குழைந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளில் பாசிப்பருப்பு தனி இடம் உண்டு , தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு என்று ஸ்பெஷலாக தயார் செய்யப்படும் சிறுதானிய சத்துமாவில் இந்த பச்சைப்பயறு (பாசிப்பயறு) முளைகட்டி காயவைத்து சேர்க்கப்படுகிறது , நெல் சாகுபடியின் போது வரப்பு ஓரங்களில் உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதை வழக்க
மாக கொண்டுள்ளனர் விவசாயிகள் ..பாசிப்பயறு பாயாசம் 😍
காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளில் பாசிப்பருப்பு பாயாசம் மிக பிரபலம், நெல் நடவு சமயங்களில் வேலை ஆட்களுக்காக இந்த பாயாசம் தயார் செய்வார்கள் , சுக துக்க நிகழ்வுகளிலும் இந்த பாயாசம் இடம்பெறுகிறது .
செய்முறை எளிதுதான் ..
பாசிப்பருப்பு - 250 கிராம்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 5
பச்சை கற்பூரம் - ஒரு விரல் நுனி அளவு
உப்பு - 1/4 ஸ்பூன்
தேங்காய் பூ - 1 மூடி
முந்திரி - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப
பாசிபருப்பு மூழ்கும் அளவுக்கு குக்கரில் தண்ணீர் வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும் ..
பாத்திரத்தில் வெல்லம் கரையும் அளவுக்கு தண்ணீர் வைத்து அதில் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து அத்துடன் உப்பு, ஏலக்காய் பொடி ( ஏலக்காயை சர்கரையோடு சேர்த்து அரைத்து போட்டால் நன்றாக மணக்கும்) , தேங்காய் பூ சேர்த்து 100 மில்லி தண்ணீர் சேர்த்து கிளறி விட்டு முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்தால் பாசிப்பருப்பு பாயாசம் தயார் ...
No comments:
Post a Comment