Sunday, January 7, 2024

தினம் ஒரு மூலிகை-செந்நாயுருவி

 *


 *செந்நாயுருவி*  அதிக மருத்துவ பயன் கொண்டது மூலிகைகளில் பெண் தன்மையும் தெய்வத்தன்மையும் இதற்கு உண்டு புதன் மூலிகை என்றும் அட்டகர்மா மூலிகை என்றும் அழைப்பார்கள் நீண்ட கதிர்களையும் துணியில் ஒட்டிக் கொள்ளக்கூடிய விதைகளையும் உடைய சிறு செடி தண்டு இலை கதிர் ஆகியவை செந்நிறமாய் இருக்கும் மலைப்பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் உடையவை துவர்ப்பியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் உடல் தேற்றியாகவும் முறை நோய் நீக்கியாகவும் செயல்படும் இலை சாறு ஐந்து மில்லி அளவு காலை மாலை கொடுத்து வர வயிற்று நோய் தீரும் 50 மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர பெண்களின் மாதவிடாய் சிக்கல் தீரும் இலையை அரைத்து 10 கிராம் அளவாக நல்லெண்ணையில் கலந்து காலை மாலை ஏழு நாள் கொடுக்க குருதி மூலம் தீரும் இலையை அரைத்து கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடைந்து விரைந்து ஆறும் இலை சாற்றை படைகளுக்கு தடவி வர குணமாகும் இலையை கசக்கி தேய்க்க தேள் பூரான் வண்டு ஆகியவற்றின் நஞ்சு கடிகள் குணமாகும் இலையை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளிக்க பல் வலி குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment