Thursday, November 16, 2023

உண்மையான தியாகிகள்



ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த

குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.

.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு

கண்டிஷனா சொல்லிருச்சு.

.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.

'இடம்தானே....தாராளமா இருந்துக்கோ!'னு

பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.

.
ஒரே மாசம்தான்......ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த

தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது.

.
ஆனா, குருவிக்கு இடம் கொடுத்த

ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.

.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி, 'அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.

.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா..... 'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும்.....நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்... ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும்!'

.
இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி

உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"

No comments:

Post a Comment