Tuesday, March 12, 2024

சிந்தனைத் துளிகள் - 2


நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.

இங்கு அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் குறைவில்லை.

நமது பிரபஞ்சத்தில் அனைத்தும் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மனிதர்களாகிய நாமும் நமது வாழ்க்கை பயணத்தில் ஏதோ ஒன்றை நோக்கியே நமது பயணத்தை தொடர்கிறோம்.


அது ஆரோக்கியமோ, மகிழ்ச்சியோ, நிம்மதியோ, செல்வமோ... ஏதோ ஒன்றை நோக்கியே நமது பயணம் இருக்கிறது.

ஆனால் தேடும் அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. காரணம் நம்பிக்கை.


நீங்கள் தேடுவதை அடைய விரும்பினால்...

நீங்கள் எதை தேடுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

நீங்கள் தேடுவதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்.

உங்கள் நியாயமானதாக , உண்மையானதாக இருந்தால்  நீங்கள் தேடுவதை நிச்சயம் ஒருநாள் அடைந்தே தீர்வீர்கள்.


மற்றவர்களின் தேவையற்ற எதிர்மறையான கருத்துக்களுக்கும், அவநம்பிக்கைக்கும் இடம் தராதீர்கள்.

படைத்தவன் மனது வைத்தால் உங்கள் நிலையை மாற்ற ஒரு நொடி போதும்.

 யாருடைய நிலையும் எந்த நொடியிலும் மாறலாம்.


 நம்புங்கள்! நன்றாக வாழ்வீர்கள்!


இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் 💐


*வாழ்க வளமுடன் நலமுடன்!!🙏🏻*

No comments:

Post a Comment