Monday, June 17, 2024

தொட்டாற்சிணுங்கி - தினம் ஒரு மூலிகை


தரையோடு படர்ந்து வளரும் முள்ளுள்ள செடி உணர்வு உள்ள கூட்டு இலைகளையும் இளம் சிவப்பு மலர்களையும் வளைந்த தட்டையான காய்களையும் உடையது இலைகளை தொட்டால் உடனே வாடி தளர்ந்து விடும் சிறிது நேரம் கழித்து பழைய நிலையை அடையும் இல்லை வேர் மருத்துவ பயன் உடையது இலையை அரைத்து பற்றுப் போட விரை வீக்கம் மூட்டு வலி வீக்கம் தீரும் இலைச்சாறுடன் குதிரை சிறுநீர் சமன் கலந்து ஓரிரு துளிகள் கண்களில் விட்டு வர கண் படல குறைபாடுகள் நீங்கும் 50

கிராம் இலையில் அரை லிட்டர் கொதி நீர் விட்டு அரை மணி நேரம் கழித்து வடிகட்டி 50 மில்லியாக நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வர சிறுநீரக கற்களை வெளியேற்றும் சிறுநீர் தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும் 40 கிராம் வேரை சிதைத்து 250 மில்லி நீரில் இட்டு 100 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி 15 மில்லியாக நாள்தோறும் மூன்று வேளை பருகிவர சிறுநீர் கோளாறுகள் அகன்று சிறுநீரக கற்கள் அகலும் இல்லை வேர் ஆகியவற்றின் பொடியை சம அளவாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியாக காலை மாலை சாப்பிட்டு வர எல்லா வகையான மூலமும் தீரும் நன்றி.

No comments:

Post a Comment