Friday, September 8, 2023

கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...?

ஹக்கீம் மொரயூர் -writter malayalam

This is story only not real

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் _ஸ்ரீமதி.  ராணி சோயாமோய்_* கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.


கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.


பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், *அவர் முகத்தில் பவுடர் கூட பயன் படுத்தவில்லை...!*

   

பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார்


ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன.


அப்போது மாணவிகள்  கலெக்டரிடம் சில கேள்விகளை கேட்டனர்.


கேள்வி : உங்கள் பெயர் என்ன?


பதில் : என் பெயர் ராணி.  சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர்.  நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்.


வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?


ஒரு ஒல்லியான பெண் எழுந்து நின்றாள். 


கேளம்மா..., 


*"மேடம் ஏன் உங்கள் முகத்துக்கு மேக்கப் போடவில்லை...?"*


கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது.


நெற்றியில் வியர்வை வழிந்தது. 


அவர் முகத்தில் புன்னகை மறைந்தது.  பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள்.


மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார்.  


பிறகு மாணவியைக் பார்த்து  உட்காருமாறு சைகை செய்தார் பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார்


இந்த மாணவி குழப்பமான கேள்வியைக் கேட்டுவிட்டாள்; 


இது ஓரிரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத கேள்வி. 


அதற்கான பதில் என் வாழ்க்கைச் சம்பவத்தை சொல்ல வேண்டும். 


என்னுடைய கதைக்காக உங்கள் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்க நீங்கள் தயாரா...?


"நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் பிறந்தேன்..."


கலெக்டர் சற்று நிதானித்து பார்வையாளர்களை பார்த்தார்.


*"மைக்கா"* சுரங்கங்கள் நிறைந்த கோடெர்மா மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தேன்.


என் அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள்.  எனக்கு மேலே இரண்டு சகோதரர்களும் கீழே ஒரு சகோதரியும் இருந்தனர்.  


மழை பெய்தால் ஒழுகும் ஒரு சிறிய குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம்.


வேறு வேலை கிடைக்காததால் எனது பெற்றோர் குறைந்த கூலிக்கு சுரங்கத்தில் வேலை செய்தனர். அது மிகவும் கடினமான வேலை.


எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, ​​என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாகி விட்டனர்.


சுரங்கங்களில் உள்ள கொடிய மைக்கா தூசியை சுவாசிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.


எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, ​​என் சகோதரர்கள் நோயால் இறந்துவிட்டனர்.


ஒரு சிறு பெருமூச்சுடன் கலெக்டர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே....


பெரும்பாலான நாட்களில் எங்கள் உணவில் தண்ணீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகள் இருந்தன. 


எனது சகோதரர்கள் இருவரும் கடுமையான நோய் மற்றும் பட்டினியால் அவர்களும் இறந்து விட்டனர்.  


எங்கள் கிராமத்தில் மருத்துவரிடம் செல்பவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்கள் என யாரும் இல்லை.  


காரணம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, கழிவறை, மின்சாரம் என எதுவுமே கூட இல்லாத ஒரு கிராமத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா...?  


அங்கு தான் நாங்கள் வாழ்ந்தோம்.


ஒரு நாள் நான் பசியுடன் இருந்தபோது, ​​​​என் தந்தை என்னை, இரும்புத் தகடுகளால் மூடப்பட்ட ஒரு பெரிய சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றார்.


 அது புகழ் பெற்ற *மைக்கா சுரங்கம்.*


இது ஒரு பழங்கால சுரங்கம். *கீழே உள்ள சிறிய குகைகள் வழியாக ஊர்ந்து சென்று மைக்கா தாதுக்களை சேகரிப்பது எனது வேலை.*


*என்னைப் போன்ற பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருந்தது.*


*என் வாழ்நாளில் முதல்முறையாக ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பினேன்.*


நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது நான் விஷ தூசியை சுவாசிக்கக்கூடிய இருட்டு அறைகளில் மைக்காவை முகர்ந்து கொண்டிருந்தேன்.


*எதிர்பாராத விதமாக குழந்தைகள் அவ்வப்போது நிலச்சரிவுகளில் இறப்பது வழக்கமாக இருந்தது.*


*எப்போதாவது சிலர் ஆபத்தான நோய்களாலும் இறப்பார்கள்.*


ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு ரொட்டியாவது கிடைக்கும்.  


பசி மற்றும் பட்டினியால் நான் ஒவ்வொரு நாளும் மெலிந்து நீரிழப்புடன் இருந்தேன்.


ஒரு வருடம் கழித்து என் சகோதரியும் சுரங்கத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். 


கொஞ்சம் நல்லா வந்தவுடனே அப்பா, அம்மா, அக்கா மூவரும் சேர்ந்து உழைத்து பசியில்லாமல் வாழலாம் என்ற நிலைக்கு வந்தோம்.


ஆனால் விதி வேறொரு வடிவில் எங்களை  ஆட்கொள்ளத் தொடங்கியது.  


ஒரு நாள் கடும் காய்ச்சலால் வேலைக்குப் போகாமல் இருந்தபோது திடீரென மழை பெய்தது. 


சுரங்கத்தின் அடிவாரத்தில் தொழிலாளர்கள் கண்ணெதிரே சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். 


அவர்களில் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரிகளும் கூட இறந்து போயினர்.


அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது. 


பார்வையாளர்கள் அனைவரும் மூச்சு விடக்கூட மறந்தனர். பலரது கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தன.

 

எனக்கு ஆறு வயதுதான் ஆகியிருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


இறுதியில் அரசு அகத்தி மந்திர் வந்தடைந்தேன்.  அங்குதான் நான் படித்தேன்.  


என் கிராமத்தில் இருந்து முதலில் எழுதப் படிக்க கற்றுக் கொண்ட முதல் பெண் நான். 


இறுதியாக இதோ இப்போது உங்கள் முன் கலெக்டராக நிற்கிறேன்..


*இதற்கும் நான் மேக்கப் பயன்படுத்தாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்...!*


பார்வையாளர்களைப்  பார்த்துக்கொண்டே அவர் தொடர்ந்தார்.


அந்த நாட்களில் இருளில் சுரங்கங்களில் ஊர்ந்து, தவழ்ந்து நான் சேகரித்த....


*மைக்கா முழுவதையும் ஒப்பனை பொருட்களில் பயன்படுத்துவதை அப்போதுதான் உணர்ந்தேன்.*


*மைக்கா என்பது ஃப்ளோரசன்ட் சிலிக்கேட் கனிமத்தின் முதல் வகை.*


*பல பெரிய அழகுசாதன நிறுவனங்கள் வழங்கும் மினரல் மேக்கப்களில், 20,000 இளம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் பல வண்ண மைக்காக்கள் மிகவும் வண்ணமயமானவை.*


ரோஜாவின் மென்மை உங்கள் கன்னங்களில் பரவுகிறது, 


அவற்றின் எரிந்த கனவுகள், அவர்களின் சிதைந்த வாழ்க்கை மற்றும் பாறைகளுக்கு இடையில் நசுக்கப்பட்ட அவர்களின் சந்தையிலும் ரத்தத்திலும் கறைந்து...


 *மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மைக்கா இன்னும் சுரங்கங்களில் இருந்து குழந்தை கைகளால் எடுக்கப்படுகிறது....*

 

*நம் அழகை ஆராதித்து கொண்டு இருக்கின்றன..*


இப்போது நீங்கள் 

சொல்லுங்கள்...


*நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது.?*


*பட்டினியால் இறந்த என் சகோதரர்களின் நினைவாக நான் எப்படி வயிறு நிரம்ப சாப்பிட முடியும்?*


*எப்பொழுதும் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும் என் அம்மாவின் நினைவாக நான் எப்படி விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிய முடியும்...?*


மேலும் எதையும் பேசமுடியாமல்... 

தலையை நிமிர்த்தி...

சிறு புன்னகையுடன் அவர் அரங்கை விட்டு வெளியே சென்றபோது...


பார்வையாளர்கள் அனைவரும் அறியாமல் எழுந்து நின்றனர்.  


அவர்கள் முகத்தில் இருந்த மேக்கப் அவர்கள் கண்களில் இருந்து வழியும் சூடான கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தன.

 


*ஃபேஸ் பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் நிறைந்த பெண்களைப் பார்த்து சிலர் வெறுப்படைந்தால் அவர்களைக் குறை சொல்லாதீர்கள்.*


*அதிக தரமான மைக்கா இன்றும் ஜார்க்கண்டில் வெட்டப்படுகிறது.*


*20,000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்கின்றனர்.* 


*சிலர் நிலச்சரிவாலும் சிலர் நோயாலும் புதையுண்டு இறந்துக் கொண்டிருக்கிறார்கள்.*

 

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட உண்மைச் சம்பவம்.படித்ததில் மிகவும் வலித்தது...பதிவிற்காக - *🌹*🌹


ஹக்கீம் மொரயூர் -writter malayalam

This is story only not real

No comments:

Post a Comment