Tuesday, January 9, 2024

அஜீரணம் சரியாக இயற்கையை மூலிகை சூரணம்

 *அஜீரண ஏப்பம் குறைபாடு, வயிற்று வலி,உடல் களைப்பு / சோர்வு,ரத்த அழுத்தம் ஆகியவை சரியாக இயற்கையை மூலிகை சூரணம் செய்முறை*



*தேவையான மூல பொருட்கள்*


1.சுக்கு – 50 கிராம்

2.மிளகு – 50 கிராம்

3.திப்பிலி – 50 கிராம்

4 ஏலக்காய் – 50 கிராம்

5.சீரகம் – 50 கிராம்

6.நாட்டு சர்க்கரை – 100 கிராம்


*சூரணம் செய்முறை*


மேற்கூறிய அனைத்தையும்  காயவைத்து சுத்தம் செய்து ஒன்றாக அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொள்ளவும். பிறகு நாட்டு சர்க்கரை பொடியை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.முக்கியமாக ஈரப்பதம் ஆகாமல் வைத்து கொள்ளுங்கள்


*சாப்பிடும் முறை*


5 கிராம் சூரணத்தை தேன் அல்லது நெய்யில் கலந்து காலை, மாலை இருவேளை உணவுக்கு பின் 1 மணி நேரம் கழித்து சாப்பிடவும்.நெய்,தேன் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக இதை சாப்பிடலாம் அல்லது சுடுநீரில் கலந்து குடியுங்கள்


பிறகு தேவைக்கு சுடுநீர் குடியுங்கள்


*மருத்துவ பயன்கள்*


கெட்டவாயு, பித்தம், செரியாமை, உடல் சோர்வு, பசியின்மை, மயக்கம், மூல வாயு, கிறுகிறுப்பு, வெட்டை சூடு ஆகியவை தீரும்.


இந்த சூரணம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது

No comments:

Post a Comment