Saturday, June 22, 2024

எதையும் ஒத்திப் போடுதல் சரியா..?

 *🔹🔸இன்றைய சிந்தனை...*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*🌸22.06.2024🌸*

*" "*

இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே வழி ஒத்திப் போடுவது என்பது.*


ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்..*


நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாதத

னால் ஒத்திப் போடுகிறோம்..*


நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை , காரணமாக ஒத்திப் போடுகிறோம்.. வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்..*


சோம்பேறித்தனத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்.*

உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஓத்திப் போடுகிறோம்..*


துக்கத்தின் காரணமாக ஓத்திப் போடுகிறோம்.*


இப்படிப் பல காரணங்களைத் தேடி ஓத்திப் போடுகிறோம்..*


*ஒத்திப் போடுவதற்குக் காரணம் தேடும் நாம் நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா..?*


எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட எதாவது ஒரு முடிவை எடுக்கலாம்.*

அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிளலாவது மகிழ்ச்சி அடையலாம்.*


சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததிற்கு இதுவா அதுவா இப்படிச் செய்யலாமா அல்லது அப்படிச் செய்யலாமா என்ற குழப்பமே காரணம்..,*


ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம் முடிவெடுக்கும் தருணத்தில் யோசிப்பது நாம் செயல் படுவதைத் தள்ளிப் போட வைக்கிறது..*


எடுத்துக்காட்டாக உங்கள் வாகனம் சுத்தம் செய்தல், குளியல் அறை சுத்தம் செய்தல், கடிதத்திற்கு பதில் போடுதல் என்று நாளும் எதையாவது தள்ளிப் போட்டுக் கிட்டே தான் இருக்கிறோம்.*


நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிப் போடுவதாகக் கூறிக் கொண்டாலும்,அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்.*



*ஆம்.,தோழர்களே..,*


*இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள்.. நாளைய வேலையைக் கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்;*


*ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.*


*நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பது இல்லை  என்பதல்ல..நம் சோம்பேறித்தனம் தான் காரணம்....✍🏼🌹*

No comments:

Post a Comment