை பெருக்கியாகவும் விதை மலமிளக்கியாகவும் காய் பித்தத்தை சமன் செய்யவும் குளிர்ச்சி உண்டாக்கவும் பயன்படும் 10 கிராம் இலையை அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து உப்பில்லா உணவு கொள்ள காமாலை தீரும் தொடர்ந்து பயன்படுத்தி வர கண் ஒளி பெறும் இலையை 10 மடங்கு நீர் சேர்த்து நாளில் ஒன்றாய் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை காலை மாலை உணவுக்கு முன் முப்பது மில்லி அளவு சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும் வெள்ளை வெட்டை குணமாகும் விதை நீக்கிய காய்களை துவையலாய் அரைத்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர வுட் சூடு மிகு பித்தம் மிகு தாகம் ஆகியவை தீரும் நெல்லிக்காய் சாறுடன் இரண்டு மடங்கு சர்க்கரை சேர்த்து மனப்பாகாக்கி 15 இல் இருந்து 30 மில்லி அளவாக தண்ணீரில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர உச்சூடு மிகு பித்தம் மிகு தாகம் ஆகியவை தீரும் நன்றி.

வெண்தாமரை சூரணம்

தேவையானவை*


1. ஏலரிசி-25கிராம்

2 . சுக்கு-50 கிராம்.

3. திப்பிலி-75 கிராம்

4.அதிமதுரம்-100 கிராம்

5. சதகுப்பை -125 கிராம்

6. சீரகம்-150;கிராம்

7.வெண்தாரை பூஇதழ் -300 கிராம். 


*செய்முறை*


கடைசரக்குகளை சுத்திசெய்து பின் வறுத்து கொள்ள வேண்டும். தாமரை பூவில் காம்பு, மகரந்தத்தை நீக்கி பொடி செய்து,இதற்கு சம அளவு

பன கற்கண்டு சேர்த்து கொள்ளவும்


*சர்க்கரை நோயளிக்கு விதிவிலக்கு*


*தீரும் நோய்கள்*


இரத்த கொதிப்பு, இரத்த கொழுப்பு அடைப்பு, நுரையிரல் பிரச்சனை ,நடந்தால் மூச்சு வாங்குதல். இருதயம் பலவீனம், இருதயத்தில் வரும் அடைப்பு ,இருதய பிரச்சணையால் இரத்தம் உரைதல்


மூளையில் வாதம், பிரம்மி நெய்யின் பயன்கள் அனைத்தும்,  இந்த தாமரை கரணம் வேளை செய்யும்.


அறிவு மந்தம், திக்குவாய், கவனகுறைவு , மன பதட்டம் ,பீதி,குழப்பம், பயம் , ஞாபக மறதி,போன்றவை குணமாகும்.


சீரண பிரச்சனைக்கு உகந்தது

இதையே லேகியமாகவும் செய்யலாம்.

அலிசிவிதை-தினம் ஒரு மூலிகை

 *

* *அளிவிதை* (அ)அலிசிவிதை சிறு செடியினம் சிறிய நீண்ட இலைகளையும் வெள்ளை நீளம் முதலிய நிறங்களில் பூவும் உருண்டையான காய்களையும் பளபளப்பான கடின ஓடுடைய சிறு விதைகளை உடையது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையிலிருந்து என்னை எடுக்கப்படுகிறது மலர் விதை எண்ணை ஆகியவை மருத்துவ குணம் உடையது.

 காமம் மிகுத்தல் சளி அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது இதயத்தை வளமாக்கும் விதை பொடித்து நல்ல நீரில் ஊற வைத்து வடிகட்டி கண்ணில் லிட்டு வர கண் எரிச்சல் கண் சிவப்பு கண் அரிப்பு ஆகியவை தீரும் விதை பொடியை ஊற வைத்து வறுத்தெடுத்த குழம்புடன் தேன் கலந்து கொடுக்க நீர்கோவை இருமல் தீரும் ஒரு குவளை நீரில் 10 கிராம் விதையை பொடித்து ஓர் இரவு ஊற வைத்து காலையில் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து பருகி வர இளைப்பு அழலை வியர்வை ஆகியவை தனியும் விதையை பொடித்து களியாக்கி கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்டி வர விரைவில் பழுத்து உடைந்து ஆறும் வயிறு நெஞ்சு முதலிய வலிக்கும் இடங்களில் தடவி வர குணமாகும் .


நன்றி

கொடுக்காய் புளி-தினம் ஒரு மூலிகை



கொடிக்காய் என கூறினால் பலருக்கு தெரியாமலே இருக்கலாம். கொடுக்காபுளி  என சொன்னதும் எல்லாருக்கும்  உடனே ஞாபகம் வரும்.

இது ஒரு மரமாக இருந்தாலும்,இதன் காய்கள் கொடிபோன்று தொங்கும் கிளைகளில் காய்த்து தொங்குவதால் இதனை கொடிக்காய் என்கின்றனர்.

கொடி போல நீண்டு சுருண்டு நடுவில் கொட்டையும் புறத்தில் மெலிதான சதைப்பற்றும் மேலே பாதுகாப்புக் கவசமாகத் தோல் பகுதியையும் கொண்டுள்ள இப்பழம் கிட்டத்தட்டப் புளியம் பழத்தை ஒத்திருப்பதால் கொடுக்காப் புளி பழம் என்றும் பரவலாக அறியப்படுகிறது.


தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் கூளம் பழம், சீனிப் புளியம்பழம், கொறுக்காப் பழம், கோணபுளியம்பழம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கொடுக்காப்புளி பழமானது நமது வழக்கமான பழங்களைப் போலத் தீஞ்சுவை உடையது அல்ல. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய முதன்மைச் சுவைகளோடு மற்ற சுவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உண்ணும் பொருள் எதில் பல்வேறு சுவைகளும் ஆதிக்கமின்றி கலந்த நிலையில் சேர்ந்துள்ளனவோ அதில் சத்துக்கள் பலவும் கூட்டணி அமைத்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

சிறு வயதில் பள்ளி ரோட்டில் ஒரு சிறிய கடை வைத்து இந்த கொடுக்காபுளியை விற்றிருப்பார்கள்.

