Tuesday, June 18, 2024

நிச்சயம் நமக்காக ஒரு வானம் காத்திருக்கும்

உங்களால் முடியும் என்று உங்களை ஊக்கப் படுத்தும் மனிதர்களுடன் பழகுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதற்கான தீர்வை கண்டு பிடிக்க பல வழிகளில் உதவுவார்கள்.

மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அதற்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும். நாம் சொல்வதில் அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள் உண்மைகளாகவும், ஏற்க முடியாதவைகள்

பொய்களாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எல்லாரும் அப்படிதான்.

அடுத்த நிலையை அடைய முயற்சி செய்யுங்கள். அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதீர்.

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.

வாழ்க்கை மிகச் சிறியது. அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதற்கு உங்களை எல்லோரும் வெறுத்து விட்டார்கள் என்று பொருளல்ல. நீங்கள் இன்னும் சரியான மனிதர்களைச் சந்திக்கவே இல்லை.

கெடு வாய்ப்பாக நீங்கள் சரியான மனிதர்களை அடையாமல் போனாலும் கூடப் பரவாயில்லை. உங்களுக்காக நீங்கள் இருக்கிறீர். உங்களை நீங்களே பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மீதான நேசத்தையும் நம்பிக்கையும் விட்டுவிடாதீர்.

எப்படியும் இந்த மழை நின்றுவிடும். சிலிர்த்துவிட்டு மீண்டும் பறந்து செல்லுங்கள். .

No comments:

Post a Comment