Tuesday, November 14, 2023

நான் கேட்டதும் பணம் வருகிறது



ஒரு பணக்கார நண்பனுக்கு அதிசயமாகஒரு ஏழை நண்பனும் இருந்தான்.

பணக்கார நண்பன் எப்போதும் பணம்
பற்றியே பேசிக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் அந்த நண்பனுக்கு திடீர்
என்று பண நெருக்கடி ஏற்பட்டது.

அது தெரியாமல், வழக்கம்போல வருகிற
மாதிரி, ஏழை நண்பன் அங்கு வந்தான்.

உரிமையுடன் பணக்கார நண்பனைப் பார்த்து, "எப்படிடா இருக்கே?''
என்று கேட்டான்.

பணக்கார நண்பனோ அப்போது இருந்த பண
நெருக்கடியில் எரிச்சலாகி, "எனக்கு இப்போது அவசரமாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?'' என்று கேட்டான்.

உடனே, "அரை மணி நேரத்தில் பணம்
கிடைத்தால் பரவாயில்லையா?''
என்று ஏழை நண்பன் கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு அதிர்ச்சி. நம்ப
முடியாமல் ஏழை நண்பனைப்
பார்த்தபோது,
அவனோ அப்போதே யாரிடமோ போனில்
பேசினான். சரியாக அரை மணி நேரத்தில்
ஒருவர் வந்து ஏழை நண்பனிடம் 20
லட்சம்
ரூபாயை கொடுத்து விட்டுப்போனார்.

பார்த்துக் கொண்டிருந்த
நண்பனுக்கு அதிர்ச்சியில்
பேச்சு வரவில்லை. அவனிடம்
பணத்தைக் கொடுத்த ஏழை நண்பன்,
"நண்பா! நீ எப்போதுமே பணத்தைத்தான்
சம்பாதித்துக் கொண்டிருந்தாய். நான்
எப்போதும் நல்ல
நண்பர்களை சம்பாதித்துக்
கொண்டிருந்தேன்.

அதனால் தான் நான் கேட்டதும் பணம்
வருகிறது'' என்று சொன்னான்.

No comments:

Post a Comment