அதற்கு பின்னால் வெறும் வியாபாரம் மட்டும் இல்லை. மருத்துவமும் இருக்கின்றது. 

சிறு குழந்தைகள் இதை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீர்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமலும் அதை குணப்படுத்தவும் செய்கிறது இந்த கொடிக்காய். 

கொடுக்காய் புளி கல்லீரலில் உள்ள அனைத்து நச்சுப்பொருட்களையும் நமது உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.

குடல் புண்ணை ஆற்றுவதில் வேறெந்த பழங்களையும் விட, வேறெந்த மருந்தையும் விட அளப்பரிய துணை செய்கிறது கொடுக்காப்புளி. கொடுக்காப்புளியில் உள்ள துவர்ப்புச் சுவை தளர்ந்த குடலை இறுகச் செய்வதன் மூலம் பெருங்குடலை நிரந்தரமாக குணப்படுத்தி விடுகிறது. 

இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதயத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்சனைகளிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிக்கு ஒரு முக்கிய மருந்துபொருள் இந்த கொடுக்காய்புளி. சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கக்கூடிய 30% மருந்தின் பயன் இந்த கொடிக்காயில் அடங்கியிருக்கிறது.

இதன் இலையிலும் இன்சுலினுக்கு நிகரான சத்து அடங்கியிருக்கிறது.

குறிப்பாக இதன் இலையை வைத்து தயாரிக்க கூடிய கசாயம், ஆண், பெண் மலட்டுத்

தன்மையை குணமாக்கும்.இதில் இருக்கும் விதை அல்சரை குணமாக்க பயன்படுவதாகும் என ஆய்வுகள் சொல்லுகிறது.

தினமும் மூன்று கொடிக்காயை சாப்பிட்டால் எழும்பு பலவீனம், ரத்த சோகை நீங்கும்.

கொடுக்காய்ப்புளி மரம் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துவதுடன் ஆண்டுக்கு 180 கிலோ பிராண

வாயுவையும் அளித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது.

நமது மண்ணில் இயற்கையாக வேர் விடும் எதுவும் ஒற்றைப் பலனோடு நின்று விடுபவை அல்ல. பன்முகப் பயன் தருபவை. எனவே அந்தப் பின்னணி கொண்டு அவற்றைப் பாதுகாப்பதும், பயன்படுத்துவதும் வருங்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்களாக இருக்கும்...!! 

அநேக நோய்களுக்கு முதன்மைக் காரணம்

இருப்பதை வைத்து நன்றாய் வாழ தெரியாமல் உலகத்தின் போலி விளம்பரங்களை நம்பி ஓடுகிறது இன்றைய சமுதாயம்.🪷*_


_*🪷🦜🪷 ஓய்வையும், தூக்கத்தையும் தொலைப்பதே அநேக நோய்களுக்கு முதன்மைக் காரணம் என்கிறது ஆய்வுகள்.🪷*_


_*🪷🦜🪷 நன்றாய் சம்பாதித்துவிட்டு நிம்மதியாய் ஓய்வெடுக்க போகிறேன் என்பான். இறுதியில் பெற்ற வசதியையும், அந்தஸ்தையும் தக்க வைக்க மரணம் வரை ஓடிக்கொண்டே இருப்பான்.🪷*_


_*🪷🦜🪷 குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடியாமல், குடும்பத்திற்காக ஓடுகிறேன் என்று சொல்வதில் என்ன பிரயோஜனம்?🪷*_


_*🪷🦜🪷 சமைப்பதற்கும்  சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லாத அளவிற்கு பணி செய்கிறோம் என்றால் நாம் மனிதர்கள் அல்ல! விலைக்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள்...🪷*_


_*🪷🦜🪷  அனைவருக்கும்  குரு பகவான்  அருளுடன் கூடிய  இனிய  வியாழக்கிழமை   காலை வணக்கங்கள்  பல.🪷*_


_*🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷*_


_*🪷🦜🪷  தங்களைச் சார்ந்த  அனைவரும் அவரவர்  குலதெய்வத்தின்  அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம்  பிரார்த்தனை செய்கிறோம்.🪷*_


Wednesday, November 29, 2023

வரலாற்றில் இன்று 29/11/2023

*நவம்பர்  29*

*புதன்கிழமை*


 *கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம்  நாளாகும்.*

*நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள்.*

*ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.*


*# முக்கிய நிகழ்வுகள் #*


1516

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஃப்ரீபர்க் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


1549

போப் பால் III இன் மரணத்திற்குப் பிறகு, முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான கார்டினல் இயக்குநர்களைக் கொண்ட போப் கான்க்லேவ், ஃபேசல் வாரிசைத் தீர்மானிக்கிறது.


1745

போனி இளவரசர் சார்லியின் இராணுவம் மான்செஸ்டருக்கு வந்து கார்லிஸைக் கைப்பற்றியது.


1759

டெல்லியின் பேரரசர் இரண்டாம் ஆலங்கீர் கொல்லப்பட்டார்.


1760

பிரெஞ்சு தளபதி பெல்லரே டெட்ராய்டை மேஜர் ஆர். ரோஜர்ஸிடம் சரணடைந்தார்.


1775

சர் ஜேம்ஸ் ஜே கண்ணுக்கு தெரியாத மை கண்டுபிடித்தார்.


1776

அமெரிக்க புரட்சிகர போர்-பிரிட்டிஷ் வலுவூட்டல் நோவா ஸ்கோடியாவில் கம்ப்லாண்ட் கோட்டையை கைப்பற்றிய தேசபக்த முயற்சிக்கு ஒரு திட்டம் வந்தது.


1777

எல். பியூப்லோ டி சான் ஜோஸ் டி குவாடலூப், முதல் சிவில் அகற்றல், இது அல்டா கலிபோர்னியாவின் ஸ்பானிஷ் காலனித்துவ காலனியாக இருந்தது, இது ஒரு விவசாய சமூகமாக நிறுவப்பட்டது.


