Wednesday, November 22, 2023

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???



நாடாளுமன்றத்தில் பேசும் போது உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். 

“ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். 

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. 

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை.

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”.

அந்த உறுப்பினர் பின் சொன்னாராம் ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது . . "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???

No comments:

Post a Comment