*மரிக்கொழுந்து* நறுமணம் மிகுந்த சிறு செடியினம் மலர் கடைகளில் கிடைக்கும் தவனம் என்று அழைப்பார்கள் இதனுடைய இலையே மருத்துவ குணம் உடையது சளி அகற்றுதல் செரிமானம் மிகுதல் உடல் பலம் மிகுதல் தோல் நோய்களுக்கு இசிவு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது மரிக்கொழுந்து 40 கிராம் 500 மில்லி நீரில் கொதி நீர் விட்டு மூடி 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 15 மில்லி முதல் 30 மில்லி வரை காலை மதியம் மாலை கொடுத்து வர வயிற்று வாய்வு சமணப்படுத்தி பசி மிகுக்கும் உதிர சிக்கலை அகற்றும் உடல் பலம் மிகுக்கும் இலை சாறு வயதுக்கு ஏற்ப பத்தில் இருந்து 15 துளி தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கக்குவான் இருமலை தணிக்கும் இலையை அரைத்து நல்லெண்ணையில் கலக்கி சூரிய புடமிட்டு வடிகட்டி தடவி வர தோல் நோய்கள் சொறி சிரங்கு ஆறும் இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க வழி நீங்கும் நன்றி.
No comments:
Post a Comment