1781

நெரிசலான பிரிட்டிஷ் அடிமைக் கப்பலான Zong இன் பணியாளர்கள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்க அடிமைகளை கடலில் வீசினர்.


1782

அமெரிக்காவின் சுதந்திரத்தை பிரிட்டன் அங்கீகரித்தது.


1807

போர்த்துகீசிய ராணி மரியா மற்றும் நீதிமன்றம் லிஸ்பானில் பிரேசிலுக்குச் செல்கிறது, ரியோ டி ஜெனிரோ போர்த்துகீசிய தலைநகரானது.


1830

போலந்தின் ஆட்சிக்கு எதிரான நவம்பர் கிளர்ச்சி  தொடங்கியது.


1847

அமெரிக்க பழங்குடியினரால் கியூஸ்கேட்டர்கள் மற்றும் உமட்லா பூர்வீகவாசிகளை கக்குவதன் மூலம் ஓரிகான் மிஷனரிகள் மார்கஸ் மற்றும் நர்சிசா விட்மேன் ஆகியோரால்  ஒருவர் கொல்லப்பட்டார்.


1854

ஆஸ்திரேலியாவில் EurkeastockD கிளர்ச்சியின் போது முதன்முறையாக யுரேகா கொடி ஏற்றப்பட்டது.


1870

பிரித்தானியாவில் அத்தியாவசிய கல்வி நடைமுறைக்கு வந்தது.


1877

கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முதன்முறையாக தனது ஃபோனோகிராப்பைக் காட்சிப்படுத்தினார்.


1890

ஜப்பானின் உணவுமுறை (அமர்வில் சித்தரிக்கப்பட்டுள்ளது), ஜெர்மன் கோரிக்கை மற்றும் பிரிட்டிஷ் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பு ஆகியவை இருதரப்பு சட்டமன்றத்தைத் தொடங்கின, இது மீஜி அரசியலமைப்பின் செல்வாக்கின் கீழ் வந்த பிறகு முதல் முறையாக சந்தித்தது.


1899

FC பார்சிலோனா கால்பந்து கிளப் சங்கம் நிறுவப்பட்டது.


1899

எஃப்சி பார்சிலோனா, ஸ்பானிஷ் கால்பந்தின் மிகவும் வெற்றிகரமான கிளப்புகளில் ஒன்றாகும், இது சுவிஸ் கால்பந்து முன்னணி மண்டல கேம்பரால் நிறுவப்பட்டது.


1932

சோவியத் யூனியனும் பிரான்சும் ஒருவரையொருவர் தாக்காமல் இருக்க முயன்றன.


1947

யூதர்களையும் அரபு நாடுகளையும் பிரிக்கும் திட்டத்தை அங்கீகரிக்கிறது, பாலஸ்தீனத்திற்கான பாலஸ்தீனத்தின் பிரிட்டிஷ் ஆணையத்தில் அரபு-இஸ்ரேலியப் போராட்டத்தைத் தீர்க்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பாலஸ்தீனத்திற்கு வாக்களித்தது.


1949

கிழக்கு ஜெர்மனியில் யுரேனியம் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3700 பேர் பலியாகினர்.


1963

மாண்ட்ரீலில் இருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, டிரான்ஸ்-கனடா ஏர்லைன்ஸ் விமானம் 831 விபத்துக்குள்ளானது, இதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.


1972

ஆர்கேட் மற்றும் ஹோம் கன்சோல் சந்தையில் பிரபலமடைந்த முதல் வீடியோ கேம்களில் ஒன்றான பாங்கை அட்டாரி வெளியிட்டார்.


1973

ஜப்பானின் குமாமோட்டோ நகரில் உள்ள கியூஷுவில் உள்ள தையோ பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 104 பேர் உயிரிழந்தனர்.


1977

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் யூனிஸ் கான் பிறந்தார். 111 டெஸ்டில் 33 சதங்களுடன் 9666 ரன்கள் எடுத்துள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 7249 ரன்கள் எடுத்துள்ளார்.


1987

கொரிய ஏர் ஃபிளைட் 858 அந்தமான் கடலில் வெடித்து சிதறியது, அப்போது இரண்டு கொரிய முகவர்கள் மேல்நிலைப் பெட்டியில் டைம் பாம்பை விட்டுச் சென்றதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.


1993

தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடா காலமானார்.


2005

புதிய குரோஷிய கம்யூனிஸ்ட் கட்சி வுகோவரில் நிறுவப்பட்டது.


2005

லெசோதோ அரசாங்கம் தனது குடிமக்கள் அனைவருக்கும் ஹெச்.ஐ.வி பரிசோதனைகளை இலவசமாக வழங்குகிறது. எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்கும்  நோக்கத்துடன், இது உலகின் முதல் திட்டமாகக் கருதப்படுகிறது.


2006

கடந்த சனிக்கிழமை, பஹ்ரைன் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில், ஷியா எதிர்க்கட்சியான அல்-வஃபாக் தலைவர், அமைச்சரவை மாற்றத்தின் அரசாங்கத்தில் சேருவார் என்ற வதந்திகள் மூலம் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர்.


2007

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை வரவேற்று அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ், அவசரகால விதியை நீக்குமாறு வலியுறுத்தினார்.


2007

2003 ஆம் ஆண்டு ஓக்வுட் முட்டினுக்காக செனட்டர் அன்டோனியோ டிரில்லியன் தலைமையிலான பிலிப்பைன்ஸ் துருப்புக்கள் பிலிப்பைன்ஸ் அன்டோனியோ டிரில்லியன் சோதனைக்காக சோதனை செய்யப்பட்டது மற்றும் தி பெனிசுலா மணிலா ஹோட்டலில் ஒரு கிளர்ச்சி மற்றும் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட அறையை கைப்பற்றினர்.


2008

நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


2009

பனிப்பாறையில் புவி வெப்பமடைதலின் தாக்கத்தை எடுத்துக்காட்டுவதற்காக எவரெஸ்ட் சிகரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப்போவதாக நேபாளம் தெரிவித்துள்ளது.


2010

கென்யாவின் டேவிட் குரியாவின் ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியன் கூட்டணி, நாட்டின் ஓரினச்சேர்க்கையாளர்களை அருகாமையில் கைது செய்வதை அறிவித்த பின்னர் கெனாய் பிரதமர் ரெலா ஒய்டிங்கை விமர்சித்தது.


2011

வொரோனிஷ்-டிஎம் ரேடார் பொருத்தப்பட்ட புதிய ரஷ்ய மெசைல் எதிர்ப்பு முன் எச்சரிக்கை வசதி கலினின்கிராட் ஓப்லாஸ்டில் திறக்கப்பட்டது.


2012

பிரெஞ்சு தரப்பில் இருந்து பிரெஞ்சு தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, சேனல் சுரங்கப்பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ரயிலில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.


2012

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது.


2013

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள கிளாட் ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள நெரிசலான மதுபான விடுதியில் பொலிஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


2014

ஒரு மக்கள் இயக்கத்திற்கு, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசியை சங்கம் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.



*#     இந்தியா     #* 


1729

அமெரிக்காவின் மிசிசிப்பியில் Natashez-Day அருகே இருந்த பிரெஞ்சு குடியேற்றவாசிகளுக்கு எதிராக நெட்ச் செய்யப்பட்ட இந்தியர்கள் திடீரென கிளர்ச்சி செய்தனர், 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


1864

அமெரிக்கன் இந்தியன் வார்ஸ்-700-கொலராடோ டெரிட்டரி போராளிகள் செயன் மற்றும் அரபாஹோவில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கி, 133 செயன் மற்றும் அரஃபாவோ ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றனர்.


1961

உலகின் முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் இந்தியா வந்தார்.


1970

நூறு சதவீத கிராமப்புற மின்மயமாக்கலை எட்டிய முதல் இந்திய மாநிலம் ஹரியானா.


1989

அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பதவி விலகினார்.



*#    முக்கிய நாட்கள்      #*


பாலஸ்தீன மக்களின் சர்வதேச ஒற்றுமை தினம் /

சர்வதேச தினம்


சர்வதேச ஜாகுவார் தினம் /

சர்வதேச தினம்



*#     பிறந்தநாள்     #*


1935

குர்பச்சன் சிங் சலாரியா /

சிப்பாய் /

இந்தியா


1963

லலித் மோடி /

பிசினஸ் மேன் /

இந்தியா


1989

சித்ராஷி ராவத் /

நடிகை /

இந்தியா



*தொகுப்பு...*


*# மகதி -மகிழ்நன்#*

Tuesday, November 28, 2023

திருமணம் வணிகமா? வாழ்வா?

            35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 100க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்


30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.


காரணம் எதிர்பார்ப்பு அதிகரித்ததே

அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் ஒருசில ஏக்கர் இருக்க வேண்டும்.


அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.


குறைந்தது 75,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.


பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்களும் அவர் வீட்டாரும் விரும்புவதில்லை


வீட்டுக்கு ஒரே பையனாக இருந்தால் நல்லது தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் #விஜய், #அஜித், #சூர்யா போல் இருக்க வேண்டும்.


ஆண்களின் எதிர்பார்ப்பு

பெண்ணின் தந்தை செல்வந்தராக இருக்க வேண்டும் பெண் பெயரில் நிறைய சொத்தும்  சம்பாதிப்பவளாக வும்

இருக்க வேண்டும்,எல்லாவகையிலும் ஆணை அனுசரித்து நடக்கவேண்டும்

இறுதியாக பெண் நயன்தாரா,

அனுஷ்கா,

தமன்னா போலிருக்க வேண்டும்.


1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று எண்ணி இருந்தால் இந்த தலைமுறையே  இருக்காது.


இதன் விளைவுகள்  திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிக அளவில் இருப்பது.


ஒரு வகையில் ஜாதகமும் திருமணத்திற்கு தடங்கலாக இருக்கிறது.


மேலும் சில தகவல்கள்.........


1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலர் 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.


1980க்கு பின் 80விழுக்காடு இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டனர். 

எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.


2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.


ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.


இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..


1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்

உணவு:- ராகி, கம்பு, சோளம்.


1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22. 

உணவு:- அரிசி


1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25

உணவு:- பட்டை தீட்டப்பட்ட அரிசி.


2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..

உணவு:- துரித உணவு.


2010க்கு மேல்

மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு

தரம் குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உட்கொண்டதன் விளைவால் மலட்டுத்தன்மை மற்றும் நோயின் தாக்கம் அதிகரித்தது.


இந்நிலையில் பெண்கள் 28வயதுக்கு  மேல் 35 வயது வரையிலும் ஆண்கள்

30 வயது முதல் 40 வயது வரையிலும்

திருமணம் ஆகாமல்  அதிகளவில் இருக்கிறார்கள்.


வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.


திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். 

முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து, திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் ஏராளம்.


எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மட்டும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யுங்கள்.


குடும்பம் மிக முக்கியமானது

அதற்கு பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.


கல்வியறிவு, ஒழுக்கம், நல்லகுணம், சுறுசுறுப்பு, உழைக்கும் எண்ணம் உள்ள ஆணா, பெண்ணா 

என கண்டறிந்து மண முடியுங்கள்...

வாழ்க்கை இனிமையா கும்.

மகிழ்ந்திருங்கள் வாழ்த்துகள்.


படித்ததில் எனக்கு பிடித்தது,

அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

ஒரு குருவிக் கூடு

 


ஒரு குருவிக் கூட்டில்  இறந்து கிடக்கும் குஞ்சுப் பறவைகள்தான் இவைகள்..!


தீனி வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் தீனி தேடிச் சென்ற தாய்க் குருவி ஏதாவது ஒரு தீய சக்தியால் சாகடிக்கப்பட்டிருக்கலாம்!


ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!


நீங்கள் ஒருவரின் சம்பளத்தை வழங்காமல் இருக்கும் போதெல்லாம் அவரது குடுபத்தவர்களையும் பசியில் போடுகிறீர்கள். 


