🌹🌹🌹🌹🌹🌹🌹
*"'''*
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். உண்மை தெரியாமல் பிறர் கூறுவதைக் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.*
நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் பிறரின் தவறுகளை மனதிலிருந்து அழித்து விட வேண்டும்..*
அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறு
க்காக நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்து விடக்கூடாது...*.
ஒருவரால் துன்பத்தை சந்திக்க நேர்ந்தால், அதைவிடப் பலமாக அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஒரு போதும் எண்ணக் கூடாது..*
சிறிது சிந்தித்து, நளினமாக அதைக் கையாள வேண்டும்.*
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய் விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதினான்.*
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின.*
அவர் அக்கடற்கரையில், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதி விட்டார்.*
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கி விட்டான். மகன் மீது அதிக பாசமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களைக் கொன்று குவிக்கின்றதே.. இது கொடுமையான கடல் எனக் கரையில் எழுதினாள்.*
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்.*
அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும்.*
*நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.. என எழுதினார்.*
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்து விட்டுச் சென்றது.*
*ஆம்.,தோழர்களே..*
*வாழ்க்கையை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோமோ அந்தக் கோணத்தில் அது நமக்குத் தெரிகிறது.*
*வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கின்றோமோ அது தான் நமக்குக் கிடைக்கின்றது.*
*வாழ்க்கையைப் பற்றி மனிதர்களின் கண்ணோட்டமும், வாழ்க்கையை அவர்கள் அணுகும் முறையும் வேறுபட்டு இருப்பதால் தான் ஒரே உலகம் ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமாகப் பார்க்க வைக்கிறது.....✍🏼🌹*
No comments:
Post a Comment