Sunday, September 10, 2023

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-4

நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.

---


எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும்.

----

* ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும்.

---

இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.

---

இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.

No comments:

Post a Comment