Tuesday, January 30, 2024

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித் தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப் பட்டார்.


ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.


மறு நாள் வீட்டிற்குள் நுழையும் போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.


 அவனுடைய அப்பா அங்கே நின்று கொண்டிருந்த வேலையாளிடம் கொடுத்து விட்டு போய் சாப்பிடு என்றார்.


மறு நாளும் உள்ளே நுழையும் போது அவன் கொடுத்த நூறு ரூபாயை வேலையாளிடம் கொடுத்து விட்டார்.


மூன்றாவது நாள் பணத்தை வேலையாளிடம் கொடுக்கும் போது மகன் அதைத் தடுத்தான்.

அப்பா ஏன் அதைக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டான்.


அவர் சொன்னார், ‘இன்று தான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படிக் கண்டு பிடித்தீர்கள் என்றான்.


நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது அடுத்தவரிடம் போன போது நீ கவலைப் படவில்லை. *அதுவே உன் உழைப்பு* *என்கிற போது நீ* துடித்து விட்டாய். போய் சாப்பிடு.


 உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு


*இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இது தான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.


விற்பனைக்கே வராத செல் போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.    

எளிமையாக சொல்வதென்றால் *செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.


ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள்.


இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச் சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப் பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.


ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும்.


போட்டியில் ஜெயித்தால் தான் கோப்பை கிடைக்கும் என்றால் தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.


குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்து விட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.


படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.

 வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா? பணம் எவ்வாறு சம்பாதிக்கப் படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்து இருக்கிறீர்களா?


இதை எல்லாம் ஒரு முறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத் தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத் தான் என்று தான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   


இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் 

*100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து* நீட்டாதீர்கள்.


மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டு விட்டு யோசித்து விட்டு கொடுங்கள்.


கேட்ட போதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள்.  


 பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். *காத்திருக்கப் பழக்குங்கள்*.


பணத்தை வீட்டிற்குள் கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள்.


 சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில் தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும்


 பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.


உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன் மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.


 பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து https://chat.whatsapp.com/IxeZHgZZ06i67N9xOf3dvT அவர்களும் இணையலாம் 

 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment