Tuesday, March 26, 2024

NRE மற்றும் NRO வங்கி கணக்குகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

வெளிநாட்டில் குடியியேறி 183 நாட்கள் ஆகிவிட்டால் யாருமே NRIதான்.


நாமெல்லாம் சேவிங்ஸ், ஓவர் டிராஃப்ட், ஃபிக்ஸட் டெபாசிட் என வைத்துக் கொள்வதுபோல, புலம் பெயர்ந்த இந்தியர்கள் (NRI) அங்கிருந்தபடியே இயக்க வழி செய்யும் இரண்டு கணக்குகள்:-

1. NRE,

2. NRO.


1.NRE (NON RESIDENT EXTERNAL ACCOUNT)

ஒரு NRI, தனது வெளிநாட்டு வருவாயை இந்தியாவுக்கு அனுப்பவும், சேமிக்கவும், முதலீடு செய்யவும் வழிவகுப்பது NRE அக்கௌன்ட்.

2. NRO (NON RESIDENT ORDINARY ACCOUNT)

அவரே வெளிநாட்டில் ஈட்டிய வருவாயுடன் சேர்த்து, இந்தியாவில் தனக்கிருக்கும் சொத்துகள், முதலீடுகளின் மூலம் கிடைக்கும் இந்திய வருமானத்தையும் சேர்த்து சேமிக்க அனுமதிப்பது NRO.

உதாரணமாக, நீங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவில் பணியாற்றுகிறார். மாத வாடகையை நீங்கள் இந்தியாவில் அவரது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அவரது NRO கணக்கில்தான் செலுத்த முடியும்.

இப்படி அந்த அமெரிக்க NRI, இந்தியாவில் வைத்திருக்கும் முதலீடுகள், வீடு, தோட்டம், தொழில்கள், சொத்துகள் வழியே ஈட்டும் வருவாயை டெபாசிட் செய்ய வழிவகுப்பது NRO.

அவர் அமெரிக்காவில் ஈட்டிய பணத்தை மட்டும் சேமிக்கவும், இந்தியாவில் முதலீடு செய்யவும் வைத்திருப்பது NRE.


NRE - சிறப்புகள்இரண்டு NRIகள் சேர்ந்து ஒரு ஜாயின்ட் NRE அக்கவுன்ட் தொடங்கலாம்.
வருமான வரி இல்லை.
ஃபாரின் கரன்சி எனப்படும் அந்நிய செலவாணியில் மாத்திரமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
அவரது வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கும் அதே NRE கணக்கின் மூலம் பணத்தை அனுப்பலாம், இலண்டனில் ஹோட்டல் வாங்கலாம்.
பணத்தை எடுக்கும் பொழுது இந்திய ரூபாயாக மாத்திரமே எடுக்க முடியும்.

NRO - சிறப்புகள்ஒரு NRI இங்குள்ள NRI அல்லாத உறவினருடன் சேர்ந்து ஒரு ஜாயின்ட் NRO அக்கவுன்ட் தொடங்கலாம்.
NRO கணக்குகளில் வட்டிக்கு வருமான வரி 30%
இதிலும் வெளிநாட்டு கணக்குக்கு வெளிநாட்டு கரன்சியிலேயே அனுப்பும் வசதி உண்டு, ஆனால் நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை மாத்திரமே.
அந்நிய செலாவணி தவிர்த்து இந்திய ரூபாயையும் டெபாசிட் செய்யலாம். எடுக்கும் பொழுது இந்திய ரூபாயாக மாத்திரமே எடுக்க முடியும்.

NRO கணக்கிலிருந்து NRE கணக்குக்கும் (Upto USD 1 mio per FY) NRE கணக்கிலிருந்து NRO கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

முக்கிய விஷயம்


டி.டி.வி தினகரன் பெரியகுளம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது சுப்ரமணிய ஸ்வாமி வழக்காடியது நினைவிருக்கலாம்…

NRI ஆனதையோ, மீண்டும் நிரந்தரமாகத் தாயகம் திரும்பியதையோ அறிவிக்காவிட்டால் சட்டப்படி தவறு.


நன்றி: கூகிள்.

No comments:

Post a Comment