வாழ்க்கையின் மிகப்பெரிய
மகிழ்ச்சி நாம் நேசிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கையேயாகும்....
நமக்காக நேசம்,
அல்லது மாறாக,
நம்மை மீறிய அளவில்
நம்மீதான நேசிப்பு என்றும் சொல்லலாம்....
சுய அன்பு சுயநலமல்ல...
உங்களை எப்படி நேசிக்க வேண்டும் என்று தெரியாத வரை உங்களால் இன்னொருவரை நிச்சயமாக நேசிக்க முடியாது....
நீங்கள் யார் என்பதில் அழகாய் பெருமிதம் கொள்ளுங்கள்... மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட
நீங்கள் உங்களை பற்றி நினைக்கும் நினைவுகளை கூட்டிக்கொள்ளுங்கள்....
இந்த உலகம் நமது சிந்தனை எனும் எண்ண அலைகளிலே தான் தவழ்கிறது....
அதை உங்கள் கைக்குள்ளே
உங்கள் எண்ணங்களால்
நீங்கள் வென்றெடுக்கும்
நேரங்கள் தான் வெவ்வேறானவை....
உங்கள் மேல் உங்களால்
தெளிவான நேசம் ஒன்றை
தெளிக்க இருபது நிமிடங்களேனும் கொடுங்கள். ..
நிச்சயமாய் ஒருபடி உயர்வதை நிதர்சனமாய் உணர்வீர்கள்....
No comments:
Post a Comment