Wednesday, June 26, 2024

குடும்பம் பற்றிய கவிதை | Family Quotes in Tamil




Family Kavithai in Tamil:

எத்தனை துன்பம் இருந்தாலும் மறந்து போகும்
நம்மீது அன்பு செலுத்தும் குடும்பம் இருந்தால் போதும்



இனிய குடும்பம் கவிதை:

குடும்பம் என்பது குருவி கூடு
பிரிப்பது எளிது
இணைப்பது கடினம்



அன்பான குடும்பம் கவிதை:

ஆனந்தமாக வாழ்க்கை வாழ
ஆடம்பரம் தேவை இல்லை
அன்பானவர்கள் நம்முடன்
இருந்தாலே போதும்



மகிழ்ச்சியான குடும்பம் கவிதை 

குடும்பம் என்பது
கடவுள் நமக்காக பூமியில்
ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்
அதை சொர்க்கமாக்குவதும்
நரகமாக்குவதும்
நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது




குடும்பம்
அன்பின் பிறப்பிடம்
மகிழ்ச்சியின் இருப்பிடம்
பாசத்தின் வளர்ப்பிடம்
பக்குவத்தின் காப்பிடம்




மண்ணில் இறக்க போகிறோமே தவிர
மீண்டும் மண்ணில் ஒன்றாக
யாரும் பிறக்க போவதில்லை
வாழும் போது பிரியாமல்
சொந்த பந்தங்களோடு இருப்பதும்
ஓர் வரம்.



No comments:

Post a Comment