ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் வேலைகளுக்குள் கட்டுப்பட்டு விடாதீர்கள்
---
* வாழ்வில் மனிதன் உயர வேண்டுமானால் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்றாக வேண்டும்.
---
செல்வம் பெருகியுள்ள காலத்தில் தான் ஒருவனுக்கு பணிவு தேவை. அதே சமயம் வறுமையுற்ற காலத்தில் மனிதனுக்கு துணிவு அவசியம்.
---
துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் அடைவது என்பது இயலாத ஒன்று. எந்தச் செயலிலும் இன்ப, துன்பம் இரண்டும் கலந்தே இருக்கிறது.
---
நன்மை செய்பவன், ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து மகிழத் தயாராயிருக்கலாம்.
---
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.
----
மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.
---
அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.
-
காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.
-----
No comments:
Post a Comment