Tuesday, June 11, 2024

தேடுதல். வாழ்க்கையின் இறுதி வரை

 *தேடுதல். வாழ்க்கையின் இறுதி வரை நாம் எதையாவது தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். வாருங்களேன் அன்பர்களே சற்றே தெரிந்து கொள்வோம்.*


_*தேடுதல்*_


_*உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.*_


_நாமும் சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கிய

ஓட்டம், நம் இறுதி மூச்சு வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்._


_*தேடல் முக்கியம்!, தேடல் இல்லாத வாழ்க்கைகூட, கடலில் விடப்பட்ட காகிதக் கப்பலைப் போல திசையறியாது மூழ்கிப் போய் விடும்.*_


_தேடுதலின் இலக்கான ஒன்றை மட்டுமே மனதில் வைத்து அழுத்தப் பதித்துக் கொண்டு தேடுவோம்._ 


_*பொதுவாகவே நமக்கு முக்கியமான தேடுதல் ஒன்று  எப்போதும் இருக்க வேண்டும் ஆனால் அதை நாம் நினைத்துக்கூட பார்க்காமல் இருப்போம்.*_ 


_படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதைப் பற்றியே இருந்து வரும்._ 


_*அதற்கான தகுதியை நம் கல்விமுறையில் கற்றுக் கொண்டு விட்டோமா? என்றால் இருக்காது!, அது கேள்விக்குறியாகத்தான் நம் முன்னே நிற்கும்.*_


_கல்லூரி என்னும் கூட்டிலிருந்து வேலை தேடி வரும் அனைவரின் கனவுகளில்...., கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டுமே சுமையாக இருக்கும்._


_*அப்போதும், பொதுவாக நாம் தேட வேண்டிய தேடலை, தேடாமல் மறந்துதான் இருந்து வருவோம்.*_ 


_ஒரு சிலர் கற்றுக் கொள்ளாமலும் இருப்பர்._ 


_*கற்றதை சிலர் விற்கவும் செய்வர்.*_ 


_வேலையைத் தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்கவே அனைவரும் ஆசைப்படுவதுண்டு._ 


_*இது எந்த அளவுக்கு அனைவருக்கும் சாத்தியமாக அமையும் என்று சொல்ல முடியாது.*_ 


_பெரும்பாலானோருக்கு அது தோல்வியைத்தான் கிடைத்து விடுகிறது._


_*கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வருவோரின் நிலைமை இதைவிட அபாயகரமாக இருக்கும்.*_


_அப்போதும், பொதுவாக நாம் தேடவேண்டிய தேடலை, தேடாமல் மறந்துதான் இருப்போம்._ 


_*இருண்ட உலகங்கள்,  அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகத் தான் இருக்கும்.*_


_இருபது வருடங்கள் கற்ற கல்வியில் சொல்லிக் கொடுக்காத பாடத்தை, ஒரு வருடத் தேடல் கற்றுக் கொண்டு விடுவோம்!._ 


_*அப்போதும், பொதுவாக நாம் தேட வேண்டிய தேடலை, தேடாமல் மறந்துதான் இருப்போம்.*_ 


_முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்!, வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது._


_*அடுத்தது என்ன? என்ன? என்ற தேடலை மனதிற்குள் ஓட விட வேண்டும்.*_


_கற்பதற்கு எந்த எல்லையும் இல்லாதது போல, தேட வேண்டிய தேடுதலுக்கும் எல்லை இல்லை._ 


_*அப்போதும், பொதுவாக நாம் தேட வேண்டிய தேடலை, தேடாமல் மறந்துதான் இருப்போம்.*_ 


_நம் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்._


_*அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று அதில் தனித்தன்மை ஒன்றைச் செய்து சாதித்துக் காட்ட வேண்டும்.*_ 


_தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணரப் பெற முடியும்._


_*அப்போது, அந்தத் தேடல் மாறிக் கொண்டே வரும், தேடல் ஒன்றே நிரந்தரம்.*_


_அப்போதும், பொதுவாக நாம் தேட வேண்டிய தேடலை, தேடாமல் மறந்துதான் இருப்போம்._ 


_*தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள், தேடுங்கள்!.*_ 


_வெற்றி உங்களைத் தழுவும் வரை தேடிக் கொண்டே இருங்கள்._


_*வெற்றி வெகு தூரமில்லை, நாளை விடியப் போகும் பொழுதில்கூட வெற்றியுடன் விடியல் கிடைக்கும்.*

No comments:

Post a Comment