Tuesday, March 12, 2024

பதினாறு வகையான அர்த்தங்கள்

1 *எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான்*. நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...


2.தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், *தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. *உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை* நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...


4] *குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள்*. நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும். 


5] *வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள்*  நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.


6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்*.


7] சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* *அடையாதீர்கள்*  *சந்தர்ப்பங்கள் வரும் போது தடம்* *மாறாதீர்கள்*


8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். *பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவீர்கள். யார் உண்மையான நண்பர்கள் என்று...? 


9] ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள் மட்டுமே காரணம்* 


10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை *சிரிக்க வைத்துப் பார்*; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.


11] *அவசியம் இல்லாததை வாங்கினால்,* விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.


12 *வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்* ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.


13] *எண்ணங்களை அழகாக* மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.


14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு  

*நம்பிக்கையையே* ஆகும்.


15] அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். *கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.


16] *மரியாதை* வயதைப் பொறுத்து வருவதில்லை. 

அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!


*பகிர்வு*

*மகதி எண்டர்பிரைசஸ்*

No comments:

Post a Comment