Saturday, March 16, 2024

சிந்தனை துளிகள்

சிலவற்றை தெரிந்து 

கொண்டால் தெளிவாக இருப்போம்...

பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாக இருப்போம்.!


விவாதம் செய்வதை விட விலகி செல்வதே மேலாகும்.

புரியாத உறவுகளுக்கு மத்தியில்.!!


தன்மானத்தை இழந்து எதையும் அடைய வேண்டும் என்று அவசியமில்லை...

எந்த இடத்தில் நம்மை  

வைக்கிறார்களோ அதே இடத்தில் அவர்களையும் நாம் வைத்து விடவேண்டும்.

உறவுகள் முக்கியம் தான் அதை விட சுயமரியாதை மிக  முக்கியமாகும்.!!!


எதிலும் அளவோடு இருந்தால் அவதிப்படவும் தேவையில்லை,

அவமானப்படவும் தேவையயில்லை.!


தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்,எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது.!!


எதையும் பொறுத்துக் கொள்ளும் போது நல்லவர்களாக தெரியும் நாம் எதிர்த்து கேள்வி கேட்கும் போது கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம்.!!!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment