Sunday, January 7, 2024

நேர்மையை விதையுங்கள்-தினம் ஒரு சிந்தனை



இன்று எங்குப் பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், எதிலும் பொய் மற்றும் நேர்மை இல்லாத தன்மைப் பெருகி விட்டது.._ 


_*அமெரிக்காவின் எழுத்தாளர் மேரிலேன்ட் மாகாணத்து ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் “The book of Lies” என்ற புத்தகம் எழுத, இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது.*_


_இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாகப் பொய்களை  உதிர்க்கிறார்கள் என்று கண்டு அறிந்தார்.._ 


_*இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை என்றாகி விடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்து விடும் என்று அவர் கருதினார்.*_


_நேர்மை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று அவர் கருதினார்._ 


_*இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.*_


_இந்த நாளை அனுசரிக்கப் பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க் தருகிறார்._ 


_*உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என்ன கூறினார்கள் என்று அவரவர் வீட்டில், தெருவில், அலுவலகத்தில் பகிர்ந்துக் கொள்வது,*_


_இன்று ஒரு நாள் எக்காரணம் கொண்டும் பொய் பேசாமல், நேர்மையாக இருப்பேன் என்று தனக்குத் தானே உறுதி மொழி எடுத்துக் கொள்வது என்று நீண்டு கொண்டே போகிறது அந்தப் பட்டியல்._


_*அதே நேரம் நேர்மை பற்றி உலகப் பொதுமறையான திருக்குறளில் அய்யன் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்.,*_


_''கேடும் பெருக்கமும் இல் அல்ல;_ _நெஞ்சத்துக்_

_கோடாமை_ _சான்றோர்க்கு அணி''.,_


_*இதன் கருத்து என்னவென்றால்..,.,*_


_பொருட்செல்வத்தைக் காட்டிலும், நேர்மை தான் சான்றோரின் விலை உயர்ந்த அணிகலன் என்பது._


_*இன்னொரு குறளில்..,.*_


_''வாய்மை எனப்படுவது யாதெனின்_ _யாதொன்றும்_

_தீமை இலாத_ _சொலல்.''_


_*மற்றவரை வருத்தப்படுத்தாத எந்தச் சொல்லும் வாய்மையாகக் கருதப்படும்.*_



_நாம் சொல்லும் சொல் , நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்..._


_*வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்*_


_உண்மையும் நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண் போகாது_ 


_*நேர்மையை விதையுங்கள்..,*_  


_*பதவியும் பணமும் உங்களை நாடித் தேடி வரும்.*_

No comments:

Post a Comment