Thursday, November 23, 2023

எங்களோட குறிக்கோள் இனிப்பை அடையுறது தான்

அந்த சிறுமிக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் தனது அம்மா வாங்கி தந்த லட்டுகளை சாப்பிட்டு விட்டு மீதியை தனது அறையிலிருந்த மேசை மீது வைத்தாள்.

சிறிது நேரத்தில் எறும்புகள் மேசை மீது இருந்த லட்டை தேடி வந்து வரிசையாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செல்ல ஆரம்பித்தன.

இதைப் பார்த்த சிறுமி லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்தாள். சிறிது நேரம் கழித்து அங்கேயும் எறும்புகள் வர ஆரம்பித்தன.

எறும்புகளின் தொல்லை தாங்க முடியாமல் லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்து, எறும்பு வராமல் இருக்க பூச்சிகொல்லி மருந்தை தூவினாள்.

சிறிது நேரத்தில் அங்கு லட்டை தேடி வந்த எறும்புகள் பரிதாபமாக இறந்து போயின.

இதைப் பார்த்த அவள் இனி எறும்புகள் லட்டை தேடி வராது என்று நினைத்தாள். சில எறும்புகள் வரிசையாக வந்து இறந்து போன எறும்புகளின் உடலை தூக்கி சென்றன.

மேலும் சில எறும்புகள் வரிசையாக வேறு வழியாக லட்டு இருக்கும் இடத்தை நோக்கி வர ஆரம்பித்தன. அதில் முதலாவதாக வரும் எறும்பை நந்தினி உற்று பார்த்த போது,

அந்த எறும்பு " நாங்க எத்தன பேரை இழந்தாலும் சரி. நாங்கள் பயந்து பின் வாங்க மாட்டோம். எங்களோட குறிக்கோள் இனிப்பை அடையுறது தான் , அது வர ஓய மாட்டோம். " என்று சொல்வது போல இருந்தது.

No comments:

Post a Comment