*அஜீரண ஏப்பம் குறைபாடு, வயிற்று வலி,உடல் களைப்பு / சோர்வு,ரத்த அழுத்தம் ஆகியவை சரியாக இயற்கையை மூலிகை சூரணம் செய்முறை*
*தேவையான மூல பொருட்கள்*
1.சுக்கு – 50 கிராம்
2.மிளகு – 50 கிராம்
3.திப்பிலி – 50 கிராம்
4 ஏலக்காய் – 50 கிராம்
5.சீரகம் – 50 கிராம்
6.நாட்டு சர்க்கரை – 100 கிராம்
*சூரணம் செய்முறை*
மேற்கூறிய அனைத்தையும் காயவைத்து சுத்தம் செய்து ஒன்றாக அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொள்ளவும். பிறகு நாட்டு சர்க்கரை பொடியை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.முக்கியமாக ஈரப்பதம் ஆகாமல் வைத்து கொள்ளுங்கள்
*சாப்பிடும் முறை*
5 கிராம் சூரணத்தை தேன் அல்லது நெய்யில் கலந்து காலை, மாலை இருவேளை உணவுக்கு பின் 1 மணி நேரம் கழித்து சாப்பிடவும்.நெய்,தேன் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக இதை சாப்பிடலாம் அல்லது சுடுநீரில் கலந்து குடியுங்கள்
பிறகு தேவைக்கு சுடுநீர் குடியுங்கள்
*மருத்துவ பயன்கள்*
கெட்டவாயு, பித்தம், செரியாமை, உடல் சோர்வு, பசியின்மை, மயக்கம், மூல வாயு, கிறுகிறுப்பு, வெட்டை சூடு ஆகியவை தீரும்.
இந்த சூரணம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது
No comments:
Post a Comment