நீங்கள் ஒருவரின் உரிமையை அபகரிக்கும் போதெல்லாம் அவர் குடும்பத்தின் உரிமையையும் அபகரிக்கிறீர்கள்.


நீங்கள் ஒருவரை மானபங்கப்படுத்தும் போதெல்லாம் அவரது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் மானபங்கப்படுத்தி விடுகிறீர்கள். 


வாழும் போது நம்மை சூழவுள்ள 

மனிதர்களுக்கும், மற்ற உயிருள்ள ஜீவன்களுக்கும் தொந்தரவுகள் கொடுக்காமல் வாழப் பழகுங்கள்! மனிதாபிமானத்தோடு அனுகுங்கள்..


ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!  தீதும் நன்றும் பிறர்தர வாரா..


 *நாம் இவ்வுலகில் இருக்கும் வரை மனிதம் வளர்ப்போம்...!*

வாழை இலையின் பயன்கள்


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.


3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.


4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி

காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்

விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை

சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.


5. காயம், தோல் புண்களுக்கு

தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு

மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.


6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.


7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.


தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது

சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்

இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு

இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில்

தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால்

ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.


ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும்

போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற

முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது

ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் குத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி

வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.


வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து

அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Sunday, November 26, 2023

அன்பு அடிமரம், அருள் கிளைமரம்!

-சுப வீரபாண்டியன்

இளந்தமிழ் நூல்கள் ஏழினையும், நாம் அனைவரும் படிக்க வேண்டும் என்பது ஒரு தொடக்கமாக மட்டுமே! 

இன்னும் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட, இன்றும் எழுதப்பட்டு வருகின்ற எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவை எல்லாவற்றையும் நம் வாழ்நாளில் படித்து முடித்து விட முடியாது.

தேர்ந்தெடுத்து, மிகச் சில இலக்கியங்களையாவது நாம் படித்தாக வேண்டும். 2013 ஆகஸ்டில், லண்டனில் நடைபெற்ற, உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்திய ஆய்வு- மாநாட்டில் பேசும்போதுகூட, நான் இந்தக் கருத்தை வலியுறுத்தினேன்.

வெளிநாடுகளில் வாழ்வோர் உள்பட அனைவரும், திருக்குறள் போன்ற செவ்விலக்கியங்களைக் கற்க வேண்டும் என்றேன். குழந்தைப் பருவத்திலிருந்தே குறளை ஊட்டுங்கள் என்றேன்.அங்கு வாழும் பிள்ளைகள் சிலர், "திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா?" என்று கேட்டனர். கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால் கிடைத்த வேலை நிலைக்கும் என்பது அதனினும் உண்மை. குறள் படித்தால் வேலை நிலைக்கும், புதிய உறவு கிளைக்கும், வாழ்வு செழிக்கும்! காரணம், திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். எந்த மண்ணிலும், எந்த ஒரு மொழி பேசும் மக்களோடும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதையும், எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும் திருக்குறள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும். 

"சேர்ந்து வாழ்தல்" என்பது உலகியல் நோக்கில் ஒரு நாளும் தவிர்க்க இயலாதது. விரும்பியோ, விரும்பாமலோ மனிதர்கள் சேர்ந்தே வாழ வேண்டியுள்ளது. ஆணும், பெண்ணும் சேர்ந்து, அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து, அவர்களைப் பெற்றவர்களை மறந்துவிடாமல் பெற்றோரோடு சேர்ந்து, இரு வழி வந்த உற்றார், சுற்றத்தினருடன் சேர்ந்து, முன்பின் அறியாதவர்களுடன் நட்பு ஏற்பட, அந்த நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிகளில், தொழிலகங்களில், அண்டை வீடுகளில் நமக்கு நேரெதிரான குணமுடையாரோடு உறவாட நேர்ந்தால், அவர்களுடனும் சேர்ந்து நம் வாழ்வு நகர்வதையே ‘சேர்ந்து வாழ்தல்' என்கிறோம்.

உலகிலேயே மிகப்பெரிய அதிசயம், மனிதர்கள் இருவர் சேர்ந்து வாழ்வதுது£ன்! ஏனெனில், உலகில் 700 கோடி மக்கள் உண்டெனில், 700 கோடிக் குணங்களும் உண்டு. ஒருவரைப் போல மற்றவர் இல்லை. இருக்க முடியாது. இருக்க வேண்டியதுமில்லை. "முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் & இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று பாரதியார் கூறுவதெல்லாம் அவருடைய பெருநோக்கையும், பெரு விருப்பத்தையும் காட்டுகின்றதேயன்றி, வாழ்வியல் நடைமுறையைக் காட்டவில்லை. 

உயர்ந்த இடம் நோக்கிச் சமூகத்தை உந்தித் தள்ளும் கவிஞரின் போக்கு அது! உண்மை என்னவோ தாழ்வான இடத்தில்தான் இருக்கிறது.

‘தான்' என்னும் உணர்வு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனிடமும் ஊறிக் கிடக்கிறது. ஆனால் எந்த ஒருவராலும் தனித்து வாழ இயலாது என்பதால், சேர்ந்து வாழும் நடைமுறை உலக நடப்பாக உள்ளது. சேர்ந்து வாழும் வாழ்விற்கு, மிகப்பெரிய பொறுமையும், விட்டுக்கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. 

ஓட்டமும், போட்டியுமாக மாறிவிட்ட உலகில், எதனையும் பொறுமையாக அணுக நமக்கு நேரமில்லை. விரைவுப் பயணம், விரைந்து முடிவெடுத்தல், உடனடி உணவு (Fast Food) என்று பல்வேறு விரைவுகளுக்கிடையில், உறவுகளையும், உணர்வுகளையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்! காலை நேரங்களில், சென்னை போன்ற மாநகரங்களில் நடைப்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை இன்று வெகுவாகக் கூடியுள்ளது. அப்போது கூட, மரங்களை, மலர்களை ரசித்தபடி நம்மால் நடக்க முடிவதில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி, மணி பார்த்து நடக்கிறோம். 

