Wednesday, March 13, 2024

ஸ்ரீபூமிநாதர் கோவில் - சமயபுரம்

பூமி , நிலம் அமைய-திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபூமிநாதர் கோவில். 


இந்தத் தலத்து இறைவன்... வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி. பூமி தொடர்பாக கணவர் சிவனார் உலக மக்கள் அனைவருக்கும் அருள்புரிவதற்கு, அம்பிகையே தாயென இருந்து துணைநின்று, பூமியையும் மக்களையும் காத்தருள்கிறாள்.


 அத்துடன், கல்யாண வரமும் குழந்தை பாக்கியமும் அருளும் வரப்ரசாதியாகவும் திகழ்கிறாள் இந்த அம்பிகைஅம்பாளையும் ஸ்வாமியையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள். அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. 


அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்பவர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment