Tuesday, November 21, 2023

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!



ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!

கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.
இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.

No comments:

Post a Comment