அரை மணி நேரமாவது நடந்தாக வேண்டுமே என்ற அவசரத்தில் நடக்கிறோம். கடிகார முட்கள் நம்மைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நின்று நிதானமாக நண்பர்களுடன் பேச நேரமில்லை. ஒரு மாதத்திற்கு ஓரிரு முறையேனும் உறவினர்களைச் சென்று பார்த்து வர நேரமில்லை. 

எந்தப் பயனையும் எதிர்பாராமல், இரண்டு கவிதைகளைப் படிக்க நேரமில்லை. வேலைகளை நாம் தீர்மானிக்க வேண்டும். வேலைகள் நம்மைத் தீர்மானிக்கக் கூடாது. "என்ன செய்வது....வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாள்கள், காலை முதல் இரவு வரை அலுவலக வேலைகள். ஞாயிற்றுக் கிழமைகளிலும் உறவினர்களைப் பார்க்கப்போனால், உருப்படியாக வீட்டு வேலைகளை யார் பார்ப்பது? காலையில் எழுந்து கவிதை படித்துக் கொண்டிருந்தால், காரியங்களை யார் செய்வது?" என்று கேட்பது, நியாயம் போலத் தோன்றும். ஒருநாள் இரவு, உறங்குவதற்கு முன், ஒரு பத்து நிமிடங்களை ஒதுக்கி, ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்தால் உண்மை புரியும். அன்று காலை கண் விழித்தது தொடங்கி, உறங்க வந்த நேரம் வரையில், எந்த எந்த வேலைகளுக்கு, எவ்வளவு எவ்வளவு நேரத்தை ஒதுக்கினோம் என்னும் சிறிய கணக்கைப் போட்டுப் பாருங்கள். உண்மை புரியும். படிக்க மனமில்லாமலோ, படிக்கும் பழக்கம் இல்லாமலோதான் இருந்திருப்போமேயன்றி, படிக்க நேரமில்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பது மட்டுமில்லை, உறவுகளைச் சென்று காண்பதும் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதிதான். முன்னைப்போலக் கூட்டுக் குடும்பங்களாக இன்று சேர்ந்து வாழ முடியவில்லை. 
\
பெற்றோர்களைக் கூட நம்மில் பலர் பிரிந்துதான் வாழ்கின்றோம். போகட்டும், மீண்டும் பழைய காலத்திற்கு நம்மால் திரும்ப முடியாது. ஆனால் அவர்களைச் சென்று சந்தித்து உரையாடக் கூடவா நம்மால் முடியாது? பொருளாதார வளம் உடையவர்கள், ஏழ்மையில் வாழும் தங்கள் உறவுகளுக்கு உதவவில்லையென்றால், அவர்களைவிடப் பேதைகள் யார் என்று கேட்கிறார், வள்ளுவர். உறவுகளுக்கே உதவிக்கொண்டிருப்பது தன்னலமாயிற்றே என்று எண்ண வேண்டாம். தன்னலம் இல்லாமல் பொதுநலம் இல்லை. தன்னிலிருந்து தொடங்கும் பற்று, குடும்பப் பற்றாய், உறவினர் மீதும், சமூகத்தின் மீதும் கொள்ளும் பற்றாய், நாட்டு, உலகப் பற்றாய் விரிதல்தான் இயல்பு. உலகம் என்னும் பெரிய அமைப்பில், குடும்பம் என்பது ஒரு மிகச் சிறிய அலகு (Unit). சிறிய அளவிலிருந்துதான், பெரிய அளவுகள் விரியும். தன் உற்றார், உறவினர், நெருங்கிய, தூரத்துச் சொந்தங்கள் ஏழ்மையில் வாடும்போது, ஊருக்கெல்லாம் உதவப் புறப்படுகிறேன் என்று சொல்பவர் ‘பேதை' என்பதே வள்ளுவர் கருத்து. "ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்" என்று நான்கு சொற்களில் வள்ளுவர் அந்த உண்மையை விளக்குகின்றார். 

நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத பிறருக்கு(ஏதிலார்) உதவுவதில் பிழையில்லை. 

ஆனால் அதற்கு முன் தம்முடையவர்கள் (தமர்) பசித்திருப்பதைப் பார்க்க வேண்டாமா என்கிறார். ‘ஆர' என்றால் நிறைந்திட என்று பொருள். ‘மனமார, நெஞ்சார வாழ்த்துகிறோம்' என்றும், ‘அவன் வயிறார உண்டான்' என்றும் சொல்கிறோம் இல்லையா. 

அப்படி மற்றவர் மனமும், வயிறும் நிறைந்திட உதவப் புறப்படுகின்றவர் முதலில் தம் அருகில் இருப்பவர்களை அல்லவா நினைத்திருக்க வேண்டும்? ஏன் இந்த ‘தூரத்துப் பார்வை?'. வேறொன்றுமில்லை, வெளியில் உதவினால் விளம்பரம் கிடைக்கும். வீட்டிற்குள் உதவினால் வெளிச்சம் கிடைக்காது. அதனால்தான் இப்படிப்பட்ட செயல்கள் நாட்டில் நடக்கின்றன என்பதை, ‘பேதைமை' என்னும் அதிகாரத்தில் குறள் கூறுகின்றது.

 உறவினரிடம் காட்டும் பரிவுக்கு அன்பு என்று பெயர். உலகோரிடம் காட்டும் பரிவுக்கு அருள் என்று பெயர். அன்பு அடிமரம், அருள் கிளைமரம். அன்பிலிருந்துதான் அருள் வளரும். எனவே குறளைப் படித்தவர்கள், அன்பிலிருந்து தொடங்குவார்கள். அருளில் நிறைவார்கள். என் அன்புப் பிள்ளைகளே...இன்றைய இளைஞர்களே! குறளைப் படியுங்கள். படிப்பதற்கு உங்களுக்கும் கண்டிப்பாக நேரம் இருக்கிறது. இல்லையானாலும் அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.


குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்?

குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை.

இதில நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கியிருக்கின்றது. நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. நன்மையும் தீமையும் நன்மையென்ற ஸ்ரீதேவியும் தீமையென்ற மூதேவியும். 

