ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.
அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை.
ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.
மார்கழி மாதத்தில் வரும் மூன்றாம் பிறை
இன்று மாலை மார்கழி மாதத்தில் வரும் மூன்றாம் பிறை தரிசனம் காணவேண்டும்.
*மார்கழி மாதத்தில் வரும்* *மூன்றாம் பிறை தரிசனம்* *கண்டால் நமது சகல* *பாவங்களும் தொலையும்*!
மூன்றாம் பிறை சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக
மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் பிறை நாளில்
சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும்.
கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்.
தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.
மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.
காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமை களில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். ,
காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும்.
மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும்.
எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.
திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம்.
திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம்.
இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.
மூன்றாம் பிறை நிலவு சரியாக மாலை 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள் சில நிமிடங்கள் மட்டுமே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது.
சில நேரம் பிறை நிலவு தெளிவாக தெரியும். சில
நேரம் பிறை நிலவு தெளிவாக தெரியாது.
மேகங்களுக்கிடையே மறைந்திருக்கும்.
பிறை நிலவு தெரிந்தாலும் தெரியவில்லை என்றாலும் மூன்றாம் பிறை நாளாகிய இன்று நீங்கள் இந்த வேண்டுதலை மாலை 6.30 மணிக்கு வெட்டவெளியில் செய்ய வேண்டும்.
பிறை நிலவை தரிசனம் செய்யும் போது உங்களுடைய கையில் வெள்ளி நகை அல்லது தங்க நகை வைத்துக்கொள்வது நல்லது.
எதுவுமே இல்லை என்றால் ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டுமாவது கையில் வைத்துக்கொள்ளுங்கள். (கையில் நாணயம் வைத்திருந்தால் தரிசனத்தை முடித்துவிட்டு அந்த ரூபாய்க்கு கோவிலுக்கு கற்பூரம் வாங்கிக் கொடுத்து விடலாம். அல்லது உண்டியலில் போட்டு விடலாம்.)
பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நம’ என்ற மந்திரத்தை கண்களை மூடி தியான நிலையில் உச்சரிக்கவேண்டும்.
ஒரு இடத்தில் அமர்ந்து பிறை நிலவை பார்த்தபடி உச்சரிக்க முடியும் என்றால் இன்னும் சிறப்பு. அமர முடியவில்லை என்றால் நின்று கொண்டு இரண்டு கைகளை ஏந்தி
இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு பிறைநிலவு தரிசனத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
நிச்சயம் வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத வளர்ச்சி உங்களை தேடி வரும்.
மூன்றாம் பிறை பிறந்த கதை:ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான். பின் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.
No comments:
Post a Comment