வேண்டாம் என எண்ணினாலும்
வராமல் இருக்கபோவதில்லை
துன்பங்கள்...
வேண்டும் என எண்ணினாலும்
எளிதில் கிடைக்கப்போவதில்லை
இன்பங்கள்...
நமக்கானவை மட்டு
மேநம்மிடம் வந்து சேரும்.!
ஒருவரின் மனதில் நாம் எவ்விடத்தில்
இருக்கிறோம் என்பதை ஒரு சிறிய சண்டையில்
நம்மீது அவர்கள் வீசும் வார்த்தைகளில்
தெரிந்துவிடும்.!!
மரணத்தைக் காட்டிலும்
கொடுமையானது மனக்கவலை...
மரணம் ஒருமுறை தான் கொல்லும்...
ஆனால் மனக்கவலை நொடிக்கு நொடி
கொல்லும்.!!!
குற்றம் சொல்ல வேண்டும் என
முடிவெடுத்து பேசுபவர்கள்...
நியாயத்தையோ அன்பையோ
புரிந்து கொள்ளமாட்டார்கள்.!
வாழ்க்கையில் சில உறவுகளை
முழுமையாக நம்புவதால் தான் அதிகம்
ஏமாற்றங்களையும் மாற்றங்களையும்
சந்திக்கின்றோம்.!!
நம்மையே ஒரு உறவு
சுற்றி சுற்றி வருகிறது என்றால்...
அது போவதற்கு வேறு இடமில்லாமல் இல்லை....
நம்மை இழக்க மனமில்லாமல் தான்.!!!
ஒருவனை அழித்து விட்டு ஒருவன் வாழ நினைக்கிறான் என்றால் அவன் அழியப் போகிறான் என்று அர்த்தம்.!
மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி நமக்கு பேசத் தெரியவில்லையே...
என்ற ஆதங்கமும்,
பேசுவதை எல்லாம் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்ற கோபமுமே இன்று பலரது மெளனத்திற்கு காரணமாகும்.!!
மன வேதனையைத் தந்து விட்டு
எதுவும் தெரியாதது போல
நடித்துப் பழகுபவர்கள் மிகவும்
கெட்டிக்காரர்களே.!!!
No comments:
Post a Comment