ஆம் குளிப்பதற்காக தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர். பின் நமக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். உடலில் யார் முதலில் திரும்ப நுழைய வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். உடலில் எந்த பாகத்தில் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவது வழக்கம்.

ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே.


இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுதுவம் கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அம்போ.! 

அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம் துடைக்க வேண்டுமென்ற போதனை பின் தலைமுறைகளுக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.

இதைக்கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளிவிட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது. இல்லாவிடில் நம்முன்னோர்கள் இந்த போதனையை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள்.

குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகின்றது. மிகஅதிகமான குளிர் அனுப்பப்படுவது முதுகிலாகும். முதுகெலும்பில் அதிகநேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. 

இதனால் உண்டாகும் தீங்கைத்தவிர்க்கவே குளித்த உடன் முதுகைத்துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர்.

ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளித்து முடிப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒழுகும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக்குளிப்பவர்களுக்காக வகுப்பப் பட்ட விதி இது.

Source : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்

தலைமூழ்கிக் குளித்தபின் உடலில் எண்ணை பூசக்கூடாது என்பது ஏன்.?

பண்டைய பாரதத்தின் ஆசாரங்களையும் சட்டங்களையும் பற்றின மனுஸ்மிருதியில் தலைமூழ்கிக் குளித்த பின் உடலின் எந்த பாகத்திலும் எண்ணை தேய்த்தலாகாது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் எண்ணை தேய்த்து அழுத்தித் தடவும் போது நாம் உணராமலே “மஸாஜிங்” நடக்கின்றது. இது இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. உடலின் எந்த பாகமும் நோய்வாய்ப்படுவது அப்பாகத்தில் இரத்த ஓட்டம் குறையும் போது தான் என்பது பண்டைய காலத்திலேயே புரிந்து கொண்டிருந்தனர். மேலும் உடலில் எண்ணை தேய்த்த பின் பாதிக்கும் என்பதும் கண்டறிந்துள்ளனர்.

சருமத்திலுள்ள வியர்வை துவாரங்கள் எண்ணை தேய்க்கும் போது அடைந்து போவதால் உடலிலுள்ள அசுத்தங்கள் சரியானபடி வெளியாக முடியாமல் போகும். தலைமூழ்கிக் குளித்த பின் எண்ணை தேய்த்தால் தூசி அழுக்கு போன்றவை உடம்பில் படிந்துவிடுவதுடன் உடலினுள் இருக்கும் மாசுக்கள் வியர்த்து வெளியேறாததனால் சிறுநீரகத்தின் வேலைப்பழு அதிகரிக்கும்.

தலையில் தேய்க்கும் எல்லா எண்ணைகளும் உடலிலும் தேய்க்கலாம். ஆனால் உடலில் தேய்க்க்கும் எண்ணைகள் எல்லாம் தலைக்கு சரிவராது என்பதையும் கவனிக்கவும். முடிகொட்டுதல், அகாலநரை என்பதை தவிர்க்க, தலையில் எல்லா எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல.

Source : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்

வெறும் காலில் நடப்பது நல்லதா.?

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்படுகிறது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும்.


பாதத்தின் அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம் முதலிய எல்லா உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன.

இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தும். பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் செய்யும் அக்குப்பஞ்சர் என்னும் சிகிச்சையின் மறு உருவமே செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் இயற்கை நமக்களிக்கின்றது.
Source : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்

திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

 மிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம் மட்டுமே நிலைத்திருக்கிறது.

‘கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அது பற்றி அறிவதற்கு முன்னர், `பூலோக கற்பகவிருட்சம்’ என்று புராணங்கள் போற்றும் பனைக்கு உரிய ஆன்மிக மகத்துவங்களைத் தெரிந்துகொள்வோம்.

* பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, பழங்கள் (நுங்கு) உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர்... இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை `பூலோகக் கற்பகவிருட்சம்’ என்று சிறப்பிப்பார்கள்.

* பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன.

* பல திருத்தலங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது பனை. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். `கன்றாப்பூர்’ எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள்.

* திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவை யாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், ‘பூர்த்தேர்ந் தாயென’ எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு.

* `கூந்தற்பனை’ என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்குமாம். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள்.

* `தாடகை’ என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரை பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். ராவணனின் சகோதரிக்கு, `தாடகை’ என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு `தாடகை’ என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.

திருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திப்பெற்ற சிவத்தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், `தாடகேச்சுவரம்’ எனச் சிறப்பிக்கப்பட்டது. இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனாரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்.

சரி! திருக்கார்த்திகையில் பனைக்கு என்ன சிறப்பு?

தீபத்திருவிழாவன்று அதிகாலையில் கோயிலில் பரணி தீபம் ஏற்றி வழிபடுவார்கள். மாலை வேளையில் மலை முகடுகளிலும் கோயில் கோபுரங்களிலும் மகா தீபம் ஏற்றுவார்கள். வீடுகளில் அகல் விளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள். இதேபோல் வேறொரு வழிபாடும் உண்டு. அதுதான் `சொக்கப்பனை வைபவம்’.

சகல ஆலயங்களிலும் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ‘குறிப்பாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் வைக்கப்படும் சொக்கப்பனை தமிழகத்திலேயே பிரமாண்டமானது’ என்கிறார், சிவபக்தரும் உவரி திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணிக் கமிட்டியின் தலைவருமான ஜி.டி.முருகேசன். அவரே தொடர்ந்து சொக்கப்பனை வைபவத்தின் சிறப்புகளையும், தாத்பரியத்தையும் விவரித்தார். ‘‘பெரிய புராணத்தில் அற்புதமான பாடல் உண்டு.

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய

நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்

தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்...

இதுதான் அந்தப் பாடல்.

திருமாலும் பிரம்மனுமே அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம், நெருப்புத் தழலாகக் காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமயலிங்கமாக வழிபடுவதே சொக்கப்பனையின் தாத்பரியமாகும்.

திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.

கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு’’ என்றார் அவர்.

சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பனை ஓலைக் கொழுக்கட்டை!

தீபம், சொக்கப்பனை மட்டுமல்ல... கொழுக்கட்டை பிரசாதமும் திருக்கார்த்திகை ஸ்பெஷல்தான். அதிலும் தென் தமிழகத்தின் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்திப்பெற்றது!

பச்சரிசி மாவுடன், பாசிப்பயறு, வெல்லம் அல்லது கருப்பட்டி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, இந்தக் கலவையைப் பனை ஓலையில் பொதிந்து, அவித்துச் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு இணையேதும் இல்லை எனலாம்.

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்

 நம் உடலைச்சுற்றும் இரு காந்தவளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.


எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்னியல் ஒப்புக்கொள்கிறது.
Source : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்

கார்த்திகை தீப திருநாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா

கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.



கற்பக தருவான பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.

பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சுவர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது

பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.




பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, நுங்கு, பனம்பழம் உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர்... இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை "பூலோகக் கற்பகவிருட்சம்" என்று சிறப்பிப்பார்கள்.

பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன.

பல திருத்தலங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது பனை. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். "கன்றாப்பூர்" எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள்.

திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவை யாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், "பூர்த்தேர்ந் தாயென" எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு.

"கூந்தற்பனை" என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்குமாம். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள்.

"தாடகை" என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரை பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். ராவணனின் சகோதரிக்கு, "தாடகை" என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு "தாடகை" என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.

திருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திப்பெற்ற சிவத்தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், "தாடகேச்சுவரம்" எனச் சிறப்பிக்கப்பட்டது. இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனாரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்.




திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.

கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு என்றார் அவர்.

சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

Saturday, November 25, 2023

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்

 சுகர்னு docter கிட்ட போராங்க....

அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.

ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

😂மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.

🧔அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்....

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது....

இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.

(1) தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல....

(2) மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல....

(3) ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை....

(4) வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்....

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை, காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகற வரைக்கும் 

அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.....

👆👆👆இந்த பதிவு நகைக்சுவையாகவும், யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.....

மனம் கெட்டால் உடல் கெடும்,

உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,

சளி பிடித்தல்,

இருமல்,

காய்ச்சல்,

இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,

உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,

கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,

நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

Friday, November 24, 2023

டிசம்பர்25, கீழவெண்மணி படுகொலை




கீழவெண்மணி படுகொலைகள் தேவேந்திரர்களால் மறக்க இயலாத வடுவாக மாறியிருக்கிறது ..

தஞ்சை மண்ணை தேவேந்திரர்கள் முப்பாட்டன்களான சோழ மன்னர்கள் ஆண்டதன் அடையாளம் ஆயிரமாயிரம் இருந்தும் கல்வியிலும்,அறிவிலும் பின்தங்கிய சமுதாயமாய் மாற்றப்பட்டு கேட்ப்பாரற்று கொத்து,கொத்தாக எரித்து கொலை செய்யப்பட்ட போதும் கூட நம்மால் அந்த கொலையாளர்களுக்கு எதிராக எதையுமே செய்ய முடியாவில்ல்லை என்பதை விட உயர்நீதி மன்ற தீர்ப்பு உயர் சாதி தீர்ப்பாய் வரலாற்றின் பக்கங்களில் கருப்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது .

கொலையாளிகளை பணக்காரர்கள் என்றும் அவர்கள் கார்களை வைத்திருந்தவர்கள் என்றும் “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள் எனவே அந்தக்கொலையை செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டுள்ள நூற்றி ஆறு பேரும் குற்றவாளிகள் அல்ல…” என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொன்ன நீதிபதி.

அதன் விபரம் வருமாறு :

கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றினைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வாகும்.

தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். 

அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிக குறைந்த ஊதியம் மிக குறைந்த வேளை உணவு வழங்க பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வழக்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. 

அவர்கள் நல்ல வழக்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாமான கோரிக்கை எதுவும் அவர்களை பணி அமர்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

1960 ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களை பெரிதும் வாட்டியது.


தஞ்சை மண்ணில் “பண்ணையாள் முறை” ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன .கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். 

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். 

ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் “ராமையன்” என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.


பாப்பா (ராமய்யன் மனைவி) 25
ஆசைத்தம்பி 10
சந்திரா 12
வாசுகி 23
சுந்தரம் (பெண்) 45
சரோஜா 12
மருதம்பாள் 25
தங்கையன் 5
சின்னபிள்ளை (பெண்) 25
கருணாநிதி 12
வாசுகி 5
குருவம்மாள் 30
பூமயில் 16
கருப்பாயி 35
நாச்சியம்மாள் 16
தாமோதரன் 12
ஜெயம் 10
கனகம்பாள் 25
ராமச்சந்திரன் 7
சுப்பன் 70
குப்பம்மாள் 60
பாக்கியம் (பெண்) 35
ஜோதி 10
காளிமுத்து (பெண்) 35
குருசாமி 15
நடராஜன் 5
வீரம்மாள் 22
பட்டு 46
சண்முகம் 13
வேதவல்லி 13
முருகன் 40
ஆச்சியம்மாள் 30
நாகராஜன் 10
ஜெயம் 6
செல்வி 3
கருப்பாயி 50
சோலை 26
நடராஜன் 6
அஞ்சலை 45
ஆண்டாள் 12
சீனிவாசன் 40
காவேரி 50
சீனிவாசன் 38
முருகன் 45



106 பேர் கைதானார்கள். “இது சாதிய மோதல்” என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…” என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
திரைப்படம்

இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ராமையாவின் குடிசை என்னும் ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்து உள்ளது .ஒரு மணிநேரம் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் அவர்கள் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) செய்தி இதழ் செய்தி வெளி இட்டது. அங்கு உள்ள நினைவகத்தில் ஒரு கண்ணாடி குடுவையில் அச்சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் அஸ்தி, சம்பவம் நடந்த சில நாட்கள் பிறகு சுதந்திர போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கபட்டுள்ளது.