Tuesday, March 12, 2024

சிந்தனை துளிகள் - 12.03.2024 (செவ்வாய்க்கிழமை)

அளவுக்கு அதிகமான அன்பு மட்டும் நம்மை முட்டாள் ஆக்குவதில்லை...

சிலர் மேல் நாம் வைக்கும் கண் மூடித்தனமான நம்பிக்கை கூட நம்மை ஏமாளி ஆக்குகிறது.!


காயங்கள் தந்தவரிடம் காரணங்கள் கேட்காதீர்கள்...

ஏனெனில் அவர்கள் கூறும் காரணங்கள் கூட நம்மை இன்னும் காயப்படுத்தும் என்பதால்.!!

நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட அவர்களின் புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என மெளனமாய் நகர்ந்து செல்வதே சரி...

தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கமும் அர்த்தமற்றதே ஆகும்.!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment