Monday, January 8, 2024

உடலின் உறுப்புகளை பலப்படுத்துவது எப்படி?

நோயின்றி வாழ நமது உடலின் முக்கிய உறுப்புகளை பலப்படுத்துவது எப்படி?


நோயின்றி வாழ உடலின் முக்கிய உறுப்புகள்!!


இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நமது உடலின் இயக்கத்தை தீர்மானிப்பது இந்த ஐந்து உள்ளுறுப்புகள் தான். 

அவை நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவையாகும்.

இந்த ஐந்து உறுப்புகளும் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இது நன்றாக இயங்கினால் தான் மனிதனால் ஆரோக்கியமாக இருக்க முடியும். நம்முடைய பாரம்பரிய மருத்துவங்கள் இந்த ஐந்து உறுப்புகளுக்கும் மிக முக்கிய இடத்தை கொடுக்கின்றன. நமது உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும் இவர்களுக்கு தெரியாமல் ஏற்படாது. சொல்லப் போனால் எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்கு காரணமாக இருப்பது இவர்களாகத் தான் இருக்கும். கவனியுங்கள் இதில் நமது உடலின் தலைமைச் செயலகமான மூளை இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கோமாவில் இருக்கும் நபரின் எல்லா உறுப்புகளும் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருக்கும். மூளை இறந்துவிட்டது என்று எந்த உறுப்பும் கட்டளைக்காக காத்திருக்காது. இந்த ஐந்து ராஜ உறுப்புகளும் வளமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்.


நுரையீரல்


நுரையீரல் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான ஆக்சிஜனை கொடுத்து உடலில் உள்ள கார்பனீராக்சைட்டை வெளியேற்றும் உயிர் தொழிற்சாலை நுரையீரல். ஒரு நாளைக்கு இருபதாயிரதிற்கும் மேற்பட்ட முறை இந்த சுவாசித்தல் பணி நடந்து கொண்டே இருக்கின்றது. மாசு நிறைந்த காற்றும் வாகன புகை சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காக படியும். இப்படி அழுக்கு படிவதால் நுரையீரலில் நஞ்சு சேர்ந்து கொண்டே போகும். பிறகு நுரையீரல் பாதிக்க தொடங்கும் இதனை சுத்தம் செய்வதற்கு ஒமேகா 3 நிறைந்த உணவுகளான நாட்டுக்கோழி ,முட்டை, மீன் எண்ணெய் மாத்திரைகள் காளான், பாதாம் பருப்பு, மற்றும் வால்நட் பருப்பு முள்ளங்கி, அகத்திக் கீரை பச்சை சோயா பீன்ஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.


பூண்டு


பூண்டு ஒரு மூலிகை பொக்கிஷம் உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தி உருவாகும் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டு சேர்த்து வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் சத்து ஒரு இயற்கை ஆன்டிபயாட்டிக் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து நுரையீரலைத் காக்கும்.


வைட்டமின் சி


உடலின் ஆக்சிஜனை முழுமையாக கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும் நுரையீரலின் சீரான இயக்கத்திற்கும் உதவும். ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் குறையும். தவிர்க்க வேண்டியது புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை உபயோகிப்பவர்ள் முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டால் உங்கள் உடலுக்கு நல்லது.


இதயத்தை பலப்படுத்துவது எப்படி?


இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு இது இரத்தத்தில் அதிகமாகி இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைக் குறைத்து விடுவதால் இதய பாதிப்பு உண்டாகின்றது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் அதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் மன அழுத்தம் ஆகியவை இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம் சுவாசிக்கும் மூச்சுக் சீரற்ற தன்மையை இழக்கும் உடல் பலம் இழந்தது போல ஒரு உணர்வு இருக்கும். சிறிது கடினமான பணிகளை செய்தாலே மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற ஒரு நிலை ஏற்படும். இதை எப்படி சரி செய்வது வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசிப்பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது சாப்பிடவேண்டும்.


இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


பசும்பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கிப் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.


மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.


இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.


முடிந்த வரை காபி டீயை தவிர்ப்பது நல்லது.


காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீரில் இஞ்சிசாறு எலுமிச்சைச்சாறு இவைகளை தேன் கலந்து குடித்தால் நல்லது.


கல்லீரல் பலப்படுத்துவது எப்படி?


மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்களை கல்லீரல் செய்கின்றது. அது உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கல்லீரலின் சிறு பிரச்சினை என்றாலும் அதனால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.


கல்லீரல் செயலிழந்து போனால் கால்களில் வீக்கம், வாந்தி, சோர்வு ,காய்ச்சல் தலை சுற்றல், குமட்டல், அடர் நிற சிறுநீர் போன்ற அறிகுறிகள் இருக்கும் கல்லீரல் பலம் பெறுவதற்கு கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளம் பழம் துளசி இலைகள் 12 எடுத்து கழுவி அத்துடன் ஏலக்காய் 4 ஒரு சுக்கு துண்டு சேர்த்து நசுக்கி ஒரு குவளை நீரில் கலந்து காய்ச்சி அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால் தேன் கலந்து வாரம் மூன்று முறை என்று ஒரு மண்டலம் பருகி வந்தால் கல்லீரல் பலம் பெறும்.

வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்து நெல்லிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும் வேண்டுமானால் தயிர் உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன இதைத் தவிர்க்க ஆளி விதைகளை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் தினமும் குடித்து வாருங்கள்.


சிறுநீரகம்


சிறுநீரகம் இதன் பொதுவான அறிகுறிகள் முகம் வீங்குதல், பசியின்மை, மற்றும் வாந்தி எடுத்தல், உயர்ரத்த அழுத்தம் ரத்தசோகையும் உடல் நலிவடைதலும் போன்றவையாகும்.


சிறுநீரகம் பலம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?


அடிக்கடி மாதுளம் பழம் எலுமிச்சை வாழைத்தண்டு முள்ளங்கி பூசணிக்காயை  உணவில் சேர்க்க வேண்டும்.


வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சினை என்ற வார்த்தைக்கு வழி இல்லாமல் போகும்.


வாரம் இரண்டு முறை கரும்பு ஜூஸ் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைக்கு வாய்ப்பில்லாமல் போகும் பாகற்காய் ஜூஸ் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.


மண்ணீரல்


மண்ணீரலும் உடலில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது ஒருவரது கையளவு தான் இருக்கும் இது வயிற்றின் இடது பக்கத்தில் இரைப்பைக்கு சற்று மேலே அமைந்துள்ளது. மண்ணீரல் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஒரு வகையான ரத்த வெள்ளை அணுக்களை உருவாக்கும் மேலும் மண்ணீரலும் இரத்தத்தை வடிகட்டுவது உடலை தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்ப்பது பழைய அல்லது சிதைந்த ரத்த சிகப்பு அணுக்களை நீக்குவது மற்றும் மறுசுழற்சி செய்தல் என பல செயல்களை செய்கின்றது. எடை அதிகரித்தல் அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல் நாக்கு வரண்டு விரைப்புத்தன்மை அடைதல் வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல் வாந்தி உடல் பலவீனம் அடைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.


மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர்  உறுதுணையாக இருக்கும்.


அதற்கு தினமும் 8 முதல் 10 டம்ளர் நீரை குடிக்கவேண்டும்  மண்ணீரலின் சிறப்பான செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மண்ணீரலால் இரத்தத்தில்  உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற முடியாமல் போகும்.


காய்கறிகளையும் பழங்களையும் ஒருவர் அதிகமாக சாப்பிட்டு வந்தால் மண்ணீரல்  செயல்பாடு சிறப்பாக இருக்கும்.


வாரத்திற்கு மூன்று முறை மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் அது மண்ணீரலை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதிலும் சால்மன் கானாங்கெளுத்தி மத்தி என்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றது.


ராஜ உறுப்புகள் பலமுடன் இருந்தாலே உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது..


https://chat.whatsapp.com/Dn3lig9HNotCl0cyVt2oH8

No comments:

Post a Comment