Thursday, November 16, 2023
உண்மையான தியாகிகள்
ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு
கண்டிஷனா சொல்லிருச்சு.
.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.
'இடம்தானே....தாராளமா இருந்துக்கோ!'னு
பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.
.
ஒரே மாசம்தான்......ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த
தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது.
.
ஆனா, குருவிக்கு இடம் கொடுத்த
ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.
.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி, 'அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.
.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா..... 'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும்.....நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்... ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும்!'
.
இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி
உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment