ஒரு முறை பொதுக் கூட்டத்தில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருந்தார். பெரும் கூட்டம்.
பேச்சின் இடையே, "ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்.
என்னை வாழவைக்கும் தாய்மார்கள் எழுந்துச் செல்லுங்கள்.
ஒரே ஒரு தாய்க்குலம் கூட இருக்கக் கூடாது" என்றார்.
பெண்களும் எழுந்துச் சென்று விட்டார்கள்.
அதுவரை எதுவும் பேசாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருந்த புரட்சித்தலைவர்.
"என்னிடம் ரகசியம் எதுவுமில்லை. பேச்சை அப்போதே முடித்து விட்டேன்.
கூட்டம் கலையும்போது நெரிசலில் தாய்மார்களுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்றே அப்படி சொன்னேன்" என்றார்.
கூட்டம் ஜோராக கைத்தட்டியது.
No comments:
Post a Comment